Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பிரபாகரன் எங்கே என்று கேட்டு மகனைக் கொன்றதான கண்டுபிடிப்புக்கு பின்னான அரசியல்

  • PDF

அரசியல் சதியுடன் கூடிய ஊடக விபச்சாரமே, புலித் தேசியத்தின் பின் பரவலாக திட்டமிட்டு அரங்கேறியது. இதன் பின்னணியில் இவற்றைப் புனைந்தவர்களுக்கு, முன்கூட்டியே சனல் 4 வெளியிட இருக்கும் காட்சிகள் என்ன என்பதும் தெரிந்திருக்கின்றது. சனல் 4 காட்சிகள் பல உண்மைகள் மூடிமறைக்கப்பட்ட பின்னணியில், சிலரின் தேவைகளுக்காக முடக்கப்பட்டு காட்சியாக்கப்பட்டு வெளிவருகின்றது. இதை நாம் தனியாக வேறு ஒரு இடத்தில் ஆராய்வோம். இங்கு பிரபாகரனை கேட்டு மகனை கொன்றதான புனைவை ஆராய்வோம்.

சனல் 4 காட்சிகள் வெளி வரமுன்னமே பிரபாகரன் எங்கே என்று கேட்டு, மகனைக் கொன்றதாக கூறும் அரசியல் பிரச்சாரம் எதற்காக முன்தள்ளப்பட்டது? அரசியல் சதியும், ஊடாக விபச்சாரமும் வியாபாரமும் ஒருங்கே கொண்ட பின்னணியில், இந்தப் புனைவு திட்டமிட்டு வெளியாகியது. சனல் 4 காட்சியில் அப்படி ஒரு விசாரணைக்கான காட்சியே கிடையாது. கொன்ற காட்சியின் ஒரு பகுதியே உள்ளது. இப்படி இருக்க "பிரபாகரன் எங்கே என்று கேட்டு கொன்றதான" தகவலின் பின்னான நோக்கம் என்ன?

"பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்" என்று கூறும் புலி மாபியாக் கூட்டம், தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அசிங்கத்தின் பின் நின்றுதான் ஊடகங்கள் மாரடித்தன. பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்பவர்கள் முதற்கொண்டு பிரபாகரன் சரணடையவில்லை என்று சொல்லும் கூட்டம் வரை, அதனிடத்தில் எந்த நேர்மையும் உண்மையும் கிடையாது. இந்த விவாகாரத்தை ஓட்டிய அதன் கண்ணோட்டம் மூடிமறைக்கப்பட்ட அயோக்கியத்தனங்களுடன் கூடிய சதியை அடிப்படையாக கொண்டது.

பிரபாகரன் சரணடைந்தது முதற்கொண்டு அதன் துரோகத்தின் பின் அரசியல் நடத்துகின்ற, ஊடாக வியாபாரம் செய்கின்ற பின்னணியில் அரங்கேறும், அரங்கேற்றும் காட்சிகளைத்தான் சனல் 4ம் வெளியிடுகின்றது. அரசு மட்டும் உண்மைகளை போர்க்குற்றங்களை மூடி மறைக்கவில்லை, அரசுக்கு எதிரானதாக கூறிக்கொள்ளும் தரப்பும், ஏன் தம்மை தாம் சுதந்திரமான ஊடகங்கள் என்பவர்களும் கூடத்தான் இதை செய்கின்றது. இங்கு உண்மையும், நேர்மையும் புதைக்கப்படுகின்றது.

இந்த அரசியல் பின்புலத்தில் சனல் 4 இல் இவை காட்சியாகின்றது. இந்தக் காட்சிகள் மூலம் பிரபாகரனின் மகன் சரணடைந்த உண்மை இங்கு மீள உறுதியாகின்றது. இந்தச் சரணடைவு எப்போது, எந்த நிலையில், வேறு யாருடன் சேர்ந்து நடந்தது? புலிகள் முழு உண்மைகளையும் மூடிமறைக்கப் புனையும் நடேசன் புலித்தேவன் சரணடைவுக்கு முன், பின் நடந்ததா!? அல்லது எல்லாம் ஒருங்கே அரங்கேறியதா!? பிரபாகரனின் மகனின் சரணடைவு தனியாக தனித்து நடந்து இருந்தால், யாரின் உத்தரவுக்கு அமைவாக எந்த நிலையில் இது நடந்தது?

இந்தப் பின்னணியில் 17.05.2009 இலங்கை நேரம் அதிகாலை புலியின் சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் வழங்கிய பேட்டியில் "..அதனால் தான் நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது. ……. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலமையில், இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்….. மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக்கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்றார். இப்படித் தான் சரணடைவு முழுமையாக அரங்கேறியது.

17.05.2009 இலங்கை நேரப்படி மாலை அன்று தமிழ்நெற்றுக்கு புலியின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் வழங்கிய பேட்டியில் .."எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை." என்றார். இதை அவர் 25.05.2009 பிபிசி தமிழ்சேவைக்கு வழங்கிய பேட்டில், 17.05.2009 பிரபாகரன் கதை முடிந்ததை மீள உறுதி செய்கின்றார்.

அதே தமிழ்நெற் பேட்டியில் "எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறிலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது இதுதான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சரணடைந்து வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது." என்றார்.

ஆக புலித் தலைமை உட்பட, பிரபாகரன் குடும்பம் முழுமையாக சரணடைந்தது உறுதியாகின்றது. இதற்கு வெளியில் பிரபாகரனின் மரணம் தனியே நிகழவில்லை. பிரபாகரனின் தாய் தந்தை மக்களுடன் மக்களாக சென்று சரணடைந்த நிகழ்வுக்கு முரணாக, பிரபாகரனின் குடும்பம் சரணடைந்தது. இதற்கு மாறாக பிரபாகரன் மகன் தன் மெய்ப்பாதுகாவலர்களுடன் தனியாக சரணடைந்தாக கூறுவது கேலிக்குரியது. இதைவிட மக்களுடன் மக்களாக வெளியேறியிருக்க முடியும்.

இந்த வகையில் முழுமையாக சரணடைவுக்கு செல்லாத தளத்தில், மக்களுடன் மக்களாக பிரபாகரன் மனைவி, மகள், கடைசி மகன், குறைந்த பட்சம் அகதிமுகாம் வரை இலகுவாக வெளியேறி இருக்கமுடியும். இதற்கு மாறாக சரணடைவு அரங்கேறியது. இங்கு நேரடியாக சரணடைந்து இருப்பதும், முக்கிய பல புலிகள் சரணடைந்த பின் கண்கள் கைகள் கட்டப்பட்டு கொல்லப்படும் காட்சிகள், மிகத் தெளிவாக இந்த ஒட்டுமொத்த சரணடைவை உறுதி செய்கின்றது.

இவை அனைத்தும் நடேசன், புலித்தேவன் சரணடைவு நிகழ்வுக்கு புறம்பாக நடக்கவில்லை. சரண்டைவு பற்றிய சர்வதேச உறுதிப்பாடுடன் நடந்தேறியது. இதை சுற்றிய நிகழ்வுகளுக்கு அரசு மற்றும் புலியைச் சுற்றி பல ஆதாரங்கள் உள்ளது. இதன் பின் அருகில் வைத்து சுட்ட பல உடல்கள் 18, 19 திகதிகளில் காட்டப்படுகின்றது.

 

 

 

 

பிரபாகரனின் மகனில் காணப்படும் குண்டு அடையாளம் போன்று, சூசை, பானு… என்ற முக்கிய தளபதிகளின் உடல்களிலும் காட்டப்படுகின்றது. சரணடைந்த பின் நடந்த உண்மையை, அரசு மறுக்கின்றது. புலிகள் அதை மூடிமறைத்து அரசுக்கு உதவுகின்றனர்.

இங்கு பிரபாகரனின் மகனை பிரபாகரன் எங்கே என்று கேட்டு சித்திரவதை செய்ததாக கூறும் திட்டமிட்ட புனைவுக்குப் பின் சதிதான் இருக்கின்றது. இவைகளுக்கு பின்னால் இந்தச் சரணடைவை வழிகாட்டியவர்களும், மக்களை முட்டாளாக்கி பிழைப்பவர்களும் காணப்படுகின்றனர்.

 

பி.இரயாகரன்

16.03.2012

 

பல்கலைக்கழக அறிக்கை

Prabhakaran tortured before being killed: report

Tamil Tigers leader Velupillai Prabhakaran was tortured by the Sri Lankan military before being killed, a leading human rights body said in a report released on Wednesday.

The University Teachers for Human Rights (UTHR) quoted high-level military sources as saying that Prabhakaran was tortured in the presence of "a Tamil government politician and a general".

The torture, it said, took place probably at the headquarters of the army's 53 Division, which battled the Liberation Tigers of Tamil Eelam (LTTE) before crushing it last month.

"Several army sources have said that Prabhakaran's (younger) 12-year-old son Balachandran was killed after capture. Our (sources) said that he was killed in front of his father," said UTHR, which has always been critical of excesses both by the military and the LTTE.

"These sources added that this information is correct unless officers at the highest level are fibbing to one another.

"Our sources in addition to several others have said that all the LTTE persons remaining in the NFZ (No Fire Zone) were massacred," it added in a 48-page report, an advance copy of which was made available to IANS.

Sri Lanka announced May 18 that Prabhakaran, founder leader of the LTTE, was killed in a lonely coastal stretch in the northeastern district of Mullaitivu where the Tigers had massed their forces before going down. His body was put on display, placed on a stretcher, the back of the head blown off.

Sri Lankan minister Vinayagamurthy Muralitharan alias Karuna, a former confidant of Prabhakaran, had told IANS that the LTTE chief was shot dead with 18 of his guards.

Prabhakaran's death marked the end of the LTTE's dragging conflict that claimed 90,000 lives since 1983.

UTHR said: "Information seeping into the public domain from within the army points to capture or surrender, but the official responses dismissing this are a rehash of stories that public no longer finds credible. It is left to an impartial enquiry to answer this and related questions."

UTHR pointed out that the government was evasive about the fate of Prabhakaran's wife Mathivathani.

It quotes a brigadier as saying: "We had to look for Prabhakaran's body because the world was interested in seeing it. But the body of his wife is not of any importance to us."

The UTHR report said: "That would be the fate of the unknown hundreds of civilians and militants killed in those last days (of fighting)."

According to the report, among the LTTE leaders who surrendered to the army included Baby Subramaniam, a member of the group since 1976 and one of Prabhakaran's oldest associates.

Others reportedly now in government custody included former eastern province political leader Karikalan, former spokesman Yogaratnam Yogi, former head of the LTTE international secretariat Lawrence Thilakar, political advisor V. Balakumar, Jaffna leader Ilamparithi and Trincomalee political leader Elilan.

Last Updated on Friday, 16 March 2012 16:37