Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" அ.மார்க்ஸ்

  • PDF

"தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியம் "

பழைய சரக்குகள் அம்பலமாகிப் போக புதிய சரக்குகளை தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல புதிதாக அந்தோனிசாமி மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை" என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்கக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

நாம் அந்த மேற்கோள்களைப் பார்ப்போம். "பெண்ணியங்களில் பலவகை என்பது தவிர்க்க முடியாதது. இவற்றில் "உண்மையான" பெண்ணியத்தை தேடுவதென்பது கேலிக்குரியது." என்று கூறுவதன் மூலம் ஆணாதிக்கத்திற்கு எதிரான ஓரே ஒரு பெண் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்துகின்றார்.அதாவது பெண்ணியத்தை வரையறுக்க முடியாது என்கின்றார். இதைப்போல் வறுமையை ஒழிக்கக் கோரும் உண்மையான போக்கை தேடுவது கேலிக்குரியது என்கின்றார்.

வறுமை ஒழிப்புப் பலவகை என்பதால் உண்மையான வறுமை ஒழிப்பை தேடுவது என்பது கேலிக்குரியது என்கின்றார். இது சாதிக்குள், மதத்திற்குள் உண்மையான விடுதலையைத் தேடும் உண்மை கேலிக்குரியது என்கின்றார்.

வறுமைக்குக் காரணம் அதிக பிள்ளை பெறுவதே என்கின்றார். அதனால் கருத்தடையை முன்வைக்கின்றனர் ஒருசாரார், மறுசாரார் தொழிலாளர்களின் உழைப்புப் போதாது என்கின்றார். இன்னும் ஒரு பிரிவு முதலாளிக்கு வரி கூடியதால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்கின்றனர். சிலர் சந்தையில்லை எனவே சந்தை பிடிக்க யுத்தத்தை நடத்தி சந்தையைப் பிடித்து வேலை கொடுத்து ஏழ்மையை ஒழிப்போம் என்கின்றனர். நாசிகள் வெளிநாட்டவரை துரத்தினால் மக்களின் வறுமை ஒழியும் என்கின்றனர். இப்படி வண்ண வண்ண பல வறுமை ஒழிப்புகள் முன்வைக்கப்படுகின்றது. எனவே இவைகளில் உண்மையான வறுமை ஒழிப்பை, பெண்விடுதலையைத் தேடுவது கோலிக்குரியது என சாந்தால் மொஃபே போல் அ.மார்க்ஸ் முன் வைத்து இதைப் பியோகிக்க எல்லாச் சுரண்டல் பேர்வழிகளின் வழியில் கைகோர்த்தபடி வெட்கம் இன்றி சுரண்டும் மக்களின் போராட்டங்களை கேலிசெய்கின்றார்.

வறுமை ஒழிப்பு என்பது ஒரே ஒரு வழியில் சுரண்டலை ஒழிப்பதில் தொடங்கி தேவைக்கு ஏற்ப்ப பகிர்வதால் மட்டும் சாதிக்க முடியும். இதற்கு வெளியில் எந்த ஒழிப்புக் கோசமும் வறுமையை பாதுகாக்கும் செயல் தந்திரங்களே. உண்மையான வறுமை ஒழிப்பு என்பது வர்க்கப் போராட்டத்தில் மையப்படுகின்றது. இதுபோல் பெண் விடுதலை என்பது உண்மையான பெண் ஒடுக்கு முறைக்கான சமுதாயக் காரணத்தில் இருந்து தான் உண்மையான  பெண்ணியம் கண்டு கொள்ளப்படுகின்றது.  பெண் ஏன் ஒடுக்கப்பட்டாள் என்ற அடிப்படைக் காரணத்தை கண்டு எதிர்த்துப் போராட அனைத்து வகை வண்ணப் பெண்ணியச் செயற்பாடுகள் ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் செயல் தளத்தில் அ.மார்க்ஸ் வைப்பது போல் முன்வைப்பவை தான்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் மனிதன் பகுத்தாய்வு செய்யவும், அதன் மூலம் தனக்கு இசைவாகவும் பயன் படுத்தவும் முடியும். இதன் அடிப்படையில் மட்டும் தான் நாம் பயன் படுத்தும் பொருள் முதல், அனைத்து நோய்களைத் தீர்ப்பது வரை, வான் வெளிப் பயணங்கள் என அனைத்து உண்மைகள் மீது தான் மனித உயிர் வாழ்க்கை செயற்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை சமூக இயக்கம் முரண்பாடுகள் மீதும் விதிவிலக்கின்றி பொருந்தி உள்ளன. அ.மார்க்ஸ் சரி அவரின் எடுகோள் சரி உண்மையை மறுப்பின் அது பொய் மீது கட்டியமைப்பவையாகவே இருக்கும். உண்மையை மறுத்த செயல் தளம் சமூக இயக்கத்தைத் தடுக்கவும், ஆணாதிக்க செயல் தளத்தைப் பாதுகாக்கவும் (இது ஏகாதிபத்திய அமைப்பை தவிர்க்க முடியாது தக்க வைக்கிறது)  நமது வாழ்வியல் பயன்பாட்டு செயல் தளத்திற்கு முரனாக கோட்பாட்டை முன் தள்ளுகின்றனர். இது மக்களின் அறியாமை மீது சவாரி செய்வதாகவும், அறியாமையை மேலும் அதிகரிக்க வைக்க இச்சமூக அமைப்பின் நனவுகளின் பிரதிபலிப்பாக உள்ளது.

கட்டுரையை மேலும் ஆராய்வோம். "பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலிய சிந்தனைகள் "சாராம்சம்" என்பதைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன." ஒன்றுக்கும் சாராம்சம் இல்லை என்ற அ.மார்க்சின் கண்டுபிடிப்பு நகைப்பிற்குரியது. இது பொருளை மறுத்து கருத்தை முதன்மைப் படுத்துகின்றது. ஏன் "தலித் பெண்ணியம்" கட்டுரை ஒரு சாராம்சத்தைக் கொண்டுள்ளது. அது தலித் பெண்ணியத்தை பேசுவதாக பாசாங்கு செய்கிறது இது உண்மைக்கு வெளியில் பொய் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது. சாராம்சம் இன்றி ஒரு படைப்பு படைப்பாக இருக்க முடியாது. இது அ.மார்க்சுக்கும் விதிவிலக்குக் கிடையாது.

ஓவ்வொரு பொருளும் தனக்கிடையில் வேறுபட்ட சாராம்சத்தை கொண்டுள்ளது. ஓவ்வொரு பொருளின் பலவகையில் பொதுவான சாராம்சம் உள்ளது. இந்த இடைவெளியில் வேறுபட்ட ஏற்றத் தாழ்வுக்கான காலம், சூழல்,--- என அனைத்துடன் தொடர்புடையதாக உள்ளது. (உ-ம்)மாக பெண்ணியத்தை எடுத்தால் நாட்டுக்கு நாடு, நகரத்துக்கு கிராமத்துக்கு, கிராமத்துக்கு கிராமம், வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மீதான ஒடுக்கு முறை வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றது. இது பொருளாதாரம், கலாச்சாராம், சூழல்,-- -- என அனைத்துடனும் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இதனால் ஆணாதிக்கப் பொதுச் சாராம்சம் இல்லாமல் போய்விடுகின்றதா? இல்லை மாறாக ஆணாதிக்க ஒடுக்கு முறை உலகில் பொதுவானதாக, பொதுவான சாராம்சம் கொண்டதாகக் காணப்படுகிறது. எனவே ஒரு பொருள் ஒரு நிகழ்ச்சியை ஆராய்வது என்பது சாராம்சத்திற்கு உட்பட்டது. இதற்கு வெளியில் பொருள் பொருளாகவே இருக்க முடியாது. பொருள் இருப்பதாயின் உண்மையும் அதற்குள் நீடிக்கின்றது. உண்மை இல்லை எனின் பொருள் இல்லை இது கருத்து முதல் வாதமாக உள்ளது.

வாழைப்பழத்தை எடுத்தால் வேறுபட்ட இனங்கள் இருந்த போதும், வாழைப்பழம் என்பது பொதுவான சாராம்சத்தை நிர்ணயிக்கின்றது. அது ஒரு பொது உண்மையைக் கொண்டுள்ளது. இது போல் ஆணாதிக்கம் பொதுவான சாராம்சத்தை அடையாளப்படுத்துகின்றது. இதனால் இது ஒரு பொது உண்மையை பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியமும் அதன் நிறுவன அமைப்புகள், கோட்பாடுகள் தான் முதலின் மனிதன் என்ற பொதுச் சாராம்சத்தை நிராகரிக்கின்றன. இதன் மூலம் மனிதன் என்ற பொது உண்மையை மறுத்து இனம், நிறம், சாதி, பெண்,--- என பல தளத்தில் பல சாராம்சத்தில் பொதுவை மறுத்து ஒடுக்குகின்றன. இதன் மூலம் இயற்கை செயற்கையில், உயிர் வாழும் நியதியையும் சாராம்சத்தையும் மறுத்து அதன் உண்மையை பொய்யாகக் காட்டி கேலி, செய்து, ஒட்டுமொத்தமாக தமது நலனுக்கு பயன்படுத்தி அழிக்கின்றனர்.

ஒரு பிரச்சனையின் அடிப்படை சாராம்சம் உண்மையை மறுத்து, பிரச்சனைக்கு ஆயிரம் காரணம் கூறி திசை திருப்பும் பொய்கள் தான் இன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் நீடிப்பிற்கான ஒரே ஒரு நிர்னயமான பாதுகாப்பை வழங்குகிறது.

வறுமைக்குக் காரணம் உள்ள பொருட்களை தேவைக்கு ஏற்ப பகிர்க்கப்படாதது சுரண்டுவதுதான் பொதுவான உண்மை. பொதுவான சாராம்சம். ஆணால் இதை மறுத்து "ஒருமித்த அடையாளத்துடன் நாம் வாழ்வதில்லை" என்று கூறிக் கொண்டு வறுமைக்குக் காரணம் அதிக இனப்பெருக்கம், போன பிறப்பில் செய்த பலன் விதி, உழைப்பு போதாது, சந்தை இல்லை ---- என அடுக்கடுக்காக அடுக்கி வைக்கும் பல காரண காரியங்கள் சாராம்சம் இல்லை எனக் கூறிய படி உண்மைகளை மறுத்து பொய்களை முதன்மைப் படுத்தி ஏகாதிபத்திய நலனைத் தக்க வைக்க அச்சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கடுமைiயான இடைவிடாத முயற்சியின் விளைவு தான் சாராம்சம் இல்லை என்றதும் உண்மை கிடையாது என்று கதையளப்பதாகும்.

இந்த நோக்கத்திற்காக அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் அடுத்த வாதத்தைப் பார்ப்போம். "---- தொழிலாளியில் சாராம்ச முற்போக்குத் தன்மை ஆட்டம் காண்கிறது--- சாராம்ச அடையாளங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களில் பிடிக்குள் அகப்படாமல் அழுத்திக் கொண்டு வெளியே நிற்கும் எச்ச சொச்சங்கள், மிச்சம், மீதிகள் (சுநஅயin னநசள)  தங்கள் குரலை இன்று மேலெழுப்பத் தெடங்கியுள்ளனர்." என்று கதையளப்பதை ஆராய்வோம்.

சாராம்சம் இல்லை என்ற கதையளப்புக்கு வெளியில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களை ஒடுக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பு சாராம்சத்தில் ஜனநாயகத்துக்கு சார்பானது தான். இந்தியாவில் பார்ப்பனிய பாரதீய ஜனதாவிற்கு எதிரான போராட்டம் ஜனநாயக சாராம்சத்தைக் கொண்டது. 2ம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிரான ஒன்று பட்ட போராட்டம் மனித குல விடுதலையை சாராம்சமாகக் கொண்டது. யப்பான் சீனாவை ஆக்கிரமித்த போதோ, வியட்நாம் மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அனைத்து போராட்டத்திலும் ஒரு மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட சாராம்சத்தை கொண்டு இருந்தது.

மக்களின் போராட்டத்தில் சாராம்சம் என்பது முற்போக்கு என எங்கும் எதிலும் உண்டு. இன்றிருக்கும் அதிகார பிற்போக்கு சாராம்சத்தை பாதுகாக்க மட்டும் தான் சாராம்சம் இல்லை என்று கதையளத்து முன்தள்ளுகின்றனர். இது உண்மையை மறுத்து பொய்யை உண்மையாகக் காட்ட முனைகிறது.

இன்று சாராம்சம் இரு தளத்தில் கட்டி அமைக்கப்படுகின்றது. இங்கு இரு தளத்தில் சாராம்சம் உள்ளதுடன் அது நடக்கும் செயல் தளத்தில் முற்போக்கு, பிற்போக்கையும், உண்மையையும், பொய்யையும் கோடு பிரிக்கின்றது.

ஏன் தலித்திய ஒன்றினைப்பு என்பது ஒரு பொது சாராம்சத்தில் நின்று கோரும் தன்மையையும், பின் அ.மார்க்ஸ் ---- அதையே மறுத்து சாராம் இல்லை என மறுக்கும் பொய்யையும், ஏமாற்றும் ஒரு மோசடிக்காரனின் கைவந்த குத்துக் கரணம் தான்.

இந்திய பார்ப்பனீய இந்து என்ற பிற்போக்கு சாராம்சத்தை எதிர்த்த பெரியார் இந்துக்கும், மதத்துக்கும்  எதிரான முற்போக்கு சாராம்சத்தை கட்டியெழுப்பினார். இப்படி அம்பேத்கார் முதல் இன்று வர்க்கப் போராட்டம் என்ற உழைக்கும் மக்கள் என்ற பொதுச் சாராம்சத்தில், அனைத்து மனித ஒடுக்கு முறைக்கு எதிரான பொதுச் சாராம்சத்தில் ஒன்று இணைக்கும் களத்தில் போராட்டம் அணிதிரட்டலைச் செய்கின்றது. இதை மறுக்க மட்டும் தான் சாராம்சம் இல்லை என்று அ.மார்க்ஸ் கதைவிட்டு கதையளக்கிறார்.

ஓரு தொழிலாளி வேறுபட்ட சாதிகளின் பிரதி நிதியாக இருந்தாலும், இங்கு சாதிக்கு எதிரான போராட்டம் முற்போக்கு சாராம்சத்தில் மட்டும் தான் ஐக்கியத்தை பாட்டாளி வர்க்கம் கோருகின்றது. இங்கு எதிலும் முரண்பாடு இருப்பதில்லை. இது ஆண் பெண் என அனைத்து சமூக முரண்பாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் முன்வைத்து பொது சாராம்சத்தில் போராடுகிறது. பாட்டாளி வர்க்கம் மனிதப் பிளவுகளைக் கடந்த பொதுச் சாராம்சத்தை பண்பாடு, பொருளாதாரம், கலாச்சாரம்,....... என அனைத்திலும் கோருகின்றது. இது உண்மையை அடிப்படையாகக் கொள்கிறது. இதை மறுத்து பொய்யை பிரதிபலித்த படி சாராம்சம் இல்லை என்று கூறுவதன் மூலம் மனிதப் பிளவுகளை நிலந்தரமாக நிலைநிறுத்த, இந்த சமூக அமைப்பைத் தொடர, இருக்கும் ஏகாதிபத்திய நுகத்தடியைப் பற்றிப் பிடிக்க முன்வைப்பதே சாராம்சம் மறுத்த, உண்மையை மறுத்த கோட்பாடு, செயல் தள முயற்சியாக உள்ளது.

சுரண்டலுக்கும், சமூக ஒடுக்கு முறைக்கும் எதிரான முற்போக்கு பொது பெரும்பாண்மை சாராம்சத்தை எதிர்த்து சுரண்டும் பிற்போக்கு சாராம்சத்தை முண்டு கொடுக்க, நியாயப்படுத்த அ.மார்க்ஸ் அரும்பாடுபடும் தனது சுரண்டும் வர்க்க சேவைக்காக தான் சாராம்சம் இல்லை என்பதன் மூலம் சிறுபண்மை, தனிநபர் சாராம்சத்தை பாதுகாக்க, தனிநபர் உரிமையின் பெயரில் பொதுவான சாராம்சம் இல்லை என்பதன் மூலம் தனிநபர் சமூக அமைப்பை இது சாராம்சத்தில் ஏகாதிபத்தியமாக உள்ளது.

இதற்காக அ.மார்க்ஸ் கூறும் அடுத்த வரிகளை நாம் மேலும் பார்ப்போம். " "பெண்" என்றால் யார்? "பெண்" என்கின்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லிற்கும் பொருள் என்பது தனித்துவமான பண்பையும் பிரித்து வரையறுத்துக் காட்டுவதல்ல" என்பதன் மூலம் பெண் என உலகளவில் உள்ள பொதுவான ஆணாதிக்கத்தை மறுக்கும் அ.மார்க்ஸ் இதன் மூலம் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க வெட்கம் இன்றி விபச்சாரம் செய்யக் கோருகிறார்.

உலகளவில் பெண் என்ற அடையாளப்படுத்தல் ஆணுக்கு உட்பட்ட (இனவிருத்தி வேறுபாட்டைத் தவிர்த்து) ஆணாதிக்கம் தான். இங்கு ஆணாதிக்க வேறுபாடு சமுதாயப் பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு பண்பியல் வேறுபாடுகள் (ஏற்றத் தாழ்வுகள்) பெண் மீதான ஆணாதிக்கத்தை சாராம்சத்துடன் சீர் திருத்தத்தை, விட்டுக் கொடுப்பை மட்டும் வழங்கி உள்ளது. ஆணால் பெண் எந்த சமுதாயத்திலும் வேறுபாடின்றி அதே ஆணாதிக்க ஒடுக்கு முறைக்குள் மாற்றமின்றி அதேநிலையில் பண்பியல் மாற்றத்துடன் நீடிக்கின்றனர்.

சுரண்டலால் உருவான ஆனாதிக்கம் பெண்ணை ஒடுக்கி சுரண்டும் வழியில் உலகில் எந்த இனமும், சமூகமும் பின் நிற்பதில்லை. இங்கு இதைச் செய்யும் வேறுபாடு சமுதாய ஏற்றத் தழ்வுகளால் பண்பியல் ரீதியில் மட்டும் மாறி உள்ளது. அடிக்கடியான சமூக எழுச்சிகள் போராட்டங்கள் பெண்களுக்கு சீர்திருத்தத்தை வழங்கி வந்தன என்பதற்கு அப்பால் பெண்விடுதலையைத் தந்து விடவில்லை. வர்க்கப் புரட்சிகள் இதை ஒழித்துக் கட்டும் போராட்டப் பாதையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற நிலையில், மீண்டும்  அதை ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்திடம் போராட்டத்தை இழந்து போனதும், மீண்டும் வர்க்கப் போராட்டப் பாதையை முன்னெடுக்கவும், பாதுகாக்கவும், போராடவும் முனைவதன் மூலம் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தை ஒரேயடியாக உலகில் ஒழித்துக் கட்ட பாட்டாளி வர்க்கம் கோரிப் போராடுகின்றது.

இதை மறுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் கூற்றை நாம் பார்ப்போம். " "சொல்" என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானகரமான உறவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகிறது என்பதே சரியாகும்." என்று சொல்லையே பொருளின் மீது மறுப்பதன் மூலம் பொதுமையை கருத்துமுதல்வாத நிலையில் மறுக்கின்றார்.

பல சிக்கலான செயல்களின் தொகுப்பில் தான் பொருள் உண்டாகின்றது, நிலைக்கின்றது, மாறுகின்றது. ஓரு பொருள் ஒரு இயக்கம் என அனைத்தும் சிக்கலான பல இயக்கங்களின் விளைவுகளாகத் தான் இது நடந்தன நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து மாறிக் கொண்டுள்ளது. இது பொருளின் பொதுத் தன்மையை எந்த நிலையிலும் கொடுக்கின்றது. வளிமண்டலத்தை எடுத்தால் ழு2இ N2இ ஊழு2  ...... போன்ற மூலகத்துடன் ஊடான ஒரு உண்மையை பூமி எங்கும் உள்ளது. சுரண்டலை எடுத்தால் உழைப்பைச் சுரண்டும் பொதுச் சாராம்ச உண்மை உலகெங்கும் பொதுவாக உள்ளது. பெண்ணை எடுத்தால் ஆணாதிக்க சுரண்டல் சாராம்ச உண்மை உலகளவில் பொதுவாக உள்ளது. சாதியை எடுத்தால் சாதி ஒடுக்கு முறையுடன் கூடிய சுரண்டல் சாதி உள்ள நாடுகளில் பொதுவாக உள்ளது. இது எல்லா இயக்கத்திற்கும், பொருளிற்கும், சிந்தனைக்கும் பொதுவான உண்மையானதாக உள்ளது. இது மாற்றத்துடன் புதிய சாராம்சத்தை பிரதிபலிக்கின்றது.

மாறுபட்ட சூழல் பண்பாடு கலாச்சாரம், பொருளாதாரம், மதம், ....... என நீண்ட இடைவெளியில் வேறுபட்ட பிளவுகள் இடைவெளிகள் கடக்கப்ப்பட முடியும். இங்கு இந்த வேறுபட்ட பிளவுகளில் காணப்படும் பொதுத் தன்மையும், குறித்த தன்மையும் ஒன்றிணைந்து செயல் தளத்தில், வர்க்கப் போராட்டம் எல்லா இடைவெளிகளையும் கடக்க கோரிப் போராடுகிறது.

இதை மறுக்க எடுத்து வைக்கும் அ.மார்க்சின் எடுகோள்களைப் பார்ப்போம். "பெண்ணை ஒரு குறிப்பான பண்புக்குரியவளாகக் காட்டுவதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னல்களாக பார்ப்பதே சரியானதாக இருக்கும். ........ உடற் கூறு அடித்தள வாதத்தின் அடிப்படையில் பெண்ணுறுப்புகள் உள்ளவர்களை எல்லாம் ஒரே மாதிரியாக பெண்கள் எனப் பார்ப்பது அவர்கள் அனைவரின் அனுபவங்களையும் பொதுமைப் படுத்த முடியாது. ...... அப்படியானால் பொதுமைக் கூறுகளோடு வித்தியாசங்கள் உண்டு எனப் பார்க்கலாமா? அப்படிப் பார்ப்பது என்பது பின் ஏதோ ஒரு வடிவில் உடற் கூறு அடிப்படையிலான பொதுமைகளைப் பிரதானப் படுத்தி வித்தியாசங்களைப் புறக்கணிப்பதில் தான் முடியுமென்றார் ...... எனவே வெள்ளைப் பெண்ணுக்கும் கறுப்பு பெண்ணுக்கு இடையிலான பொதுமைக் கூறுகளைக் காட்டிலும் வித்தியாசங்களே முக்கியம்" என்கின்றார்.

பொதுமைகளை விட வித்தியாசங்களே முக்கியம் என்கின்றார். நாசிகள் ஆரிய இனம் எனக் கூறி மக்களின் பொதுமையை மறுத்து வித்தியாசத்தைப் பேண ய+த மற்றும் இனங்களை அழித்ததும், அதே வித்தியாசங்களை அ.மார்க்ஸ் பெண்ணுக்கும் வைக்கின்றார். அதாவது நாசிகள் இன்று கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக எதை வைக்கின்றனரோ அதையே அ.மார்க்ஸ் கறுப்பு இனத்தின் பெயரில் நாசியாக முன்வைக்கின்றார்.

பார்ப்பனீய சதிராட்ட வானரங்கள் தொட்டாலே தீட்டு என்று கூறி, பொதுமையை மறுத்து வித்தியாசங்களை முதன்மைப் படுத்தி சாதியமைப்பைப் பாதுகாக்கின்றனரோ, அதையே மறுதளத்தில் தலித்தில் தலித் என முன்வைத்து வித்தியாசங்களைப் பேண முயல்வதன் மூலம், பார்ப்பனீயத்தை பாதுகாக்க முனைகின்றார்.

பெண்களும், ஆண்களும் பொதுமைப்பட்ட சமூகமாக மாறுவதற்க்கு பதில் வித்தியாசங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதன் ஊடாக ஆணாதிக்கத்தை மறைமுகமாக தக்க வைக்கின்றனர்.

தலித் பெண்ணியத்தை கூறும் இவர் தலித்தியத்தில் உள்ள வித்தியாசங்களை முதன்மை என்பதால் சாதி அமைப்பு உள் இருப்பது அவசியம் என உயர்த்தி, தலித்தில் சாதிக் கடத்தலை நிராகரிக்க பின் நவீனத்துவ  பார்ப்பனியத்தை கோட்பாடாக முன் தள்ளுகின்றனர்.

வெள்ளை கறுப்பு பெண்களுக்கிடையில் வித்தியாசங்களே முக்கியத்துவம் என்கின்றார். பொதுமை கிடையவே கிடையாது என்கின்றார். ஆணாதிக்கம் என்பது பொதுமையாக கிடையாது என்கின்றார். வெள்ளை நாசிகள் எதைச் சொல்லுகின்றாரோ அதை கறுப்பு நாசிகள் சார்பாக முன்வைப்பதும் நாசிச, பாசிய அமைப்பை பாதுகாக்க நாயாகக் குரைக்கின்றார். கறுப்பு வெள்ளை இணைவும் அதன் பொதுமைக் கூறும், நாசி தூய்மை வாதத்திற்கு எதிரானது என்பதும் இந்த நிறத்தைக் கடந்த பொதுமைத் தன்மையில் நின்று வெள்ளையின அமைப்பைப் பாதுகாக்கும் கடிவாளமாக உள்ளது.

தலித் பெண்கள் மற்றப் பெண்கள் உடன் இனைந்து பொதுவான ஆணாதிக்கத்திற்கும் குறிப்பான ஆணாதிக்கத்துக்கும் எதிராக இணைந்து போராடுவது மட்டும் தான் உலகளாவில் ஆணாதிக்கத்தையும், மற்றைய சமூக அவலங்களையும் கடக்க முடியும். இதிலிருந்து வித்தியாசங்களை முதன்மைப் படுத்தி பின் நவீனத்துவ பார்ப்பனீயத்தை முன் வைப்பின், ஆணாதிக்க அமைப்பை உலகில் நீடிக்க வைப்பதன் ஊடாக, ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பை தொடர கனவுகளின் புலம்பலே இவை.

அடுத்து இதற்காக அ.மார்க்ஸ் புலம்புவதைப் பார்ப்போம்."மார்க்சியம் பெண்ணியப் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. எனத் தீவிர பெண்ணியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்." எனக் கதை அளப்பதை ஆராய்வோம். மார்க்சியம் மட்டும் தான் செக்ஸ் பிரச்சனையை சரியாக ஆய்வு செய்தது, செய்கிறது. தீவிரப் பெண்ணிய வாதிகள் (யார் இவர்கள் எப்படி ஆணாதிக்கத்தை ஒளிக்க உள்ளனர். மர்மமான தீவிரப் பெண்ணிய வாதிகளை யாருக்கும் தெரிவதில்லை) ஏகாதிபத்திய பொருளாதார மாற்றத்திற்கு இசைவாகப் பெண் செக்ஸ்சியத்தை அரங்கோற்றுகின்றனர். இதை மார்க்சியம் விமர்சிப்பதால் தான் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை மார்க்சியம் மறுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏகாதிபத்திய சந்தைப் படுத்தலுக்கு இசைவாக பெண்ணை விளம்பரப் படுத்தும் பெண்ணியம், ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகத்திற்கு பெண்களை நிர்வாணமாக்கி பெண்களை செக்ஸ் பிண்டங்களாக மாற்றுகின்றது. இந்த செக்ஸ் பிண்டங்களாக பெண்களை மாற்றுவதை, அதைக் கோரும் பெண்களையே பெண்ணியத்தின் தீவிரப் பெண்ணியமாக கூறும் ஏகாதிபத்தியம் முதல் அ.மார்க்ஸ் வரை ஆணாதிக்க வக்கிரங்களை கோரவும் பாதுகாக்க கோருவதுடன், அதை மேலும் பெண்ணிய கோசத்தின் பின்னால் வளர்த்து எடுக்கின்றனர்.

மேலும் அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம். "வெள்ளை இனத்தவர்கள் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் கறுப்பர்கள் மத்தியில் உள்ள ஆண்-பெண் உறவும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் கறுப்பர்கள் மத்தியில் ஆண்-பெண் உறவை பகுப்பாய்வு செய்வதற்கு தனித்துவமான பெண்ணியப் பகுப்பாய்வுகள் தேவையாகின்றன." என்ற கண்டு பிடிப்பை ஆராய்வோம்.

ஆண்-பெண், வெள்ளை-கறுப்புக்கள் மட்டுமா பிரிகின்றது. இல்லை மாறாக கறுப்பு இனத்துக்குள் பல்வேறுபாடு உள்ளது இது தலித்துக்குள் பலவாக உள்ளது. ஆகவே இந்த வேறுபட்ட உறவு முறைக்கான சமூகக் காரணங்கள் தனித் தனியாக ஆய்விற்குரியவை. இதற்கு முன் ஆண்-பெண் இடையில் உள்ள ஆணாதிக்க உறவு என்பது உலகில் விதிவிலக்கின்றி பொதுவான சாராம்சத்தால், அதன் உண்மையால் கட்டி அமைக்கப்பட்டவை. இயற்கையின் தேர்ச்சியில் உருவான உறவு முறை, ஆராம்பத்தில் ஆபிரிக்காவில் ஒரே இடத்தில் இருந்து தான், மனிதன் உலகேங்கும் சிதறி வாழும் நிலைக்கு முதாதையாவர்.

பூமியின் ஒரே நிலத் தொடர்ச்சிகள் கடலால் பிளந்து சென்றது முதல், மனிதனின் அறிவியல் தேடல்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் பிரிந்து சென்ற நீண்ட வரலாறு தமக்கிடையில் மொழி நிறம், பண்பாடு, கலாச்சாரம்........ என அனைத்து இடைவெளிக்கும் அடிப்படையாக அமைந்தது. இருந்த போதும் உலகில் சுரண்டலும், ஆணாதிக்க சமூக அமைப்பும் எங்கும் எல்லா இடமும் ஒரே மாதிரியானதாக, ஒரே காரணியால் கட்டி அமைக்கப் பட்டதை சமூக விஞ்ஞானம் பொருளாதாரம் தெளிவாக இனம் காட்டுகின்றது.

இன்று இடைவெளியைக் கடக்கும் போராட்டம் இரு தளத்தில் மட்டும் நடக்கின்றது. இது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் ஊடாகவும், ஏகாதிபத்திய உலகமயமாதல் ஊடாகவும்  (இங்கு ஏகாதிபத்தியம் பிளவுகளை விதைத்த தொடர்ச்சியில்) நேர் எதிர் தன்மைகள் நடந்தவண்ணமுள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது. இதற்கு இடையில் மட்டும் தான் போராட்டம் எப்படி நகர்த்துவது என்பதில் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கம் எல்லா இடைவெளியைக் கடக்க முனையும் போக்கில் செல்ல, ஏகாதிபத்தியத்தில் சிலவற்றில் தனது அதிகாரத்துக்காக  செய்ய, இதற்கு எதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உலகில் எல்லா இடைவெளியையும் கடக்கப் போரிடுகின்றது.

இன்று ஆண் பொண் உறவில் உலகில் உள்ள எல்லா ஒடுக்குமுறை செயல் தளம் மீதும், குறிப்பாக ஆணாதிக்க செயல் தளமிதான போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் முன்னெடுத்து இதை ஒழித்துக் கட்ட சர்வதேச பாட்டாளி வர்க்கத்திடம் கோருகின்றது, போராடுகின்றது. இதற்கு வெளியில் எந்த பெண்ணியமும் உலகளவில் ஆணாதிக்கத்தை தகர்க்க கோரவில்லை. இது ஆணாதிக்க உலகை தக்க வைக்க பகுதிக் கோரிக்கைக்குள் முடக்கி விடுகின்றது.

இதை மறுத்து அ.மார்க்ஸ் வைக்கும் அடுத்த பொன் மொழியைப் பார்ப்போம். "கறுப்பு பொதுப்புலம், வெள்ளைப் பொதுப் புலத்தின் அளவு ஆண் தன்மையானதாக (அயளஉடெiநெ) இல்லை" என்கின்றார். இருக்கும் சமூக அமைப்பில் இதை நேர் எதிராக திசை திருப்புகின்றார். பெண்கள் மீதான ஆணாதிக்க செயற்பாடுகள் வெள்ளைப் பெண்ணை விட கறுப்புப் பெண் மீது அதிகமானது. இதை மறுத்து கறுப்பு பெண்மீது ஆணாதிக்கம் குறைவு என்கின்றார். இதன் பின் கூட ஏகாதிபத்திய நலன் எஞ்சியுள்ளது. ஏன்?

பொதுவாக வெள்ளை பெண்கள் வாழும் நாடுகளின் முதலாளித்துவப் புரட்சிக்குள்ளும், அதன் பின்னான ஏகாதிபத்திய தளத்திற்குள்ளும் பெண்கள் பெற்ற ஜனநாயக உரிமைகளை முதலாளித்துவ புரட்சி நடக்காத நிலப்பிரபுத்துவ மதவாத அடிப்படை கொண்ட கறுப்புப் பெண்கள் வாழும் நாடுகளின் ஆணாதிக்கம் கொடூரமானது. அதை மறுப்பதன் மூலம் குறைந்த பட்சம் முதலாளித்துவ புரட்சியை கோருவதை ஏகாதிபத்தியம் போல் இந்த அ.மார்க்ஸ் கும்பல் விரும்புவதில்லை.

கறுப்புப் பெண் முன் வெள்ளை இனத்தை விட நீ அதிக ஜனநாயகத்தை சலுகைகளை ஆணாதிக்க வாதிகள் இடம் பெற்றுள்ளாய் என்பதன் ஊடாக, வெள்ளை இனப் பெண் பெற்ற ஜனநாயக உரிமைமீது சேறுவீசுவதும், அவர்களின் போராட்ட அனுபவங்கள் கோட்பாடுகளை தூற்றி வீசவும் செய்யும் முயற்சி தான் இந்தமாதிரி புலம்பித் திரிவதாகும்.

பொதுவில் வெள்ளைப் பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளை கறுப்பு இனப் பெண்கள் அனுபவிக்க முடியாத, ஏகாதிபத்திய தலைமையிலான பொது ஒடுக்கு முறையில் கறுப்புப் பெண் சிக்கி உள்ளாள். கறுப்பு இனப் பெண் வெள்ளை இனப் பெண் அனுபவிக்கும் உரிமையை குறைந்த பட்சம் பெறின் கூட ஏகாதிபத்திய அமைப்பு தகர்ந்து போகும் என்ற உண்மையினால், வெள்ளை இனப் பெண்ணை விட கறுப்பு இனப் பெண் அதிகமாக உரிமை பெற்றுள்ளாள் என்று கதையளக்க வேண்டி உள்ளது. கறுப்பு இனப் பெண்கள் குறைந்த பட்ச ஜனநாயக உரிமையை கோரிப் போராடுவதைத் தடுக்க, ஏகாதிபத்தியத்தில் உள்ள ஆணாதிக்க அமைப்பை தக்க வைக்க, சமூகத்தையே தலைகீழாகக் காட்டுவது அவசியமாகிறது. இதைக் கவ்வி விளக்க நாலு நாய்கள் கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டுள்ளார் அ.மார்க்ஸ்.

வெள்ளை இனப் பெண்களை விட கறுப்பு இனப் பெண்கள் அதிகளவு ஆணாதிக்க கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றனர். இதை மறுக்கும் அ.மார்க்ஸ் கபட நகைப்பிற்குரிய ஆணாதிக்கமாகும். பொதுவாக கறுப்பு வெள்ளை இனத் தொழிலாளர்கள், கூலிகள் எப்போதும் மற்றைய பெண்களை விட அதிகமாக சுயாதீனமாக, ஆண்களுக்கு நிகரானவர்களாக உள்ளனர். ஏன் எனில் சொந்த உழைப்பும், போராடும் குணாம்சமும் இவர்கள் வாழ்கையில் உள்ளதால் இது இயல்பாகவே உள்ளதுடன், மற்றைய பெண்களுக்கு தலைமை தாங்கி விடுகின்றனர். இதை மறுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைப்பதைப் பார்ப்போம். "கறுப்புப் பெண்கள் தமது விடுதலைக்காக வெள்ளைப் பெண்களை நம்பியிருக்க முடியாது" என்கின்றார். அருமையிலும் அருமையான ஏகாதிபத்திய விசுவாசம். கறுப்பு வெள்ளை என பிளக்கும் நாசிகள், பாசிஸ்டுக்கள், இனவாதிகள், ஆணாதிக்க வாதிகள் போல் அ.மார்க்ஸ் போசுகின்றார். பெண் விடுதலை என்பது கறுப்பு வெள்ளை இனம் கடந்த போராட்டம் தான் ஆனாதிக்கத்தில் இருந்து பெண்ணை விடுவிக்கும். பிளவுகள் ஒன்று பட்டு பெண்ணைப் பிளந்து, ஆதிக்கத்துக்கு எதிரான ஒட்டு மொத்தப் போராட்டத்தை மறுப்பதன் மூலம், மனிதனின் ஒட்டு மொத்த விடுதலைக்கு போராடுவதை மறைமுகமாக மறுத்து, ஆணாதிக்கத்தை தக்க வைக்க முனைவதாகும். ஓரு வெள்ளை இனப் பெண் நிறவாதத்தை காக்கும் எல்லா நிலையிலும் கறுப்பு இன நிறப் பெண் அங்கீகரிக்க முடியாது. இது போல் கறுப்பு இனப் பெண் நிறத்தைக் காக்கும் போது வெள்ளை இன, நிறப் பெண் அதை அங்கீகரிக்க முடியாது. இதற்கு மாறாக வெள்ளை, கறுப்பு பெண்ணின் இணைவு தமக்குள் உள்ள விசேட ஒடுக்கு முறையையும் எடுத்து இணைத்துப் போராட வேண்டும்.

இது சுரண்டல், இனம், மதம், சாதி,..... கடந்து அதற்கு எதிரான போராட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. இதை மறுப்பது என்பது காலணிய வாதிகள் எதை தமது ஆட்சிக்காக பிளவுகளை ஏற்படுத்தி பிளந்து ஆண்டார்களோ, ஆளுகின்றார்களோ அதை அ.மார்க்ஸ் உலக மயமாதலுக்கான ஏகாதிபத்திய உலகுக்காக விசுவாசமாக பிரகடனம் செய்கின்றார் அவ்வளவே.

இதற்காக எடுத்து இயம்பும் வரிகளை; பார்ப்போம். "கறுப்புப் பெண்களைப் பொறுத்த மட்டில் "பெண்" என்பது அவனது முழு அடையாளமாக இருக்க முடியாது." என்கின்றார். நகைப்பிற்குரிய வாதங்கள், எடுகோள்கள். ஆபிரிக்கா, ஆசிய, ....... எங்குமுள்ள ஆணாதிக்கமுள்ள கறுப்பு நிறப் பெண்கள் பெண்களாக இல்லையா? அப்படியாயின் அவர்கள் கற்பிதமாகவா உள்ளனர். முதலில் பெண் என்ற பொருளை மறுப்பதன் மூலம், அவன் மீதான் ஒடுக்கு முறையை மறுத்து, கறுப்புப் பெண்ணை கேலி செய்யும் ஏகாதிபத்திய அமைப்புப் போல் வெட்கம் இன்றி பெண் இல்லை எனக் கேலி செய்கிறார். இங்கு பெண் என்ற அடையாளமே ஆணாதிக்கம் சார்ந்ததே.

மூன்றாம் உலகில் உள்ள கறுப்பு நிற பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்கு முறையை மறைக்க, அதற்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க முனைவதன் மூலம், இப்போராட்டம் தவிர்க்க முடியாது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இயல்பாக எழும் என்பதால், அதைத் தடுக்க கறுப்புப் பெண்ணை ஆணாதிக்கமுள்ள பெண்கள் அல்ல என்கின்றார். பின் நவீனத்துவ தமிழ் தலித் சாக்கடைகள் இப்படி ஏகாதிபதியத்துக்காக நாய்வால் ஆட்டி முதுகு முறிய உழைக்கும் கோட்பாடு அலட்டாமல், புலம்பாமல் ஒடுக்குபவர்களுக்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை சிறுமைப் படுத்தும் கனவுகளின் வெளிப்பாடு தான்.

தலித் பெண்ணை ஆணாதிக்க அமைப்புக்குள் தொடர வைக்க முன்வைக்கும் அ.மார்க்சின் வாதத்தைப் பார்ப்போம். "ஒரு தலித் பெண்ணுக்கு "பெண்" என்ற நிலையைக் காட்டிலும் "தலித் பெண்" என்ற நிலையிலேNயு அடையாளம் காட்டப்படுகிறது." என்கின்றார். இப்படிப் பார்த்தால் தலித் பெண்ணை பள்பெண், நளப்பெண், சக்கிலியப்பெண், ......... எனப் பிளந்து அல்லவா ஆராய வேண்டும். அதைவிட்டுவிட்டு தலித் பெண் எனப் பொதுமைப்படுத்தும் சதிதான் என்னவோ? தலித் பெண் என்பதைக் காட்டிலும் அவர் அவர் ஒடுக்கு முறை வேறு பட்டது அல்லவா? ஆனால் அ.மார்க்ஸ் வெளுத்துப் போன பின் நவீனத்துவக் தலித் கோட்பாட்டுக்கு திடீர் என இடையில் பிழைப்புக்கு ஏற்றவாறு குத்துக் கரணம் அடிப்பது ஏன் தான் எனக் கொஞ்சம் ஆராய்ந்தால், அதே ஏகாதிபத்திய நோக்கத்தை இனங் கண்டு கொள்ள முடியும். "பெண்" ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கு முறையில் பெண்ணாக அடையாளம் காண்கின்றாள். இப் பெண் தனக்குமேல் உள்ள ஆணாதிக்க ஒடுக்கு முறையை இனம் கண்டு, அதைக் கடந்து போராட பெண்நிலைவாத நோக்கில் அணிதிரள்கின்றனர். இது சுரண்டல், இனம், மதம், சாதி, மொழி, ......... என அனைத்து ஒடுக்கு முறையையும் எதிர்த்து, பெண்ணாக, பெண்நிலை வாதமாகக் கட்டி அமைத்து ஆணாதிக்கம் மீது ஒட்டு மொத்த வெற்றிக்காக போராடுகின்றனர். இதை மறுத்த அனைத்தும் விதிவிலக்கின்றி தவிர்க்க முடியாது ஆணாதிக்கத்தை கட்டமைக்கின்றது. ஏன்எனின்  ஒட்டுமொத்த ஆணாதிக்கத்தை எதிர்க்காது தமக்குள் தமது நலனுக்குள் சீர் திருத்தத்தைக் கோருகின்றது.

அடுத்து ஆணாதிக்கத் தகவமைப்பை பார்ப்போம். "தலித் பொதுப்புலம் ஆண் சார்பற்றது எனச் சொல்ல முடியாதெனினும் இதிலும் மேற்சாதிப் பொதுப்புலத்தினளவு ஆண் சார்புத் தன்மை இல்லை எனலாம். ....... தலித் பெண்ணியம் சாதீயத்தையும் பார்ப்பனீயத்தையும் ஆணாதிக்கத்திற்கு இணையான இலக்குகளாகக் கொள்வது தவிர்க்க முடியாது." என அ.மார்க்ஸ் தலித் ஆண்களின் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க அதனூடாக இச்சமூக அமைப்பை முண்டு கொடுக்க குரல் கொடுக்கின்றார்.

தலித் ஆணாதிக்கம் இல்லை என்று கூறும் அளவிற்கு ஒப்பீட்டில் கூறியபடி மோசடி செய்கின்றார். சமுதாயப் பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், சூழல் ....... போன்றவற்றில் சமூகங்களில் காணப்படும் ஏற்றத் தாழ்வான ஆணாதிக்க வேறுபாடுகளை ஒப்பீட்டளவில் மறுத்து, ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் முயற்சி உண்மையில் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்க வர்க்கப் போரை மறுக்கும் கோட்பாடு உருவாகும் முயற்சியில் முன் வைப்பது தான்.

ஆணாதிக்கம் என்பதும் அதன் அச்சாணி என்பதும் பெண்களை சுரண்டுவதில் இருந்து தொடர்கிறது. இது பெண்களை அடிமையாக்கியதுடன், பாலியலை நுகர்வுக்குரிய பண்டமாக மாற்றியதும் என்பது உலகளவில் பொதுத்தளத்தில் பொது உண்மையாக பெண் மீதான ஒடுக்கு முறையாக உள்ளது. ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பில் உள்ள மாறுபட்ட ஆணாதிக்க ஒடுக்கு முறையை எடுத்து பொதுவான ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மறுப்பதும் ஏற்றத் தாழ்வுற்குள் குளிர் காய்ந்து அதில் பிழைக்க முனையும் கோட்பாடுகள், செயல் தளங்கள் உண்மையில் மக்களை ஏமாற்றி அதில் ஆணாதிக்கத்தை தக்க வைத்து பாதுகாப்பது தான்.

தலித் பெண்கள் சாதியையும், பார்ப்பனீயத்தையும் ஆணாதிக்கத்திற்கு இணையாகக் கொள்வது என்பது, தலித் பெண்கள் ஆனாதிக்கத்திற்கு எதிராக போராடுவதை மறுப்பதாகும். தலித் பெண்களின் ஆணாதிக்க ஒடுக்கு முறையை சாதியத்திற்குள்ளும், பார்ப்பனீயத்திற்குள்ளும் மூடி மறைத்து ஆணாதிக்க அமைப்பை பாது காக்க கோருவதன் மூலம், உண்மையில் இச் சமூக அமைப்பை; பாதுகாப்பதன் மூலம் நனவாக பார்ப்பனீயத்தையும், சாதியையும் பாதுகாக்க முனைவதாகும்.

இதில் சாதியத்தை, பார்ப்பனீயத்தை ஆணாதிக்கத்துடன் ஒப்பிடுவது என்பதும் ஒரு பூர்சுவா குடும்பத்தில் ஆண் பெண் போராடுவது போல் ஆணாதிக்கத்துடன் சமரசம் கண்டு போராடத் தூண்டுவதும், ஆணாதிக்க எதிரியாக பிரகடனம் செய்யாத வகையில் காணக் கோருவதன் மூலம், சாதி என்ற கட்டமைப்பை பார்ப்பனீயம் வரையறுத்த வகையில் சமூகத்தை வாழக் கோருவதாக உள்ளது. ஆணாதிக்கத்துக்கு மாற்றாக சாதியை வைப்பது என்பது இருக்கும் ஆணாதிக்க உலகைத் தக்க வைப்பது மாகும். ஆணாதிக்கம் தகராத வரை சாதியமும் தகராது.

அடுத்து ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க வைக்கும் வரிகளைப் பார்ப்போம். "இந்திய மரபுத்துவத்திற்கு உரிய பெண்ணியம் என்ற கருத்தை இன்று இந்துத்துவத்திற்கு உயர்த்திப் பிடிப்போர் முன்வைக்கின்றனர் பாரதீய ஜனதாக் கட்சியின் பெண்கள் பிரிவாகிய "மகினமோர்ச்சா" சேர்த்து மிருதுனா சின்கா சொல்லுது , "இந்தியப் பாரம்பரியம் முன் வைத்து ஏற்றுக் கொண்ட பாலியல் சமத்துவத்தை மீட்டுத் தருவதென பாரதீய ஜனதாக் கட்சி சபதமேற்கிறது ...... மேற்கில் வளர்ந்து வரும் பெண் விடுதலை இயக்கங்களில் இருந்து நாங்கள் கோட்பாட்டளவில் வேறு படுகின்றோம், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு வகையான மறுசீரமைப்பை நாங்கள் கோருகின்றோம்." என்கின்றார் அ.மார்க்ஸ். மேற்கு நாட்டு பெண் விடுதலையில் இருந்து கோட்பாட்டளவில் வேறுபடுவதாக (அதை என்ன எனச் சொல்ல வக்கில்லாமல் போகிறது) கூறிக் கொண்டு பாரதீய ஜனதா பெண்விடுதலைக்கு மேளத்துடன் அங்கீகாரம் வளங்குகின்றார் அ.மார்க்ஸ். வாழ்க பார்ப்பனீயப் பெண்ணியம். இந்த ஆணாதிக்க பார்ப்பனீயப் பெண்ணியத்தை மறுப்பது என்பதும், வரையறுப்பது என்பதும் கேலிக்குறியது எனக் கூறி ஆணாதிக்க ஏகாதிபத்தியத்திற்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

பார்ப்பனீய ஆணாதிக்கத்தை முன்வைக்கும் மிருதுளா சின்காவின் கோரிக்கையை எப்படி விமர்சிக்க முடியும். ஏன் எனின் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது எனவே நாம் அதை பாதுகாக்க வேண்டும் என்கின்றார் பார்ப்பனீய கோட்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

பாரதிய ஜனதா வைத்தாலும், கிலிங்ரனின் மனைவி வைத்தாலும் கோட்பாட்டளவில் வேறுபாடு உண்டு ஆணால் அந்த ஆணாதிக்கத்தை மறுத்து, எதிர்த்து பெண்ணியத்தை நிலை நிறுத்த மாட்டோம் என்கின்றார். ஏன்எனின் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது அல்லவா. உச்சரித்தால் போதும் அங்கீகரிப்போம் வாருங்கள் என அழைக்கின்றார்.

தலித் பெண்ணியம் தலித் போன்ற கோசங்களின் பின் இவர்கள் "பொருளாதாரத்தில் ஒருவகையான மறுசீரமைப்பைக் கோருகிறோம்" என்பதன் ஊடாக இந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க பார்ப்பனீயச் சாதிய சமூகத்தில் மாற்றம் இன்றி பொருளாதாரத்தில் சலுகைகளை பார்ப்பனீயத்திடம் கேட்டு பெறுவதை அ.மார்க்ஸ் கறுப்பு வெள்ளை, தலித் கோசங்களின் பின் முன்வைக்கும் அருவருக்கத் தக்க ஏகாதிபத்திய அருவருடித் தனமாகும்.

இந்த மாதிரி சுரண்டும் பன்றித் தனத்தை தெளிவாகக் காட்டியபின், மார்க்சியத்தை எதிர்ப்பதில் வியப்பேதும் இல்லை. மார்க்சியம் மட்டும் தான் உண்மையில் மக்களின் பிரச்சனையை பொருளாதாரச் சலுகைக்குப் பின் தேடாது, அவர்கள் விடுவிக்கும் போராட்டத்தில் தியாகத்தின் ஊடாகப் போராடுகின்றது.

இருக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்க பார்ப்பனீய சாதீய அமைப்பை தலைகீழாக்கிய சமூகத்தை மார்க்சியம் கோரும் போது அதை சேறடித்து சலுகைக்காக பிழைப்புக்காக போராட விளையும் கூட்டம் நாம் போராடுவதை அங்கீகரிக்க மறுத்தும், மார்க்சியத்தை அந்த மக்களுக்கு எதிரானதாகக் காட்ட எல்லா வண்ணக் கோட்பாடுகளையும் மீள மீள முன்வைத்து முயல்வதைத் தான் மேற்கூறிய கோரிக்கை தலித்தியத்தின் பின் எழுவதைக் காணமுடியும். அந்த வகையில் சில பொருளாதார சலுகைக்காக பார்ப்பனீய மந்திரி சபையில் உக்கார்ந்த தலித் எழில்மலையும் இந்த தலித் கோட்பாட்டின் உற்பத்தியே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.

இதற்காக எடுத்து வைக்கும் அடுத்த வரிகளை ஆராய்வோம். "தலித் பெண்ணியம் இத்தகைய இந்துத்துவப் பெண்ணியத்தில் இருந்து விலகி நிற்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அயோத்தி தாசரும் அம்பேத்காரும் முயற்சித்ததைப் போல தலித் பெண்ணியமும் இந்திய மரபு என்பதை வைதீக வேர்களிலிருந்து  அல்லாமல் பவுத்த, சைவ வைதீக மரபில் தேட முயலும், அம்பேத்கார், பெரியார், ப+லே வழியில் நின்று சாதியம் பார்ப்பனீயம், ஆணாதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கும், தலித் ஆணை அதுதன் எதிரியாக நிறுத்தாமல் உயர்சாதி ஆணாதிக்க சமூகத்தை அது தனது இலக்காகக் கொள்ளும்" என தலித் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்க தலித் பெண்ணியம், பெண்ணியப் போராட்டங்களை தடுத்து நிறுத்த தலித் ஆணாதிக்கமும் கிடையாது போராட்டமும் கிடையாது என்கின்றார்.

தலித் ஆணிய சலுகைகளை விட்டுக்கொடுத்து, உயர்சாதி ஆணியத்தை எதிர்த்துப் போராடக் கோரும் ஜனநாயக விரோத அரசியல், உண்மையில் ஒட்டு மொத்த ஆணாதிக்கத்தை தக்க வைக்கத் தான். அ.மார்க்ஸ் தலித் ஆணாதிக்கத்துடன் சமரசம் கண்டு, தலித் பெண்களை எட்டி உதைக்கும் ஆணாதிக்க சுரண்டல் தலித்தியம் அந்த மக்களுக்கே எதிரானது. ஏன்எனில் தலித் தனக்குள் உள்ள சுரண்டும் வர்க்கத்தை எதிர்ப்பதில்லை. தனக்குள் உள்ள சாதி ஒடுக்கு முறையை எதிர்ப்பதில்லை. இப்படி தலித்துக்குள் உள்ள சுரண்டும் வர்க்க, ஆளும் வர்க்க ஆணாதிக்கப் பிரிவுகளின் சலுகையில் எழும் கோட்பாடு, போராட்டம் எப்படி அந்த மக்களை விடுவிக்கும். என கொஞ்சம் யோசித்தால் இதன் நோக்கம் இந்த உலகை களங்கம் இன்றி சலுகைக்குள் பாதுகாப்பது தான் பொருந்தும்.

தலித் பெண்ணியம் தனக்கு மேல் உள்ள தலித் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில் தான் எழமுடியும். இது தனக்குள் உள்ள சுரண்டல், சாதி ஒடுக்கு முறை என அனைத்தையும் எதிர்த்து, மற்றைய பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தான் எழ முடியும்.

தலித்துக்குள் ஒரு பார்ப்பனீயப் பிரிவும், பிழைக்கும்சுரண்டல் பிரிவும்,  தமது சலுகைகளை தனித்துவமாகப் பெற எழும் கோட்பாடுகள் இயக்கங்கள் அற்ப சலுகைகளை வீசி எறிந்து, ஒட்டுமொத்தமாக சூறையாடுவதே எஞ்சம்.

கோட்பாடுச் செம்மல் அ.மார்க்ஸ் சலுகைக்காக என வைத்து, தலித் ஆணாதிக்கத்தை எதிர்த்து அல்ல, சுரண்டலை எதிர்த்து அல்ல, சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து அல்ல என்ற ரீதியில் இதற்கு வெளியில் எந்தப் பிரிவும், எந்தப் போராட்டக் கோட்பாடோ, வழியோ, நடைமுறையோ யாராலும் வைக்க முடியாது.

தலித்துக்குள் முதலாளிச் சலுகை, தரகு முதலாளிச் சலுகை, ஆணாதிக்கச் சலுகை, நிலப்பிரபுத்துவச் சலுகை, உயர்சாதிச் சலுகை என்று நீளும் கோட்பாட்டு வரையறைகள் உண்மையில் பாட்டாளி வர்க்கம் எதை மறுத்துப் போராடுகின்றதோ, அதன் மீது அதற்கு நேர் எதிராக முன்வைத்து நிலை நிற்கிறது. பாட்டாளி வர்க்கம் தலித்துக்குள் இச் சலுகைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று மறுக்கின்றது.

இதனால் தான் அம்பேத்கார் வழியில் போராடக் கோருகின்றார். இந்திய மரபை வைதீக மரபில் இருந்தல்ல பவுத்த, சைவ, வைதீக மரபில் தேட வேண்டும் எனக் கூறி, வைதீக மரபில் மக்களை மீளவும் மூடிப் போட்டு வைக்க விரும்புகின்றார். இதற்கு பெரியாரைக் கொண்டு வரும் முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டியது இல்லை என நம்புகின்றார். பெரியாரின் போராட்டம் மொத்த சமயக் கருத்து முதல் வாதத்திற்கு எதிரானது. அம்பேத்கார் கருத்து இதற்கு எதிரானது.

இப்படி முரண்பாட்டை முன்வைக்கும் கோட்பாடு இடியப்பச் சிக்கலை மாறிமாறிப் போசுவதால் யாருக்கும் புரிவதில்லை, விளங்குவதுமில்லை என நம்புகிறார். பெயர்களை உச்சரிப்பது நாய்ப்பிழைப்பிற்கு அவசியமாகிறது. இதன் மூலம் தலித், தலித் பெண்ணிய மோசடிகளை அரங்கேற்ற முடியும் என்ற கனவுகள் பெயர்களால் நனவாக்க முனைகின்றார்.

இதே மேலும் முரண்பாட்டின் சிக்கலில் முன்வைப்பதை ஆராய்வோம். " "தலித்" என்றும் உரிமையைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண், தலித் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அது ஏற்றுக் கொள்ளாது ........ "தீண்டாமை" என்கின்ற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண் தலித் பெண்ணுக்கு எதிரான சலுகையைக் கோர முடியாது." இது யாராவது கேள்வி கேட்டாலும் இல்லை எனச் சொல்ல, விரும்பியவறு, மறுவாசிப்பாவது, மறுவிக்கம் சொல்ல முன்வைத்த மோசடியாகும்.

வெள்ளையில் இருந்து கறுப்பைப் பிளந்து, கறுப்பில் தலித்தைப் பிளந்து அங்கு படிப்படியாக ஒடுக்கு முறையில்லை எனக் கூறிய ஆய்வுரைகள், பின் போராட்டம் உள்ளே இல்லை எனப் பிரகடனம் செய்து, பின் சலுகை கோர முடியாது என கதையளக்கிறார்.

தலித் ஆண் தலித் பெண் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது எனக் கூறும் அ.மார்க்சின் கோட்பாடு தலித் ஆணை தனது எதிரியாக நிறுத்தாது எனக் கூறினார். இது எப்படிப் பொருந்தும் என விளக்க வேண்டியது இல்லை என நம்புகின்றார். இதைச் சொல்லிப் பிழைத்தால் போதும் என்பNது நிலை.

குழப்பம், இடியப்பச் சிக்கல், முடிவு, இருக்கும் அமைப்பை அசையாது பாதுகாக்கும் மறு வாசிப்பு செய்து ஒரு நாய்க் கூட்டத்திற்கு வழிகாட்டுவது தான் இதன் செயல் களம்.

மார்க்கியம் ஆணாதிக்கத்தை எதிர்த்து மறுத்து, ஆணாதிக்கத்தைப் புரட்டிப் போடுகின்றது. இதை மறுத்து மறுசீரமைப்பை நாங்கள் (தலித்-தலித் பெண்ணியம்) பொருளாதாரத்தில் கோருகின்றோம் என்பது நாம் இனி எதை எனக் கூறத் தேவை இல்லை. இது இருக்கும் சமூக அமைப்பைப் சலுகை பெற்று பாதுகாப்பதே.

தலித் பெண்ணியம், தலித்தியம், மற்றும் அனைத்துக் கோட்பாடுகளும், இதைத் தூக்கிப் பிடிக்கும் எல்லோரும் இதற்குள் தான் தமது அரசியல் பிழைப்பை தொடர்கின்றனர். இதை நாம் வேரறுக்க வேண்டும் இது தான் எஞ்சியுள்ளது.

"பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

இக்கட்டுரையை தொட்டு வரக் கூடிய கூற்று ஒன்றை "எக்சில் 2" இல் அரவிந் அப்பாத்துரை எழுதியிருந்தார். அதைப் பார்ப்போம்.

"ஜாதி வேற்றுமை பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள்ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்து போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிமாணங்களிலும் பெண்ணியம் தலித்தியமும் வௌ;வேறு போராட்டங்கள்." என்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.

மனு தர்மம் என்ற நூலை எதிர்த்து எப்படி பெண்ணியம் போராடும் ஐயா? பார்ப்பணீயப் பெண்ணியம் அதாவது அ.மார்க்ஸ் குறிப்பிடும் "மிருதுளா சின்கா" எப்படி மனுதர்மத்தை எதிர்க்கும். அ.மார்க்ஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது என்கின்றார். நீங்கள் எந்த பெண்ணியத்தை சொல்லுகின்றீர்கள். கேலி செய்யும் பெண்ணியத்தையா? எதை?

மனுதர்மப் பெண்ணியத்தை எதிர்க்க வேண்டுமாயின் அது உண்மையான பெண்ணியமாக இருக்கவேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தது சுரண்டலை, ஆணாதிக்கத்தை, மற்றைய பூர்சுவா,பார்ப்பணீயப் பெண்ணியத்தை எதிர்த்தும் சாதி அமைப்பைக் கடந்து கோர வேண்டும். இந்தப் பெண்ணியம் தான் மனுதர்மத்தை எதிர்க்கும். இந்தப் பெண்ணியம் கம்யூனிசப் பெண்ணியமாகும்.

அடுத்து தலித்தியம் மனுதர்மத்தை எதிர்க்கும் என்கின்றார் இது முழமையானது அல்ல. தலித்தியம் மனு தர்மத்தை எதிர்க்க வேண்டுமாயின், தனக்குள்ள மனுதர்ம வழிவந்த சாதிப்படி நிலையை முதலில் தகர்க்க வேண்டும். இதை தலித் மனுதர்மம் மறுக்கின்றது. இது மறுக்கப்படும் போது மிக கீழ் மட்ட சாதிக்கு இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்று தான்.

மனுதர்மத்தை எதிர்த்துப் போராட வேண்டும் எனின் தலித்துக்குள் உள்ள மனுதர்மக் கூறுகளை எதிர்த்து போராடுவதில் தொடங்குகிறது.

தலித்துக்குள் உள்ளுள்ள மனுதர்மம் பாதுகாத்த படி ஒருக்காலும் வெளியில் உள்ள மனுதர்மத்தை தகர்க்க முடியாது. மனுதர்மத்தை எதிர்த்த போராட்டம் எல்லாம் சாதிப் படி நிலை ஒடுக்கு முறைக்குள்ளும் தொடங்குகின்றது. இது சாதியைக் கடந்த போராட்டத்தைத் தொடங்குவதும், ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து கோரிக்கையிலும் கைகோர்க்கின்றது. இது மட்டும் தான் மனுதர்மம் வேர்ரறுக்கின்றது.

சாதியைக் கடந்து கோரும் மக்கள் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் தான் ஒட்டு மொத்த மனுதர்மத்திற்கும் எதிராகப் போராடுகின்றனர். அதை வேர் அறுக்கின்றனர். மற்றவை அதைத் தக்க வைக்கவும், அ.மார்க்ஸ் கோருவது போல் சலுகைகளை கையேந்துவதிலும் தான் நீடிக்கின்றது.

அடுத்து அரவிந் அப்பாத்துரையின் பொண் மொழியைப் பார்ப்போம். "தத்துவரீதியில், கம்ய+னிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ...... மார்க்சிய வாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்கு துணை நிற்கக் கூடும் இதைத் தவிர்த்து கம்ய+னிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு "பூடகம்." என்கின்றார்.

கம்ய+னிசம் பற்றி தனது "பூடகம்" நிலையில் நின்றும், திரித்தும் வெளியிடும் கம்ய+னிச எதிர்ப்பு அறிவியல் சார்ந்ததல்ல.

கம்ய+னிசத் தத்துவரீதியாக சம உரிமை கோருகின்றார். இதை பொருளாதாரத்தில் கோருகின்றார். எல்லா வண்ணப் பிழைப்பு வாதிகளும் கம்ய+னிசத்தை பொருளாதாரப் போராட்டமாக சுருக்கி அதில் போராடிப் பிழைத்து அம்பலப் படுகின்றனர்.

பொருளாதாரத்தில் சமத்துவம், சமஉரிமை தான் எனின் தொழிற்சங்கப் போராட்டம் போதுமானதாக இருக்கும். இன்றைய தொழிற் சங்கங்கள் கம்ய+னிசப் புரட்சியில் இருந்து விலகிச் சென்ற பாதை இதுதான்.

கம்ய+னிசம் வர்க்கப் போர்ரைக் கோருகின்றது. வர்க்க ஆட்சியைக் கோருகின்றது. அதைப் பாதுகாக்கக் கோருகின்றது. இது வர்க்க எதிரிகளை ஒழித்துக் கட்டக் கோருகின்றது. இதன் போராட்ட பதையில் சம உரிமை என்பது மறுத்து விடுகின்றது. பொருளாதாரத்தில் சமத்துவம் அல்ல தேவையை எடுக்க கோருகின்றது.

பொருளாதார வாதத்துக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நிறுவ மார்க்ஸ்-லெனின் பல நிறைய தத்துவப் போராட்டங்களை நடத்தி கம்ய+னிசத்தை நிறுவினர். இதை "பூடகம்" போல் இல்லாது படித்து கம்ய+னிசத்தை திரிக்காது பார்க்கக் கோருகின்றோம்.

பெண்ணியத்தில் சம உரிமை துணைநிற்க்கும், அதற்கு வெளியில் கம்ய+னிசம் ஒரு பூடகம் என்கிறார். அறிவு சூனியத்தில் குருட்டுப்பார்வை தான். பெண்ணியத்திற்கு சம உரிமை கிடைத்தபின் எப்படி ஐயா பெண்ணியக் கோரிக்கை எழும்? சம உரிமை என்பது எல்லாத் துறையிலும் நடக்க வேண்டம்.

கம்ய+னிசம் வர்க்கப் போரை பொருளாதாரத்தில் நடத்துவதில்லை. அது சுரண்டலுக்கு எதிராக, அதற்கு காரணமான அனைத்துத் துறைகளுக்கும் எதிராகப் போராடுகின்றது. சுரண்டல் என்பது உருவாக்கியது தான் ஆணாதிக்கம், சாதிய கட்டமைப்பு, பாலியல் வக்கிரங்கள், ........ என அனைத்தும். இதை எதிர்க்கும் வர்க்கப் போராட்டம் சுரண்டலை ஒழிக்கும்  போது அது அனைத்துத் துறையிலும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். இது மட்டம் தான் கம்ய+னிசத்தின் கோரிக்கையும் வெற்றியும். மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், மதம், ........ என அனைத்திலும் மறுத்து மாறுதலையை கம்ய+னிசம் கோருகின்றது. இதைப் புரிந்தால் பெண்ணியத்துக்காக ஒரே ஒரு போராட்ட வடிவம் கம்ய+னிசமாக இருப்பதைக் காண முடியும். இதைவிட்ட அறிவு சூனிய "பூடகமாக" இருப்பதால் எதுவும் நடக்காது வம்பளப்பதும் சுகிப்பதும்தான் எஞ்சும்.

Last Updated on Tuesday, 03 July 2012 19:20