Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

  • PDF

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நாமக்கல் மாவட்டக் கிளைத் தலைவரான தோழர் சின்னசாமி, கடந்த நவம்பர் 2ஆம் நாள் மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 66 வயதான தோழர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கிளையைத் தொடங்க முன்முயற்சியுடன் செயல்பட்டதோடு, கிளையைக் கட்டியமைத்து அதன் தலைமைப் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களில் ஊக்கமுடன் பங்கேற்றார்.

 

மார்க்சிய லெனினிய வழியில் நின்று புரட்சியைச் சாதிப்பதுதான் மனித குலத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கும் என்பதை உணர்ந்து தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து பாடுபட்டார். முதுமையிலும் துடிப்புடன் செயல்பட்ட அவரது போர்க்குணத்தையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சிலேந்தி, அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட உறுதியேற்போம்! மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நாமக்கல். ……