Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தேசம்நெற்றும் கற்றன் நாஷனல் வங்கியும்

தேசம்நெற்றும் கற்றன் நாஷனல் வங்கியும்

  • PDF

தேசம் நெற் மொழி நாகரீகம் பேசிக் கொண்டு, அதை அவதூறு வடிவில் காவி வருகின்றது. இதற்கு ஆதாரம் எதையும் அவர்கள் வைத்தனரா? இல்லை. வைக்கமுடியாத ஒன்றை, எப்படித் தான் எங்கிருந்து தான் வைக்க முடியும்? ஆகவே தான் அவர்கள்,

 அவதூறு வடிவில் காவி வருவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன், இதில் ஈடுபட்டு இருந்ததை நாவலனின் கூற்று காட்டுகின்றது. நாவலன் தனது குறிப்பில் 'என்னுடைய கணிப்புப்படி ரயாகரனிடம் இந்தப் பணம் இருப்பதாகத் தெரியவில்லை என்ற விடையத்தை 6 மாதங்களுக்கு முன்னரே தேசம் ஆசிரியருடனான தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்திருந்தேன். இது தேசம்நெட் வெளியாவதற்கு 5 மாதங்களுக்கு முற்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரங்களற்ற அரசியல் குற்றச்சாட்டுக்களையும், தனிமனிதக் குற்றச்சாட்டுக்களையும் கூட பீபீஸி போன்ற முதலாளித்துவ ஊடகங்களே புறக்கணிக்கின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" தேசம் நெற் ஆசிரியர் ஏன் இந்த தகவலை தேடித்திரிந்தார். எந்த அரசியல் அக்கறையுடன் தேடினார்? எந்த அரசியலைப் பாதுகாக்க? இதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல் நேர்மைக்கு பதில், இதில் உள்நோக்கம் இருந்துள்ளது தெளிவு.

 

நாவலன் கூறுவது போல் இதை நாம் கருதவில்லை. 'பல தடவைகள் பலர் ரயாகரனின் கற்றன் நாஷனல் பாங் கொள்ளை பற்றி அவர் எழுதுகின்ற போது மட்டும் குற்றம் சாட்டி மொட்டைக்கடிதம் வரைகின்றனர்" என்கின்றார். நாம் இதை மொட்டைக் கடிதமாக கருதவில்லை. மாறாக அரசியல் ரீதியாக இழிந்து போனவர்களின் கடைசி ஆயுதம். இப்படித்தான் இனி அவர்கள் எம்மை எதிர்கொள்ள முடியும் என்ற அரசியல் பரிதாபம்.

 

எமது கருத்தை எதிர்கொள்ள யாருக்கும் திராணி கிடையாது. ஆகவே என் வாழ்வை புகுந்து தேடுகின்றனர். இதுவே அவர்களின் அரசியலாகிவிட்டது. எப்படிப்பட்ட அவதூறு பேர்வழிகள் என்பதற்கு, அவர்கள் குசுவிட்ட பதிவொன்றைப் பாருங்கள். மனோவின் அச்சகத்தில் நான் வேலை செய்கின்றேனாம. மனோவுக்கு எதிரான அவதூறு. வேடிக்கை என்னவென்றால் தேசம் நெற் ஆசரியர் சேனன் எமது அச்சகத்தில் வேலை செய்தவர் என்பது தான். அவருக்கு நன்கு தெரியும், இவ்வச்சகம் மனோவினுடையதல்ல என்பது. ஆனால் அந்த அவதூறை குசுவி விடுகின்றார். எனக்கு எதிராக அவதூறு பொழிவது என்பது, அவர்களின் இணைய கொள்கையாகிவிட்டது. முன்பு நெருப்பு டொட் கொம் கூட, கருணாவுக்காக குலைத்த போது இந்த அச்சகத்தை, புலிகளின் அச்சகம் என்றது. இதைப் பாருங்கள். என்ன ஒற்றுமை என்பதை.

 

அண்ணை கோவியாதைங்கோ! அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ! அண்ணை!

 

என்னை அவதூறாக தாக்குவது தான் தேசம்நெற்றின் அரசியல் நோக்கம் என்பது தெரிந்தவுடன், நாங்கள் பின்வாங்கினோம். சமூகத்தைப் பற்றி எழுத வேறு விடையங்கள் எம்முன் உண்டு. எலும்பைக் கவ்விக்கொண்டு குலைக்கிற நாய்களுக்கு, நாம் கல் எறிய விரும்பவில்லை. ஒதுங்கிப்போவோம் என்றால் துரத்தி கடிக்கிறது. இதை துரத்தி விட்டு எம்வழியில் செல்ல வேண்டிய நிலை.

 

சேனன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்கள் தளத்தில் வாங்க கடிபடுவோம் என்றார். நீங்கள் கூப்பிட்டு வைத்து எம்மீது காறித் துப்புவதை விட, நீங்கள் தனியாக துப்புங்கள் என்றேன். அது தான் அங்கு நடக்கின்றது. இதை மூடிமறைக்க எனது பதிவுகளை நான் அனுப்பியதாக கூறி பின், காறித் துப்புகின்றனர். இப்படி எனக்கு எதிராக அவதூறுக்கு என்று ஒருதளம்.

 

நாளை ஒரு பெண் அல்லது பெண்ணின் பெயரில் ஒரு ஆண் றயாகரன் என்னைக் கற்பழித்தவர் அல்லது என்னை ஏமாற்றியவர் என்று எழுதி அவதூறு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவைதான் தேசத்துக் தேவையாக உள்ளது. வேறு எப்படித் தான் அவர்கள் அரசியல் செய்யமுடியும்.

 

19.11.2008

Last Updated on Sunday, 20 April 2008 10:07