Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

காசு பணம் நிலம் சாதி குலம் மதம்..!?

  • PDF

உப்பினில் மீனினம்

உப்பியே காய்கின்ற

வெம்மணற் கரையோரம்..,

மரக்கலம் தனித் தனி

அலையுடன் மோதிய

வீரங்கள் பல பேசும் - ஆங்கே

பனையொடு தென்னையும்

தனித்தனி வளர்ந்ததில்

தனிமரத் தோப்பாகும் - அதில்

தனி நின்று அறுகின்ற

அடம்பன் கொடி சேர்ந்து - தம்

பலத்தினைப் பறைசாற்றும்.

 

தொன்மைகள் பேசியே

வன்முறை ஆள்கின்ற

நான்கின நாடுதனில்..,

சிங்களர் - தமிழரும்

மனிதத்தில் ஒருமித்த

கருத்தினிற் பொதுவாகி - நாம்

சுயத்துடன் வாழ்கின்ற

உரிமைக்குப் போரிடும்

மக்களாய் மலர்ந்திடவே - எம்

பொத்திய கரங்களால்

வானையே உடைக்கின்ற

வீரங்கள் விளைந்தோங்கும்.

 

'சேர்"களும் ஜீ.ஜீ.யும் தொடர்

செல்வா  அமீரர் கோட்டை(ப்)

பிரிவினில் சதிராடி - அவர்

தொடர் கொடியெனத் தூக்கிய

தானைத் தளபதி தம்பியர்

தும்பியர் துப்பாக்கி வரையாக...

 

காசு பணம் நிலம்

சாதி குலம் மதம்  - என்ற

விசங்கள் ஒளிந்திருக்கும் - இந்த

இனவாத மதவாத சதிகார

அரசியல் தினம் தினம்

மனிதச் சாவினில் சதிராட - இவர்

சிற்சிலர் சேர்ந்திவை  - நின்

தாய்மொழி எனச் சொல்லி - அதில்

உந்தனை உப்பாக்கி - தம்

கொலைவெறி தீர்த்திட

உந்தனை அழைப்பவர் தாம்,

நின் தாய்மொழி என(ப்)

பேசிடும் குரல்களை

வெறிமொழி ஆக்கினர், ஏன்..?

 

இவர் தன்னிலை வெறிகளை

உந்தனில் நோகாமல்

ஏற்றிடும் ஊசிகளால்..,

இத்தனை ஆண்டாண்டாய் - எம்

மக்களைக் கொன்ற வரலாற்றில்

உண்டு களிக்கின்றார்.

 

இவர் தாம் ஆண்டபரம்பரை

எனச் சொல்லிடும் போதினில்..!

மீண்டும் மீண்டும் உனை

ஆண்டு சிறக்கின்றார் - இதில்

இந்தியின் இராமன் ஆண்டாலும்

இலங்கையின் இராவணன் ஆண்டாலும்

எம் மக்கள் அடிமையேதான்.

 

இந்நிலை உடைத்தே நாம்

பொது மக்கள் சபையினில்

நல் வாழ்வினைக் கண்டிடவே..,

 

மக்களை அழிக்கின்ற

ஆதிக்கப் பேய்களை - அதன்

அடிமைப் பூத சுலோகங்களை..,

 

அனைத்தின மக்களும்

அடம்பன் கொடி யொப்ப(த்)

திரண்டே பகையாட..,

பறந்தே பகை ஓடும்

பாறியே அவை வீழும்  - எம்

பொத்திய கரங்களால்

பாசிசம் உடைத்திட

வாருங்கள் தோழர்களே..!

மக்கள் போராட்டத்தில்

சேருங்கள் தோழர்களே..!!

 

-     மாணிக்கம்

03.06.2013

Last Updated on Saturday, 29 June 2013 15:17

சமூகவியலாளர்கள்

< June 2013 >
Mo Tu We Th Fr Sa Su
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 20 21 22 23
24 25 26 27 28 29 30

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை