ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.

உலகின் மிகப் பழமையான புதைந்து போன நகரத்தில் இருந்து பெறப்பட்ட சுவடுகள் தோண்டி எடுக்கப்பட்டது, அதன் அதிர்வுகள் நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியது. திராவிட நாகரீகம் என்று பெயரிடப்பட்ட அந்தப் பெருமைக்குரிய வரலாறு கல்விக்கூடங்களில் நிலைபெற்றபோது, புராணப் புனைவுகளால் நெய்யப்பட்ட மூட நம்பிக்கைகளும், சமூக அநீதிகளும் நிரம்பிய ஆரியம் என்கிற உயரடுக்கு சரியத் துவங்கியது.

17THaryan migrationrevised-1

விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய உள்ளீடுகள், திராவிட நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்கியபோதும், குடியேற்ற இனக்குழுவின் நம்பிக்கைகளும், கலாச்சாரப் பின்புலமும் பழங்குடிகளால் நிராகரிக்கப்பட்டபோதும், ஆரியம் ஒரு நுட்பமான பரப்புரையை முன்னெடுத்தது.

“ஆரியக் குடியேற்றம் என்பதே ஒரு கட்டுக்கதை, அப்படியான ஒரு நிகழ்வு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழவே இல்லை என்று பல்வேறு போலியான ஆய்வுகளையும், தரவுகளையும் முன்வைத்து, “சரஸ்வதி நாகரீகம்” என்றொரு புதிய நாகரீகத்தை கட்டமைக்க முயன்றது. DNA ஆய்வுகள் இப்படியான ஒரு ஆரியக் குடியேற்றத்தை உறுதி செய்யவில்லை என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பழங்குடிகள் என்றும் பிதற்றத் துவங்கின.

கடந்த இருபதாண்டுகளில் தீவிர ஆரிய இனக்குழுவின் உறுப்பாக இயங்கும் பார்ப்பனீயம், பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, ஆரியக் குடியேற்றத்தைப் பொய்யென்று உறுதி செய்யப் பெருமுயற்சி செய்தது. DNA ஆய்வுகள், தொழில்நுட்ப உதவியோடு மிகத் தீவிரமாக இயங்கத் துவங்கிய கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில், அறிவியல்பூர்வமாக “ஆரியக் குடியேற்றம் நிகழ்ந்தது உண்மைதான்” என்பதைப் பல்வேறு பல்கலைக்கழங்கங்களின் உயிர் மூலக்கூறு ஆய்வுகள் உறுதி செய்யத் துவங்கி இருக்கிறது.

முன்னதாக X க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட சான்றுகள் (அதாவது தாய் ——மகள் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டது) குறிப்பிட்ட ஆரியக் குடியேற்ற DNA அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தபோது, புதிய Y குரோமோசோம்களில் (தந்தை – மகன் உறவுமுறை) இருந்து பெறப்பட்ட சான்றுகள், ஆரியக் குடியேற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆரியக் குடியேற்றம் பெரும்பான்மை ஆண்களை உள்ளடக்கியது என்கிற தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு புதிய Y க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை இணைக்கும் போது இதுவரையில் இருட்டறையில் இருந்த ஆரியக் குடியேற்றம் குறித்த மர்ம முடிச்சுகள் விலகித் தெளிவான முடிவுகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.

mtDNA – Data எனக்குறிக்கப்பட்ட முதன்மை ஆய்வுக் குறிப்புகளில் குடியேற்ற ஜீன்களின் பரவல் குறித்த உறுதியான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை, அல்லது குறைந்த அளவிலான தரவுகளே கிடைக்கப்பெற்றன, ஆனால், YDNA – Data என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் குடியேற்றம் குறித்த ஆய்வு முடிவுகளைத் தலை கீழாகத் திருப்பிப் போட்டன.

“A Genetic Chronology for the Indian Subcontinent points to heavily Sex – Biased Dispersal” என்ற தலைப்பிலான ஆய்வுகள், 16 உயிரியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது, பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஹட்டர்பீல்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த, “ஆரியக் குடியேற்றத்தில் பெருமளவில் ஆண்களே பங்குபெற்றார்கள்” என்கிற தீர்க்கமான முடிவே இந்தத் தலைகீழ் மாற்றங்களை உருவாக்கியது.

719235ஜீன் பரவலாக்கம் ஒரு எளிய பகுப்பு :

719235

R1a———-Europe

R1a———-Central & South Asia

R1a —– Z-282 (Only Europe) ——Z-93 (Only Central & South Asia)

 

இந்த வரிசைக்கிரமத்தில் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், R1a ——-ஆரிய இனக்குழுப் பரவலுக்கு மாதிரியாகப் பெறப்பட்ட உயிர் மூலக்கூறு, Z-93 என்கிற பகுப்பாக 5800 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவலாக்கம் பெறுகிறது, அதன் மூல வேரான R1a —– Z-282 வழியாகப் பகுப்படைந்து ஐரோப்பாவில் மட்டும் நிலைகொள்கிறது, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா தவிர்த்த எந்த நிலப்பரப்பு வரலாற்றிலும் R1a வின் மூலமோ, பகுப்புகளோ அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் Dr. அண்டர் ஹில்லின்ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி.

முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின், ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் Dr. டேவிட் ரீச், 2009 இல் வெளியிட்ட “Reconstructing Indian Population History” என்கிற ஆய்வு ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியது. ANI – Ancestral North Indians, எனக்குறிக்கப்படும், வட இந்தியப் பழங்குடிகள் மத்திய கிழக்குத் தரைப்பகுதி, மத்திய ஆசிய பகுதி மற்றும் ஐரோப்பிய ஜீன்களோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ASI – Ancestral South Indians எனக்குறிக்கப்படும் தென்னிந்தியப் பழங்குடிகள் இந்தியாவின் தனித்துவமான ஜீன்களை உள்ளடக்கியவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது.

உயிரியலில் மிகத் துல்லியமாக இனக்குழு வரலாற்று நகர்வுகளை முடிவு செய்யும் DNA – Mapping ஆய்வுகளில் உள்ளீடு செய்யப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு, ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் பீட்டர் அண்டர் ஹில் தலைமையில் 32 துறை சார் அறிஞர்கள் R1a ஜீன்கள் குறித்த 16,244 ஆண் மாதிரிகளை 126 வெவ்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள், முடிவுகள் இரண்டு துணைக்குழுக்களைக் கண்டறிந்தது, (R1a ஜீன் மாதிரி என்பது ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகான இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 17.5 % பரவலாகி இருக்கிற மாதிரி), R1a முதன்மை ஜீன்கள் ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலை ஜீன்களான Z-93 – மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் கண்டறியப்பட்டன.

R1a வின் முதன்மைப் பகுப்பு ஜீனான Z-282, 98 % ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலைப் பகுப்பு ஜீனான Z-92, 98.4 % மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டது, R1a வின் இந்தப் பகுப்பு 5800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. R1a – வின் பரவலாக்கம் ஐரோப்பா முழுவதும் மட்டுமன்றி மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் நிகழ்ந்திருக்கிறது, அதே போல R1a வின் முதல் நிலைப் பகுப்பான Z-282 வின் பரவலாக்கம் ஐரோப்பாவில் மட்டும் கண்டறியப்பட்டது, இரண்டாம் நிலை இணை ஜீனான Z-93 இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலைத் தொடர்களில் கண்டறியப்பட்டது.

ஆரியக் குடியேற்றம் கட்டுக்கதை என்று சொன்னவர்கள், பல்வேறு மாறுபட்ட உயிரியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், குடியேற்ற நிகழ்வுகள் குறித்த உறுதியான தரவுகளை முன்வைக்காததை ஒரு மிகப்பெரிய சான்றாகக் காட்ட முனைந்தார்கள். முதலாவதாக mtDNA மூலமாக X க்ரோமோசோம்களை வைத்துப் பெறப்பட்ட முடிவுகளான, “12,500 ஆண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் மிகப்பெரிய அளவிலான புதிய ஜீன் பரவலாக்கம் நிகழவில்லை” என்ற வாதம், தற்போதைய Y க்ரோமோசோம்களின் மாதிரிகளை மையமாக வைத்துப் பெறப்பட்ட முடிவுகளால் தகர்க்கப்படுகிறது, 4500 ஆண்டுகளுக்குள் 17.5 % R1a ஜீன்களின் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது. X முடிவுகள் ஏன் தோல்வியைத் தழுவின என்றால், ஆரியக் குடியேற்றத்தை முன்னின்று நடத்தியது ஆண்கள் என்கிற ஆய்வு முடிவுகள், ஆக X முடிவுகள் அந்தக் குடியேற்ற நிகழ்வுகளை எதிரொலிக்க முடியாது.

Harrapan+cities+had+a+strong+central+government+which+led+to+organized+cities..jpg

 

இரண்டாவதாக “ஆரியக் குடியேற்றம் பொய்” என்று சொல்பவர்களால் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது, R1a வின் இருப்பும், வீரியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் தீவிரமாக நிலைகொண்டிருப்பதால் அது இந்தியாவில் உருவாகி ஏனைய பகுதிகளில் பரவலாக்கம் அடைந்திருக்கலாம் என்பது, ஆனால், 2016 இல் வெளியிடப்பட்ட R1a வின் துணைக்குழுக்களைப் பற்றிய உயிர் மூலக்கூறு ஆய்வுகள் நமக்குச் சொல்வது R1a வின் பகுப்பான Z-93 வெறும் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்டது.

மூன்றாவதாக வைக்கப்படும் “ஆரியக் குடியேற்றத்துக்கு முன்பாகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு பழங்குடி இனக்குழுக்கள் நிலைபெற்றிருந்தன என்கிற வாதம் வரலாற்று உயிரியல் அறிஞர்களால் கண்டிக்கப்படுகிறது. மனித இனத்தின் இடப்பெயர்வு ஒரு இயல்பான நிகழ்வு, கடந்த 15,000 ஆண்டுகளில் மனித இனம் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலப்பரப்புகளில் குடியேற்றமடைந்திருக்கிறது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் எல்லா உயிரியல் தொகுப்பு இனக்குழுக்களை கலப்பின அடையாளங்களோடு தான் வளர்ந்திருக்கிறது, அந்தமான் நிக்கோபாரின் “ஓங்கோ” இனக்குழு மட்டுமே கலப்பற்ற இனமாக இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் அடையாளம் காணப்படுகிறது.

பிறகு எதற்காக “ஆரியக் குடியேற்றம்” குறித்த சமூக, அரசியல் மற்றும் அறிவியல் விவாதங்களில் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அரசியலோடு திராவிட நாகரீகத்தின் சுவடுகளும், ஆரியக் குடியேற்ற நிகழ்வினால் விளைந்த தாக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயச் சிந்தனைகள் ஆரியக் குடியேற்ற நிகழ்வின் மானுட நீதியற்ற பல்வேறு நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த காலகட்டத்தில், தாங்கள் ஆரியர்கள், அறிவிற்சிறந்தவர்கள், வரலாற்றுப் பெருமையும், பிறப்புத் தகுதியும் கொண்ட உயர் மானுடக் குழுவினர் என்று எக்காளமிட்டனர்.

பின்பு, குடியேற்றக் குழுவின், சமூக நீதியற்ற, மானுட மேன்மைக்கு எதிரான பல்வேறு புரட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இல்லை, “நாங்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும், இந்திய பழங்குடிகள்” என்றும் நிறுவ முயன்றார்கள். சக மனிதனின் வாழ்வையும், உரிமைகளையும் ஒடுக்கிப், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு முரணான கூற்றை நிறுவி அதன் மூலம் , உழைப்புச் சுரண்டல், அரசியல் அதிகாரக் கைப்பற்றல், சமூக அநீதியிழைத்தல், கலை மற்றும் பண்பாட்டு இருட்டடிப்பு என்று நவீன மானுட நாகரீகத்துக்கு எதிரான மனநிலையைப் பரவலாக்கி அதையே உண்மை என்று நம்ப வைக்கிற வேலையை இந்த அடிப்படை இனக்குழுவாதிகள் தீவிரமாகி செய்வதாலேயே நாம் குடியேற்ற வரலாற்றில் அறிவியல் உண்மைகளைத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

இன்று தம்மைப் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற, ஆரியன் என்று பெருமையாகப் பேசுகிற பார்ப்பனீயத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது, இந்த அரசியல் அதிகாரம், மதம், சாதி, புனிதப் பெருமைகள், முதலாளித்துவ – ஊடக முட்டுக் கொடுப்பு என்று பல்வேறு காரணிகளால் பெறப்பட்டது, தொடர்ந்து உழைப்புச் சுரண்டல் செய்து வர்ண அமைப்பை அதிகார பூர்வமாக்கி இந்தியத் துணைக்கண்டத்தை உலகின் நாகரிக வளர்ச்சிப் பயணத்திலிருந்து விலக்கமடைய வைக்கும் ஒரு பின்னடைவாகவே இந்தப் பார்ப்பனீயத்தின் அரசியல் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

உழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகளிடம் விற்று, எளிய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி, அவசர அலங்கோலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்வை அலைக்கழிக்கும் காவிகளின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ளவும், மனித நேயமற்ற சமூக நீதிக்கு எதிரான அவர்களின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முனைவது வெறுப்பைக் கக்கி அவர்களோடு போர் புரிய அல்ல, மாறாக இன்னும் அழகிய உலகத்தை உருவாக்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, “சமூக நீதிக்கான இந்தப் பழங்குடிகளின் போராட்டம், நாகரீக உலகின் மேன்மைக்கான தன்னியல்பான இயக்கம், இதன் பலன் ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீது அணையாத விளக்காய் சுடர் விட்டெரியும்”.

 

Reference: “How Genetic is settling the Aryan Migration Debate” by Tony Joseph’s (Former Editor Business World) Article on The Hindu dated 16th June 2017.

கை.அறிவழகன்

https://tamizharivu.wordpress.com/2017/10/31/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/

17THaryan migrationrevised-1

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.

உலகின் மிகப் பழமையான புதைந்து போன நகரத்தில் இருந்து பெறப்பட்ட சுவடுகள் தோண்டி எடுக்கப்பட்டது, அதன் அதிர்வுகள் நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியது. திராவிட நாகரீகம் என்று பெயரிடப்பட்ட அந்தப் பெருமைக்குரிய வரலாறு கல்விக்கூடங்களில் நிலைபெற்றபோது, புராணப் புனைவுகளால் நெய்யப்பட்ட மூட நம்பிக்கைகளும், சமூக அநீதிகளும் நிரம்பிய ஆரியம் என்கிற உயரடுக்கு சரியத் துவங்கியது.

விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய உள்ளீடுகள், திராவிட நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்கியபோதும், குடியேற்ற இனக்குழுவின் நம்பிக்கைகளும், கலாச்சாரப் பின்புலமும் பழங்குடிகளால் நிராகரிக்கப்பட்டபோதும், ஆரியம் ஒரு நுட்பமான பரப்புரையை முன்னெடுத்தது.

“ஆரியக் குடியேற்றம் என்பதே ஒரு கட்டுக்கதை, அப்படியான ஒரு நிகழ்வு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழவே இல்லை என்று பல்வேறு போலியான ஆய்வுகளையும், தரவுகளையும் முன்வைத்து, “சரஸ்வதி நாகரீகம்” என்றொரு புதிய நாகரீகத்தை கட்டமைக்க முயன்றது. DNA ஆய்வுகள் இப்படியான ஒரு ஆரியக் குடியேற்றத்தை உறுதி செய்யவில்லை என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பழங்குடிகள் என்றும் பிதற்றத் துவங்கின.

கடந்த இருபதாண்டுகளில் தீவிர ஆரிய இனக்குழுவின் உறுப்பாக இயங்கும் பார்ப்பனீயம், பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, ஆரியக் குடியேற்றத்தைப் பொய்யென்று உறுதி செய்யப் பெருமுயற்சி செய்தது. DNA ஆய்வுகள், தொழில்நுட்ப உதவியோடு மிகத் தீவிரமாக இயங்கத் துவங்கிய கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில், அறிவியல்பூர்வமாக “ஆரியக் குடியேற்றம் நிகழ்ந்தது உண்மைதான்” என்பதைப் பல்வேறு பல்கலைக்கழங்கங்களின் உயிர் மூலக்கூறு ஆய்வுகள் உறுதி செய்யத் துவங்கி இருக்கிறது.

முன்னதாக X க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட சான்றுகள் (அதாவது தாய் ——மகள் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டது) குறிப்பிட்ட ஆரியக் குடியேற்ற DNA அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தபோது, புதிய Y குரோமோசோம்களில் (தந்தை – மகன் உறவுமுறை) இருந்து பெறப்பட்ட சான்றுகள், ஆரியக் குடியேற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆரியக் குடியேற்றம் பெரும்பான்மை ஆண்களை உள்ளடக்கியது என்கிற தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு புதிய Y க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை இணைக்கும் போது இதுவரையில் இருட்டறையில் இருந்த ஆரியக் குடியேற்றம் குறித்த மர்ம முடிச்சுகள் விலகித் தெளிவான முடிவுகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.

mtDNA – Data எனக்குறிக்கப்பட்ட முதன்மை ஆய்வுக் குறிப்புகளில் குடியேற்ற ஜீன்களின் பரவல் குறித்த உறுதியான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை, அல்லது குறைந்த அளவிலான தரவுகளே கிடைக்கப்பெற்றன, ஆனால், YDNA – Data என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் குடியேற்றம் குறித்த ஆய்வு முடிவுகளைத் தலை கீழாகத் திருப்பிப் போட்டன.

“A Genetic Chronology for the Indian Subcontinent points to heavily Sex – Biased Dispersal” என்ற தலைப்பிலான ஆய்வுகள், 16 உயிரியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது, பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஹட்டர்பீல்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த, “ஆரியக் குடியேற்றத்தில் பெருமளவில் ஆண்களே பங்குபெற்றார்கள்” என்கிற தீர்க்கமான முடிவே இந்தத் தலைகீழ் மாற்றங்களை உருவாக்கியது.

719235ஜீன் பரவலாக்கம் ஒரு எளிய பகுப்பு :
R1a———-Europe
R1a———-Central & South Asia
R1a —– Z-282 (Only Europe) ——Z-93 (Only Central & South Asia)

இந்த வரிசைக்கிரமத்தில் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், R1a ——-ஆரிய இனக்குழுப் பரவலுக்கு மாதிரியாகப் பெறப்பட்ட உயிர் மூலக்கூறு, Z-93 என்கிற பகுப்பாக 5800 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவலாக்கம் பெறுகிறது, அதன் மூல வேரான R1a —– Z-282 வழியாகப் பகுப்படைந்து ஐரோப்பாவில் மட்டும் நிலைகொள்கிறது, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா தவிர்த்த எந்த நிலப்பரப்பு வரலாற்றிலும் R1a வின் மூலமோ, பகுப்புகளோ அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் Dr. அண்டர் ஹில்லின்ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி.

முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின், ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் Dr. டேவிட் ரீச், 2009 இல் வெளியிட்ட “Reconstructing Indian Population History” என்கிற ஆய்வு ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியது. ANI – Ancestral North Indians, எனக்குறிக்கப்படும், வட இந்தியப் பழங்குடிகள் மத்திய கிழக்குத் தரைப்பகுதி, மத்திய ஆசிய பகுதி மற்றும் ஐரோப்பிய ஜீன்களோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ASI – Ancestral South Indians எனக்குறிக்கப்படும் தென்னிந்தியப் பழங்குடிகள் இந்தியாவின் தனித்துவமான ஜீன்களை உள்ளடக்கியவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது.

உயிரியலில் மிகத் துல்லியமாக இனக்குழு வரலாற்று நகர்வுகளை முடிவு செய்யும் DNA – Mapping ஆய்வுகளில் உள்ளீடு செய்யப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு, ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் பீட்டர் அண்டர் ஹில் தலைமையில் 32 துறை சார் அறிஞர்கள் R1a ஜீன்கள் குறித்த 16,244 ஆண் மாதிரிகளை 126 வெவ்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள், முடிவுகள் இரண்டு துணைக்குழுக்களைக் கண்டறிந்தது, (R1a ஜீன் மாதிரி என்பது ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகான இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 17.5 % பரவலாகி இருக்கிற மாதிரி), R1a முதன்மை ஜீன்கள் ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலை ஜீன்களான Z-93 – மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் கண்டறியப்பட்டன.

R1a வின் முதன்மைப் பகுப்பு ஜீனான Z-282, 98 % ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலைப் பகுப்பு ஜீனான Z-92, 98.4 % மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டது, R1a வின் இந்தப் பகுப்பு 5800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. R1a – வின் பரவலாக்கம் ஐரோப்பா முழுவதும் மட்டுமன்றி மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் நிகழ்ந்திருக்கிறது, அதே போல R1a வின் முதல் நிலைப் பகுப்பான Z-282 வின் பரவலாக்கம் ஐரோப்பாவில் மட்டும் கண்டறியப்பட்டது, இரண்டாம் நிலை இணை ஜீனான Z-93 இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலைத் தொடர்களில் கண்டறியப்பட்டது.

ஆரியக் குடியேற்றம் கட்டுக்கதை என்று சொன்னவர்கள், பல்வேறு மாறுபட்ட உயிரியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், குடியேற்ற நிகழ்வுகள் குறித்த உறுதியான தரவுகளை முன்வைக்காததை ஒரு மிகப்பெரிய சான்றாகக் காட்ட முனைந்தார்கள். முதலாவதாக mtDNA மூலமாக X க்ரோமோசோம்களை வைத்துப் பெறப்பட்ட முடிவுகளான, “12,500 ஆண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் மிகப்பெரிய அளவிலான புதிய ஜீன் பரவலாக்கம் நிகழவில்லை” என்ற வாதம், தற்போதைய Y க்ரோமோசோம்களின் மாதிரிகளை மையமாக வைத்துப் பெறப்பட்ட முடிவுகளால் தகர்க்கப்படுகிறது, 4500 ஆண்டுகளுக்குள் 17.5 % R1a ஜீன்களின் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது. X முடிவுகள் ஏன் தோல்வியைத் தழுவின என்றால், ஆரியக் குடியேற்றத்தை முன்னின்று நடத்தியது ஆண்கள் என்கிற ஆய்வு முடிவுகள், ஆக X முடிவுகள் அந்தக் குடியேற்ற நிகழ்வுகளை எதிரொலிக்க முடியாது.

Harrapan+cities+had+a+strong+central+government+which+led+to+organized+cities..jpg

இரண்டாவதாக “ஆரியக் குடியேற்றம் பொய்” என்று சொல்பவர்களால் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது, R1a வின் இருப்பும், வீரியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் தீவிரமாக நிலைகொண்டிருப்பதால் அது இந்தியாவில் உருவாகி ஏனைய பகுதிகளில் பரவலாக்கம் அடைந்திருக்கலாம் என்பது, ஆனால், 2016 இல் வெளியிடப்பட்ட R1a வின் துணைக்குழுக்களைப் பற்றிய உயிர் மூலக்கூறு ஆய்வுகள் நமக்குச் சொல்வது R1a வின் பகுப்பான Z-93 வெறும் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்டது.

மூன்றாவதாக வைக்கப்படும் “ஆரியக் குடியேற்றத்துக்கு முன்பாகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு பழங்குடி இனக்குழுக்கள் நிலைபெற்றிருந்தன என்கிற வாதம் வரலாற்று உயிரியல் அறிஞர்களால் கண்டிக்கப்படுகிறது. மனித இனத்தின் இடப்பெயர்வு ஒரு இயல்பான நிகழ்வு, கடந்த 15,000 ஆண்டுகளில் மனித இனம் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலப்பரப்புகளில் குடியேற்றமடைந்திருக்கிறது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் எல்லா உயிரியல் தொகுப்பு இனக்குழுக்களை கலப்பின அடையாளங்களோடு தான் வளர்ந்திருக்கிறது, அந்தமான் நிக்கோபாரின் “ஓங்கோ” இனக்குழு மட்டுமே கலப்பற்ற இனமாக இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் அடையாளம் காணப்படுகிறது.

பிறகு எதற்காக “ஆரியக் குடியேற்றம்” குறித்த சமூக, அரசியல் மற்றும் அறிவியல் விவாதங்களில் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அரசியலோடு திராவிட நாகரீகத்தின் சுவடுகளும், ஆரியக் குடியேற்ற நிகழ்வினால் விளைந்த தாக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயச் சிந்தனைகள் ஆரியக் குடியேற்ற நிகழ்வின் மானுட நீதியற்ற பல்வேறு நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த காலகட்டத்தில், தாங்கள் ஆரியர்கள், அறிவிற்சிறந்தவர்கள், வரலாற்றுப் பெருமையும், பிறப்புத் தகுதியும் கொண்ட உயர் மானுடக் குழுவினர் என்று எக்காளமிட்டனர்.

பின்பு, குடியேற்றக் குழுவின், சமூக நீதியற்ற, மானுட மேன்மைக்கு எதிரான பல்வேறு புரட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இல்லை, “நாங்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும், இந்திய பழங்குடிகள்” என்றும் நிறுவ முயன்றார்கள். சக மனிதனின் வாழ்வையும், உரிமைகளையும் ஒடுக்கிப், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு முரணான கூற்றை நிறுவி அதன் மூலம் , உழைப்புச் சுரண்டல், அரசியல் அதிகாரக் கைப்பற்றல், சமூக அநீதியிழைத்தல், கலை மற்றும் பண்பாட்டு இருட்டடிப்பு என்று நவீன மானுட நாகரீகத்துக்கு எதிரான மனநிலையைப் பரவலாக்கி அதையே உண்மை என்று நம்ப வைக்கிற வேலையை இந்த அடிப்படை இனக்குழுவாதிகள் தீவிரமாகி செய்வதாலேயே நாம் குடியேற்ற வரலாற்றில் அறிவியல் உண்மைகளைத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

இன்று தம்மைப் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற, ஆரியன் என்று பெருமையாகப் பேசுகிற பார்ப்பனீயத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது, இந்த அரசியல் அதிகாரம், மதம், சாதி, புனிதப் பெருமைகள், முதலாளித்துவ – ஊடக முட்டுக் கொடுப்பு என்று பல்வேறு காரணிகளால் பெறப்பட்டது, தொடர்ந்து உழைப்புச் சுரண்டல் செய்து வர்ண அமைப்பை அதிகார பூர்வமாக்கி இந்தியத் துணைக்கண்டத்தை உலகின் நாகரிக வளர்ச்சிப் பயணத்திலிருந்து விலக்கமடைய வைக்கும் ஒரு பின்னடைவாகவே இந்தப் பார்ப்பனீயத்தின் அரசியல் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

உழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகளிடம் விற்று, எளிய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி, அவசர அலங்கோலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்வை அலைக்கழிக்கும் காவிகளின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ளவும், மனித நேயமற்ற சமூக நீதிக்கு எதிரான அவர்களின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முனைவது வெறுப்பைக் கக்கி அவர்களோடு போர் புரிய அல்ல, மாறாக இன்னும் அழகிய உலகத்தை உருவாக்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, “சமூக நீதிக்கான இந்தப் பழங்குடிகளின் போராட்டம், நாகரீக உலகின் மேன்மைக்கான தன்னியல்பான இயக்கம், இதன் பலன் ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீது அணையாத விளக்காய் சுடர் விட்டெரியும்”.

Reference: “How Genetic is settling the Aryan Migration Debate” by Tony Joseph’s (Former Editor Business World) Article on The Hindu dated 16th June 2017.