Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
June 2014

Wednesday, 25 June 2014

மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 25 June 2014 14:33
அரசியல்_சமூகம் / விருந்தினர்

விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக தோற்றமளிக்கின்ற போதும் அவர்களுக்கிடையில் உள்ளூர ஐக்கியம் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஏறக்குறைய மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகள்ஃ தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு அதற்கு ஆதரவு வழங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐ.ம.சு.மு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கி அதன் கொள்கை நடைமுறைகளை ஏற்று அங்கீகரித்து வருகின்றனர். எனினும் மறுபுறம் மலையக மக்களிடம் தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பதான தோற்றப்பட்டடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும் இவர்களுக்கிடையில் அரசியல் கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றிய கருத்தாடல் இடம்பெறாமையானது துரதிஸ்டமே.

Read more...
Last Updated ( Wednesday, 25 June 2014 14:35 )


Monday, 23 June 2014

தமிழ் ஸ்டுடியோ "பிறகு" "With you Without you" ஐ திரையிடுகிறது ! அனைவரும் ஆதரவு கொடுங்கள் ! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 23 June 2014 14:54
சமகால நிகழ்வுகள் / Newsflash

நாள்: 24-06-2014, செவ்வாய், 7 PM

Read more...
Last Updated ( Monday, 23 June 2014 15:00 )

"பிறகு" - With you , without you - திரையிடலைத் தடுத்து நிறுத்திய தமிழினவாதிகள். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 23 June 2014 12:25
சமகால நிகழ்வுகள் / இன்றைய பக்கங்கள்

இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் வெற்றியடைந்து சில காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. ஆனாலும் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி திரையிட்ட அரங்கங்களுக்கு கொலை மிரட்டல், தீ வைப்பதான மிரட்டல்கள் மூலம் திரையிடுவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.


தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்கள், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டோர், மேற்படி இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவுமில்ல. அதற்கு அவர்களுக்கு திடனுமில்லை. மாறாக, இனவாதிகளுக்கு எதிரானவர்கள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலர் சென்னையில் இருந்து கொண்டு, எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுகின்றனர். கண்டது, நிண்டதுக்கெல்லாம் தமிழ் நாட்டு இலக்கிய வாதிகளுடன் இணைந்து அறிக்கை விடும் கும்பல்கள் இப்போ எங்கே போனது!

Read more...
Last Updated ( Monday, 23 June 2014 12:29 )


Friday, 20 June 2014

முஸ்லீம் சகோதரர்கள் மீதன வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் வெற்றிகரமான இலண்டன் - பாரிஸ் போராட்டங்கள்.. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 20 June 2014 19:13
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .

இதேவேளை, பிரான்சின் தலைநகர் பாரிஸில் சம உரிமை இயக்கமும், அதன் சகோதர அமைப்புகளும் இன்று இனவாத - மதவாத வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார முன்னெடுப்பில் ஈடுபட்டனர். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இனவாத- மதவாத வன்முறைக்கு எதிராகவும், முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத் தோழரும், சமவுரிமை இயக்கத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டாளருமான ரஜாகரன் : "எமது தாய் அமைப்பு இலங்கையின் வராலாற்றில் பதியத்தக்க விதமாக பாரிய போராட்டத்தை 18.06.2014 அன்று கொழும்பில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.06..2014) லண்டனிலும், பாரிசிலும் வெற்றிகரமான முறையில் போராட்டங்களை நடத்தி முடித்துள்ளோம். இப்போராட்டங்கள் போல வரப்போகும் நாட்களில் இலங்கையிலும் தொடரவுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளில், இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் உரிமையை வலியுறுத்தி - குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் விதம் விதமான முறையில் நடத்தப்படும்" என்றார்.

Read more...
Last Updated ( Friday, 20 June 2014 19:16 )


Wednesday, 18 June 2014

முஸ்லீம் சகோதரர்களுக்கு நீதிகோரி சமவுரிமை இயக்கம் நடாத்திய மாபெரும் ஆர்பாட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 18 June 2014 16:11
சமகால நிகழ்வுகள் / Newsflash

இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது . அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மத தலைவர்களும்   இந்த ஆற்பாடத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழிபேசும் மக்களுடன் பிக்குகள் பலரும், கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் . இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான  சிவாஜி லிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவ சமாசக் கட்சித்தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

Read more...
Last Updated ( Wednesday, 18 June 2014 17:02 )

இனவாத-மதவாத-பொறிக்குள் மீண்டும் சிக்குவதா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 18 June 2014 10:44
அரசியல்_சமூகம் / சம உரிமை இயக்கம்

நாம் இத்துண்டுப்பிரசுரம் ஊடாக உங்களைச் சந்திப்பது நாட்டின் ஒருபகுதியில் இனவாத, மதவாத கொடுந்தீ கொழுந்துவிட்டு எரியும் சந்தர்ப்பத்திலாகும். அண்மையில் தர்க்காநகரில் ஆரம்பித்த இந்தத்தீ அளுத்கம பேருவளை வழியாக பரவிவருகிறது. மதப்பற்றுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சினைகளுக்காக, குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலையாவுமளவுக்கு சென்றதேன்?. தற்போது வியாபார நிலையங்கள் பல தீயிடப்பட்டுவிட்டது, பல உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடுமைகளும் எதனை பகிர்ந்துகொள்ள முடியாமல் போனதற்காக? இந்த வன்முறை ஆரம்பமாகியது எப்படி?

Read more...
Last Updated ( Wednesday, 18 June 2014 10:51 )


Tuesday, 17 June 2014

மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா? மாபெரும் ஆர்ப்பாட்டம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 17 June 2014 11:32
அரசியல்_சமூகம் / சம உரிமை இயக்கம்

இலங்கையில் இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் திட்டமிட்ட இனக்கலவரம், கொலைகள், சொத்துகளைச் சூறையாடுதல்- அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து சமவுரிமை இயக்கம், நாளை (18.06.204) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

Read more...
Last Updated ( Tuesday, 17 June 2014 11:45 )


Monday, 16 June 2014

அரசு ஆதரவுடன் நடந்தேறும் இனவாத மதவாத வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம் ! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 16 June 2014 09:43
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அளுத்காமவில் பொதுமக்களுக்கு இடையில் எற்பட்ட முறுகல்களை, இன-மத வன்முறையாக்கியது அரச ஆதரவு பெற்று இயங்கும் பொது பல சேனா. பொலிஸ் - இராணுவம் குவிக்கப் பட்டு ஊராடங்குச் சட்டம் அமுலிருந்த வேளையில், பல கடைகள் தீக்கிரையாகப்பட்டும், வீடுகள் தாக்கப்பட்டுமுள்ளது. முஸ்லிம் மக்கள் அடைக்கலங்  கோரி பொது இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

Read more...
Last Updated ( Monday, 16 June 2014 09:47 )


Wednesday, 11 June 2014

ஆதிரையாள்........ PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 11 June 2014 14:36
அரசியல்_சமூகம் / கனகமணி

சாக எத்தனிக்கும் போதெல்லாம் தனது பிள்ளைகளின் முகங்களும் அவர்களின் எதிர்காலமுமே அவளுக்கு கண்முன் வருகின்றது. வாழ நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடந்த கொடுர சம்பவங்கள் வழ்க்கையில் பிடிப்பில்லாமல் சாவுவரை துரத்துகிறது. சாகவும் துணிவற்றவளாகவும் வாழவும் பிடிக்காதவளாகவும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனடாவுக்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தாள் ஆதிரையாள்.

Read more...
Last Updated ( Wednesday, 11 June 2014 14:52 )


Tuesday, 10 June 2014

என்னது, விமர்சனமா!! எடடா துவக்கை!!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 10 June 2014 07:12
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழ்க்கவி புலிகளின் மீது விமர்சனம் வைத்ததும் நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம், குற்றமே என்று வாழும் கவியரசுகள், கொள்கை ஒன்றுக்காகவே பேனா பிடித்திருக்கும் பத்திரிகை ஆசிரிய திலகங்கள் எல்லாம் பொங்கி எழுந்தன. இதை எல்லாம் புலிகளில் இருந்த காலத்தில் சொல்லியிருக்கலாமே என்று அவரைக் குற்றம் சாட்டுகின்றன. அவர் வைத்த விமர்சனங்களிற்கு அவர்களிடம் மறுமொழி இல்லை. தமிழ்க்கவியை குற்றம் சாட்டுவதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முனைகிறார்கள்.

Read more...
Last Updated ( Tuesday, 10 June 2014 07:25 )

Page 1 of 2