Language Selection

தேசியத்தை இனரீதியானதாக பிரித்து சமூகரீதியாக முரண்படும் போது அது இனவாதமாகிவிடுகின்றது. இதில் ஒடுக்கும் இனம் , ஒடுக்கப்படும் இனம் என்ற வித்தியாசம் கிடையாது. ஆனால்  இனம் கடந்த தேசியம் சர்வதேசியமல்ல என்ற போதும், அது இனரீதியாக தன்னைப் பிரிக்காத வரை முதலாளித்துவ ஜனநாயகக் கூறைக்கொண்டு இயங்கும் வரை இதற்குள் முரண்பாடுகளை இனங்களுக்கு இடையில் உருவாக்காத    தன்மை  காணப்படும்.

இந்நிலையில்  அந்த  இனம் இனரீதியான தேசியமாக தன்னை வேறுபடுத்தும் போது தனக்குள் உள்ள முரணற்ற ஜனநாயகக் கூறை மறுதலித்து விடுகின்றது. ஒடுக்கும் இனம் அல்லது ஒடுக்கப்பட்ட இனத்தில் தேசியம், அது   எதுவாக இருந்தாலும், தன்னை இனம் சார்ந்து வெளிப்படுத்தும் போது அது சகோதர இனத்துடன் பகை பாராட்டாது சீவிக்கும்  முரணற்ற ஜனநாயகக் கூறுகளை மறுப்பதில் இருந்துதான் தன்னை அடையாளப்படுத்துகின்றது.

இந்தவகையில் நமது தேசத்தில் தமிழ்தேசியம் என்பது சாதியமாகவும், ஆணாதிக்கமாகவும், பிரதேசவாதமாகவும், சக சிறுபான்மை இனம் மீதான வெறுப்பாகவும், பெரும்பான்மை மக்களை எதிரியாகக்  காட்டியும்,  தன்னை அடையாளப்படுத்துவதுடன் தன்  இருப்பை நிலைநிறுத்த முயல்கிறது. இதன் அடிப்படையில்  தமிழ் தேசியதின்  அடையாளத்தை வரையறுப்பதும், அதன் இருப்பைத் தக்கவைக்க இயங்குவதும் அனைத்து மக்களுக்கும் எதிரான  சுரண்டும் வர்க்கமேயாகும். இதற்கு அப்பால்  தமிழ்தேசியம் கிடையாது. இதேவேளை இடதுசாரிய சந்தர்ப்பவாதிகள்,  இல்லை! நாங்கள் இந்தத்  தமிழ்தேசியத்தை மாற்றியமைத்து, அதன்  பிற்போக்கு பண்புகளை நிராகரித்து, மேம்படுத்தப் போகிறோம் என கூக்குரல் கொடுப்பதெல்லாம் அரசியற்  கண்கட்டு வித்தையாகும்.

தேசியத்தை இனம் சார்ந்ததாக குறுக்கிக் கொள்ளும் போது, தேசியத்தின்  முற்போக்கான முதலாளித்துவ முரணற்ற ஜனநாயகக் கூறுகளைக் கூட அது இழந்து விடுகின்றது. இடதுசாரியம் கதைப்பவர்கள், சர்வதேசியத்திற்கு பதில்  இனத்தேசியத்தை உயர்த்தும் போது அது இடதுசாரி வேடம்போட்ட, மூடிமறைத்த வலதுசாரி அரசியற் சந்தர்ப்பவாதமாகும். இதனால் தான் எப்போதும் இனத்தை மையமாகக்கொண்ட தமிழ்தேசியம் என்பது படுபிற்போக்கானது, என மக்கள் நலம் சார்ந்த இடதுசாரிகள் இடைவிடாது கூறுகிறோம். இவ்வகை தேசியவாதம் அது வலதாக இருந்தாலும் சரி, இடதாக இருந்தாலும் சரி அது ஒடுக்கப்பட்ட  அனைத்து  மக்களுக்கும்  எதிரானது.

மேற்கூறிய வகைத் தமிழ்தேசியமானது யாழ்-மேலாதிக்கம் சார்ந்து மற்றைய பிரதேசமக்களுக்கு எதிராக இயங்குகிறது. அதேபோல ஆணாதிக்கம் சார்ந்து பெண்களுக்கு எதிரானது, ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரானது, ஆகவே  தமிழ்தேசியம் சுரண்டும் வர்க்க அடிப்படையைக் கொண்டது!

இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தமிழ் தேசியத்திற்கு  இடதுசாரிய வர்க்க அரசியல் முலாம் பூசுவதன் மூலம், தேசியத்தின் முதலாளித்துவ பண்பையோ இனம் சார்ந்த குறுகிய யாழ்-மேலாதிக்க இனவாதப்பண்பையோ அரசியல் ரீதியாக இழந்து விடாது. முதலாளித்துவ அரசியல் அடிப்படையைக் கொண்ட தேசியம், நிலப்புரத்துவ சமூகக்கூறுகளுடன் இயைந்து சமரசம் செய்யும் அதன் இன்றைய சர்வதேச தரகுவர்க்க அரசியல் குணாம்சமும் மாறிவிடாது. முற்றுமுழுதான முதலாளித்துவ  ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்திலும் பார்க்க, இனம் சார்ந்த தமிழ்தேசியம் படுபிற்போக்கானது.
 
மேற்கண்ட இனம்சாரா  தேசியத்தின் முரணற்ற ஜனநாயகக் கூறுகள் கூட சுயாதீனமான பாட்டாளி வர்க்கக்கட்சி உள்ள போது தான் முற்போக்காக இயங்கமுடியும். இல்லாத போது அதுவும் பிற்போக்கானது தான். ஆகவே பாட்டாளி வர்க்கம், தேசியக் கோரிக்கைகளின் அடிப்படையில் தன்னை அணிதிரட்ட முடியாது.

மாறாக சர்வதேசிய அடிப்படையில் தான் ஒடுக்கப்பட்டோரை அணிதிரட்ட முடியும். இந்த நிலையில் நின்று முரணற்ற முதலாளித்துவ தேசிய ஜனநாயகக் கோரிக்கைளை ஆதரிக்க முடியும் அல்லது அதைக் கோரிப் போராட முடியும். இதன் அடிப்படையில், மேற்கூறியது போல சதித்தனமாக போலி இடதுசாரிகள் தமிழ்தேசியத்தை சார்ந்து முன்னிறுத்தும் "இன-இடதுசாரியம்" படுபிற்போக்கானது. அது யாழ் மேலாதிக்கம் சார்ந்தது.

இந்த வகையில், இங்கு இனரீதியாக ஒடுக்கும் அரசுக்கு எதிராக, இனரீதியாக தன்னை வெளிப்படுத்துவதால், இனரீதியான இந்த யாழ் -தமிழ்தேசியம் முற்போக்காகிவிடாது. அரசு இனரீதியாக மட்டும் அது ஒடுக்கவில்லை, பல்வேறு சமூக வடிவங்களிலும் ஏன் வர்க்கரீதியாகவும் கூடத்தான் ஒடுக்குகின்றது. இதை எதிர்க்காத தமிழ்தேசியம் படுபிற்போக்கானது, அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு துணை போவது. இதனால்  தமிழ்தேசியத்தின் அடிப்படையில் இடதுசாரியம் போராட முடியாது. இதை இன்று பிரச்சாரம் செய்யும் "இடதுசாரிய "தமிழ்தேசியம் என்பது மூடிமறைத்த வலது தமிழ்தேசியம் தான். இவ்வகையில் "இடதுசாரியம்" இனத்தை முன்னிறுத்தி, தன்னை வர்க்கரீதியாக அணிதிரட்டுவது என்பது அது உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கானது அல்ல, மாறாக  படுபிற்போக்கான தமிழ் தேசியத்தின் இருப்பை நிலை நிறுத்துவதற்காகவே. ஆகவே, தேசியத்தை முன்னிறுத்தி உழைக்கும் வர்க்க விடுதலையை முன்னெடுக்கப்  போவதாக கூறுவது உண்மையில் இடதுசாரியம் அல்ல.

இந்த வகையில் இங்கு "முற்போக்கான தேசியம்" என்பது, பிற்போக்கான அரசியல் அடிப்படையைக் கொண்டது. தேசியம் என்ற அரசியல் வரையறையும், இனம் என்ற குறுகிய அடையாளமும், பிற்போக்கான வர்க்க அரசியல் அடிப்படையைக் கொண்டது. இங்கு முற்போக்கு தேசியம், பிற்போக்கு தேசியம் என்று பிரிக்கும் வர்க்கரீதியான கோடு கிடையாது.

கடந்தகாலத்தில் "முற்போக்கு தேசியம்" என்ற வரையறையை நாம் பயன்படுத்தியபோது, சர்வதேசிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக முரணற்ற ஜனநாயகக்கூறை வேறுபடுத்திக் காட்ட அதை எளிமைப்படுத்தி பயன்படுத்தினோம். முதலாளித்துவ ஜனநாயக தேசியவாதத்தைக் கூட மறுத்து தேசியம், பாசிசமாக தன்னை வெளிப்படுத்திய காலத்தில் அதை வேறுபடுத்தி அம்பலப்படுத்த பயன்படுத்தியதே முற்போக்குதேசியம் என்ற சொல்லாடல்.

"முற்போக்குதேசியம்" கூட பிற்போக்கான அரசியல் கூறை அடிப்படையாக கொண்டது தான். இங்கு பாசிசத்தை வேறுபடுத்திக் காட்ட, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தையும் வேறுபடுத்திய அரசியல் அடிப்படைக்கு வெளியில், இந்த தேசியம் முற்போக்கான அரசியல் வரையறையைக் கொண்டதல்ல. அது பிற்போக்கானது தான். இதனால் தேசியவிடுதலை போராட்டம் அன்னிய நாடுகள் சார்ந்து பிற்போக்கானதாக இருந்ததை அம்பலப்படுத்தவும், மக்களை சார்ந்து நிற்பதை முற்போக்காக நாம் வேறுபடுத்தி காட்டி அம்பலப்படுத்தவும், நாம் முற்போக்கு பிற்போக்கு என்று அதை வேறுபடுத்தினோம். ஆகவே, தேசியம் முற்போக்கு என்ற அரசியல் அடிப்படையில் இருந்தல்ல.

தேசியத்தின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க கோரிக்கையாக அல்ல. மாறாக முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாக மட்டும் தான். முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் அரசியல் உள்ளடக்கத்தில், முரணற்ற தேசியக் கோரிக்கைகள் கூட அடங்கும்.

ஒடுக்கும் அரசுக்கு எதிராக "முற்போக்குத்" தமிழ்தேசியம் இருக்க முடியுமா எனின், இல்லை. மாறாக சர்வதேசியம் தான் இருக்க முடியும். இங்கு இன ஒடுக்கு முறையையையும், தனது உள்ளக   சமூக ஒடுக்குமுறைகளையும் மட்டும் எதிர்க்கும் தேசியம் என்பது சர்வதேசியத்துக்கு முரணானது. எப்போது நாம் அனைத்துவகை  ஒடுக்குமுறையையும் எதிர்க்கின்றோமோ, அப்போது தான் நாம் உண்மையான சர்வதேசியம் சார்ந்த "தமிழ்தேசியவாதியாக" இருக்கமுடியும். இதை மறுப்பவர்கள் இன்று வெறும் இடதுசாரிக் கவசம் போட்ட யாழ் மேலாதிக்கவாதிகள் இருக்கின்றனர்.

முற்போக்கு தமிழ்தேசியம் என்று தன்னை இனத்தின் மூலம் அடையாளப்படுத்தும் போது, மற்றொரு இனத்துக்கு எதிராகத் தன்னை அடையாளப்படுத்த முடியும். சர்வதேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்த முடியாது. ஒரு கம்யூனிஸ்ட் தன்னை இனத்தின் பெயரால் தன்னை முற்போக்காக காட்டமுடியாது. அப்படி யாராவது தன்னைக் காட்ட முயன்றால் அவர்கள் வேறு யாருமல்ல, மூடிமறைத்த இடதுசாரிய வேடம் போட்ட  வலதுசந்தர்ப்பவாதிகள் தான்.

இந்தவகையில் "இடதுசாரிய" தமிழ்தேசியம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரானது. சக பிரதேச மக்களுக்கு எதிரானது. சக சிறுபான்மை இனங்களுக்கு எதிரானது. பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது. சுரண்டும் வர்க்கம் சார்ந்தது. இந்த வகையில் தமிழ்தேசியம் என்பது யாழ்-மேலாதிக்கம் சார்ந்தது. அது மொத்த மக்களுக்கும் எதிரானது. இது தன்னை மூடிமறைக்க இடதுசாரிய சொற்களைக்கொண்டு தன்னை தீவிர இடதுசாரியாக காட்டிக்கொள்ள முனைகின்றது. இதன் மூலம் பிற்போக்கான இனவாதம் சார்ந்து இன தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கின்றது.
 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ