Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நீங்களெல்லாம் ஐந்தாம் படை என்று குற்றம்சாட்டிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 45)

  • PDF

குறிப்பு : ஐந்தாம் படை பற்றி கேள்வி கேட்டு, அதைப் பற்றி விளக்கமும் தந்தார்.

விளக்கம் : நீங்கள் எல்லாம் ஐந்தாம் படை என்று மிரட்டியதுடன், கைக்கூலிகள் என்றார். யாருடைய கைக்கூலிகள் என்றதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அதாவது நாங்கள் மக்களின் கைக்கூலிகள் என்பதால், அதை மட்டும் அவர் சொல்லவில்லை. மக்களின் விடுதலையை நேசிப்பது கைக்கூலித்தனம் என, புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. மக்கள் நிலவும் சமுதாயத்தில் எதிர்கொள்வது, வெறும் இனவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல. சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், பிரதேசவாதம் என்று பரந்த தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிராக போராடுவது, கைக்கூலித்தனம் என்று தான் வலதுசாரிய புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. தாம் மட்டும் அரசுக்கு எதிராக போராடுவதையே, விடுதலைப் போராட்டம் என்கின்றனர். சாதியத்தை, ஆணாதிக்கத்தை, வர்க்க ஒடுக்கமுறையை எதிர்த்து போராடுவது, ஐந்தாம் படைக்குரிய செயல் என்றான். மக்களின் அடிப்படையான விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள் சுரண்டி வாழும் பாசிச சொகுசு வாழ்க்கையை அழித்தொழிக்கும். அதனால் இதை ஐந்தாம் படைக்குரிய செயலாக வருணித்து, மக்களை நேசித்த தேசப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர்.

 

அரசுடன் கூடித்திரியும் துரோகக் குழுக்களின் நடவடிக்கை, முற்றிலும் இதில் இருந்து வேறானது. அவர்கள் தமிழ் மக்களின் தேச விடுதலைப் போராட்டத்தையே மறுத்ததுடன், அவர்களும் மக்கள் போராடுவதையே அனுமதிப்பதில்லை. புலிகளும் இதை மக்களுக்கு மறுத்து, அதற்காகவே போராடுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமான ஒரு பாசிசக் குழுவாக, மக்களை அடிமைப்படுத்தி அவர்கள் மேல் சிம்மாசனத்தை நிறுவ, அரசுக்கு எதிராக அவர்கள் போராடுவது அவசியமாகவிருந்தது.

குறிப்பு : தமது இயக்கத்தில் தவறுகள் செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என மாத்தையா கூறினான். அந்த வகையில் முன்பு ஒரு சிறு களவுக்கு கொண்டு வந்த ஒருவனை, கண் கட்டாமல் கொண்டு வந்ததால் அவனைச் சுட வேண்டி ஏற்பட்டதாம். இதனால் அதனைச் செய்த அனைவரும் பதவியிறக்கப்பட்டதாக கூறினான்.

விளக்கம் : தமது இயக்கத்தில் தவறு இழைத்தவர்களை தாம் தண்டிப்பதாக கூறுவது ஒரு மோசடித்தனமானது. தவறு என்பது என்ன? பாசிசமே அதாவது புலிகள் என்பதே தவறானதாக இருக்கும் போது, தண்டனை என்பது மோசடியானதே. எம்மண்ணில் சில ஆயிரம் பேரின் உயிரை, தண்டனையின் பெயரில் புலிகள் கொன்றொழித்த போது, அங்கு எந்தவிதமான நியாயங்களும் இருந்ததில்லை. ஏன் அவைகளில் 90 சதவீதமானோர் இரகசியமாகவே உரிமை கோராது படுகொலை செயப்பட்டனர். இதன் மூலம் தமது சொந்தத் தவறுகள், வெளியில் தெரிவதை மூடிமறைத்தனர். உரிமை கோராத கொலைகள், இரகசிய கடத்தல்கள், நீதி விசாரணையற்ற சித்திரவதைகள், தண்டனைகள் எல்லாம், தவறுகளை மூடிமறைக்க செய்யும் பாசிச வடிவங்களே. மக்களின் விமர்சனச் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் அழித்து விடுவதே, தமது சொந்த தவறுகளை நியாயப்படுத்தவே ஒழிய தவறுகளை திருத்த அல்ல. தவறுகள் என்று சில விதிவிலக்கான சம்பவங்கள் மீதான தண்டனை, இயக்க பாசிசக் கட்டுப்பாட்டை மீறிய போது வழங்கப்பட்டவை தான். சொந்த பாசிச இயக்க கட்டுப்பாட்டை மீறிய போது தண்டனை என்பது, தமது சொந்த நலன் சார்ந்த, தனிமனித சர்வாதிகார தலைமையைப் பாதுகாக்க செய்யப்பட்டவை தான். ஆனால் அவை எப்போதும் தவறுகளாக இருந்ததில்லை. மக்களுக்கு எதிராக தவறு இழைத்தமைக்காக சுயவிமர்சனமோ, தண்டனையோ, புலிகளின் பாசிச வரலாற்றில் கிடையாது. அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டன. அதை பாசிசமாக்கி புதிய அடக்குமுறைகள், புலிகளின் தண்டனைகள் தான் புலிகளின் அரசியல் அகராதியாகியது.

தண்டனை பற்றிய வரையறை, மக்களுடன் என்ன உறவை இயக்கம் கொண்டுள்ளது என்பதுடன் தொடர்புடையது. மக்களின் உழைப்பில் இருந்து அன்னியமான புலிகள், மக்களை சுரண்டி கொழுப்பேற்றுபவர்கள். மக்களை ஒரு இழிவான பிறவியாக கொத்தடிமையாக நடத்தும் புலிகள், அவர்களைச் சுரண்டி கொழுக்கும் புலிகள், துப்பாக்கி முனையில் அனைத்தையும் அடிமைப்படுத்தும் புலிகளின் தண்டனை என்பது, தமது பாசிச கட்டமைப்பை மீறுவதற்கு எதிராகவே எப்போதும் இருந்தது. பாசிச கட்டமைப்பில் ஏற்படும் சிதைவுகளை தற்காக்கவே, அதை மீறுவது குற்றமாக்கப்பட்டது. இயக்கத்தினுள், இயக்கத்துக்கு வெளியில் இதுவே ஒரேயொரு அரசியல் மொழியாக இருந்தது.

குறிப்பு : லெப்டினன் கேணல் அருணாவை தனியறையில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறினார். நான் ஈ.பி.ஆர்.எல்.எப் யைச் சேர்ந்த 54 பேரை சுட்டதற்கா என கேட்க, ஆம் என்றார்.

விளக்கம் : கிட்டு மேலான குண்டுவீச்சை அடுத்து லெப்ரினன் கேர்ணல் அருணா, கைதிகள் மேலான ஈவிரக்கமற்ற படுகொலையை நடத்தினான். வெலிக்கடை சிறைப் படுகொலை போன்று இதுவும் நடந்தேறியது. யார் இந்த லெப்ரினன் கேணல் அருணா?

மட்டக்களப்பு மாவட்ட புலியின் தளபதி. இவர் இராணுவ மோதல் ஒன்றில் இறந்து விட்டதாக கருதிய புலிகள், இவருக்கு லெப்.கேர்ணல் பதவி வழங்கி வீர அஞ்சலி செலுத்தினர். ஆனால் அருணாவை இராணுவம் கைது செய்திருந்தது. இவர் சிறையில் இருந்தார். 1987 இல் உயிருடன் பிடித்த இராணுவ வீரர்களை கைமாற்றிய நிகழ்வின் போது, அருணா மற்றும் பின்னால் சுவிஸ்சுக்கு புலிப் பொறுப்பாக இருந்து துரோகியாக அறிவிக்கபட்ட முரளியையும் கைதிப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

முரளியின் சுவிஸ் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முன், பாரிசில் நாதன், கஜன் இருவரினதும் படுகொலைகளை நடத்தினார்கள் புலிகள். வெளிநாட்டு புலித் தலைவர்களின் தன்னிச்சையான செயல்களையும், வன்னியில் ஏற்பட்ட உள் அதிகார பிளவுகளின் பின்னணியில் இது நடந்தேறியது. பாரிசில் நாதன், கஜன் என்ற இருவரினதும் படுகொலை மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். முரளியை பெரும் தொகை பணத்துடன் சுவிஸ் பொலிசார் கைது செய்தனர். சிறை சென்றவரை வீரனாக்கி பெரும் புகழை சூட்டி புலி பிரச்சாரம் செய்த போதும், தளத்தில் இருந்த புலிகள் இவரை இயக்கத்தில் இருந்தே வெளியேற்றினர். அப்போது வைத்த குற்றச்சாட்டு, அவர் பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்ற அவதூறே. இப்படி எல்லாம் சோடித்து கதை சொல்லி அனைத்து நாட்டு புலித் தலைமையும் மாற்றத்துக்குள்ளாக்க முன்பு, நாதன் மற்றும் கஜன் கொலை மூலம் தான் அவர்களை மிரட்ட வேண்டியிருந்தது.

அருணா நடத்திய இந்தப் பாசிச படுகொலை, வெலிக்கடை படுகொலை நிகழ்ச்சியின் கொடூரத்துக்கும் பயங்கரத்துக்கும்  ஈடானதான மக்கள் முன் அம்பலமானது. புலிகளின் பாசிச படுகொலை அரசியல் அம்பலமாவதை தடுக்க, அருணாவை விசாரணையின் பெயரில் கைதாக்கினர். அத்துடன் புலியின் தலைமைக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும், முன்பு சயனைட் குடித்து இறக்காமல் இராணுவத்திடம் பிடிபட்டமைக்காகவும், அவர் சமூகத்தில் இருந்து இல்லாதாக்கப்பட்டார். இந்த கொலைக்காக புலிகள் சுய விமர்சனமோ, மக்களிடம் மன்னிப்பையோ கோரவில்லை. மாறாக நியாயப்படுத்தவே செய்தனர். இப்படி அந்த படுகொலையை நியாயப்படுத்தும் இவர்கள், அருணனுக்கு தண்டனை என்பது கேலிக்குரியதாகும். மாறாக பிரபா, கிட்டு, மாத்தையா என்ற மூன்று வெவ்வேறு தலைமைகளுக்கிடையில், அருணனின் சார்பு நிலையை கருத்தில் கொண்டே, அன்று அதிகாரத்துக்கு வந்திருந்த மாத்தையா, பழிவாங்கியதே தண்டனை என்ற பெயரில் செய்த பித்தலாட்டம்.

 

44.கிட்டுவை படுகொலை செய்ய முயன்றவர்கள், அதை நான் செய்ததாக கூறினர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 44)

43.புதியபாதை குமணன், ராகவன் பற்றி இரண்டாவது வதையின் இறுதியில் மாத்தையா - (வதைமுகாமில் நான் : பாகம் - 43)

42.எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)

41.ஊளையிட்டு கூச்சல் போடுவதற்கு அப்பால், இயற்கையான இயக்கத்தை நிறுத்த முடியாது - (வதைமுகாமில் நான் : பாகம் - 41)

40.அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40)

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)


32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)


31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)


30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)


29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)


28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)


27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)


26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)


25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)


24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)

Last Updated on Thursday, 23 February 2012 13:57