Language Selection

இந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத்  தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு  நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.

14 மாதங்களுக்கு முன்பு, நவம்பர் 2010-இல், இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேஸி மாகாணத் தலைநகர் பாலு நகரைச் சேர்ந்த ஒரு போலீசு அதிகாரியின் ரப்பர் செருப்புகள் காணாமல் போயின.  தனது செருப்பு திருடு போனதாக வழக்குத் தொடுத்தார், அப்போலீசு அதிகாரி.  இவ்வழக்கை விசாரித்து வந்த பாலு நகர நீதிமன்றம், போலீசாரால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட “ஏ.ஏ.எல்.” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பள்ளிச் சிறுவனைத் திருடன் என்று தீர்ப்பளித்தது.  திருடு போனதாகக் கூறப்படுவது நூறு ரூபாய்கூடப் பெறாத பழைய செருப்புதான் என்றாலும், இக்குற்றத்திற்கு நீதிமன்றம் சட்டப்படி விதிக்கக்கூடிய தண்டனை ஐந்தாண்டு சிறைவாசமாகும்.

இத்திருட்டு வழக்கை போலீசார் புனைந்த விதமும், அதனை நீதிமன்றம் விசாரித்த விதமும் ஒருபுறம் கேலிக்குரியதாகவும் இன்னொருபுறம் அதிகார வர்க்கக் கும்பலின் எதேச்சதிகாரப் போக்கையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.  தனது செருப்பு காணாமல் போனவுடனேயே, அப்போலீசு அதிகாரி திருட்டு வழக்கைத் தொடுக்கவில்லை.  செருப்பு காணாமல் போய் ஆறு மாதங்கள் கழித்து, தனது செருப்பைத் திருடியதாக ஒரு பள்ளிச் சிறுவனைத் திடீரெனப் பிடித்துக் கொண்ட அப்போலீசு அதிகாரி, அச்சிறுவனை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிருகத்தனமாகத் தாக்கினார்.  அச்சிறுவனின் பெற்றோர் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக புகார் கொடுத்தவுடனே, அச்சிறுவனின் மீது போலீசாரால் திருட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, போலீசார் தங்கள் குற்றத்தை மூடிமறைக்கப் பாதிக்கப்பட்ட சிறுவனையே குற்றவாளியாக்கினார்கள்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தவுடனேயே, அச்சிறுவனை விடுதலை செய்யக் கோரி இந்தோனேஷியாவெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் தொடங்கின.  பழைய தேய்ந்து போன, அறுந்து போன ரப்பர் செருப்புகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று, அவற்றை அந்நாட்டிலுள்ள போலீசு நிலைய வாயில்களிலும், அரசு வழக்குரைஞர்களின் அலுவலக வாயில்களிலும் கொண்டு வந்து கொட்டிப் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது ஓர் இயக்கமாகவே மாறியது.  பள்ளி மாணவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, ஷூக்களுக்குப் பதிலாக, அறுந்து போன ரப்பர் செருப்புகளை அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.

இத்திருட்டு வழக்கு பாலு நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபொழுது, சிறுவன் திருடியதாகக் கூறப்பட்ட ரப்பர் செருப்புகள், முக்கிய சாட்சியமாக நீதிபதியின் முன் வைக்கப்பட்டன.  ஆனால், செருப்பைப் பறிகொடுத்த போலீசு அதிகாரியோ, நீதிமன்றத்தில் காட்டப்பட்ட செருப்புகள் தனது செருப்புகள் அல்ல என அச்சாட்சியத்தை மறுத்தார்.  எனினும், பாலு நகர நீதிமன்றம், போதிய சாட்சியம் எதுவுமின்றியும், பொதுக்கருத்தை மீறியும், அச்சிறுவனைத் திருட்டுக் குற்றவாளியென அதிகாரத்திமிரோடு தீர்ப்பளித்தது.

இலஞ்ச  ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறித் திளைக்கும் போலீசையும், பொதுச்சொத்துக்களைக் கொள்ளையிடும் முதலாளி வர்க்கத்தையும் தண்டிக்க முன்வராத நீதிமன்றம், காணாமல் போன பழைய செருப்புக்காக, ஒரு பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருப்பதால், இத்தீர்ப்புக்கு எதிரான கண்டனங்கள் இந்தோனேசியாவெங்கும் வெடித்து வருகின்றன.

இக்கண்டனங்கள் இந்தோனேஷிய அரசமைப்பின் மீது விழுகின்ற செருப்படியைத் தவிர, வேறென்ன!

_______________________________________________

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ