Language Selection

அரசும் அதன் மீதான அதிகாரமே எல்லாம், வைரஸ் என்பது கால் தூசு. இது தான் இயற்கை மீதான முதலாளித்துவ அரசுகளின் கொள்கைகள். இப்படித் தான் கொரோனா வைரஸ் குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் கருதியதுடன் - அதையே நடைமுறையாக்கினர்.

ஆனால் இயற்கையும், இயற்கை விதியும் இதைக் கடந்தது என்பதையும் - கொரோனா வைரஸ் தன் வழியில் மனிதனை கொல்லத் தொடங்கிய போது - மனிதனுக்கு புரியத் தொடங்கியது இயற்கை முதலாளித்துவ அதிகாரத்தையும் கடந்ததென்று. தங்கள் வர்க்க அரசியல் அதிகாரங்கள் மூலமும், நவீன தொழில்நுட்பம் மூலமும், வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா மரணங்கள் தங்கள் வர்க்க சர்வாதிகார தனியுடமை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்ற பொது நெருக்கடியை அடுத்து, வைரஸ் தொற்றினை இயற்கை வடிவத்தில் முடக்கி கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, மெதுவாகவும் -  அரைகுறையுமாக தொடங்கினர்.

மூலதனத்தை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் முடிவுகளால் ஏற்பட்ட தயக்கம், தாமதம் கொரோனா மரணங்களாகவும் – மரண எண்ணிக்கை அதிகரிப்புமாகவும் பரிணமித்தது. மரணம் இன்று அரசியலாகியுள்ளது. இந்த அரசியலானது வர்க்க அரசியல் முரண்பாடாக மாறவில்லை. மாறாக ஆளும் வர்க்கத்தினுள்ளான முரண்பாடாக மட்டும் - குறுகி வெளிப்படுகின்றது. வர்க்கரீதியாக ஓடுக்கப்பட்ட வர்க்கமோ, வர்க்க அரசியலுக்கு பதில் பொருளாதாரவாத அரசியலுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. வர்க்க அரசியல் கோரிக்கைக்கும் - பொருளாதார கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை மார்க்சியம் மிகத் தெளிவாக கொண்டிருந்த போதும், பொருளாதார கோரிக்கைக்குள் அல்லது எதுவுமற்ற கொரோனா அரசியலாக சர்வதேசியம் குறுகிக் கிடக்கின்றது.

இந்த அரசியல் பின்னணியில் உலகின் ஓவ்வொரு நாடும் கொரோனாவுக்கு எதிராக எடுத்த முடிவுகளும் - மக்களின் நலனில் இருந்து எடுக்கப்பட்டதல்ல. இதனால் அது ஏற்படுத்திய விளைவுகள், மக்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. வர்க்க அமைப்பாக பிளந்துள்ள சமூகமானது இயற்கை, பொருளாதாரம், சமூகம்.. ரீதியாக, பல முரண்பாடுகளுக்குள் சிக்கி சமூக விளைவுகளைச் சந்தித்து வருகின்றது. அத்துடன் இன, மத, சாதி, நிற முரண்பாடுகளும் இணைந்து, சொல்லொணா மனிதத் துயரத்தை உருவாக்கி வருகின்றது.

அரசுகளின் முதலாளித்துவக் கண்ணோட்டத்துக்கு முரணாக உருவான இயற்கை செயற்பாட்டை அரைகுறையுமாக எதிர்கொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள் மருத்துவ ரீதியான இயற்கை அணுகுமுறைக்கு முரணாக, தங்கள் பொருளாதார கொள்கைக்கு அமைவாகவே எடுக்கப்பட்டது. இப்படி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவான மரண விகிதங்களே - இன்று உலகளவில் வெளியாகும் புள்ளிவிபரங்கள். இதுவும் முழுமையானதல்ல மூடிமறைக்கப்பட்டவையே.

அதேநேரம் உலகளவிலான மரண எண்ணிக்கை விகிதங்களைக் கொண்டு – பிற நாட்டை விட தங்கள் நாடுகள் சிறப்பாக செயற்படுகின்றன என்ற பொதுக் கருத்தினை உருவாக்கி அதைக் கொண்டு சரியானவராக தங்களை நிறுவ முனைகின்றனர். அதேநேரம் பிற நாட்டை குற்றம் சாட்டி, தங்கள் முதலாளித்துவ நடத்தைகள் சரியானது என்று காட்ட முனைகின்றனர்.  ஆட்சியிலுள்ள தாங்கள் சரியாகவும், மக்கள் நலன் சார்ந்து இருப்பதானதுமான பொதுக் கருத்தை உருவாக்க, மரண எண்ணிக்கை குறித்துப் பேசுகின்றனர். உலகில் எந்த அரசும் தாங்கள் தவறு இழைத்ததாக கூறி – நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிலைமைக்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. மாறாக தாங்கள், தங்கள் அதிகாரத்தை பெற்ற தேர்தல் ஜனநாயக அடிப்படையில் எடுத்த முடிவுகள் என்றும், இதை கேள்விக்கு உட்படுத்த முடியாத ஓன்றாகவே முன்மொழிகின்றனர்.

இந்த நிலைமைக்கு பின்னால், உலகளாவிய உலகமயமாதல் மருத்துவக் கொள்கை எங்கும் ஒன்றாக இருப்பது, உலகமயமாதலை நோக்கிய பயணத்தில் ஏற்பட்ட தாமதங்கள் மரண விகிதத்தை தீர்மானிப்பதில் - ஒரு எதிர்மறையான பங்கை வகித்து வருகின்றது.

உலகமயமாதல் கொள்கை அடிப்படையில், அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டு, தனியார் மருத்துவமே மருத்துவமாகி வரும் பொதுச் சூழலில் - கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன. மருத்துவமென்பது பணம் இருப்பவனுக்கேயானது என்ற பின், பணமுள்ளவனுக்கான மருத்துவ  உற்பத்தியாக குறைந்ததுடன், அனைவருக்குமான மருத்துவம் என்பது கொரோனாவுடன் பொது பற்றாக் குறையாக மாறியது. அதாவது அனைவருக்குமான மருத்துவ அடிப்படைக் கட்டுமானமும் - உற்பத்தியும் நவதாராளவாதத்தில் கிடையாது. கொரோனா தொற்று உலக தொற்றாக அறிவிக்கப்பட்ட பின், உலகளாவில் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காலத்திற்கு இடையில் இரண்டு மாதங்கள் இருந்தது. இக்காலத்தில் எந்த மருத்துவக் கொள்கையையும் மாற்றிவிடவில்லை. அதேநேரம் எந்த தயாரிப்பையும் புதிதாக செய்திருக்கவில்லை. ஒரு நெருக்கடி உருவான பின், உலக முதலாளித்துவச் சந்தைவிதிக்கு முரணாக, மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் அரச நடைமுறைகள் எதையும் முன்னெடுப்பதை முதலாளித்துவம் மறுதளித்தது. இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்ட காலத்தில் கூட, பற்றாக் குறையை நீக்கும் வண்ணம் உலகமயமாதலுக்கு முரணான உற்பத்தி முறைமையை அரசுகள் அமுல்படுத்தப்படவில்லை. எது உலகமயமாதல் சந்தைவிதியோ, அதுதான் மருத்துவத்தின் அத்தியாவசிய பொருட்கள் மீதான கொள்கையாகத் தொடர்ந்தது. இன்று இந்த விதி மீள இயல்பு வாழ்க்கை திரும்ப தேவைப்படும் - அடிப்படை பொருள்கள் குறித்துமான, அரசுகளின் கொள்கையாகவும் இருக்கின்றது.

அதேநேரம் மரணத்தைக் குறைத்துக் காட்டுவது என்பது எங்குமான பொது நடைமுறையாகி இருக்கின்றது. கொரோனா தொற்று தோன்றியதாக நம்பப்படும் சீனாவில் மரண எண்ணிக்கை குறைவாக இருப்பது தான், மேற்கு ஜனநாயகத்தின் பொதுப் பிரச்சனையாக மாறி இருக்கின்றது. தாங்கள் எப்படி தங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தை முன்னிறுத்தி கொரோனாவுக்கு பலிகொடுத்தோம் என்பதல்ல. சீனத் தரவுகளில் கொரோனாவால் வீட்டில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையை சீனா புதிதாக இணைத்து வெளியிட்ட போதும், அதன் உண்மைத் தன்மையை மேற்கு விவாதிப்பதன் மூலம் - தங்கள் நாட்டு மரணங்களுக்கான சுய பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முனைகின்றனர்.

மேற்கில் மரணமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் கூட தவறானவை. குறிப்பாக மருத்துவ மனைகளில் மரணங்களை உள்ளடக்கியதாக - குறைத்துக் காட்டப்பட்டது. முதியோர் இல்லங்கள் - வீடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்களை மூடிமறைத்தும் - இன்னமும் முழுமையாக முன்வைக்கப்படவில்லை.  மரணப் புள்ளிவிபரங்களை குறைத்து வெளியிடுவதே – அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களின் இருப்புக்கான அரசியலாக மாறி இருக்கின்றது.

இயற்கையான முதியோர் மரணங்கள் சீனாவிலும் நிகழ்ந்தது - மேற்கிலும் நிகழ்கின்றது.  இது பாரிய எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. சீனாவில் முடக்கம் அமுலில் இருந்த காலத்தில், இயற்கை மரணம் - கொரோனா மரணம் இரண்டும் அக்கபக்கமாக இருந்ததுடன், அதில் வீட்டில் நடந்த கொரொனா மரணத்தை காலம் தாழ்த்தி இணைத்தனர். அதை கேள்விக்கு உள்ளாக்கும் மேற்கின் கொரோனா அரசியல், தங்கள் சுய முகத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. உதாரணமாக பிரான்சில் மருத்துவமனை மரணங்களை மட்டும் அறிவித்து வந்தவர்கள், பாராளுமன்ற கேள்விகளை அடுத்து முதியோர் இல்ல மரணங்களை திடீரென இணைத்தனர். ஆனால் வீடுகளில் மரணித்தவர்கள் எண்ணிக்கை இணைக்கப்படவில்லை.

பிரிட்டனில் முதியோர் இல்லம் மற்றும் வீட்டில் நடக்கும் கொரோனா மரணங்களை புள்ளிவிபர ரீதியாக இணைக்கவில்லை. இப்படி உலகெங்கும் கொரோனா மரணங்கள் அரசியல் காரணங்களால் - மக்கள் முன் மூடிமறைக்கப்பட்டு தான் வெளிவந்தன –வெளிவருகின்றது.

மக்களுக்கு எதிராக அரசுகளும் - மூலதனமும் இணைந்து செய்த குற்றங்களே, பெருமளவிலான மரணங்களுக்கு காரணமாகி இருக்கின்றது. இதை மறைக்க, மரணங்களை மறைப்பது அரசுகளின் அரசியலாக மாறி இருக்கின்றது. ஊடகங்களின் ஒப்பாரியாக மாறி இருக்கின்றது.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ