Language Selection

எந்த வகையில்? எம்மையும், எம் நடத்தையையும் மாற்றினோமா? எம் எழுத்தை, எம் எழுத்துமுறையை மாற்றினோமா? எந்த வகையில், நாம் எம்மில் மாறி இருக்கின்றோம். மக்கள் போராட்ட அனுபவம் தான் உண்டா? இல்லை. எம்மில் இருந்து நாங்கள் மாற்றத்தை தொடங்காமல், மக்களை அணிதிரட்ட முடியாது. இதைப்பற்றி பேசுவது, எழுதுவது முதல் தங்களை இதற்குள் அடையாளம் காட்டுவது வரையான வரையறைக்குள், இதை முடக்கி பார்க்கின்ற, காட்டுகின்ற எல்லைக்குள் இது பேசப்படும் பொருளாகவே மக்கள் போராட்டம் இருக்கின்றது.

சிங்கள புரட்சிகர சக்திகள் தங்கள் கடந்தகாலத்தை மறுத்ததன் மூலம், மீண்டும் மீண்டும் அதை சரிபார்ப்பதன் மூலம் தங்களை புரட்சிகரமாக்கும் இன்றைய சூழலில், தமிழ் தரப்பு தங்கள் புரட்சிகரமற்ற கடந்தகாலத்தை மறுக்காத சூழல் தொடர்ந்து காணப்;படுகின்றது. இந்த நிலையில் மக்களை அணிதிரட்டல் என்பதை, நடைமுறையில் புரிந்துகொண்டு முன்னெடுப்பது கடினமானது.

நாம் சரியான கோட்பாடுகளையும், கொள்கைகளையும் கண்டறிந்துவிட்டால், அதை நாம் முன்வைத்து விட்டால், மக்கள் போராட வருவார்கள் என்று கருதுகின்ற எல்லைக்குள், மக்கள் போராட்டம் பற்றிய சிந்தனை காணப்படுகின்றது. தத்துவங்களை, கோட்பாடுகளை, கோசங்களை … நாம் ஏற்றுக்கொள்வதால் அது போராட்டமாகிவிடாது. அதைப்பற்றி பேச, எழுதத் தெரிவதால் நாம் புரட்சியாளராகி விடமாட்டோம். அதுபோல் இவை மக்களை வழி நடத்தும் தகுதியாகிவிடாது.

தத்துவரீதியான விவாதங்கள், அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டும் ஊழியர்களுக்கானதே ஓழிய மக்களுக்கானதல்ல. கடந்த சில பத்தாண்டுகள் மார்க்சியம் மறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வந்த நிலையில், தத்துவார்த்த விவாதங்கள் நடாத்தப்பட்டன. அறிவு மற்றும் தர்க்கரீதியாக நடந்த கருத்துச் சார்ந்த போராட்டங்கள், அது சார்ந்த மொழி உட்பட அனைத்தையும், அதே வடிவில் அல்லது அதே பாணியில் மக்களிடம் எடுத்துச்செல்ல முடியாது.

மக்களின் அரசியல் மற்றும் அறிவு மட்டம் முக்கியமானது. மக்கள், அரசியலை புரிந்து கொள்ளும் மொழி முக்கியமானது. அம்மொழியைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. அந்த மொழியில் அரசியல் பேசப்பட வேண்டும். பொதுவாக அந்த மொழியில் அரசியலை பேசமுடியாதவர்களாக அரசியல் பேசுகின்ற அறிவுஜீவிகள் இருக்கின்றோம். இதனால் கூட எமது அரசியல் மக்களில் இருந்து அன்னியப்பட்டு இருக்கின்றது.

மக்கள் போராட்ட அனுபவமற்ற இலங்கைச் சூழலில், அனைத்தும் மீளக் கட்டமைக்கப்பட வேண்டும். சண்ணும், சண் வழி வந்த கட்சிகளும் சரி, ஜே.வி.பியும் சரி, தமிழ் தேசிய வழி வந்தவர்களும் சரி, வர்க்கரீதியான மக்கள் திரள் அமைப்பைக் கட்டிய அனுபவம் கிடையாது. ஆனால் குறித்த விடையங்களை ஓட்டி, மக்களை திரட்டிய அனுபவம் உண்டு. மக்கள் திரளை அரசியல்ரீதியாக அணிதிரட்டிய அனுபவம் கிடையாது.

இதற்கு அப்பால் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்ட விடையங்களை ஆங்காங்கே பயன்படுத்த முனைந்தவர்களும், இந்த அடிப்படையில் கூட மக்களை அணுகாதவர்கள் தான் உள்ளனர். எமது அணுகுமுறை உட்பட அனைத்தும், நடைமுறையில் பரிசீலிக்கப்பட வேண்டியவை. பொது ஓடுக்குமுறையை நாம் காண்பது போல், மக்களிடம் எடுத்துச்செல்ல முடியாது. மக்கள் அதை எப்படி புரிகின்றனர், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை உள்வாங்கி தான் மக்களுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.

பொதுவில் எம் அறிவு, தர்க்கத் திறன் மூலம் விடையங்களைப் புரிந்து கொள்கின்ற நிலையில் நின்று, மக்களுக்கு உபதேசம் செய்ய முனைகின்றோம். எமக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புடன், மக்களின் கருத்துக்கு காது கூட கொடுப்பது கிடையாது. சிலர் மக்கள் பின் வால் பிடிக்கின்றனர்.

இந்த வகையில் இன்று மக்களை அணுகும் போது எமது மொழி முதல் தனிப்பட்ட நடத்தைகள் வரை, அனைத்தும் கேள்விக்குள்ளாக்க வேண்டியவையாக உள்ளது.

கருத்தை முன்வைக்கும் போது தெரிந்ததைக் கொண்டு, கரடுமுரடான கோட்பாட்டுச் சொற்களுக்குள் நின்றும், மக்களுடன் உரையாட முடியாது. மக்களை கற்றுக்கொள்ள கோரும் நாம், நாம் கற்றுக் கொள்வதை மறுக்கின்றோம். இங்கு கற்றுக்கொள்வது என்பது, மக்களிடம் இருந்தும் தான் என்பதை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். இதிலிருந்து அவர்கள் புரியும் மொழியில் பேசியாக வேண்டும். நாங்கள் புரிந்து கொண்ட மொழியில், அவர்களுக்கு புரியவைக்க முடியாது.

சமூகத்தின் முன் அனைத்தும் கேள்விக்குள்ளாகி மீளக் கற்றுக்கொடுப்பது என்பது, அவர்கள் ஒவ்வொரு விடையத்தையும் எப்படி புரிந்து இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொண்டு உரையாட வேண்டும். அதற்கான மொழி மட்டுமல்ல, அதைப்பற்றிய தெளிவும் அறிவும் அவசியமானது. எமது போராட்டம் பற்றிய அறிவு தர்க்கம் கூட, வெறும் கோட்பாட்டு சட்டங்களுக்குள்ளானது.

முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கம், பாசிசம், தேசியம், புலி, சுயநிர்ணயம், பிரிவினை … என்ற சொற்களுக்குள் நின்று மக்களை அணுகுகின்ற பொது நடைமுறையும் சரி, எழுத்துகளும் சரி வரட்டுத்தனமானது. அரசியல் என்பது இதுதான் என்பதை புரிந்து வைத்திருப்பது தவறானது. மறுதளத்தில் தன்னை இடதுசாரியாக காட்டல் மற்றும் இது சார்ந்த எழுத்து முறை மக்களுக்கு அன்னியமானது.

அறிவுஜீவிகள் மத்தியில் உள்ள நடத்தை மற்றும் மொழி, மக்களில் இருந்து அன்னியமானது. மாறாக மக்கள் பேசிக்கொள்ளும் மொழியில் அரசியல் பேசியாக வேண்டும். நடந்த, நடக்கின்ற விடையங்களை தொகுத்துக் கொடுப்பதன் மூலம் மக்களை அணுகலாம் என்பது தவறானது. இவை மக்களுக்கு தெரிந்தவை. இதை நாம் தொகுத்து கூறுவதால் மட்டும், மக்கள் தெளிவடைவார்கள் என்பது தவறானது.

அரசியல்ரீதியாக கொண்டு செல்லுதல் அவசியம். ஆனால் அதை அரசியல் சொற்கள் ஊடாக செய்ய முடியாது. மக்களின் மொழியில், அவர்கள் புரியும் மொழியில் அவை செய்யப்பட வேண்டும்.

மக்களுக்கு "உண்மையான நிலைமைகளில் இருந்து உத்தரவுகளை விவாதித்து, பரிசீலித்து அறியாமல் கண்மூடித்தனமாக அவற்றை நடைமுறைப்படுத்துவதும், அதன்பால் மட்டுமீறி விதிகளைப் பின்பற்றும் மனப்போக்கைக் கொண்டிருப்பதும் முற்றிலும் தவறானதாகும்" என்றார் மாவோ. 1933 இல் மாவோவின் கருத்து நிராகரிக்கப்பட்ட காலத்தில், மாவோ சொன்ன சரியான கருத்தை இங்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் 1957 ஆண்டு மாவோ கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். "படிப்பில் இரண்டு விதமான மனோபாவங்கள் உண்டு. ஒன்று, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, எல்லாவற்றையும் அப்படியே எடுத்து நடும் வரட்டு மனோபாவம். இது நல்லதல்ல. மற்றது, நமது தலைகளைப் பாவித்து, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது, நமக்கு உபயோகமான அனுபவங்களைக் கிரகித்துக் கொள்கின்ற மனோபாவம். இது தான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மனோபாவம்."

எம்மை நாம் புரட்சிகரமானவராக மாற்றிக் கொண்டு தான், மக்களை வழிகாட்ட முடியும்.

பி.இரயாகரன்

21.10.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ