Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

போர் வேண்டும்……

  • PDF

இரத்தக்களரியில்
அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்
ஈழப் போர் எழுமென முரசறைகின்றன
காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு
ஈழமண் எரிய எரிய
தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்
நாற்பதாயிரம்
இளையதலைமுறையை கருக்கிப்போட்டது

 

கையறு நிலையில்
கடல் நீர் ஏரியில்
குண்டு பட்டுச் சிதைந்து
மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண
நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து
கோமகன்கள் தடாகத்தில்
எங்கள் குருதிதிதான்
ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக

எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள்
ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க
காசியண்ணைக்குப் போர் வேண்டும்
ஏய்த்துப் பிழைத்த அரசியல்
கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப்
காசியண்ணைக்குப் போர் வேண்டும்
ஆம் போரிடுவர்
எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும்
உரிமைக்காய் போர் வேண்டும்
உழைப்பவன் ஆட்சிக்காய்
ஒருமித்தெழுகின்ற போர் வேண்டும்
வீதியெங்கும் செம்பதாகை
ஏந்தி அணிவகுக்கும் போர்வேண்டும்

வீணருக்கு இரத்தப் பொட்டிட்டே
போரெழுந்து
தமிழர் புதைகுழியானது வன்னிநிலம்
யாரெழுந்தும்–நீ
போரிடென்றால் இனி நம்பார்
தாம் எழுந்தே அணிவகுப்பர் பார்……

கங்கா
15/11/2011

 

Last Updated on Wednesday, 18 January 2012 10:28