Language Selection

அசுரன்

தோழர் ரயாகரன் தமிழரங்கம் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருவது நாம் அறிந்ததே. தோழரின் தமிழ் சர்க்கிள் என்ற தளத்தில் சிந்தனையை தூண்டும் பல்வேறு கட்டுரைகள், புரட்சிகர பாடல்கள், உரைகள், வீடியோக்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிகைகளின் இணைய பதிப்புகள் ஆகியவற்றை பராமரித்து வந்தார். தமிழ் புரட்சிகர சிந்தனைகளின் களஞ்சியமாக இருந்தது அந்த தளம்.

இந்த தளத்திலுள்ள பல்வேறு குறைபாடுகளை களைந்து கொண்டு முற்றிலும் புதியதொரு தளத்தை வடிவமைக்க சமீப காலமாகவே தோழர் முயன்று வந்தார். அதற்க்கு எதுவும் உருப்படியான பங்களிப்புகள் செய்ய வக்கறவனாக இருந்தது வெட்கமடையச் செய்கிறது.

நந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

 2008 மே 11 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காரைக்குடி ராம.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

காரைக்குடி ராம.சுப்பையா, ஆத்திகர்களின் அசைக்கமுடியாத கோட்டையாகவும், பார்ப்பன அடிமைகளின் கூடாரமாகவும் திகழ்ந்த காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதியில் 1930களின் தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கத்தையும், சுயமரியாதை சமதர்மக் கட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டி அமைத்தவர். பல இன்னல்களுக்கு மத்தியில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை செட்டிநாட்டில் வேரூன்றச் செய்த சுப்பையா 1949 வரை பெரியார் இயக்கத்திலும், 1949 முதல் 1997இல் அவர் இறக்கும்