பூண்டு மிக நல்லது. அரு மருந்து.
நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்கு
வகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்
சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.
மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடை
போதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரி
வீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.
விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பூச்சிக்கடி போன்ற எந்த விஷக்கடிக்கும் முதலில்
மிளகைத்தான் திங்கக் கொடுப்பார்கள்.
நாம் முதலில் பார்க்கப்போவது பூண்டு,மிளகு ரசம்.
செய்வது எளிது.
தேவையான சாமான்கள்:
4 பல் பூண்டு, தக்காளி 2, மிளகு 1/4 ஸ்பூன்,
சீரகம் 1/4 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன்,கடுகு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.
செய்முறை:
பூண்டு பல், மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில்
போட்டு பொடிக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து
சுற்றினால் நன்கு பேஸ்டாக வரும்.
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
1 ஸ்பூன் சேர்த்து சூடானதும், கடுகுதாளித்து,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன்
அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு பேஸ்டை
சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு
கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை
சேர்த்தால் ரசம் ரெடி.
இதை சூப்பாகவும் குடிக்கலாம்.
பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode