புரோட்டீன் சத்து உள்ள ஒரு உணவுப் பொருள் தான்இறால். சளிக்கு மிகவும் உகந்தது. மீனைவிட சுவையான (சத்தாண) உணவு சமைத்துப் பாருங்கள் அதன் சுவை நாக்கை விட்டுப்போகாது ஒட்டிக்கொள்ளும்.
தேவையான பொருட்கள்;-
இறால் - 250 கிராம்
தேங்காய் – 1 மூடி
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் - 2
பச்சைமிளகாய் - 5
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை;-
முதலில் நன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.தேங்காய்ப் பால் [முதல் பால்] பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.(நறுக்கியும் போடலாம்)
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்து இருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை நன்கு சமைக்கவும் பின்பு இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்..சுவையான கேரளா இறால் கறி தயார்.
கேரளா இறால் கறியை தோசை,இட்லி,ஆப்பம்,சாதத்துடன் பரிமாறலாம் சுவையாக இருக்கும்
கேரளா இறால் கறி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode