புலியும், தமிழ் தேசிய குட்டைக்குள் புலி அரசியல் செய்யும் “இடதுசாரி” போலிகளும், தமிழ் நாட்டு புலி தமிழ் தேசிய கூட்டமும், மாநாட்டை பேரினவாத அரசே நடத்துவதாக கூறியுள்ளது. அதே நேரம் துரோக முத்திரை குத்தி எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. கலை கலைக்காக என்ற மாநாட்டுக்காரர் இதை மறுத்து தம் கருத்துக்களையும், அறிக்கையையும் விடுகின்றனர்.
சர்வதேச எழுத்தாளர் மாநாடும், பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையும்.
- 09 December 2010
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Last Updated on Thursday, 09 December 2010 20:22
மார்க்ஸிய நூல்கள்
- 24 March 2010
- தமிழரங்கம்
- Section: நூல்கள் -
- மார்க்ஸிய நூல்கள்
லெனின் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி
தொழிலாளி வர்க்கம் - கட்சி- இயல்பு பற்றி ஸ்டாலின் சென்யுன்
Last Updated on Monday, 29 November 2010 22:29
காணாமல் போன பெண்கள் - பாலிய ரீதியான போர்க்குற்றங்கள்
- 17 November 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
காணாமல் போன ஆண்களில் இருந்தும் இது வேறுபட்டது. பெண்கள் பாலியல் ரீதியாக காணாமல் போனார்கள். இதுவொரு கவனம் பெறாத புதிய போர்க்குற்றம்;. யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்த பின்னும், பாலியல் ரீதியான நோக்கத்தில் பெண்கள் பலர் காணாமல் போனார்கள். புலிகளுடன் எந்தத் தொடர்புமற்ற பெண்களுக்கு நடந்த கதி இது. புலியின் பெயரால் இவை பரவலாக அரங்கேறின. யுத்தத்தின் வெற்றி என்பது பெண்களை பாலியல் ரீதியாக குதறியும் அனுபவிக்கப்பட்டது.
ஊர் உலகத்தை ஏமாற்ற அரசு அமைத்த விசாரனையின் போது, யுத்தத்தின் பின் காணாமல் போன பெண்கள் பற்றிய தனித் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது. இவை கூட பலத்த கண்காணிப்பு, மிரட்டல்களைக் கடந்து பதிவாகியுள்ளது. யுத்தத்தில் காயமடைந்த அப்பாவிப் பெண்கள் முதல் புலி அல்லாத இளம்பெண்கள் வரை, இராணுவத்தின் கண்காணிப்பில் காணாமல் போய் உள்ளார்கள். இதைச் சாட்சியங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.
Last Updated on Wednesday, 17 November 2010 11:56
தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல் பற்றி
- 21 November 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதை கண்டு, இனியொரு அரசியலோ குமுறிப் பொங்கி எழுகின்றது. இதை "அரச ஆதரவு லும்பன்தனம்" என்கின்றது. சரி புலியாதரவு தமிழ்தேசியக் கூட்டத்தால், தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்று கேட்டால், முத்திரை குத்தி புலம்புகின்றனர். புலியாதரவு தமிழ்தேசியமோ தமிழ்மக்களுக்கு அழிவு அரசியலைத்தான் செய்தது. இதுதான் கடந்தகால வரலாறு என்றால், நிகழ்கால வரலாறும் அது தான். கடந்தகாலத்தைப் போல் தான் இன்றும்.
எம்மக்களுக்கு இந்தக் கும்பல் செய்த செய்கின்ற அழிவு அரசியலின் பின்னால் தான் இனியொரு கூடிக் கூத்தாடத் தொடங்கியது. இதை எதிர்ப்பதை, அரசு சார்பானதாக காட்டுகின்றனர். பழைய புலி அரசியல் தான், ஆனால் இடதுசாரிய மார்க்சிய சொல்லாடல்கள் மூலம் பூசி மெழுகுகின்றனர்.
Last Updated on Sunday, 21 November 2010 11:04
மக்களின் கனவை அழித்தவர்கள் புலிகள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 19)
- 13 November 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
புலிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் காரணங்களை பூசி மெழுகி பாதுகாக்கின்றனர். அவைகளைக் கேள்விக்குள்ளாக்காது விமர்சிக்காது இடது சந்தர்ப்பவாதம், தேசியவாதத்தின் பின் அனைவரையும் செல்லக் கோருகின்றது. இதை அரசியல் ரீதியாக மூடிமறைத்த இடது தேசியவாதமோ, வலது தேசிய வாதத்தை விமர்சிப்பதையே "அவதூறு" என்கின்றது. இந்த வலது தேசியவாதம் எப்படியெல்லாம் தன்னை நியாயப்படுத்தி அணுகுகின்றது என்பதைப் பாருங்கள். "விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்" என்ன தர்க்கம்!? என்ன வக்கிரம்!? இதுதான் புலியிசம். இதைப் பற்றியெல்லாம் பேசாது அரசியல் செய்வது தான், தேசியத்தின் பால் இடதுசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்கின்றனர். இதை மீறினால் அதை "அவதூறு" என்றும், "வரட்டுவாதம்" என்றும் வேறு முத்திரை குத்துகின்றனர்.
Last Updated on Saturday, 13 November 2010 07:13
புலியுடன் கூடி கூத்தாடும் இடதுசாரி சந்தர்ப்பவாத தமிழ் தேசியம்
- 11 November 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
புலி அழிவுடன் திடீரென உருவான இடதுசாரியமோ, இன்று புலியை எதிர்க்காது கூடிக் கூத்தாடுகின்றது. இதன் மூலம் தான் தமிழ்மக்களின் விடிவுக்கு வழிகாட்ட முடியும் என்கின்றனர். புலியை விமர்சிக்காது இருப்பதன் மூலம் தான், தேச பக்தர்களை இடதுசாரிகள் பக்கம் கொண்டு வர முடியும் என்று சந்தர்ப்பவாதம் பேசுகின்றது. இது புலி சமன் தேசியம் என்ற அரசியல் கோட்பாடு மூலம், அரசை மட்டும் எதிர்க்கின்ற புலி இடதுசாரியமாக முன்தள்ளப்படுகின்றது. இந்தப் புலி இடதுசாரியம் புலிகளின் அரசியலை "புலிகளின் தவறுகளையெல்லாம்" என்று வகைப்படுத்துகின்றது. இப்படி இனியொரு புலியின் "தவறுகளை" திருத்தி, புலித் தேசியத்தை உயர்த்த இன்று கூடிக் கூத்தாடுகின்றனர். இந்தத் "தவறுகளை" இடதுசாரிய சந்தர்ப்பவாதம் மூலம் களைந்து, புலிக்கே தலைமை தாங்கலாம் என்பது தான் இதன் பின்னுள்ள சந்தர்ப்பவாத நுண் அரசியலாகும். புலியின் "சரியான" அரசியலில் உள்ள "தவறுகள்" பற்றிய விளக்கம், அந்த இடதுசாரியத்தின் பெயரில் வலதுசாரிய அரசியலைக் காட்டுகின்றது.
Last Updated on Thursday, 11 November 2010 09:28
இலங்கை எழுத்தாளர் மாநாடு பகிஸ்கரிப்பு கோருவது, அரச பாசிசத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றது
- 07 November 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
பகிஸ்கரிப்பு இலங்கையில் மக்கள் வாழ்கின்றனர் என்பதை மறுதலிக்கின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தையே மறுதலிக்கின்றது. இலங்கையில் சுயாதீனமான அரசியல் செயல் தளங்களை மறுதலிக்கின்றது. தாம் அல்லாத அனைத்தையும், அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்றது. இதைத்தான் புலம் மற்றும் தமிழ்நாட்;டு, புலித் தமிழ்தேசியம் முன்தள்ளுகின்றது. இதற்குள் இடதுசாரியம் நீந்துகின்றது.
இந்த மாநாட்டுக்கான எதிரான எதிர்ப்பு அரசியல், புலி பாசிசத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதன் சாதக பாதக அம்சங்கள் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இலங்கை பாசிசத்தை இலங்கை மக்கள் தான் முறியடிக்கவேண்டும். இந்த அரசியல் அடிப்படையைக் கூட, தொடர்ந்து இன்று புலி அரசியல் மறுதலிக்கின்றது. அங்கு வாழும் தமிழ்மக்கள் சுயாதீனமாக கூடுவதைக் கூட, இவர்கள் அனுமதிக்கத் தயாராகவில்லை. புலிகள் கடந்த காலத்தில் எதைச்செய்தனரோ, அதையே இன்று செய்கின்றனர். புலியைப் போல் தான் அரசும், தான் அல்லாத எதையும் சுயாதீனமாக செய்வதை விரும்பவில்லை. அதை தன் ஜனநாயக வே~ம் மூலம் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. இன்று புலம் மற்றும் தமிழ் நாட்டு புலித் தமிழ்தேசிய பினாமிகள், இந்த வகையில் அரசுக்கு தாராளமாகவே உதவுகின்றனர். அரசுக்கு பதில் புலியே அதைச்செய்து முடிக்கின்றது.
Last Updated on Sunday, 07 November 2010 18:01
"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" அருள் எழிலன்
- 31 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்றால், மக்களைக் கொல்லக் கொடுத்தது நீதியான ஒரு அரசியல் செயல். யுத்தம் நடந்த காலத்தில் இதைக் கூறவில்லை. அண்மையில், அதுவும் புலிப் பணத்தைத் திருடி வைத்திருக்கும் பணக்காரப் புலிகள், பினாமி புலி ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நடத்திய ஊடகவியலாளர் கூட்டத்தில் தான் அருள் எழிலன் இதைக் கூறினார். அதேநேரம் தன் பேஸ் புக்கிலும் கூட, இதைக் குறிப்பிடுகின்றார். "சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர்" என்று சிபார்சு செய்யப்பட்டவர் தான் இதைக் கூறியிருக்கின்றார். அவரோ இனியொரு இணைய ஆசிரியரில் ஒருவர். அவரோ புலிப் பினாமி ஊடகவியல் கூட்டத்தில் தண்டரா போடுகின்றார். இதேபோல் இனியொருவின் மற்றொரு ஆசிரியரை உள்ளடக்கிய புதியதிசை, அண்மைக்காலமாக புலிகளுடன் கூடி கும்மியடிக்கின்றது. புலத்துப் புலி மாபியாக்களை பயன்படுத்தி, தாங்கள் வர்க்கப் புரட்சி செய்யப் போகின்றார்களாம். இப்படி திடீர் அரசியலுக்கு வந்தவர்களின் பற்பல அரசியல் கூத்துகள்.
Last Updated on Sunday, 31 October 2010 21:46
ஒருபக்க கொடுமைகளைப் பேசுவதன் மூலம் மறுபக்க கொடுமைகளை மறுப்பது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 18)
- 29 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
உண்மைகள் என்பது நேர்மையான மக்கள் சார்ந்த அரசியலில் இருக்கின்றது. எம் மக்களுக்கு எதிரி செய்த கொடுமைகளைப் பேசுவதன் மூலம், மறுபக்க உண்மைகளை மூடிமறைக்கவே வலதுசாரியம் எப்போதும் முனைகின்றது. இப்படி எதிரி செய்த கொடுமைகளை, தாங்கள் செய்த கொடுமைகளை மூடிமறைப்பதற்காக பயன்படுத்துகின்றது. இது திட்டமிட்ட மக்கள் விரோத சதி அரசியலாகும். இந்த அரசியலோ மனித நேயமற்ற இழிவரசியலாகும். இவை மக்கள் மேலான மறுபக்க கொடுமைகளை, நியாயப்படுத்துவதாகும்.
Last Updated on Friday, 29 October 2010 06:06
தமிழ் இனவாதம் கக்கும் "மார்க்சியம்" பேசும் இடதுசாரியம்
- 27 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
யுத்தத்தின் பின் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தொடர் இனவொடுமுறை என்பது, மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. மறுபக்கத்தில் அனைத்தையும் இனவாத சாயம் பூசி, விடுகின்ற தமிழ் இடதுசாரிய அரசியலும் அரங்கேறுகின்றது. யார் அதிகம் இனவாதம் பேசி தமிழ்மக்களைக் கவருவது என்ற போட்டியில் வலதுகளும் இடதுகளும் ஈடுபடுகின்றனர். முன்பு புலிகள் செய்ததையே, இன்று பழைய இடதுசாரிய பெருச்சாளிகள் செய்கின்றனர். தமிழ் இனவாதத்தை உயர்த்துவதன் மூலம், புலிகளை நிரவ முடியும் என்பதுதான் இன்றைய இடதுசாரிய அரசியலாக உள்ளது. சொந்த இடதுசாரிய கருத்துகள் மூலம், வலதுசாரியத்தை வெல்ல முடியாது என்பது இடதுசாரி அரசியல் திரிபாகும். இனவாதத்தைக் கக்குவதன் மூலம், வலதுசாரியத்தை தமதாக்க முடியும் என்பதே, இன்றைய இடது தமிழ்தேசியமாக மாறிவருகின்றது.
Last Updated on Wednesday, 27 October 2010 12:58
இந்தியாவை நம்பக் கோருகின்ற சுயவிமர்சனமற்ற அரசியல் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 17)
- 23 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
நாம் ஏன் தோற்றோம் என்பதை அரசியல்ரீதியாக சுயவிமர்சனம் செய்யாது இருக்கும் வலதுசாரியம், அதை திசைதிருப்ப முனைகின்றது. தோல்விக்கான காரணத்தை எதிரி மீது கூறி, மக்களை தொடர்ந்தும் தனக்கு கீழாக தோற்கடிக்க முனைகின்றது. தீபச்செல்வன் அதை மிக நுட்பமாகவே முன்வைக்கின்றார். "தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்புமீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தார்கள்." என்கின்றார். இதனால் தான் புலிகள் தோற்றனர் என்பது, ஒரு அரசியல் உண்மையல்ல. ஒரு உண்மைக்கு எதிராக மற்றொரு உண்மையை முன் நிறுத்துகின்றனர்.
Last Updated on Saturday, 23 October 2010 07:06
வாழ்ந்த மண்ணில் மீள வாழக் கோரும் சிங்கள மக்களும், அதை மறுக்கும் தமிழ்தேசியமும்
- 20 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
30 வருடங்களுக்கு முன் தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கள், தமிழ் தேசியத்தால் வரலாறு அற்றவர்களாக போய்விடவில்லை. ஆம் 1980 களில் 10000 மேற்பட்ட சிங்கள மக்கள் யாழ்குடாவில் வாழ்ந்தார்கள். 1990 வரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் யாழ் குடாவில் வாழ்ந்தார்கள். இது தமிழ்தேசியத்துக்குள் புதைந்து போன ஒரு வரலாறல்ல. அந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றால், தமிழ்மக்களின் சொந்த இணக்கத்துடன் தான். அவர்களுக்கு இடையில் எந்த குறுகிய இனத் துவேசமும் இருக்கவில்லை. அதுதான் அவர்களை அங்கு வாழவைத்தது. இது எம்மைச் சுற்றிய கடந்த இணக்கமான ஒரு வரலாறு. யாழ்நகரில் ஒரு விகாரையும், சிங்கள மகாவித்தியாலயம் என்ற ஒரு பாடசாலையும் கூடத்தான் அங்கு இருந்தது.
Last Updated on Wednesday, 20 October 2010 21:40
"புலிகள் உண்மையில் தோற்றார்களா…. புலிகள் தோற்கவில்லை." உண்மைகள் மேலான பொய் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 16)
- 20 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்க, மக்களை அரசு தோற்கடித்துவிட்டது என்ற உண்மையை கொண்டு, புலியை நியாயப்படுத்துகின்றனர். இங்கு மக்கள் புலியை தோற்கடித்ததை மறுப்பதே, தீபச்செல்வனின் இன்றைய அரசியல். உண்மைகளை மறுப்பதன் மூலம், வலதுசாரியம் தன்னைத்தான் தக்க வைக்க முனைகின்றது. தீபச்செல்வன் கூறுகின்றார் "புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத்தான் அரசு தோற்கடித்திருக்கிறது" என்கின்றார். இங்கு அரசு புலியைத் தோற்கடிக்கவில்லை. புலி தன்னைத்தான் தோற்கடித்தது. அதாவது மக்களுக்கு எதிரான புலி அரசியல் மூலம், புலி தன்னையே தோற்கடித்தது. மக்களைப் பார்வையாளராக்கி, ரசிகர் கூட்டமாக்கினர். புலிகள் வேறு மக்கள் வேறு என்ற இடைவெளி, அதிகாரமும் பணமும் குவிந்த போது மேலும் அகலமாகியது. பேரினவாத அரசு இதற்குள் புகுந்து, மக்களை தன் பங்குக்கு மேலும் தனிமைப்படுத்தியபடி புலியை இலகுவாக அழித்தது. இந்த நிலைமை என்பது புலியின் சொந்த அரசியல் மூலம் உருவானது.
Last Updated on Wednesday, 20 October 2010 05:07
கலை கலைக்காக என்ற எழுத்தாளர் மாநாடும், முத்திரை குத்தும் புலித் தேசியமும்
- 18 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
வலதுசாரிய தமிழ் தேசியம் எப்போதும் எதிரிக்கு ஆள்பிடித்து கொடுக்கின்றது. அதன் எதிர்ப்பு அரசியல் இதைத்தாண்டி மக்கள் சார்ந்ததல்ல. கலை கலைக்காக என்று எழுதும், எந்த சமூக உணர்வுமற்ற எழுத்தாளர் கூட்டத்தை, அரசின் பக்கம் செல்லுமாறு இன்று வலிந்து தூண்டுகின்றது. வலதுசாரி தமிழ் தேசியம், குறிப்பாக புலிகள் கடந்த காலத்தில் எதைச் செய்தனரோ, அதையே தான் அது தொடருகின்றது.
Last Updated on Monday, 18 October 2010 08:31
மக்கள் ஆதரவுடன், கூர்மை அடையும் பிரஞ்சுப் போராட்டங்கள்
- 17 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
மீண்டும் மீண்டும் வரலாறு காணாத போராட்டங்கள். ஐரோப்பாவில் பிரஞ்சு தொழிலாளர் வர்க்கம் தான், மீண்டும் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்துக்கு பாடம் நடத்துகின்றது. நேற்று (17.10.2010) ஐந்தாவது முறையாகவும், நாடு தழுவிய அளவில் வீதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. 30 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கியதுடன், 80 சதவீதமான மக்கள் இந்தப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Last Updated on Sunday, 17 October 2010 09:50
அரசின் எதிரியாக புலி இருந்ததால், புலியை ஆதரிக்க முடியுமா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 15)
- 17 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
அரசு எதிரியாக இருந்தால் போதுமானது என்ற தர்க்கமும், இது சார்ந்த நடைமுறைகளும், சந்தர்ப்பவாதத்தின் அரசியல் மூலமாகும். இப்படித்தான் புலிகள் பின் வால்பிடிக்கும் அரசியல் கட்டமைக்கப்பட்டது. புலிக்கு எதிரான அரசியல் மறுக்கப்பட்டது. மௌனமாக கைவிடப்;பட்டது. வலது முதல் இடது வரை, தமிழ் மக்களை கைவிட்ட அரசியலே உலகம் முழுக்க பூச்சூடியது. இது இரண்டு வகைப்பட்டதாக காணப்பட்டது.
Last Updated on Wednesday, 20 October 2010 05:06
மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்!... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14)
- 14 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
மக்களை யுத்தமுனையில் இருந்து வெளியேற்றுவதற்கான பொறுப்பு, மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். இதைச் செய்தபடிதான் அரசுக்கு எதிராக, மக்கள் மீதான தாக்குதலுக்காக குற்றஞ்சாட்ட முடியும். யுத்தமுனையில் மக்களை பலாத்காரமாக வைத்திருப்பதையே புலிகள் செய்தனர். மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி நிறுத்தி வைத்து, அவர்களை புலிகள் பலியிட்டனர். பின் அரசு அவர்களை பலியிடுவதாக கூறுவது அபத்தம். அரசு பலி கொடுக்கவில்லை பலியெடுத்தது. மக்கள் விரும்பி தாமாக பலியெடுக்கும் யுத்தமுனையில் இருக்கவில்லை. மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்திருக்கவில்லை.
Last Updated on Thursday, 14 October 2010 05:58
அதிகாரம் மூலம் பெண்களைக் குதறும் யாழ் உயர் வர்க்கம்
- 13 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
பெண்களின் ஒழுக்கம், பண்பாட்டை முன்னிறுத்திய யாழ் உயர்குடி தமிழ் சமூகம், இன்று பெண்களையே நுகர்வுப்பண்டமாக்கி நாலு காலில் நின்று நுகருகின்றது. பல்கலைக்கழக மாணவிகள் முதல் சிறு குழந்தைகள் வரை இந்த உயர் மேட்டுக்குடியின் நுகர்வு வெறியில் இருந்து தப்பிப் பிழைக்கவில்லை.
Last Updated on Wednesday, 13 October 2010 08:07
"உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13)
- 12 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
தியாகம் செய்து போராடக் கூறிய கூட்டம், தன்னைத் தியாகம் செய்யவில்லை. மாறாக இந்த கூட்டம் சரணடைந்தது. மக்களை பலிகொடுத்து தன்னை காப்பாற்ற முனைந்த கூட்டம், இறுதியில் போராடி மடியவில்லை. மாறாக சரணடைந்தது. இப்படி இந்தக் கூட்டம் தலைமை தாங்கிய போராட்டம் அழிந்து போனது தற்செயலானதல்ல. அங்கு உண்மை, நேர்மை, வீரம், தியாகம் என எதுவும் இருக்கவில்லை.
Last Updated on Tuesday, 12 October 2010 06:40
தீர்ப்புகளும், புலியின் பெயரால் பெண் உடலை குதறிய கொடுமையும்
- 10 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
சட்டம், நீதி, ஒழுங்கு என்பது, மக்கள் சார்ந்ததல்ல, அதிகாரம், பணப்பலம், செல்வாக்கு முதல் வர்க்கம், இனம், அரசியல் என்பதற்கு உட்பட்டது என்பதையே, இந்த நிகழ்வு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.
அண்மையில் வெளியாகிய செய்தி ஒன்று "வவுனியா அருணாச்சலம் முகாமில் தங்கியிருந்தபோது இராணுவத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டியநிலை ஏற்பட்டது." இப்படி திருமணமாகாத 20 வயது பெண் எப்படி குழந்தைக்கு தாயானாள் என்ற சமூகக் கண்காணிப்பு பொதுத் தளத்தில் தான், நடந்த கொடுமை வெளிவருகின்றது. அந்தப் பெண் "அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்த" போது இந்தச் சம்பவம் வெளி உலகுக்கு முன் வருகின்றது. இதற்கு முன் இதை தெரிந்திருந்தும், சொல்ல முடியாது. நடந்ததைச் சொல்லச் சாட்சியங்கள் இருப்பதில்லை. சொன்னால் அதை அவர் நிறுவவேண்டும், இல்லையென்றால் தண்டனை.
Last Updated on Sunday, 10 October 2010 09:35
புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)
- 09 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
புலிகளின் "தமிழீழத்தாகம்" உண்மையானது என்றால், அந்த இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணித்திருக்கவேண்டும். மாறாக அதன் தலைவர்கள் சரணடைந்தார்கள். புலிகளின் மொழியில் இது துரோகம். இப்படிப்பட்ட இவர்கள் வழிநடத்திய போராட்டம் உண்மையானதா!? நேர்மையானதா!? சொல்லுங்கள். இங்கு நாம் புலிகளின் கீழ் இருந்தவர்கள் குறித்துப் பேசவில்லை. புலித் தலைவர்கள் குறித்து தான் இங்கு பேசுகின்றோம். தங்கள் இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணிக்காது சரணடைந்த கூட்டம் தான், இந்தப் போராட்டத்தையும் அழித்தது. "பல்லாயிரம் போராளி" களின் "உயிர்களைத் தியாகம்" செய்ய வைத்ததன் மூலம் தங்களைக் காப்பாற்றியது. தங்களைப் பாதுகாக்க, மக்களை பலியிட்டது. இந்தக் கூட்டமா "போராடும் குரலை உன்னதமாகக் காட்டிய"து? இவர்கள் பின் கட்டமைத்த அனைத்தும் பொய்யானது. தன்னை தியாகம் செய்யத் தயாரற்ற கூட்டம், மற்றவன் தியாகத்தை காட்டி நக்கிய கூட்டம், தன் உயிரை பாதுகாக்க சரணடைந்தது. இது நடத்திய போராட்டம், எப்படித்தான் வெற்றிபெறும்.
Last Updated on Saturday, 09 October 2010 06:15
இன்று மகிந்த சந்திக்கும் மிகப்பெரிய எதிரி சரத்பொன்சேகாவே
- 07 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
சரத்பொன்சேகாவை தன் அதிகாரங்கள் மூலம் தண்டித்து ஒடுக்க முனைந்தவர்கள், அதனாலும் மூக்குடைபடுகின்றனர். இது செயல்பூர்வமான, எதிர்ப்பு அரசியலை உருவாக்குகின்றது. இதற்கு அடிப்படையாக இருப்பது, விட்டுக் கொடுக்காத உறுதியுடன் மகிந்தாவை எதிர்கொள்ளும் சரத்பொன்சேகாவின் உறுதியான நிலை. கைது, அவமானப்படுத்தல், உரிமைகளைப் பறித்தல், சிறை என்று தொடரும் அரச அடக்குமுறைகளை ஆளும் பாசிச வர்க்கம் அவர் மேல் ஏவுவதுடன், அதை வன்மம் கொண்டு திணித்தும் வருகின்றது. அது பாசிசத்தின் தன்மையையும், அதன் அரசியல் குணாம்சத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு எதிரான சரத்பொன்சேகாவின் விட்டுக்கொடுக்காத போராட்டம் அரசை தனிமைப்படுத்தி, அவர்களையே அதிரவைக்கின்றது.
Last Updated on Thursday, 07 October 2010 11:48
"கீ போட் புரட்சியாளர்கள்", "இணைய தளபதிகள்", "அரசியல் கொமிசார்கள்" என்கின்றனர்? சரி ஏன்?
- 06 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
இப்படி கூறுபவர்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவா, இப்படிக் கூறுகின்றனர்!? வர்க்கப் போராட்டத்தை நடத்தத்தான், அவர்கள் இதைக் கூறுகின்றனர் என்றால், எப்படி? அவர்கள் என்ன செய்ய முனைகின்றனர்? இந்த வகையில்தான் இதை நாம் ஆராய முடியும்.
அரசியல்ரீதியாக உயிரிலுள்ள மார்க்சியத்தை உயிரற்ற மார்க்சியமாக்கிவர்களின் அரசியல் யோக்கியத்தை நாம் அம்பலப்படுத்தும் போது, அதை எதிர்கொள்ள முடியாத கூட்டம் தான் இதை எமக்கு எதிராக கூறுகின்றது. இந்த வகையில் தேசியத்தை புலிக்கு பின் அழித்த தமிழ்தேசியவாதிகளும், இதைத்தான் எமக்கு எதிராக கூறுகின்றனர்.
Last Updated on Thursday, 07 October 2010 05:52
More Articles...
- அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !! - மகஇக
- நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை முன்னிறுத்தி, ம.க.இ.க.வின் அரசியல் நிலைப்பாடு
- ம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும்
- யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)
- கேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்
- 2500 மேற்பட்ட ஆவணங்கள், 1000 மேற்பட்ட போர்க்குற்ற படங்கள், விரைவில் 1000 மேற்பட்ட ஒலி ஒளி ஆவணங்கள்
- செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)