பொதுவாய்ப் பேசினால்
புரட்சிக்குக் கூடரசிகர் மன்றங்கள் கூடும்.
கொஞ்சம்குறிப்பாய்ப் பேசுவோமே.
எந்தக் கவிதைநான் பாடகண்ணில் தெரியும் பூக்களையாகாலில் குத்தும் முட்களையாஇலக்கியத் தேனீக்களுக்குஎங்களிடம் சரக்கில்லை.
முதலில் கவிதைகளைக்காயப்படுத்துவோம்உள்ளேயிருப்பதுரத்தமா, சீழா என்ற ரகசியம்தெரியும் அப்போது.
அசை போட்டாலேபோதுமென்றால்இங்கு மாடுகள் கூடமரபுக் கவிஞர்கள்
வார்த்தைகளை அசைப்போட்டல்லவாழ்க்கையை அசைப்போடுவரட்டும் புதுக்கவிதை.
எல்லா இன்பங்களையும்சாதாரணமாக்கிவிடுகிறதுகம்யூனிஸ்டாய்வாழ்வதன் இன்பம்.
எல்லா துன்பங்களையும்சாதாராணமாக்கிவிடும்கம்யூனிச உணர்வைஇழப்பதன் துன்பம்.
சிலருக்குக்கம்யூனிசம் பிடிக்கிறதுகட்சி பிடிக்கவில்லை.தேனை பிடிக்கிறதுமகரந்தக் கிண்ணம்பிடிக்கவில்லை.
எல்லாம் சரிஎப்போது வரும் புரட்சிஎப்போது வரும் மழைஎன்பது போலமலைக்கிறார்கள் சிலர்.
வானில் இடிபாடுகள்இருந்தால் மட்டும் போதாதுவளி மண்டலத்தின்வலுவான இயக்கமின்றிவராது மழையும்.
வாழ்க்கையில் இடிபாடுகள்இருந்தால் மட்டும் போதாதுவலுவான இயக்கமின்றிவராது புரட்சி கூட.வாருங்கள் இயக்கத்திற்கு!
- துரை. சண்முகம்
இயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode