Language Selection

நான் ஒரு "வெள்ளாடிச்சி" என்பதை தலித்தியமாக நிறுவ, "வெள்ளாளனின்" முயற்சி தான், "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று கேட்க வைக்கின்றது. டானியலின் இலக்கிய மொழியில் இத்தகைய வெள்ளாளர்களை குறித்து எழுதிய போது, வெள்ளாளிய "மார்க்சியவாதிகள்" கொதித்துப் பொங்கிய அரசியல் விமர்சனங்களே - இன்று நுண் அரசியலில் வேசம் போடுகின்றது.

இந்த நுண் அரசியலின் உத்தி என்ன? தன்னை எல்லாமாக நிறுவிக் காட்டுவது. இது போன்று தான் தலித்தியத்தின் பெயரில், அரசியல் முதல் இலக்கியம் வரை அரங்கேறுகின்றது. ஒரே விதமான உத்தி. மொழிகளில் எல்லா ஒடுக்குமுறைகளை பேசுவதன் மூலம், தன்னை ஒடுக்கப்பட்டவனின் அணியாக காட்டிக் கொண்டு - ஒடுக்குபவனுடன் நடைமுறையற்றுக் கூடிக் குலாவுவது.

ஆனந்தசங்கரியின் மொழியில் சொன்னால், நான் ஒடுக்கப்பட்டவனின் வீட்டில் சாப்பிட்டவன் என்று கூறுகின்ற, அதே வெள்ளாளிய நரித்தனம்;. சாப்பிட்டால் என்ன, திருமணம் செய்தால் என்ன, நீ ஒடுக்கப்பட்டவனுடன் நடைமுறையில் இருக்கின்றாயா இல்லையா என்பது மட்டும் தான் ஒடுக்கப்பட்டவனின் அளவுகோல். இதைவிடுத்து ஒடுக்கப்பட்டவனுடன் நிற்பதாக எழுதுவது, பேசுவது, அறிக்கை விடுவது, நடிப்பது எல்லாம் சாதி சமூக அமைப்பில் வெள்ளாளியம். மொழிக் கோர்வைகள் - மொழிப் பூச்சாண்டிகளோ, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையுடன் பயணிப்பவனுக்கு தேவையற்றது. நடைமுறையில் வாழாதவன் கையாளும் உத்திதான், நடிப்பு முதல் ஒடுக்குமுறை பற்றி நடைமுறைக்கு வெளியில் எழுதுவது.

ஒடுக்குகின்றவன் தான் ஒடுக்குவதில்லை என்று நிறுவ முனைவதே, இன்றைய வெள்ளாளிய "நுண்" அரசியல். "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று கேட்டு வெள்ளாளிய சிந்தனையை மீள தகவமைப்பதும், “பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.”… என்று, சாதியை ஒழித்துவிட்டதாக பினாற்றுகின்ற வெள்ளாளியக் கட்சிகள் வரை, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.

1990 களில் வர்க்க அரசியலை மறுக்க புலத்தில் "பின்நவீனத்துவ" நுண் அரசியல் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள்;, 2000 இல் புலியின் பினாமிக் கட்சியான "தமிழீழ கட்சியின்;" இரகசிய - பகிரங்க உறுப்பினர்களானார்கள். அதை வந்தடைய பேசிய நுண் அரசியல் சாரம், வர்க்க அரசியலை மறுப்பது தான். எங்கே தொழிலாளிகள் இருக்கின்றனர் என்று கேட்பது தொடங்கி எத்தனை கதையாடல்கள். இதன் மற்றொரு பகுதி தான் புலியெதிர்ப்பு பேசிய "தலித்திய" வெள்ளாளியம்;. இது புலிக்கு மாறாக உருவான வெள்ளாளிய வரலாறு. ஒடுக்கப்பட்ட மக்களை கைவிட்ட வரலாறு. இன்று தங்கள் வெள்ளாளியம் கேள்விக்குள்ளாவது கண்டு, கும்பகர்ண நித்திரையில் இருந்து துடித்துப் பதைத்து பலர் எழுகின்றனர். ஐயோ எதை வரலாற்றில் இருந்து கற்றீர்கள் என்று குமுறி எழுகின்றனர். வரலாற்றில் இருந்து கற்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதை இன்று கிழிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிறுவதில்லை.

ஆம் இன்று அதே கூட்டம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை முன்வைத்து போராடுவதை மறுப்பதற்கு களமிறங்கி இருக்கின்றது. தாங்கள் எல்லாவற்றையும் பேசுவதாக நடிக்கும் சூக்குமான மொழியில் புலம்புவதன் மூலம், வெள்ளாளியம் என்ற ஒடுக்குமுறை இல்லையென்று நிறுவுவது நடக்கின்றது. இது இல்லாத சாதியை முன்வைத்து “பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.” என்று மேடை போட்டு கூறுகின்றவனின், வெள்ளாளிய வக்கிரத்துக்கு நிகரானது.

இன்று தேர்தல் களத்தில் "மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி" (சுயேட்சை) குழுவை சாதி முத்திரை குத்தி தனிமைப்படுத்த முனையும் வெள்ளாளியம் ஒருபுறம் கூச்சலிட, மறுபக்கத்தில் இல்லாத சாதியை முன்னிறுத்தி மக்களைப் பிளக்க முனைகின்ற இடதுசாரியம் என்று, வெள்ளாளிய ஒடுக்குமுறையாளர்கள் பிதற்றுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட சாதிகள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்ற எதார்த்தம், "மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி" பின்னால் மக்களை அணிதிரட்டுகின்றது. இன்னுமொருபுறம் அரசு ஆதரவான ஈ.பி.டி.பியின் வாக்குவங்கி, சாதிரீதியான ஒடுக்குமுறையை அரசியலாகக் கொண்ட தேசியத்திற்கு எதிரான வாக்குகளை அணிதிரட்டி இருக்கின்ற உண்மையை, வெள்ளாளியம் கண்ணை மூடிக்கொண்டு அதை மறுக்கக் கோருகின்றது. தாங்கள் சமபந்தி நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றிய தங்கள் வெள்ளாளியப் பெருமையை மேடை போட்டு பீற்றுகின்றனர்.

"இப்போ தலித் என்ற மொத்தத்துவத்துள் சாதியப் படிநிலைகளை, அவற்றுக்கிடையிலான உறவுமுறைகளை, கலவாமை போன்ற உப தீண்டாமைக் கூறுகளை மறைத்து அல்லது பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளை இப்போதைக்கு பின்போட வேண்டும். அதைப் பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம் என்பதை இங்கு பதிவுசெய்துவிடலாம். இந்தக் கருத்தை சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொதுமையை அதன் ஆதாரத்தன்மையை நிராகரிப்பதாக மொழிபெயர்க்காமல் இருந்தால் சரிதான்." இது தான் வெள்ளாளிய நுண் சிந்தனை. அந்த சிந்தனை உருவாக்கும் வெள்ளாளிய புத்தி.

ஒடுக்குமுறையை "பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது" என்று ஒடுக்குகின்ற வெள்ளாளியத்தால் மட்டுமே கூறுமுடியும்;. ஒடுக்குமுறையை அனுபவிப்பவன் ஒருநாளும் கூற முடியாது. சாதி என்பது தமிழர்கள் மத்தியில் வெள்ளாளியமாக இருப்பதையும் - அதை மறுப்பதில் இருந்து தலித்துக்குள்ளான சாதியம் குறித்து பேசுகின்றது. சாதி என்பது சாதிய சமூகத்தில் எங்கும் இருக்கின்றது என்ற பொருளிலேயே, வெள்ளாளியம் குறிக்கின்றது. இதை பேசாத அரசியல் வெள்ளாளியம் தான்.

"இப்போதைக்கு பின்போட" வேண்டும் என்று தலித்தியத்தை குற்றம் சாட்டும் வெள்ளாளியம், இதன் மூலம் தங்கள் வெள்ளாளியக் கொழுப்பு கரையும் வரையும் போராடுவதை பின்போடக் கோருகின்றது. "வெள்ளாடிச்சி" என்று கூறுவதை சமன் செய்ய, தலித் தங்கள் சாதிக்குள் சாதியை பேசாததை பற்றி வகுப்பெடுக்கின்றது. இது தான் வெள்ளாளனின் நுண் அரசியல்.

இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிக்குள் சாதி ஒடுக்குமுறைகள் பேசுவதை தவிர்ப்பது போன்று, தன்னை தலித்தியமாக தகவமைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த வெள்ளாளியத்துக்கும் அதை பொதுமைப்படுத்துகின்றது. "வெள்ளாடிச்சி" என்பது இப்படிதான் என்கின்றது.

"..பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம்" என்று கூறுகின்றவர்கள், இயக்க வரலாற்றில் இருந்து எதை கற்றுக்கொண்டார்கள்? ஒடுக்கப்பட்ட தேசியம் தோற்றுப்போனதுக்கு எந்த வெள்ளாளியம் காரணமாக இருந்ததோ, அதை மறுக்கவும் – மூடிமறைக்கவும் கற்றுக்கொண்டதையா, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் நிற்காத எவரும், கற்றுக் கொண்டது எதுவுமில்லை. இது தொடரும் ஒடுக்குமுறைக்கு ஆதரவானது.

ஒடுக்கபட்ட தேசிய இனம் தன் அக ஒடுக்குமுறையை "பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது" என்ற கூறும் நீங்கள் "தமிழீழ கட்சியில்" இரகசியமாக களமிறங்கினீர்கள். அன்று எதைச் செய்தீர்களோ, அதை சாதியத்திலும் கையாள கிளம்பி இருக்கின்றீர்கள். நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் இணைந்து இருக்காதவரை, துடித்துப் பதைத்து களமிறங்குவது ஒடுக்குபவனுக்கு சாதகமாகவே.

“பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.”… என்று கூச்சல் போடும் வெள்ளாளியத்திற்கு நிகரானது, "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று ஒடுக்குபவனுடன் நிற்காது உளறுவது.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ