"என்னடா பசங்கல்லாம் தெருப்பக்கம் விடுவிடுன்னு ஓடுறானுவ. சாமி கௌம்பிடுச்சா?''
""இல்லியே. மாரியம்மன் கோயிலுட்ட வேட்டு சத்தத்தையும் காணோம், பூசாரியும் கத்தக் காணோம்.''
""பசங்க கூட்டமாகப் போறத பாத்தா சந்தேகமா இருக்கு, ஒருவேள கொறவன் கொறத்தி செட்டு போயிருக்குமோ!''.
]]>அரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.
]]>ஒரு நிழப்படம் - சில கேள்விகள்
இதோ, இங்கே நீங்கள் பார்க்கும் நிழற்படத்தில் ஓர் ஆப்பிரிக்கப் பெண் ஒரு சின்னஞ்சிறு கை அவள் வாயை வருடிப் பொத்தியபடி இருக்கிறது. அந்தக் கை சொல்லாமல் சொல்கிறது ""பால் கொடு அம்மா.'' அவன் அவளது மகன். ""என்னைக் கவனி'' என்று கை அசைவில் ஊமைச் சொல்லை உதிர்க்கும் இந்தக் குழந்தையைக் கவனியுங்கள். தாய்தான் அதன் உலகம்.
]]>
யவனர் வந்து கால்தடம் பதித்து...
நீட்டி முழக்கும் நெய்தற்குறிப்பில்
சேர்த்துக் கொள்ளுங்கள் இதையும்
கோட்டுச்சேரி சுனாமி குடியிருப்பில்
வெறிநாய் வந்து கால்தடம் பதித்து
]]>எடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.
]]>"இது கொள்கைக் கூட்டணியல்ல, அரசியல் கூட்டணி'' என்றார் போயஸ் தோட்டத்தை விட்டுவெளியில் வந்த வை.கோபால்சாமி. கொள்கை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?
இதற்கு 1999இலேயே திருமாவளவன் பதில் சொல்லியிருக்கிறார். ""தேர்தல் புறக்கணிப்பு எங்கள் கோட்பாடு பங்கேற்பு என்பது நிலைப்பாடு'' என்றார்.
]]>சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள் மட்டும்தான் அவற்றின் சாரத்தை சுருங்கக் கூறும் சான்றுகளைத் தடயமாக விட்டுச் செல்கின்றன. புஷ்ஷின் இந்திய வருகை அந்த ரகத்தைச் சார்ந்தது. ""புஷ் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அதே தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நாய்களை சார்ஜன்ட் மேஜர், லெப்டினன்ட் என்ற அவற்றின் பதவியின் பெயரால்தான் அழைக்க வேண்டுமெயன்றி நாய்கள் என்று தவறியும் அழைத்துவிடக் கூடாது''
]]>நாட்டுப்புறப் பாடல் பேழைகளை வெளியிடும் ராம்ஜி இசை நிறுவனம் சாதாரண மக்களின் இசையார்வத்தைப் பூர்த்தி செய்வதில் பலரால் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள ஒரு பிரபலமான நிறுவனம் ஆகும். இதன் நிறுவனர் ராம்ஜி எஸ்.பாலன் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கும் திரைப்படம் நாகரீகக் கோமாளி. ]]>
இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
]]>
சாதித் திமிர் நிரம்பி வழிய அசையும் மலைகளாக இயக்குனரும், பார்ப்பனப் பேராசிரியர் குழுவும், மேல்சாதிக் கூஜாக்களும், எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் கனவுகளுடன் மாணவ "அவாள்'களும்; அசையாத ஆறுகளாக காங்க்ரீட் கட்டிடங்கள் அவற்றுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என்றும் ஓடும் ஆறுகளின் நாமகரணங்கள் உண்டு;. மிச்சமீதி கண்ணுக்கெட்டிய தொலைவுவரை முள் கம்பி வேலிக்குள் முள்காடுகள் உண்டு.
]]>"எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியும், பயிற்சியும் இருந்தால், இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களில் அர்ச்சகராகலாம்'' என்ற சட்டத்தை தி.மு.க. அரசு மீண்டும் இயற்றியுள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது அதற்கெதிராக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்து அரசியல் சட்டம் தங்களுக்கு வழங்கியிருக்கும் பிறப்புரிமையை நிலைநாட்டிக் கொண்டார்கள் பார்ப்பனர்கள். ""நமது பிறவி இழிவை பூதக்கண்ணாடியால் பெருக்கிக் காட்டுவது போல வந்திருக்கிறது உச்சநீதி மன்றத் தீர்ப்பு'' என்று சாடினார் பெரியார்.
]]>தமிழ் சினிமாவில் தாதா ஃபார்முலா படங்கள் ஓடும் காலமிது. வாழ்க்கையில் நாடோடிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டும் திரையரங்கிற்கு வருவதால் அவர்களைக் கவர விறுவிறுப்பான திரைக்கதை தேவைப்படுகிறதாம். விறுவிறுப்பிற்கு வேறு எந்த ஃபார்முலாவையும் விட தாதாயிசம் பொருத்தமாக இருப்பதால் சித்திரம் பேசுதடி தொடங்கி, பட்டியல், தலைநகரம், கொக்கி, ஆறு வரை நீளும் பட்டியலில் தற்போது புதுப்பேட்டை.
]]>காடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.
தகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு.
இடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை.
]]>""நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி எனும் நச்சுப் பாதையில் நான் நுழைக்கப்பட்டேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு திறமை அனைத்தையும் தீர்மானிக்கும். நலிந்த பிரிவினருக்குத் தேவைப்படுவது நல்ல பள்ளிகள்தானேயன்றி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளல்ல.
]]>"2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?'' என்று ஒரு விநாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக வைத்துக் கொண்டால் உங்கள் பதில் என்ன? உலகக் கோப்பைக் கால்பந்து என பளிச்சென்று பதிலளித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை.
]]>"ஜெனிஃபரின் இந்த புதிய பெர்ப்ஃயூம் உங்கள் ஆளுமையை கூட்டி, சுத்தமாகவும், செக்ஸியாகவும் வைத்திருக்கும் வேறு எதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?'' என்று குழுமியிருக்கும் கூட்டத்தினரை கேட்கிறார் சென்ட் விற்பனை பிரதிநிதி. இது இந்து நாளேடு சென்னையில் நடத்திய ""மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோ''வில் ஒரு காட்சி.
]]>
""விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டை, புலிகள் தமிழகத்தில் ஊடுருவல்'' என்ற பூச்சாண்டியைத்தவிர செய்தித்தாள்கள் வேறு எதையும் சொல்வதில்லை.
]]>வரலாறு என்பது கடந்த காலத்தின் தேங்கிப்போன குட்டை அல்ல. அது வற்றாத ஜீவ நதி. கற்கள் சிதைந்து துகள்களாகவும். துகள்கள் சேர்ந்து கற்களாகவும் உருமாற்றம் பெற்ற வண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் வரலாற்றில் தியாகிகள் உருவாகிறார்கள், துரோகிகளும் உருவாகிறார்கள். தியாகிகளும் துரோகிகளும் கடந்த காலத்துக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர். அவர்கள் நம் கண் முன்னே நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள்.
]]>18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள்.
]]>பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் "பேரரசி ஆலை' என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த "காண்டீன் கான்டிராக்ட்' மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி "பேரரசி ஆலை' என்று வாலை ஆட்டியது.
]]>கீழ்த்தரமான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.
]]>"நானும் உழுது விதைக்கும்போது அவன்
தானும் உழவுக்கு வந்தானோ?
உழவு துறைக்கு வந்தானோ நம்மள்
உழவெருதுகள் மேய்த்தானோ?
களைமுளைகளெடுத்தானோ? இப்போ
கஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?
சனமோ? சாதியோ?
கும்பினியான்நம்மள்
சம்மந்தக்காரனோ கும்பினியான்
மனதுபோல நடப்பானோ? நம்மள்
மச்சானோ? தம்பி கிச்சானோ?"
கட்டபொம்மு வரலாறு' எனப்படும் கதைப் பாடலில் இருந்து.
]]>பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன் 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.
]]>
நாள் : 17.10.1799.
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். ]]>
"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
]]>1800 1801இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.
]]>