Language Selection

புலிகளின் "மாவீரர்" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.

அரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் "தேசியமாக" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.

இந்த நிகழ்வுகள் அரச பாசிசத்துக்கு எதிரான, சவால்மிக்க செயற்பாடாக, நாம் அரசியல் ரீதியாக அடையாளம் கண்டு புரிந்துகொள்ள வேணடும். புலிகளின் இந்த "மாவீரர் நாள்" இதை ஒருங்கிணைகின்றது என்பதால், இதை புறக்கணிக்க முடியாது. அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி வழிநடத்தாத அரசியல் வெற்றிடத்தில் இருந்துதான், இது தன்னெழுச்சியாக தோற்றம் பெறுகின்றது. இப்படி ஆங்காங்கே நடந்தேறிய நிகழ்வுகளை 2009 முந்தைய புலிகளின் "மாவீரர்" நிகழ்வுகளுடனோ அல்லது இன்று புலத்தில் புலிகளின் "மாவீரர்" தின நிகழ்வுகளுடனோ ஒன்றுபடுத்தி பார்க்க முடியாது.

இது அதிலிருந்து வேறுபட்டதாகவும், அதே நேரம் அதன் தொடர்சியாகவும் புரிந்து கொள்வது அவசியம். இவை அரச பாசிசத்தின் கெடுபிடி கொண்ட கண்காணிப்புகளுக்கு, இது சவால் விட்டு இருக்கின்றது. அடக்குமுறைகளை கண்டு அடங்கிப்போவதல்ல மனிதத் தன்மை என்பதை அறைகூவி சவால் விடுத்து இருக்கின்றது. அஞ்சி நடுங்கும் அரசியல் கோழைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் முகத்தில் அறைந்து பதில் சொல்லியிருக்கின்றது.

எங்கும் நிறைந்த எதிரி யார் என்பதையும், எங்கு எப்படி எந்த வடிவில் உள்ளான் என்பதையும் இனம் கண்டு, அதை தனிமைப்படுத்திக் கொண்டு தான் இந்த நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றது. அன்னிய சக்திகளின் தயவில் இலவு காத்த கிளி போல் இவர்கள் காத்திருக்கவில்லை. புரட்சி செய்ய "ஜனநாயகம்" வரும் என்று இவர்கள் கனவு காணவில்லை. மாறாக பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்ப்பாய், தங்கள் அறிவின் எல்லைக்குள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். வடகிழக்கு பல்கலைக்கழகங்களில் நடந்த நிகழ்வுகள், பல மாணவர்களின் கூட்டு செயற்பாடாக, சவால்மிக்க செயலாகவும் இருந்து இருக்கின்றது. எல்லாக் கண்காணிப்புகளையும் கொண்ட பாசிசமாக்கலை நடைமுறையில் எதிர்கொண்டு போராடும் நடைமுறையாக இருந்து இருக்கின்றது.

இங்கு அரசியல் செய்பவர்கள், சமூகம் பற்றி எழுதுபவர்கள் பாசிசத்தை நடைமுறையில் எதிர்கொள்வது எப்படி என்பதையும், எப்படி செயற்படுவது என்பதையும் இங்கிருந்து தான் கற்க வேண்டும்.

அரசுக்கு எதிரான இந்த அடையாளப் போராட்டங்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்கு, போராடுவர்களிடம் இருந்தான நடைமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடுபவர்கள் தங்கள் நடைமுறையை மக்கள் போராட்டமாக்க, அரசியலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மக்களைச் சாராத இரு துருவ அரசியல் செயற்பாடுகளும், தொடர்ந்தியங்குவது தான் இங்கு தொடருகின்றது. இதற்கு மாறாக நடைமுறையுடன் கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலுடன் கூடிய நடைமுறையை மக்கள் கோருகின்றனர்.

இந்த அரசியல் முன்முயற்சியற்ற சூழலில், இனவாதிகளின் தேர்தல் வெற்றிகளும், உதிரியான தன்னெழுச்சியான அரச எதிர்ப்பு செயற்பாடுகளும், சமூகத்தை பார்வையாளராக்கி தனிமைப்படுத்திவிடுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதில் அக்கறை கொண்ட புரட்சிகர சக்திகள், பாசிசத்தை எதிர்கொண்டு முறியடிக்கும் நடைமுறை மூலம் தான், அனைத்து அரச எதிர்ப்பு குறுகிய அரசியல் அடையாளங்களை கொண்ட போராட்டங்களையும் இல்லாதாக்கும். ஒடுக்கப்பட்ட மக்களை பாசிசத்துக்கு எதிராக அணிதிரட்டாத அரசியல் வெற்றிடத்தில் தான், தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற உதிரியான தன்னெழுச்சியான மக்கள் சாராத இச் செயற்பாடுகள் தோன்றுகின்றன என்பதை புரட்சிகர சக்திகள் இனம்கண்டு கொள்ள வேண்டும். இதை மாற்றி அமைக்கும் பணியைத் தான், இந்த நிகழ்வுகள் பறைசாற்றுகின்றது.

 

பி.இரயாகரன்

29.11.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ