விவசாயம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செய்தி:1

பிரிட்டீசார் இந்தியாவை ஆண்டபோது 1880-85ல் இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் எனவே இறந்தனர் எனும் பொய்யைப் பரப்பினர். இப்பஞ்சம் விளைச்சல் இல்லாததால் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால்தான். இந்தியாவில் புதுமை விவசாயம் செய்ய உழவியல் நிபுணரை இலண்டனிலிருந்து வரவழைத்தனர். அவர் ஆறுமாத காலம் இந்தியாவைச் சுற்றி வந்தபின் இங்கிலாந்திற்கு எழுதிய கடிதச் செய்தி: 'இந்திய விவசாயிகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க எதுவுமே இல்லை. இந்திய விவசாயிகளுக்கு எல்லாமே தெரியும். அவர்களிடமிருந்து நான்தான் கற்றுக்கொண்டேன்'.

செய்தி:2

ஒன்று வரலாற்றில் ரசாயன உரங்களை இடுவது எப்படிப் புழக்கத்தில் வந்தது? இரண்டாவது ரசாயனங்களை இடவேண்டுமா? உலகப்போர் முடிவடைந்த தருவாயில் வெடி மருந்து தயாரித்த வியாபாரிகள் கவலைப்பட்டார்கள். போர் முடிவடைந்து விட்டதே இனி நம் வியாபாரத்திற்கு வழி என்ன என்று இப்பொழுது விஞ்ஞானிகள் புதிய வழிகாட்டினார்கள். செடிகளுக்கு அமோனியா தேவை. உப்புத் தொழிற்சாலையை உர உற்பத்திக்காக மாற்றி விடலாம் என்றார்கள். 1925-ல் அமோனியம் சல்பேட் அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தது. அப்போதே அங்கு எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்காலத்தில் இது தீங்காக அமையும் என்றார்கள். இந்தப் போக்கிற்கு எதிரான ஆராய்ச்சிகளும் ஐரோப்பாவில் நடந்தது. ஆனால் இட்லர் தலை தூக்கிய காலத்தில் இந்த ஆராய்ச்சிகளை அழித்து விட்டனர். 2-ம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்புத் தொழிற்சாலைகள் உர உற்பத்தில் ஈடுபட்டன. ஐரோப்பாவில் அடக்க முடியவில்லை. உலகம் முழுதும் பரவலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

http://maniyinpakkam.blogspot.com/2008/07/blog-post_27.html
--வேளாண்துறை நிபுணர் கோ.நம்மாழ்வார்