Language Selection

"சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் இனவாதம்." என்ற "முன்நிபந்தனை" யுடன் கூடிய அரசியல் அளவுகோல் வரட்டுத்தனமானது, இது சாராம்சத்தில் பிரிவினைவாதம் கூட. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் இனவாதிகள் என்ற அரசியல் அடிப்படை மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் இனவாதியாக்கி விடுகின்றனர். இனமுரண்பாட்டுக்கு எதிராக வர்க்கப்போராட்டத்தை நடத்தும் யுத்ததந்திரம் தான் சுயநிர்ணயம் என்பதையே மறுத்துவிடுகின்றனர். மாறாக பிரிவினையை மூடிமறைக்கும் யுத்ததந்திரமாக, சுயநிர்ணயத்தை குறுக்கிவிடுகின்றனர். சுயநிர்ணயத்தை "முன்நிபந்தனை"யாகக் கொண்ட அணுகுமுறையால், வர்க்கப் போராட்டத்தை சிதைத்து விடுகின்றனர். லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்தது வர்க்கப்போராட்டத்தை நடத்தவே ஒழிய, அதை "முன்நிபந்தனை"யாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை சிதைக்கவல்ல.

"பிரிந்து செல்லும் உரிமை - இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை" என்று கூறி, இதுவல்லாத அனைத்தையும் நிராகரிப்பது லெனினின் வர்க்கப்போராட்ட உள்ளடக்கத்தையே மறுப்பதாகும்.

இது சாராம்சத்தில் நிலவும் இரண்டு அரசியல் போக்குகளை மறுக்கின்றது.

1.மார்க்சியத்தையும், அதன் யுத்ததந்திர கோட்பாடான சுயநிர்ணயத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்று கூறி, இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இனவாதமாக முத்திரை குத்தி மறுத்துவிடுகின்றனர்.

2.மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சுயநிர்ணயம் என்ற யுத்ததந்திரத்துக்கு பதில் வேறு யுத்ததந்திரத்தை முன்வைத்துப் போராட முடியாது என்று கூறி, அதை இனவாதமாகக் காட்டி மறுத்துவிடுகின்றனர்.

இவ்வாறு மார்க்சியத்தை வரட்டுவாதமாகக் குறுக்கி, பிரிவினையை முன்தள்ளுகின்றனர். இனவொடுக்குமுறைக்கு எதிராக பல்வேறு வடிவங்களில், பல்வேறு வர்க்கங்கள் பல்வேறு தளத்தில் போராட முடியும். இதை மறுப்பது மார்க்சியமல்ல. ஐக்கிய முன்னணி என்ற யுத்ததந்திரம் கூட, இதை அங்கீகரிப்பதில் இருந்துதான் உருவாகின்றது. இதற்கு மாறாக இந்த சமூக அமைப்பிலான வர்க்கப் போராட்டங்களை ஒற்றைப்பரிணாமம் கொண்டு அணுகுவது, காட்டுவது வரட்டுவாதமாகும்.

இதை குறிப்பாக ஆராய்வோம். சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாத சண் தலைமையிலான கட்சியை எடுப்போம். அது ஒரு இனவாதக் கட்சியாகவா இருந்தது? இல்லை. சுயநிர்ணயத்தை மறுத்த ரோசாலுக்சம்பேர்க்கு எதிராக லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்த போது, அவரை இனவாதியாகவா லெனின் அடையாளப்படுத்தினார்!? அவரை பெரும் தேசியவாதியாகவா லெனின் காட்டினார்!? இல்லை. மார்க்சியத்தை வரட்டுவாதமாக்கி திரிப்பதன் மூலம் சுயநிர்ணயத்தை குறுக்குவதன் மூலம் பிரிவினையை முன்வைக்கின்றனர்.

வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான யுத்ததந்திரமாகத்தான் சுயநிர்ணயத்தை லெனின் முன்வைத்தார். இதை ஏற்றுக்கொள்ளாவதவர்களை, இனவாதிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதற்கல்ல. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களை எதிரியாக்கி, வர்க்கப் போராட்டத்தை முடக்குவதற்காக அல்ல.

இதே போல் "தேவையேற்படும் போது பிரிந்து செல்வதற்காக" லெனின் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கவில்லை. மாறாக பிரிந்து போகாத ஒரு வர்க்கப்போராட்டத்தை நடத்துவதற்காக சுயநிர்ணயத்தை லெனின் முன்வைத்தவர். இதற்கு வெளியில் மார்க்சியத்தை குறுக்கி கொச்சைப்படுத்த முடியாது. பிரிந்து செல்வதைக் கூட, வர்க்க நலனில் நின்று தான் அணுகவேண்டும். இதுதான் லெனினியம். பாட்டாளி வர்க்கம் பிரிந்து செல்வதில்லை. பிரிந்து செல்வது பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கத்தின் தேவையாகவே காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கு, பிரிந்து போவது தேவைப்படுவதில்லை. வர்க்கப் போராட்டம் என்ற யுத்ததந்திரம் என்ற எல்லைக்கு அப்பால், இதை முன்னிறுத்தும் போது இது பிரிவினையாகிவிடுகின்றது. பிரிவினை மற்றும் பிரிந்து செல்லும் உரிமைக்கு இடையிலான வேறுபாடு, நேர் எதிர்த்தன்மை கொண்டது. ஒன்றுக்கு ஒன்று எதிரானது.

"சுயநிர்ணய உரிமையை மறுத்தல் தான் இனவாதத்தை வளர்த்தது" என்பது கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதமாகும். இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடாமை தான், இனவாதத்தை வளர்த்தது. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டு இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாமல் இருத்தல் கூடத்தான், இனவாதத்தை வளர்த்தது. இங்கு இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுவது முன்நிபந்தனையானது, முதன்மையானது, அடிப்படையானது. இங்கு சுயநிர்ணயம் என்பது இரண்டாம் பட்சமானது. இது கோட்பாடு மற்றும் யுத்ததந்திரம் தொடர்பான ஒரு கட்சியின் சொந்த செயல்தந்திரம் சார்ந்தது. இதற்கு வெளியில் இதற்கு விளக்கம் கிடையாது.

"பிரதான முரண்பாடு தேசிய இன ஒடுக்குமுறையாக அமையும் போது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை" என்பதைக் கொண்டு அணுகும் பார்வை குறுகியது, வரட்டுத்தனமானது. "முன்நிபந்தனை" என்பது இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவது தான். அதன் பின்தான் அது சுயநிர்ணய அடிப்படையிலா இல்லையா என்பதை ஆராய முடியும். அதை எதிராக முன்வைத்து ஆராய்வதல்ல. இதற்கு மாறாக "சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட"த்தை முன்னெடுக்காத அனைத்தையும் எதிரியாக்குவது, பல்வேறு வர்க்கங்கள் உள்ள சமூக அமைப்பில் இதை "முன்நிபந்தனை" யாக முன்வைத்தால், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக பேரினவாதத்துக்கு உதவுவது தான். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாது இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்கள் முதல் இனவொடுக்குமுறையை ஆதரிக்காதவர்கள் வரை, நாம் ஒருங்கிணைந்து போராடுவது அவசியம். இதை நிராகரிப்பது, சுயநிர்ணயத்தின் பெயரில் மூடிமறைத்த பிரிவினை வாதம் தான்.

பி.இரயாகரன்

04.11.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ