Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் யூகோஸ்லாவியா பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 04)

யூகோஸ்லாவியா பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 04)

  • PDF

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப் பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக இது சிதைக்கப்பட்டது. அதற்கு முன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க கட்சி என்பது மறுக்கப்பட்டது.

"பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகி விட்டது" என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டம் அமுல்படுத்தினர். மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க மூகமுடியை ஒளித்து வைத்தனர்.

1950 இல் "அரசுக்கு சொந்தமான எல்லாத் தொழிற்;சாலைகளையும், சுரங்கங்களையும் தகவல்துறை, போக்குவரத்து, காடுகள், வேளாண்மை பொதுஜன பயன் சார்ந்த அனைத்தையும் "தொழிலாளர் சுயநிர்வாகத்திடம்| கொடுத்தது. (இந்த அரசியல் உள்ளடக்கம் டிராட்ஸ்கி 1920 களில் லெனினுக்கு எதிராக கோஸ்டி அமைத்து பிளவு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வைக்கப்பட்டதாகும்.) இதன் மூலம் தனியார் உற்பத்தி, தரகு முதலாளித்துவமாக மாறியது. "தொழிலாளர் கூட்டுக்கள்| என்ற பெயரில் சுயேட்சையாக இயங்கவும், வாங்கவும் விற்கவும், விலையை சொந்தமாக தீர்மானிக்கவும், கூலியை தீர்மானிக்கவும் லாபத்தை பகிரவும் அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தியது. இதை "உயர் வடிவிலான சோசலிச உடமை| என்றனர்." பாட்டாளி வர்க்க புரட்சியில் உற்பத்தியை அரசுடமையாக்குவதை இது மறுக்கின்றது. அதாவது உற்பத்தியை சமூகத்தின் சொத்தாக பேணுவதை அழித்து ஒழித்து, முதலாளித்துவ மீட்சிக்கான பாதையை செப்பனிட்டனர். டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ்"பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை அரசுடமையாக மாற்றுகிறது" என்பதை டிட்டோ அப்பட்டமாக மறுத்தான். இதன் மூலம் இதை வலியுறுத்திய சர்வதேச கம்ய+னிச நிலைப்பாட்டை ஒட்டிய ஸ்ராலின் நிலைப்பாட்டை மறுத்தான். இதையே டிராட்ஸ்கியம்"ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடி சூடிவிட விரும்பவில்லை" என்று கூறி நியாயப்படுத்தினர். சோவியத்யூனியனில் ஆலைகளை உற்பத்தியாளர்களிடம் ஒப்படைத்து "உற்பத்தியை ஒழுங்கமைக்க" கோரிய போது, லெனின் கடுமையாக விமர்சனம் செய்தார். அராஜகவாதத்தின் அடிப்படைக் கோட்பாடான இது, முதலாளித்துவ மீட்சிக்கு இது ஒரு வழிப்பாதையாகும்;. லெனின் இது தொடர்பாக விமர்சிக்கும் போது"நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனித்தனி தொழிற்சாலைகள் அல்லது தனித்தனித் தொழில் முறைகளைச் சொந்த தொழிலாளர்கள் தமது உற்பத்தியைத் தமக்கே உடைமையாக்கிக் கொள்வதையும் அரசதிகாரத்தின் ஆணைகளைப் பலவீனப்படுத்தவும், அல்லது தடைப்படுத்தும் உரிமையையும் சட்டபூர்வமாக்குவதும் சோவியத் அதிகாரத்தின் ஆதாரக் கோட்பாடுகளைப் படுமோசமாகத் திரிப்பதும், சோசலிசத்தை அடியோடு கைகழுவி விடுவதுமாகும்" என்றார். ஸ்ராலினை மறுத்ததன் உள்ளடக்கம் இங்கு தான், இப்படித்தான் முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. ஸ்ராலினை மறுத்து அவதூற்றைப் பொழிந்தது என்பது, முதலாளித்துவ மீட்சியை நடைமுறை ரீதியாக இலகுபடுத்தவே. ஸ்ராலின் உயர்த்திப் பிடித்த லெனினிய கோட்பாட்டை மறுக்க, ஸ்ராலினை அவதூறு செய்ய வேண்டியிருந்தது.

"இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து யூகோஸ்லாவியாவில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, உழைப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டது. ஆனால் பணக்கார விவசாய பொருளாதாரத்தின் மேல் கைவைக்கவில்லை"  ஸ்ராலினினும் சர்வதேச கம்யூனிச இயக்கமும் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட்டுகளும் மார்க்சிய நிலையை அமுல்படுத்தக் கோரினர். பணக்கார விவசாயிகளின் நிலத்தை கூட்டுடமையாக்க கோரினர். ஆனால் டிட்டோ கும்பல் இதை மறுத்து முதலாளித்துவ மீட்சியை முன்னெடுத்த போதே, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலையை மறுத்து அவதூறு புரிய வேண்டியிருந்தது. இப்படி அவதூறு செய்தபடி 1950 இல் யூகோஸ்லாவியா அந்நிய வர்த்தகம் மீதான அரசின் ஏகபோகத்தைக் கைவிட்டதுடன், அதை தனியாருக்கு தாரை வார்த்தனர். 1953 இல் டிட்டோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில்" "குடிமக்கள் குழுக்களுக்கு| "தொழில் நிறுவனங்களை நிறுவவும்| "உழைப்பாளரைக் கூலிக்கமர்த்தவும்| உரிமையுண்டு. ... அரசுப் பொருளாதார நிறுவனங்களிடமிருந்து அசையாச் சொத்துகளை வாங்கிவிட தனியாருக்கு உரிமையுண்டு." என்று பிரகடனம் செய்தான். "1951 இல் விவசாயக் கூட்டுடமையை கைவிடுவதாக அறிவித்ததுடன், விவசாயிகளின் கூட்டுடமையை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்து, அதை கலைக்கத் தொடங்கியது. 1950 இல் இருந்த 6900 க்கும் அதிகமாக இருந்த கூட்டுறவு அமைப்புகள், 1953 இல் 1200 ஆக சற்று அதிகமாக குறைந்தது. இது 1960 இல் 147 ஆகிப் போனது. முற்றாகவே அவை தனியார் மயமாகியது." கூட்டுடமை கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி அரங்கேறிய போது ஸ்ராலின் மீதான தூற்றல் உயர்ந்த மட்டத்துக்கு தாவியது. இந்த மீட்சியை சோசலிசத்தின் முன்னேற்றம் என்றனர். டிராட்ஸ்கிகள் ஸ்ராலினிடம் இருந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை களைந்த, ஜனநாயக பூர்வமான சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம் என்று வருணித்தனர். இவருடன் குருச்சேவ் இணைந்ததுடன், முதலாளித்துவ மீட்சியை சோவியத் யூனியனிலும் தொடங்கினர்.

டிட்டோ, குருச்சேவ், டிராட்ஸ்கிய கும்பலும் இணைந்து நடத்திய கச்சேரியில், ஸ்ராலினின் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை ஒழித்துக் கட்டி முதலாளித்துவ மீட்சியால் மறுத்து, தம் நடவடிக்கைகளை மூவரும் சோசலிசமாக காட்டினர். முதலாளித்துவ மீட்சி அல்ல இது என்பதை கோட்பாட்டு ரீதியாக மறுத்தனர். இவர்கள் மறுக்கும் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து 1955 இல் டிட்டோ கூறும் போது"யூகோஸ்லாவியாவில் சிறு பண்ணைகள் எதேனுமொரு விதத்தில் ஒன்றிணையும் நாள் வரும் என்ற எண்ணத்தை நாம் கைவிட்டு விடவில்லை. அமெரிக்காவில் இதை ஏற்கனவே செய்துவிட்டனர். நாம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும்" இப்படி அமெரிக்க தனியார் மூலதனக் குவிப்பையே கூட்டுடமையாக்கல் எனப் பிரகடனம் செய்தான். ஏழை விவசாயிகளின் நிலத்தை சூறையாடிக் குவித்ததையே, சோசலிச கூட்டுடமையாக்கல் என டிட்டோ அறிவித்தான். இக் காலத்தில் தான் குருச்சேவ் டிட்டோவை ஆதரித்து சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை தொடங்கி வைத்தான். டிராட்ஸ்கிகள் இதற்கு ஆரத்;தி எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

யூகோஸ்லாவியாவில் முதலாளித்துவ மீட்சியை அமெரிக்கா வகை கூட்டுடமையாக்கல் என்று கூறி, டிட்டோ அதை அப்பட்டமாக அமுலுக்கு கொண்டு வந்தான். இதை டிட்டோ கொள்கைரீதியாக விளக்கும் போது" "கூட்டுடமையாக்கமும் உடமைப்பறிப்பும் ஒன்றே| என்று பிரகடனம் செய்து "இது கிராமப்புற பண்ணையடிமை முறையை பாதுகாத்து வறுமையை நீடிக்க வைக்கின்றது| என்று பிரகடனம் செய்ததுடன் "பொருளாதார சக்திக்கிடையில் தடையில்லாத போட்டி| வறுமையை ஒழிக்கும் என்று பிரகடனம் செய்தான்." முதலாளித்துவம் வறுமையை ஒழிக்கும் என்றான். இதை குருச்சேவ், டிராட்ஸ்கிய கும்பல் ஆதரித்து நின்றனர். ஸ்ராலினிய பாட்டாளிவர்க்க சர்வாதிகார அதிகாரத்தை ஒழிப்பதன் மூலம் இதை நிறுவ முடியும் என்று ஒரே விதமாக கச்சேரி வைத்தனர். இதன் அடிப்படையில் 1953 இல் உருவாக்கிய அரசு ஆணையில்"நிலம் வாங்கவும், நிலம் விற்கவும், கூலிக்கு ஆட்களை அமர்த்தவும், உற்பத்தியின் கொள்முதலை தனியாரிடம் வழங்கவும், குத்தகைக்கு நிலத்தை விடவும்" அனுமதிக்கும் வகையில் சட்டத்தையே திருத்தினர். நிலம் அமெரிக்கா வகை நிலக் குவிப்புக்கு இசைவாக சட்டம் தன்னை தகவமைத்துக் கொண்டது. தடையில்லாத வகையில் சொத்துக் குவிப்புக்கு, ஸ்ராலின் களப்பலியானார். இதன் மூலம் யூகோஸ்லாவியாவில் பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துச் சென்றது. இதை விவசாயத் துறைக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியே 1959 இல் ஒப்புக் கொண்டார். அவர் தனது அறிக்கையில்"மொத்த தனியார் விவசாயிகளில் 5 ஹெக்டேருக்கு குறைந்தவர்கள் 70 சதவீதமாக இருந்த போது, அவர்களிடம் மொத்த விவசாய நிலத்தில் 43 சதவீதமே சொந்தமாக இருந்தது. 10 ஹெக்டேருக்கு அதிகமாக வைத்திருந்த பணக்கார விவசாயிகள் 13 சதவீதமாகும். ஆனால் இவர்கள் 33 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர். 10 சதவீதமான விவசாய குடும்பங்கள் நிலத்தை ஆண்டு தோறும் விற்கின்றனர் அல்லது வாங்குகின்றனர்." அமெரிக்கா வகை சோசலிச கூட்டுடமையாக்கல் இப்படி விரைவுபட்டது. 1958 யூகோஸ்லாவிய போலிக் கம்ய+னிச இதழ் ஒன்றில் வெளியான தகவல் ஒன்றில்"எட்டு ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் வைத்திருந்த குடும்பங்கள், 50 சதவீதமான விவசாய குடும்பங்களை 1956 இல் கூலிக்கு அமர்த்தியதை" வெளியிட்டு, அமெரிக்கா வகை கூட்டுடமையாக்கல் விரைவுபடுவதை ஏற்றுக் கொண்டது. 1962 இல்"இரண்டு ஹெக்டேருக்கு குறைவான விவசாயக் குடும்பங்களின் வருமானத்தில் 70 சதவீதம் சொந்த உழைப்பை பணக்கார விவசாயிகளுக்கு விற்று கிடைக்கும்" வருமானத்தில் தான், தம் வாழ்க்கையை ஒட்டினர். அமெரிக்கா வகை கூட்டுடமையாக்கல் மேலும் விரைவுபடுத்தியதை இது நிறுவியது. 1963 இல் யூகோஸ்லாவியாவில்"நில உச்சவரம்பு 10 ஹெக்டேராக இருந்த போதும், அதைவிட அதிகமான நிலத்தை சொந்தமாக கொண்ட 1000 மேற்பட்ட பணக்கார விவசாயிகள் இருந்ததுடன், 30 ஹெட்டருக்கு அதிகமாக நிலத்தை கொண்டு இருந்தனர்" அரசு புள்ளிவிபரங்களே இப்படி இருந்த போது இதை சோசலிசம் என்றனர். இதை குருச்சேவ்வும், டிராட்ஸ்கிகளும் வானளாவ புகழ்ந்து அங்கீகரித்தனர்.

முதலாளித்துவ மீட்சி நிலத்துக்கு வெளியில் பல்துறைகளில் பல்கிப் பெருகியது. 1953 உருவாகிய சட்டம் ஒன்று அன்னிய ஏகபோக நிறுவனத்துடன் தொழில் நிறுவனங்கள் உடன்பாடுகளை செய்ய வசதியளித்தது. 1956 இல்"உள்ளாட்சி அமைப்புகள் வரிகளை வசூலித்து தனியார் முதலீட்டை உருவாக்க ஊக்குவித்தது." யூகோஸ்லாவியாவின்; முதலீட்டு வங்கி தனது அறிக்கை ஒன்றில் 1952க்கும் 1956க்கும் இடையில் மொத்த மூதலீட்டில் 32.5 சதவீதம் வெளிநாட்டு பணம் என்பதை தெரிவித்தது. அமெரிக்கா வெளிநாட்டு அமைச்சர் தீன் ரஸ்க், யூகோஸ்லாவியா மூலதனம்"பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகளில் இருந்து தான்" கிடைக்கிறது என்றார். ஸ்ராலின் ஏன் தூற்றப்பட்டார் என்பதும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை ஏன் வெறுக்கின்றனர் என்பதையும் எதார்த்த உள்நாட்டு கொள்கை நிர்வாணமாக்கிவிடுகின்றது. ஆனால் டிராட்ஸ்கிகள்"ஸ்டாலினிச அதிகாரம் ஜார் ஆட்சியிலிருந்து சீதனமாய் பெறப்பட்ட பின்தங்கிய பொருளாதாரநிலை, அதிகார இயந்திரம், சர்வாதிகார கருத்தியல் தொடர்ச்சி இவைகளில் இருந்து தொடங்கியது" என்கின்றனர். ஸ்ராலினை இப்படித்தான் தூற்றினர். தூற்றியபடி தான் டிட்டோ நாட்டை ஏகாதிபத்திய மூலதனத்துக்கு விற்றான். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, அதன் அதிகாரத்தை ஜார் ஆட்சியின் சீதனம் என்றனர். பின்தங்கிய பொருளாதாரத்தைச் சார்ந்து ஸ்ராலின் அதிகாரம் நிலவியதாக கூறி நவீன உற்பத்திக்கும் அதன் வகை ஆட்சி அமைப்புக்கும் கதவை திறக்கக் கோரினர். டிராட்ஸ்கிகள்"புரட்சியை சூழவுள்ள நிலைமைகளை எதிரிடும் தத்துவப் பலமும் மனிதக் குணங்களும் ஸ்டாலினிடம் இருக்கவில்லை என்பதோடு புரட்சியை உருக்குலைக்கும் நடைமுறைகளும் தொடர்ந்து வளர்ந்தன." என்று கூறினர். நாட்டையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் சூழவுள்ள நிலைமைக்கு இசைவாக மாற்ற வேண்டும் என்;றனர். இதைச் செய்த குருச்சேவ், டிட்டோ கும்பலின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து அதை ஆதரிக்கும் இவர்கள், பாட்டாளி வர்க்கத்தின் எதிரியாக தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர். இதை உருவாக்கும் தத்துவப் பலத்தை ஸ்ராலின் கொண்டிருக்கவில்லை என்பதே, டிராட்ஸ்க்;சியத்தின் பலமான குற்றச்சாட்டு. இதை மூர்க்கமாக எதிர்த்த ஸ்ராலின் குணத்தை"மனித குணம்" அற்ற செயலாக டிராட்ஸ்கியம் வருணிக்கின்றது. குருச்சேவ், டிட்டோ வகைப்பட்ட"மனித குண"  முதலாளித்துவ ஜனநாயகத்தைப் போற்றி, இதற்கு எதிரான ஸ்ராலின் நிலையை"உருக்குலைக்கும் நடைமுறை" என்று அவதூறை பொழிந்தனர். தொடர்ச்சியாக டிராட்ஸ்கியம் தன்னைத் தான் அம்பலப்படுத்திய போது, தமது முந்திய நிலைக்கு சாயம் அடிப்பது அவசியமாகியது.

"ஸ்டாலினிசத்துடன் ஏற்பட்ட மோதல் டிட்டோவை பிற்காலத்தில் சோவியத் அணியும் அல்லாத முதலாளிய அணியும் அல்லாத அணிசேரா நாடுகளின் அணி என்ற கருத்துக்கு துரத்தி விட்டது. டிட்டோவின் சோசலிசப் போக்கை ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு எதிரான சோசலிசப் பிரயத்தனமாயே காணவேண்டும்" என்றனர்.

இப்படித் தான் டிராட்ஸ்கிய கோட்பாடுகள் அலை பாய்ந்தன. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத வர்க்கமற்ற நிலைக்கு பிற்காலத்தில் யூகோஸ்லாவியா சென்றதாக டிராட்ஸ்கியம் பிதற்றுகின்றது. மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுக்கின்றது. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத சமுதாயம் கம்யூனிச சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம். அப்படியானல் யூகோஸ்லாவிய கம்ய+னிச சமூகமாக மாறிவிட்டதா!? இதை டிராட்ஸ்கிய கோட்பாட்டின் உள்ளடகத்துக்கு விட்டுவிடுவோம்;. ஆனால் டிராட்ஸ்;கியம் ஸ்ராலினுக்கு எதிரான டிட்டோவின் முதலாளித்துவ மீட்சியை"சோசலிசப் பிரயத்தனமாயே காண வேண்டும்" என்று கூறத் தவறவில்லை. அதேநேரம் ஒன்றுக்கு ஒன்று முரணாக இதை சோசலிச நாடு என்று சொன்னதை மேலே பார்த்தோம். பாட்டாளிவர்க்க"ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு" எதிரான சோசலிச முயற்சியாக இதை டிராட்ஸ்கிய கோட்பாடுகள் வரையறுத்தன. நான்காம் அகிலம் தன் விபச்சாரத்தை மூடிமறைக்க பிற்காலத்தில் நடந்தது என்று பூச்சூட்டி விடுகின்றனர். குருச்சேவ்வின்; ஆட்சி இருந்த காலத்தை டிராட்ஸ்கியம்"தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகள்" என்றே கூறுகின்றனர். மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறுக்கும் இவர்கள், அதன் மேல் தமது பொம்மை ஆட்சியை நிறுவவே விரும்பினர். முதலாளித்துவ மீட்சியை விரைவுபடுத்தவே விரும்பினர். இதனால் அதை தொழிலாளர் அரசு நடக்கும் ஆட்சி என்கின்றனரே ஒழிய, பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி இவர்கள் பேசுவதில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், வர்க்கப்போராட்டம் பற்றி விரிவான எல்லைக்குள் எதையும் மூச்சுவிடுவதில்லை.

குருச்சேவ்வுக்கு சாமரை வீசியபடி, டிட்டோவின் முயற்சியை சோசலிச முனைப்பாகவும் முதலாளித்துவமற்ற போக்காகவும் காட்டியபடி டிராட்ஸ்கிய கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன. அதை மெய்ப்;பிக்கும் வகையில் டிட்டோ அரசு செயல்பட்டது. தொழிலாளர் அரசாக, தொழிலாளார் மேற்பார்வையில் தனியார்மயமாக்கிய நிறுவனங்களில் நிலைமையை ஒட்டி 1958 களில் எழுதிய உள்சுற்று கடிதம் ஒன்றில்"சுயநிர்வாக தொழில்துறையில் தொழிலாளருக்கும் உயர் அதிகாரிக்கும் இடையில் சம்பள விகிதம் 40 மடங்கு அதிகமாக இருப்பதையும், சில தொழில் நிறுவனத் தலைவர்களின் போனஸ் உற்பத்தி மையத்தில் மொத்த தொழிலாளர்கள் பெறும் மொத்த கூலிக்கு சமமாக கூட இருந்தது." சோசலிச முனைப்பாக முதலாளித்துவம் அல்லாத தொழிலாளர் அரசு என்று கூறியபடி, முதலாளித்துவ மீட்சியை கண்டு கொள்வதை காணவிடாது ஸ்ராலின் அவதூறுகளால் தங்கள் கண்ணையே தோண்டியெடுத்தனர்.

ஆனால் முதலாளித்துவ மீட்சி நாலுகால் பாய்ச்சலில் முன்னெடுக்கப்பட்டது. 1961 இல்"அந்நியச் செலாவணியை வாங்கிட தனியாருக்கு உரிமையுண்டு" என்று டிட்டோ அறிவித்தான்."1963 இல் தனியார் மூலதனத்தை வளர்க்கும் கொள்கை" ஊக்குவிக்கப்பட்டது. 1963 இல் "யூகோஸ்லாவியாவில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்ட தனியார் மூலதனங்கள் காணப்பட்டது. இது தொடர்ந்து பெருகிச் சென்றது. இது சட்டப்படி 5 பேரை கூலிக்கு அமர்த்த அனுமதித்த போதும், 10 மடங்கு முதல் 500 மேற்பட்டவரைக் கூட தனியார் உற்பத்தி கொண்டு இருந்தது. அத்துடன் சில தனியார் விற்பனை 10 கோடி தினாராகவும் இருந்தது." டிராட்ஸ்கியம் வரையறுத்த முதலாளித்துவமும் அல்லாத சோசலிச முனைப்பில் மூலதனம் குதூகலத்தால் கலகலத்தது. ஸ்ராலின் அவதூறுகள் மூலம் ஸ்ராலினிய கால சோசலிச உள்ளடக்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. 1961 இல் யூகோஸ்லாவியாவில் வெளியான செய்தி ஒன்றின் படி "சிலரது வருமானம் ஒரு மாதத்துக்கு 10 லட்சம் தினாராக இருந்தது." ஒரு முதலாளித்துவ நாட்டின் நிலைக்கு முதலாளித்துவ சர்வாதிகார அடக்குமுறை மூலம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டனர். சொத்துடைய வர்க்கத்தின் சுரண்டும் ஆட்சி யூகோஸ்லாவியா மக்களின் மேல் நிறுவப்பட்டது. யூகோஸ்லாவியாவில் "தனியார்  வாணிபமும், தனியார் சேவை நிறுவனங்கள், தனியார் வீட்டு வசதி அமைப்பு, தனியார் போக்குவரத்து, தனியார் வங்கி" என்று 1960 களில் பெரும் எண்ணிக்கையில் தனியார் துறை பெருகி வந்தது. 1961 இல் பெல்கிரெட்டில் வெளியான ஒரு பத்திரிகையில் "1960 இல் 116 தொழில் நிறுவன உரிமையாளர்கள் ஒவ்வெருவரும் ஒரு கோடி தினாருக்கு அதிகமான வருமானத்தை பெற்றனர். சிலர் 7 கோடி தினாரை பெற்றதாக " செய்தி வெளியிட்டது. யூகோஸ்லாவியாவின் ஆட்சி மூலதனத்தின் ஆட்சியே ஒழிய வேறு ஒன்றும் அல்ல. ஸ்ராலின் சரியாக கூறியது போல், டிட்டோவால் நிறுவப்பட்ட சர்வாதிகாரம் முதலாளித்துவ சர்வாதிகாரமேயாகும்.

தொடரும்
பி.இரயாகரன்

3.யூகோஸ்லாவிய பற்றிய ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 03)

1.இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1)

Last Updated on Wednesday, 05 May 2010 09:10