Language Selection

கொரோனா நோய் தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட, ஒரு மாதம் கடந்துவிட்டது. உடலின் ஏற்பட்ட வலிகள் படிப்படியாக குறைந்து, நோயிலிருந்து மீண்டு தேறியிருக்கின்றேன். இது மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதல்ல, எனது உடல் மற்றும் மனவுணர்வு சார்ந்தது.

இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் ஐந்தில் ஒருவர் இறக்கின்றனர். இது தான் அதிகாரபூர்வமான தரவு. உடல் மற்றும் மருத்துவ உதவி சார்ந்து நிகழ்கின்றது. நான் தேறிய போதும் அன்றாடம் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றது. இன்று உழைப்பு முடக்கப்பட்ட போது, புதிதாக நோய்த்தொற்று பத்தாயிரக்கணக்கில் (சில நாட்கள் இலட்சம் வரை) நிகழ்கின்றது. அதேநேரம் இதற்கான மருத்துவரீதியான தீர்வுகள் - அணுகுமுறைகள் ஒன்றுபட்டனவல்ல, அவையும் தொடர்ந்து வேறுபடுகின்றன. இதுதான் எதார்த்தம்.

எனக்கு மனவுறுதியைத் தந்தது நான் போராடிய வாழ்க்கையும், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனவுறுதியும் தான். எனக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு மருத்துவரீதியாக காய்ச்சல் - உடல் வலியைப் போக்க டொலிப்பிரான் தரப்பட்டது. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கினை நிறுத்த மருந்தும், சளியை வெளியேற்ற வழமையாக பாவிக்கும் சிராப்பு மருந்தும் மருத்துவரால் தரப்பட்டது. இதைத் தவிர வேறு எதையும் பாவிக்கவில்லை. நோய் எதிர்ப்பு சத்தியை பலப்படுத்த தோடம்பழச்சாறு (விற்றமின் சி) குடித்தேன். மற்றும்படி வழமையான உணவு தான். இதுதான் கொரோனாவுக்கு எதிரான எனது மருத்துவம் மற்றும் உணவாக நான் கையாண்டது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவும் முடியாது.

உண்மையில் இயற்கை ஆற்றலே, நோயில் இருந்து என்னை மீள வைத்தது. தனிப்பட்ட ரீதியில், நான் இந்தப் பூமிக்கு ஒரு விருந்தினர் - அவ்வளவுதான். அப்படிப்பட்டதே இயற்கையின் விதி. இந்த இயற்கையின் ஆற்றலே, மீண்டும் எனக்கு உயிர் வாழ்க்கையைத் தந்தது.

நோய்த்தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட போது, 10 நாள் உயிர் வாழ்வதா அல்லது இன்னும் 10 வருடம் உயிர் வாழ்வதா என்பதையே, என் பகுத்தறிவு கேள்விக்குள்ளாக்கியது. அதேநேரம் அறிவு மரணத்துக்கு என்னை தயார் செய்தது. மரணம் குறித்த பொதுவான உளவியல் அச்சம் - என்னை அதிரவைக்கவில்லை, மரணம் என்பது, என்னுடைய 40 வருட பொது வாழ்வு சார்ந்து - எப்போதும் தரிசித்து வந்த ஒன்று தான். என் கண் முன் பலதரம் நிழலாடிய மரணம் - எனக்குப் புதிதல்ல. மரணத்தின் விளிம்பில் இருந்து, பலதரம் தப்பியும் இருக்கின்றேன். எனக்கு ஏற்கனவே பொது வாழ்வு சார்ந்து கல்வெட்டுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

 

இதில் இருந்து மாறுபட்டதே கொரோனா தொற்று என்பது மரணத்தையே நிகழ்தகவாகக் கொண்ட, புதிய தொற்று நோய். சிலருக்கு அதுவே இறுதியாக இருக்கும் என்று அறுதியிட்டு சொல்லுமளவுக்கு, மருத்துவ அறிவு – உலகின் பொது எதார்த்தமாக மாறி இருக்கின்றது.

கொரொனா வைரஸ்சானது அறிவுபூர்வமான மருத்துவ உலகம் தடுமாறுமளவுக்கு, பாரிய மனித உயிர் இழப்புகளையும் - சமூக அழிவுகளையும் தரவல்லதாக மாறி, அது நவீன உலகையே முடக்கியிருக்கின்றது.

பொருளே உலகம், அதுதான் எல்லாம் என்று சிந்திக்கின்ற மனிதனையும், அது சார்ந்த மனித முடிவுகளையும் - நடத்தைகளையும், செயலற்றதாக மாற்றிக் காட்டியிருக்கின்றது.

உழைப்பைக் கொடுத்து வாழும் நவீன கூலி வாழ்க்கை முறை நிரந்தரமானது - அது எம்மையும் எம் வாழ்வின் இருப்பையும் அசைக்காது என்று நம்பி வாழ்ந்த மனித வாழ்க்கையையும் - அது சார்ந்த நம்பிக்கைகளையும் அசைத்து வருகின்றது.

பல பத்து கோடிக்கணக்கான மக்கள், தங்கள் வேலைகளை இழந்து வருகின்றனர். ஒருநேர உணவு இன்றிக் கையேந்தும் மக்கள் எண்ணிக்கையோ, பல மடங்காக – அது பல பத்து கோடிக்கணக்காக மாறி வருகின்றது. போலி ஜனநாயகம், போலி சுதந்திரத்தின் பின்னான உலகத்தின், பொது வெட்டுமுகம் இதுதான்.

அறிவுக்கு புறம்பான மத நம்பிக்கைகளும், பகுத்தறிவற்ற வாழ்க்கை நெறிகளும், தனிமனித பிரமைகளும்.. ஏதுமற்ற வெற்றுப் புலம்பலாக - கொரொனா மாற்றி வருகின்றது.

தனிமனித சுதந்திரமும் - அது சார்ந்த நடத்தைகளுமே சமூகத்தை விட முதன்மையானது என்று கூறி, சமூகத்தை மிதித்த நடத்தைகள் அடங்கியொடுக்குமளவுக்கு கொரோனாவின் இயற்கை விதி - சமூகத்தை வழி நடத்துகின்றது.

அரசும் - ஆட்சியும் குறுகிய நலன்களைப் பேணுகின்ற சர்வாதிகார அமைப்பு வடிவம் என்பதையும், அது மக்களுக்கு எதிரானவை என்பதையும், உலகெங்குமான ஆட்சியாளர்கள் தங்கள் நடத்தைகள் மூலம் எடுத்துக் காட்டி வருகின்றனர்.

இயற்கை விதிக்கு உட்பட்ட உயிர் தான் மனிதன் - இயற்கையை மிஞ்சி பணமுள்ளவனின் உலகமாக கட்டமைக்கப்பட்ட பொருள் சார்ந்த உலகப் பிரமைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

இனம், மதம், நிறம், சாதி, வர்க்க ஒடுக்குமுறையாளர்களே அஞ்சி நடுங்குமளவுக்கு, இயற்கையே மனிதனுக்கு பாடத்தை புகட்டி வருகின்றது.

மனித உழைப்பு தான் அனைத்து செல்வத்தையும் உருவாக்குகின்றது என்பதை, செல்வத்தைக் குவிக்கின்ற முதலாளித்துவ முடக்கம் மனிதனுக்கு எடுத்துக் காட்டுகின்றது.

கார்ல் மார்க்ஸ் கூறியது போல் "இந்தப் பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்தின் உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல".. "ஏன் மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல" "நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே." ஆம் இது தான், எங்கும் தளுவிய உண்மை.

இவை அனைத்தையும் கொரோனா வைரஸ் - இயற்கையின் போக்கில் கட்டமைத்துக் காட்டி வருகின்றது. இயற்கையில் சமூகமாக வாழ வேண்டிய மனிதன், இயற்கை விதிக்கு புறம்பாக வாழ்கின்றதன் பொது விளைவை - உணர வைக்கின்றது. மனித சிந்தனைகள், நடத்தைகள் தனிநபராக குறுகி கிடப்பதால் - கொரோனா மூலமான மனித அவலமும் - பாதிப்பும் பல மடங்காக மாறி வருகின்றது.

இதனால் பலர் தொடர்ந்து மரணிக்கின்றனர். இப்படிப்பட்ட மரணத்தை நோக்கி எனது பயணம், என் முன்னால் நிழலாடியது. கொரோனா குறித்து சமூகப் பொறுப்பற்ற தனிமனித கண்ணோட்டங்களையும், சமூக விழிப்புணர்வையும் கொண்டு வரும் நோக்கில், என்னை வைரஸ் தாக்கிய சூழலை விளக்கி கட்டுரையை பதிவிட்டேன். எதிர்பாராதவிதமாக பல ஆயிரம் பேர் அக்கட்டுரையைப் படித்ததுடன், பலர் அதை தனிப்பதிவாக வெளியிட்டு பலருக்கு கொண்டு சென்றதையும் அறிய முடிகின்றது. நான் நோயில் இருந்து மீள வேண்டும் என்று, பலர் அக்கறை காட்டினார்கள். சிலர் அரசியல்ரீதியாக கவலைப்பட்டனர். சிலர் அஞ்சலியை வெளியிட்டனர். இப்படி பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டதையும் செவிவழியாக கேட்க முடிகின்றது. அதை தேடிப் படிக்க விரும்பவில்லை.

நான் எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடினேனோ. அதுவே எனது எதிர்கால நம்பிக்கையாக இருந்தது. தொடர்ந்து போராடும் நம்பிக்கையே, என்னை வாழ வைக்கின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான என்னுடைய பயணத்துடன் இணைந்ததாக இல்லாத எதையும் - என்னால் அங்கீகரிக்கவும் முடியாது.

சமூகத்தின் விடுதலையை முன்வைத்து அவர்களுக்காக நடைமுறையில் உழைக்கின்ற சமூக மனிதர்களுடன் - என் மீது அக்கறை கொண்ட அனைவரையும் இணைந்து கொள்ளக் கோருகின்றேன். அதைத்தான், என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் என்னால் கூறமுடியும்.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ