Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

கொக்கிளாயில் குடியேறவரும் உறவே…

  • PDF

உங்களைப் போல் ஓர் ஏழை

உழைத்து வாழ்ந்த மண் இது

சின்னஞ்சிறுசுகள் பாதத்து மிதிப்பில்

சொந்தமண் சிரித்து எத்தனை தசாப்தங்கள்

 

 

 

 

இன்னம் எங்களை

அன்னியமாக்குவதிலும் பகையாய் நோக்குதலுக்கும்

பேரினவாதம் வெற்றிகொள்கிறது.

விளைநிலங்கள் அடுக்குமாடியாகவும்

வயிற்றுக் கஞ்சிக்காய் உழுதநிலம்

அன்னிய நிறுவனங்கள் கொள்ளைக்குமாய்

எந்த மக்களிடமாவது ஒரு வார்த்தை பேசியதாயில்லை

கொக்கிளாயில் மட்டும்

உங்களை குடியேறென கொண்டுபோவதில்

ராஜபக்ச அரசுக்கு

அப்படியென்ன அக்கறை உறவுகளே.

ஏழ்மைக்கெதிராய் கொதித்தெளாதிருப்பதற்காய்

மசூதிகள் இடித்து காண்பிக்கப்படுகிறது

புத்தரின் சிலையை நிறுவ நிறுவ

ஏகப்பெரும்பான்மை உறுதி செய்யப்படுகிறதாம்

ஓற்றுமை பேசியபடியே தான்

பிரித்து ஆளுதல் நாசுக்காய் அரங்கேறுகிறது.

யுத்தம் காவுகொண்டது

எந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகளுமில்லை

வல்லாதிக்கப்போட்டிக்கும்

ராஜபக்ச குடும்ப இருப்புக்குமாய்த்தான்

பலியெடுப்பு நடந்திருக்கிறது

மிருகபலிக்காய் உருகுகின்ற பௌத்தபீடாதிபதிகளும்

பாராளுமன்ற பேட்டைரவுடிகளும்

மனித அவலத்தின் போது

மௌனமாகி இருந்தது விசித்திரமில்லை.

இனியொரு எழுச்சி

இலங்கை மக்கள் ஒருமித்தெழுதல்

நிகழுமென்பது

அடக்குமுறையாளர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது

இனத்தை காப்பதாய்

பிரித்து ஆளுதல் மேலும் வீரியம் கொள்கிறது

கொக்கிளாயில் குடியேறவரும் உறவுகளே

எம் கரங்களை இறுகப்பற்றுவோம்.

கங்கா

23/09/2011

Last Updated on Saturday, 01 September 2012 07:02

சமூகவியலாளர்கள்

< October 2011 >
Mo Tu We Th Fr Sa Su
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29
31            

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை