Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன்.

சாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன்.

  • PDF

கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காரம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறுநிலைக்குள்ளானது. தேசிய இனமொன்று சம உரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது.

அதுபற்றிய சுரணையே இல்லாமல் பெருந்தேசிய  அகங்காரம் மேலும் சிதைவுகளுக்குள் மூழ்கியபடி. ஒரு பக்கம் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளாத சிறு தேசிய இனம்@ மறுபக்கம் இனங்களின் சம உரிமையை மறுக்கப்போய் தனது சுயாதிபத்தியத்தைத் தன்னுணர்வில்லாமலே இழந்துகொண்டிருக்கும் பொரும்பான்மை இனம்.

ஈழத்தின் இந்த அனுபவங்களை மீளாய்வுக்குள்ளாக்கும் எத்தனம் தொடங்கப்படும்போதே தெலுங்கு மொழித் தேசியம் தகர்க்கப்படுவதற்;கான தெலுங்கானானாப் போராட்டம் எழுச்சி கொண்டது. தேசியமே அர்த்தமற்ற கற்பிதமா? தேசங்களின் இறைமை –சுயாதிபத்தியம் என்பவற்றுக்கு இனி இடமில்லையா?

இவைதொடர்பாக முன்னெடுக்கப்படும் விவாதங்களின் அடியொற்றி நமக்கான தேசியத்தின் தனித்துவ வேறுபாடுகுறித்து அலச முயல்கிறது இக்கட்டுரை. வர்க்க சமூக ஐரோப்பா கண்டறிந்த மார்சியத்தை சாதியச் சமூகத்தில் பிரயோகிப்பதில் பிரத்தியேகமான வேறுபாடு உள்ளதா? வர்க்கப்பிளவுபட்ட ஐரோப்பாவின் தேசியத்திலிருந்து சாதிய பேதத்தால் ஏற்றத்தாழ்வைக் கொண்டு இயங்கும் நமது தேசியம் எத்தகைய வேறுபாட்டைப் பெற்றுள்ளது? சாதிப்பிளவுகனைடைய இந்தியா ஒரு தேசமாக முடிந்தது எப்படி? இனத்தேசியம் இன்று பிளவுற முயல்வது ஏன்? இவை குறித்த கருத்தாடலை ஈழத்தேசியப்போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அலசுவோம்.

“அது ஒரு துன்பியல் சம்பவம்” என்ற கூற்று தமிழர் மத்தியில் எத்தகைய கருத்தியல் சார்ந்தவர்களிடமும் ஏதோவொரு வேடிக்கைப்பொருள் தரும் ஒன்றாக புழக்கத்தில் வந்துவிட்டது. இந்தியப் பெருந்தேச உணர்வுக்குச் சவால்விடும் வகையில் அதன் நம்பிக்கைக்குரிய எதிர்காலமாகத் திகழ்ந்த தலைவரைத் தனது தற்கொலைப்படைகொண்டு அவரது மண்ணிலேயே சாய்த்த பிரபாகரன் அதற்கான வருத்தத்தையும் முழுமையாகத் தெரிவிக்க மறுத்துக் கூறியது அந்தவாசகம்@ எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்திய அதேவேளை, அவரைக் கொண்டாடிய வர்களையும் தெளிய வைத்த வார்த்தைகள்!

இப்போது மீட்டுச் சொல்லப்படக் காரணமுண்டு. “தீராநதி” ஜனவரி இதழில் தமிழவன் எழுதும் “மரபும் ஓயாத காற்றும்”தொடரின் 9வது பகுதி “அண்ணா,ஆண்டர்சன், தமிழ்த் தேசியம்” எனும் தலைப்பில் வெளிவந்திருந்தது. இந்தியச் சூழலில் தமிழகத்தை மையமாகக்கொண்ட தமிழ்த் தேசியம் குறித்த சர்ச்சை அக்கட்டுரைலயின் அடிநாதம். அதற்கான படிப்பினை சார்ந்து ஈழத்தமிழ்த் தேசியமும் பேசுபொருளாகியுள்ளது. தேசியத்தைக் குறுகிய வட்டத்துக்குள் அணுகி முடக்கிவிடாமல், சர்வதேச நோக்கில் பார்த்தாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அவரது அக்கறை கவனிப்புக்குரியது. இத்தகைய சர்வதேசப்பார்வையைத் தமிழ்த் தேசியம் போதியளவு கைக்கொள்ளவில்லை@ குறிப்பாக ஈழத் தமிழ்த்தேசியத்தின் தோல்விக்கு அதுவே அடிப்படையான காரணியாக ஆனது எனச் சொல்கிறபோது, “இந்த சர்வதேசச் சிந்தனையின் பின்னடைவால்தான் ஈழப்போர் ஒரு துன்பியலாக முடிந்தது” என்கிறார் தமிழவன்.

இப்படியாகத் துன்பியல்கள் தொடர்கதையாவதற்கு சர்வதேச அணுகுமுறை இல்லாமலற் போனதுதான் காரணமா? அப்படியொன்று இருக்கப் போனதே காரணமாகும் என்பதுதான் துன்பியல்! இதனைத் தமிழவன் காணத்தவறுகிறார். ரஜீவ் படுகொலை வெறும் ஈழப்போர் எதிரடி மட்டுமல்ல, அதற்கு சர்வதேசப் பின்னணி உண்டு என்ற குரல் இந்திய அதிகாரத்தரப்பால் முனகப்பட்டு மூடிக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் இரகசியம் ஏதுமில்லை@ அது இந்தியாவின் சர்வதேச உறவும் எதிர்காலக் கனவும் சார்ந்த மூடுமந்திரம்.

இப்போது ஈழப்போரின் துன்பியல் முடிவுக்குக் காரணம் அதன் சர்வதேச அணுகுமுறையேதான். பிரபாகரன் கடைசிவரை நோர்வே ஊடாக, அல்லது நேரடியாக அமெரிக்கா தம்மை இரட்சிக்கவரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஊடாகச் சரணடைதல் என்பதுகுறித்து எடுத்த நடவடிக்கைகள் எப்படிக்கையாளப்பட்டது, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு என்பது எல்லாம் சர்வதேசம் உள்விவகாரங்களில் தமது நலன்பேண ஏற்ற பேரப்பேச்சுக்குரிய விடயங்களாக கையாளப் படுவதற்கு உரியனவாக உள்ளனவேயன்றி மக்களது உயிர்ப்பிரச்சனையாக அணுகப்படவில்லை.

ஓடிக்கொண்டிருந்தது பிரபாகரன் கூடவே மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாக எடுத்துச சென்றது சர்வதேசம் வந்து காவந்து பண்ணும் என்ற நம்பிக்கையோடுதான். பண்ணவில்லை என்பதோடு, அதன் இறுதிக்காட்சியைத் தனக்கு ஏற்றதாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அந்தச் சர்வதேசம் மிகக்கேவலமான முறையில் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறது என்பதில் ஈழத்தமிழ்த் தேசிய அக்கறையாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கற்கவில்லை என்பது தொடரும் துன்பியல்.

அப்போது முள்ளிவாய்க்காலும் சரி இன்று இலங்கை பூராவிலும் சரி, சர்வதேச வலைப்பின்னலுக்குள்ளேயும் பிராந்திய மேலாதிக்கப் பிடிக்குள்ளேயும் சிக்கித் திணறும் கோரம் உணர்வுமட்டத்திலும் அறிவுத் தளத்திலும் கொண்டுவரப்படுதல் அவசியம். முள்ளிவாய்க்காலில் அரசு முன்னேறித் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டபோது பிரபாகரன் தற்காப்பு நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தநிலையில் யுத்தம் நிறுத்தப்பட்டு இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் பேரப்பேச்சுத் தொடரப்பட்டிருப்பின் புலிகள் புத்துயிர்ப்புப் பெற்றிருக்க இடம் ஏற்பட்டிருக்கும். இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்துக்கு அது இடைஞ்சல் என்பதனாலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது குறித்துக் கவலை கொள்ளாமல் புலிகள் அழிக்கப்படும் இறுதி யுத்தத்தை இந்தியா மிகமூர்க்கமாகவே நடாத்தி முடிந்தது.

இலங்கை இராணுவம் நிறைவேற்றியது என்றில்லாமல் இதென்ன புது விண்ணாணம், இந்தியாமுடித்தது என்பதாக? இலங்கை இராணுவத்துக்கு அதீத நாயக அந்தஸ்தைக் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாக சிங்களப் பேரினவாதத் தேசியத் தீயைவளர்த்துக் குளிர்காய்ந்த ஜனாதிபதி ராஜபக்ஷவின் கூற்றுத்தான் ~யுத்தத்தை இந்தியாவே நடாத்தி முடித்தது| என்பதும்! முள்ளிவாய்க்காலில் ஒரு இடைத்தங்கலைச் சர்வதேசம் – அதாகப்பட்டது, அமெரிக்க மேலாதிக்கம் விரும்பியது. அந்த விருப்புக்குரிய உள்@ர் பிரதிநிதி என்பதாலேயே பிரபாகரன் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பை வளர்த்துவந்தார்@ தவிர்க்கவியலாத நெருக்கடியில் சரணடைவு என்ற இடைச்செருகல் மேற்கொள்ளப்பட்டு ~துன்பியலில்| முடிந்தது. அதிகாரத் தரப்பின் துன்பியல் சம்பவ முன்னெடுப்புக்கள் பூனையோடு எலிகொள்ளும் உறவு என்பதை முள்ளிவாய்க்கால் போதிய வலுவோடு எடுத்துக்காட்டியுள்ளது. பிராந்திய மேலாதிக்கம் பூனை பாய்ச்சலில் முந்தியபோது உலக மேலாதிக்கப் பூனை நல்லபிள்ளைச் சாமிவேடம்போட முடிந்திருக்கிறது. ஈழத்தமிழ்த் தேசியம் இந்த நல்ல பிள்ளைப் பூனைச் சாமிக்குப் பின்னால், இன்னமும்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக் கத்திற்கே வாக்களித்திருந்தது. அதையும்மீறி பிராந்திய  மேலாதிக்கப் பிரதிநிதியான ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக முடிந்துள்ளது. அவர் மீள எடுத்துக்கொள்வதற்கு சிங்களப் பேரினவாத உணர்வை முழு அளவில் பிரயோகித்துக்கொண்டார். சிங்கள வாக்குகள் அங்கு குவியவும், மேலும் உக்கிரத்துடன் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக்கப் பக்கம் சாயக்காரணமானது.

இப்போது ஜனாதிபதியின் வெற்றிமீது சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. எதிரணிக் கட்சிகள் இதனை முன்னெடுத்த போதிலும் சிங்கள மக்களிடம் இந்த அதீதப் பெரும்பான்மை யினாலான வெற்றிபற்றிச் சந்தேகங்கள் இருந்தபோதிலும் எதிர்ப்பு வலுவான வெகுசன எழுச்சியாக வளர்ச்சிகொள்ள முடியவில்லை. அதற்கான பிரதான காரணி, எதிர்ப்பைத் தூண்டும் எதிரணி அமெரிக்கசார்பானது என்பதோடு அது ஈழத்தமிழ்த்தேசியத்துக்கு உயிர்ப் பூட்டும் என்ற அரசுதரப்பின் பிரச்சாரம் ஆகும்.

இப்படிச் சொல்வதால் சிங்கள மக்கள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதோ, இந்தியச்சார்பை ஏற்றுக்கொள் கிறார்கள் என்பதோ அல்ல. இந்தியா கவனமாக நிலைமையைக் கையாள் கிறதேயன்றி, அதன் தலையீடு இருப்பதைக் கண்டால் சிங்கள இன உணர்வு அதற்கு எதிராகவும் ‘கெம்பியெழும்’ இந்தக் கெம்பியெழல் மேற்கோள் குறிக்குள் முடங்கக் காரணம் உண்டு. சுதந்திரத்தின் பின்னர் மூன்று தசாப்தங்கள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு இறைமையும் சுயாதிபத்தியமும் உள்ள ஒரு நாட்டுக்கான முற்போக்கு குணாம்சமுள்ள மக்களாக சிங்கள மக்கள் திகழ்ந்திருக்கிறார்கள். கூடவே பேரினவாத அகங்காரமும் ஏனைய தேசிய இனங்களது சம உரிமை மறுப்பும் வளர்ந்த நிலையில் பிந்திய மூன்று தசாப்தங்ககளாக அமெரிக்கச் சார்பு உட்பட சுயாதிபத்திய – இறைமை இழப்புகளைக் கண்டு கொள்ளாமல் மோசமான சிதைவுகள் அவர்களிடம் வளர்ந்துவிட்டன. இப்போதும் இனவாதமே எடுபடுபொருளாயுள்ளதால் பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிராகவோ, அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகவோ ஒரு துரும்பையும் போடமுடியாத வர்களாயே உள்ளார்கள்.

அத்தகைய பிற்போக்கு நிலைக்குரிய பௌத்த – சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான ஈழத்தமிழ்த் தேசியப் போராட்டம் முற்போக்கானதுதானே? அவ்வாறு அமையாமல் போனதுதான் துன்பியல். பேரினவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டிய தேவைகள் வலுத்துவந்த போதிலும் அது ஆரம்பம் முதலாகவே முற்போக்குத்திசையிலன்றி பிற்போக்கு மார்க்கத்தையே வரித்துக்கொண்டது. ஈழத்தமிழ்த் தேசியத்தின் முதற்கோரிக்;கையான ஐம்பதுக்கு ஐம்பதை முன்வைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் மலைய மக்களது பிரசாவு ரிமையைப் பறித்த ஐ.தே.க. அரசில் அங்கம் வகித்தார்@ அப்போதே கிழக்கைத்துண்டாடும் நோக்கோடு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தடுக்க வக்கற்றவராக அந்தத்தமிழ்த்தலைவர் இருந்தார். அவரது தமிழ்த்தேசியம் எகாதிபத்திய நலன்களோடு உறவுடையது என்ற அதன் பிணைப்போடு தொடர்பானது அந்தப் பலவீனம். இந்தத்தவறான இணைப்பே முன்னேற்றத்துக்கான வலுவான தடை என்பதை உணரா மலேதான் இன்றுவரை ஈழத்தமிழ்த் தேசியம் முன்னெடுத்துவரப்பட்டுள்ளது.

ஜி.ஜி.க்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டத்தை சமஷ்ட்டிக் கோரிக்கையுடன் முன்வைத்த செல்வநாயகத்தின் தலைமையிலான அணி தேசிய முதலாளித்துவ உணர்வோடு ஒரு தசாப்பத்துக்காயினும் முற்போக்குப்பாத்திரத்தை வகித்திருந்தது. சிங்களத்தேசிய முதலா ளித்துவ சக்தி பண்டாரநாயக்க தலைமையில் வெற்றி கொண்டபோது இதுவும் தமிழர் மத்தியில் எழுச்சிபெற்றது. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தால் தனது வர்க்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தினார் என்றால், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை இங்கிருந்து அகற்ற விடாமல் ‘போராடும்’ தமது அற்பத்தனமான வர்க்கப் பலவீனத்தை வெளிப்படுத் தினர். இருப்பினும் அறுபதாம் ஆண்டில் ஐ.தே.க. அரசு ஏற்படுவதை நிராகரித் ததில் அவர்களுக்கும் ஒரு முற்போக்குப்பாத்திரம் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசோடு பேரப்பேச்சில் இறங்கவும் உடன் செல்லவும் அது உதவியது. அந்த முற்போக்குக் குணாம்சம் வளரத்தெடுக்கப்பட்டிருப்பின் நமது வரலாறு வேறுவகையாக முன்னேறியிருக்க முடியும்.

சிங்கள – தமிழ் தேசிய முதாலாளிவர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து இயங்க முடியாமல் போனதற்கு 1960 –1965 இல் இயங்கிய ஸ்ரீமாவோ அரசு இழைத்த தவறுகள் பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளன@ அது மட்டுமே காரணி அல்ல. தமிழ்த்தலைமை தனது நிலைப்பாட்டை பெரு முதலாளி வரக்கசார்புக்கு மாற்றிக்கொண்டு முன்னர் எதிர்த்த ஐ.தே.க. எனும் சிங்களப் பெருமுதலாளித்துவக் கட்சியோடு கைகோர்த் தமையே பின்னடைவுக்குப் பிரதான காரணியாக அமைந்தது. குறைந்தபட்சத் தேசிய முதலாளித்துவ நலனைக்கொண்டிருந்த காலத்திலேயே ஏகாதிபத்திய நலன்களை இந்த மண்ணில் தொடரக் குரல்கொடுத்த இந்தத் தலைமை, பெரு முதலாளித்துவ உள்ளடக் கத்தை வரித்த பின்னர் முற்றிலும் ஏகாதிபத்தியத்தின் நிழலாகவே தமிழ்த்தேசியப் போராட் டத்தை அடையாளப்படுத்தினர்.

எழுபதுகளின் பிற்கூறில் பிரிவினைக் கோரிக்கையுடன் எழுச்சிபெற்ற இளைஞர் இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியதோடு, சோஷலிஸத் தமிழீழம் பற்றிய விவாதங்களையும் முன்னெடுத்தனர். இருப்பினும் அவர்கள் நாடிய சோவியத் யூனியனின் நட்புறவு ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புப் படையாக சோவியத் இராணுவம் சமராடிக்கொண்டிருந்த வரலாற்றுக்கட்டத்துக்குரியது. அதைவிடவும், இந்திய அரசு அனுசரணையோடு அவர்கள் தமது இராணுவங்களைப் போஷித்தபோதே இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் கருவியாகிவிட்டிருந்தனர். ஆக, அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பும் மார்க்ஸியநாட்டமும் பொருளற்றனவாய் அமைந்தன. அப்பண்பு காரணமாக அவர்களால் சொந்தமக்களை அணிதிரட்ட முடியாமற்போனது@ போகவும், அமெரிக்க மேலாதிக்கவாதப் பிரதிநிதிகளான புலிகளால் இலகுவில் களத்திலிருந்து ஓரங்கட்டப் பட்டனர்.

அந்தவகையில் முதற் கோணலோடு முற்றிலுங் கோணலாகவே முடிந்த ஈழத்தமிழ்த் தேசியம் குறித்த கற்றல் மார்க்கிய அணுகுமுறையில் இன்னும் ஆழமாக அணுகப்படவேண்டியதாகும். மார்க்சியர்கள் தேசியம் குறித்துப் போதிய அளவில் அக்கறைகொள்ளவில்லை என்ற குறைபாட்டைத்தான் தமிழவன் முன்வைத்திருந்தார். “மொத்தத்தில் நல்ல சிந்தனையார்களும், அறிவாளிகளும் கூட தமிழ் பற்றிய விருப்புவெறுப்பற்று யோசிக்கவில்லை. அதன் தமிழ்த்தேசிய உட்கிடைகளை அறிவதில் தடுமாறுகிறார்கள். இதற்கான ஒரு காரணம் அகில உலகப் பேரறிவான மார்க்சியத்தைத் தமிழக இடதுசாரிக் கட்சிகள் கொச்சைப்படுத்தியிருப்பதுதான்” எனக்கூறும் தமிழவனும் தமிழ்த்தேசியம் குறித்த ஆய்வுக்கு மார்க்சியத்தைப் பிரயோகிக்க முன்வரவில்லை. தமிழ்த் தேசியத்தைப் புரிந்துகொள்ளத் தனக்கு இயங்கியல் அணுகுமுறையைவிட அமைப்பியலே சரியாகப்படுவதாக அவர்கூறுகிறார். இயங்கியல் ரீதியாக விளக்கமுடியும் என்பது குறித்த விவாத்த்தை பின்போட்டுக்கொள்வோம்@ இதுவரை பேசிவந்த விடயம் தொடர்பில் அவரது ஒரு கருத்து இங்கு உடனடி அக்கறைக்குரியதாயுள்ளது.

இந்தியாவின் தமிழ்த் தேசிய உருவாக்கம் தொடர்பாக அவர் கவனங்கொள்ளச் சொல்கிற அம்சத்தை அவரது வார்த்தைகளில் காண்பது அவசியமானதாகும். “சமீபத்தில் ஒரு ஆங்கில நூல் படிப்பதற்குக் கிடைத்தது. ‘அச்சும், நாட்டுப்புறவியலும், தேசியமும், காலனி ஆதிக்கத் தென்னிந்தியாவில்’ என்பது நூலின் நீண்டபெயர். நூலின் ஆசிரியர் பல தமிழாய்வாரள்களுக்குப் பழக்கப்பட்டவரும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை லண்டன் எஸ்.ஓ.எ.எஸ். நிறுவனத்தில் தமிழ் கற்பித்து வந்தவருமான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள். நாட்டுப்புறவியலும், இலக்கியமும் முதன் முதலில் அதாவது 1800 வாக்கில் அச்சுக்கு உள்ளாக்கப்பட்டபோது தமிழ் மனோபாவத்தில் நடந்தமாற்றங்களை முன்வைக்கிறார். தமிழ்த் தேசியம் தமிழி;ல் கட்டமைக்கப்பட்ட முக்கியமான காலகட்டம் இது என்கிறார். 18ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு எழுதியவர்களால் இந்நோக்ககு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல தமிழ் ஆசிரிய ஆய்வுகளைப் போலவே 18, 19ம் நூற்றாண்டு ஆய்வுகள் தமிழில் தரமின்றியே உள்ளன. ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள் நாட்டுப்புறவியல் கதைகளை முதன்முதலில் தொகுத்த தாண்டவராய முதலியாரை முக்கியப்படுத்துகிறார். இது சரியான பார்வை. நம்முடைய முதல் நாவல், பிரதாப முதலியார் சரித்திரம் – தாண்டவராய முதலியரின் தொடர்ச்சி. பிளாக் பர்னிடம் இச்செய்தி இல்லை. ஆனால், தமிழ்மொழியின் பெருமை பற்றிய கருத்துக்கள் பிரதாபமுதலியார் சரித்திரத்தில் பல பக்கங்களுக்கு நீளுகின்றன. அதாவது நான் முன்வைக்கவருவது உரைநடையில் இலக்கியம் தோன்றுவதும் தமிழ்த்தேசியம் தோன்றுவதும் பின்னிப்பிணைந் தவையாகும் என்ற கருத்து. இது இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிந்தி காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழனான அண்ணாத்துரைக்கு தமிழரசியல் தோற்றமளித்ததோடு தொடர்புடையதாகும். தமிழ்பற்றியப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரைகுறையான, பழைய, இப்போது மார்க்சியர்கள்கூட மறந்துபோன சூத்திரத்தை ஒதுக்கிவிட்டு, எதார்த்த அரசியல், பிராந்திய நிலவரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துப் பேசவேண்டும்” என்பது தமிழவனின் விவாதம்.

தமிழ் பற்றிப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரையுண்மையை இப்போது மார்க்சியர்கள் மறந்து போனது, அது தவறு என்பதால் அல்ல@ அது ஏற்கனவே நிறைவேறித் தொலைத்துவிட்டது என்பதனால்! ஈழத்தமிழ்த் தேசியம் புலிப்பாஸிஸத்தை தாராளமாய் அனுபவித்தது. அதன் துன்பியல் முடிவுக்கும் அந்தப் புலிப்பாஸிஸம் ஒருவகையில் காரணமாய் அமைந்தது@ அவர்கள் அரவணைத்த‘சர்வதேசமே’ அவர்களைத் தடைசெய்து, எவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனதாலேயே மிக வலுவான இராணுவமாய் வளர்ந்துங்கூட ஒன்றும் பண்ணமுடியாத கையறுநிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டா? முன்னரும் புலிகள் முன்னேறித் தாக்கியவேளைகளில் சிங்கள இராணுவத்தினருக்குள் கோடரிக்காம்புகளைத் தேர்ந்தெடுத்துக் காசுகொடுத்து ஓடவைத்துக்கொண்டு இருந்தார்களேயன்றி, புலிகளிடம் பெரும் வீரம் எதுவும் கிடையாது எனக்கூறும் பேரினவாத அடிவருடிகளை இங்;கே காணமுடிந்தது. இத்தகையவர்களும் புலிப்பாஸிஸம் பற்றிப் பேசப் பின்னிற்பதில்லை. இத்தனை தீவிரமாகத் தமிழகத்தில் தமிழ்ப்பாஸிஸம் வெளிப்படாவகையில் இந்தியப் போலி ஜனநாயகம் செயற்பட்டபோதிலும், திராவிடர் இயக்கங்களின் கீழான நான்கு தசாப்தங் களின் தமிழக சமூகத்தின் பல சிதைவுகளுக்கு திராவிடர் இயக்கக் கட்சிகளது ஜனநாயக மயப்பட்ட பாஸிஸம் காரணமாக அமைந்தமை பற்றிப்பலரும் தமது எழுத்துக்களினூடாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அந்த அரையுண்மை அரங்கேறி மக்கள் விடுதலை மார்க்கங்கள் முடங்கிப்போனதற்கு தமிழ்த்தேசியத்தின் மக்கள் நலன் சார்ந்த பக்கத்தைப் பார்க்கத்தவறிய மீதி உண்மை (அதுவும் பாதிதான்) பற்றிய அக்கறையை மார்க்சியர்கள் இப்போது கவனங்கொள் கிறார்கள். இதிலுள்ள துன்பியல், ஓடுகிற பஸ்ஸைத் துரத்தியோடி ஏற முயல்கிற நிலையில் மார்க்சியர்கள் இருப்பதுதான். மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங்களினுள் முடங்கிப்போய் மார்க்சிய – லெனினிய சிந்தனை முறைமையின்படி இந்தியச் சமூக நியதியைப் பகுப்பாயவும் பாட்டாளிவர்க்க உலக நோக்கை ஸ்தூல நிலைமைக்கு அமைவாக பிரயோகிக்கத் தவறியதுமான குற்றம் இந்திய மார்க்சியர்களிடம் உள்ளது@ உண்மையில் அர்ப்பணிப்பு, தியாகம், மார்க்சிய விசுவாசம் என்பவற்றில் இந்திய மார்க்சியர்கள் வேறெந்தவொரு நாட்டின் முன்னுதாரணத்துக்கும் குறைவானவர்களல்ல.

தமிழ்த் தேசியம் பாஸிஸ வடிவங்கொள்ளும் என்ற எதிர்வு கூறலை முன்மொழிந்த மார்க்சியர்கள் அதற்கான அடிப்படைக் காரணியையும் காட்டத்தவறவில்லை. மேலே தமிழவன் காட்டுகிற தமிழ்த்தேசியத்தின் ஊற்றுமூலம் குறித்து கைலாசபதிபோன்ற தமிழியல் துறையில் இயங்கிய மார்க்சியர்கள் வௌ;வேறு சந்தர்பங்களில் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். குறிப்பாக, கோ.கேசவனின்“மண்ணும் மனித உறவுகளும்” நூலுக்கான கைலாசபதியின் முன்னுரை இதுதொடர்பில் மிகுந்த கவனிப்புக்குரியதாகும். அங்கே தமிழ்ததேசியத்தின் முதற்கோணல் எது என்;பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இயல்பாக தமிழ்த்தேசியத்ததுக்கான தேவை ஒருபக்கம் இருக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சதிக்கு ஏதுவாக திராவிட மேன்மைபற்றி ஜரோப்பிய சிந்தனையாளர்கள் செயற்பட்டவாறினைக் கைலாசபதி மிகத்தெளிவாகவே காட்டியிருந்தார்.

ஏகாதிபத்தியத்தின் இந்தக்கையாளல் மிகுந்த கவனிப்புக்குரியது. தமிழவனின் நீண்ட மேற்கோளை எடுத்துக்காட்டியிருப்பதற்கான பிரதான காரணம், இந்த அம்சமும் செயற் பட்டது என்பதை அவர் எங்காவது சொல்லியுள்ளாரா என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் என்பதற்காகவே. அந்தக்கட்டுரை முழுமையிலும் எங்குமே இதனை அவர் காட்டவில்லை. கைலாசபதியின் மேலே குறிப்பிட்ட முன்னுலையைப் பார்க்கிற ஒருவர், தமிழ்த்தேசியத்தின் அவசியமான பங்களிப்பாக கால்ட்வெல் போன்றோரது திராவிடமொழி ஆராய்ச்சி அமைந்தமையைச் சொல்லித்தான், பிரதான அம்சமாக இதனை வலியுறுத்தினார் என்பதiதைக் காணமுடியும். மாறாக, மார்க்சியர்கள் மீது குற்றம் சுமத்துகின்ற தமிழவன் தனக்கான ஒரு அம்சத்தை வளர்த்துச் செல்கிறாரேயன்றி, வரலாற்றுச்செல் நெறியில் பிரதான அம்சமாக அமைந்த மறுபக்கத்தைக் குறிப்பிடவேயில்லை. ஒரு பக்கக் கட்டுரை யேயாயினும் எந்தவொரு விடயத்pதனதும் இரு அம்சங்களையும் குறிப்பிட்டாக வேண்டும் என மாஓ வலியுறுத்தியிருந்த விடயத்தை மார்க்சியர்கள் பெரும்பாலும் பின்பற்றத் தவறிய தில்லை.

இருப்பினும் தமிழ்த்தேசியத்தில் எகாதிபத்தியச் சதிக்கு ஆட்படும் பக்கத்தை வலியுறுத்திய அதேவேளை, அதன் சரியான அம்சம் சாரந்து மக்கள் மத்தியில் மார்க்சியர்கள் இயங்காமற்போனதால் தவறு வலுவாய்த் தாக்கியுள்ளது என்ற விமர்சனத்தை இன்று மார்க்சியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். தேசியப்பிரச்சனையின் பன்மைப்பரிமாணங்கள் குறித்த தீர்க்கமான தேடலும் அவை சார்ந்த கொள்கை வகுப்பும் இன்னமும் சரியான திசைப்படவில்லை என்பது மெய். நமது சமூகமுறைமை சார்ந்த புரட்சியின் வடிவம் இனங்காணப்படாமல் வெறும் புத்தகவாத வாய்ச்சவடால்கள் மேலோங்கியிருப்பதும் உண்மை.

இதுதொடர்பில் அக்டோபர் 2009 “புதிய புத்தகம் பேசுது” இதழில் வெளியான து.டீ.P. மொரேயின் நேர்காணல் கவனிப்புக்குரியது. ஜஸ்வந்சிங் இன் ஜின்னாவைத்  தேசியவாதி என்று எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் தொர்பானது அந்த நேர்காணல். “இன்று பொறுப்பற்ற முறையில் ஜஸ்வந்சிங் இந்தியாவின் பிரிவினையின்போது பிரிட்டிஷாரின் பங்கைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஜின்னா ஒரு தேசியவாதி என்று சொல்கிறார்” என மொரே கூறும் போது தமிழவனைப் போலன்றி, முஸ்லிம் தேசிய வாதத்தைத் தூண்டிப் பிரிவினைவரை வளர்த்ததில் பிரிட்டிஷாருக்குள்ள வலுவான பாத்திரத்தை உணர்த்துகிறார். உண்மையில் பிரிவினையை முஸ்லிம் தேசியத்துக்கு முன்னரே பெரியாரின் திராவிடரியக்கம் முன்வைத்துவிட்டது என்பதையும் மொரே எடுத்துக் காட்டியுள்ளார். இங்கே, தமிழவனைப் போலவே திராவிடத்தேசியத்தின் அவசியத்தை மொரே ஏற்றுக்கொள்கிறார் (தமிழ்த்தேசியம் திராவிடத் தேசியத்திலிருந்து பல வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இரண்டுக்குமான இரத்தபந்த உறவு வலுவானது என்ற வகையில் இங்கு இணக்கமாக நோக்கப்படடுள்ளது). இந்தத் திராவிடத் தேசியத்தை மொரே எங்குமே வகுப்புவாதம் எனக் கொச்சைப்படுத்தியதில்லை.

மாறாக, மஸ்லிம் தேசியத்தை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “அகில இந்திய முஸ்லிம்லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி.  எனெனில் அந்தக்கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சியின் தலைவர் ஜின்னா” எனக்கூறி, 25 வீதமான முஸ்லிம்மக்களுக்கு மட்டும் உரியதாக உள்ள வகுப்புவாதக் கட்சியின் தலைவரரைத் தேசியவாதி எனக்கூறமுடியாது என்கிறார். “ஒரு வகுப்புவாத கட்சியின் தலைவர், இந்தியயாவின் ஒற்றுமைக்காக ஒருவேளை பேசி இருந்தாலும், ஜின்னாவை வகுப்புவாத தேசியவாதி என்றே அழைக்கமுடியும் என்றுநினைக்கின்றேன். அவரை நிச்சயமாக ஒரு தேசியவாதி என்று சொல்லமுடியாது. ஒரு மதத்தையோ, ஜாதியையோ சார்ந்து செயல்படும் எந்த ஒரு நபரையும் தேசியவாதியாகக் கூறமுடியாது”என்கிறார் மெரே. பெரியாரது திராவிடரியக்கம் திராவிடர் அல்லாதார் அங்கம் பெறாதவகையில் கட்டமைக்கப்பட்டபோதிலும் அதை வகுப்புவாத அமைப்பாக மொரே கருதவில்லை. அக்காலத்தில் பல மார்க்சியர்கள் திராவிடர் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் வகுப்புவாத அமைப்புகளாகயே பார்த்தனர் என்பது கவனிப்புக் குரியது.

ஒருவர் தமிழ்த் தேசியராயும் இந்தியத் தேசியராயும் இருக்க முடியும் என்பதை ஏற்பதில் சிரமம் இல்லை. பாரதியிடம் இத்தகைய இனத்தேசியமும் நாட்டுத்தேசியமும் சார்ந்த பண்புகள் விரவிக்காணப்பட்டன. பல்வேறு தேசிய இனங்களின் மத்திலும் இயங்கிய இந்தியத் தேசியக் கவிஞர்களும் இத்தகைய பண்புகளைக் கொண்டவர்களே. இரவீந்திர நாத் தாகூர் வங்காளத்தேசியத்தையும் இந்தியத்தேசியத்தையும் அற்புதமாய்க் கவித்துவமாக்கியவர். இந்தியத்தேசிய கீதம் மட்டுமல்ல, இஸ்லாமிய நாடான பங்களா தேஷின் தேசிய கீதமும் இரவீந்திரருடையது என்பது கவனிப்புக்குரியது. மகாகவி இக்பால் இஸ்லாமியத் தேசிய உணர்வுக்கும் இந்தியத் தேசிய உணர்வுக்கும் தலைசிறந்த உதாரண மாகத் திகழ்ந்தவர்.

அந்தவகையில் மொரே கருதவது போல தேசியத்துக்கு உட்படமுடியாததாக இனத்தேசி யத்தை விலக்க முடியாது. மதம் தேசிய வடிவத்தைப் பெற முடிந்தது ஏகாதிபத்தியத்துக்கு ஆட்பட்டிருந்த எமது வரலாற்று நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்று என்;பதை ஏற்றாக வேண்டும். இதுதொடர்பில் வரலாற்றுத்துறை போராசிரியர் சி.அரசரத்தினத்தின் கூற்று கவனிப்புக்குரியது@ “நாம் எடுத்துக்கொண்ட ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்கள் கிறிஸ்த்தவ வல்லரசுகளை எதிர்தது நின்றன. அத்துடன், இவ்வியக்கங்கள் பல, சமயம் ஒன்றுதான் மேலானதெனக் கோருவதை எதிர்த்து, தங்கள் சமயங்களுக்கும் கலாசாரங்களுக்கும் நன்னப்பிக்கையூட்டுவதை நாடிநிற்கின்றன. அதன் விளைவாக தேசியவாதமானது எப்படி அரசியலுரிமைகளைப் பெற இயங்கும் ஓரியக்க மாயிற்றோ, அதே போலக் கலாசார சமய மறுமலரச்சி இயக்கமாயிற்று. ஆகையால் இந்நாடுகளில் தேசியவாதம் தோன்றிய காலத்திலேயே, அங்கு பெரும்பாலும் பரவியிருக்குஞ் சமயங்களாகிய இந்து, பௌத்த, இஸ்லாமிய சமயங்களின் மறுமலர்ச்சியும் ஏற்பட்டதை தற்செயலாக ஒரே காலத்தில் நடந்த இரு சமபவங்களெனக் கொள்ளலாகாது. சமயத்திறதிற்களித்த இம் முக்கியத்துவம் தேசியவாதத்திற்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடிந்தது. அது தேசியவாதத்தினை ஒரு விரிவான அடிப்படையுள்ளதாகச் செய்வதற்கு முனைந்தது. அத்துடன் தனி அரசியல் இயக்கம் எதுவுக்கும் கிடைத்திருக்க முடியாத பொது ஆதரவைத் தேசியவாதம் பெறுவதற்கு உதவியது. உதாரணமாக இந்தியாவிலே காந்திதியொருவர் முன்வந்து இந்தியத் தேசியவாதத்தினை இந்துகலாசாரத்தின் உயிர்நாடியோடு இணைக்கும் வரை இந்தியத் தேசியவாதம் பெரும்பாலும் ஒரு மத்திய வகுப்பினரின் இயக்கமாகவே இருந்தது. காந்தி அவ்வண்ணஞ் செய்தபோதுதான் இந்தியாவின் நாட்டுமக்களுள்; ஐனெயைn Pநயளயவெசல பெரும் பகுதியினர் தேசியவாதத்தில் ஊக்கங்கொண்டனர். மற்ற நாடுகிளலும் பற்பல அளவுகளில் இப்படியான போக்கு ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள கூட்டத்தினைத் தட்டி எழுப்புவதற்குச் சமயத்திற்களித்த முக்கியத்துவம் சரியானதாகவிருந்தது. ஆனால் பல மதங்கள் உள்ள நாடுகளிலே அது பல விபரீதவிளைவுகளை உண்டுபண்ணக் கூடியதாகும். இதனை இந்தியாவில் நடைபெற்ற சோக சம்பவங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. அங்கு முஸ்லிம் மக்களுடைய தேசியவாதமானது, இந்திய ஒற்றுமையின் மீது கொண்ட விசுவாதத்திற்கும் மேலாகச் சமயத்திலே கூடிய ஆர்வங்கொண்டு, இந்திய முஸ்லிம்களின் தேசியநோக்கங்கள் ஒரு தனி இஸ்லாமிய நாடு அமைப்பதாலேயே சாத்தியப்படுமென்ற முடிவுக்கு வந்தது. இந்திய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட (ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள) இந்தியத் தேசிய காங்கிரசாலும் இத்தகைய பிளவினைச் சமாளிக்க முடியவில்லை. ஆகவே தென்கிழக்காசிய நாடுகளின் தேசியவாதத்தினை உருவாக்கிநின்ற பல்வேறு அம்சங்களும் ஒரே இயக்கத்திலே ஒன்று கூடியிருக்க முடியாத அளவிற்குத் தங்களுக்குள் முரண்பட்ட கோரிக்கைகளை உடையனவாக அமைந்தன” (அரசரத்தினம்.சி,“ஆசியயாவில் தேசியவாதத்தின் மூலங்கள்”. பார்க்க@ கூடம், ஏப்பிரல் – ஜூலை 2009.ப.45).

இது 1960 களில் எழுதப்பட்டது. இன்று இன்னும் விரிவாக நமது தேசிய இயக்கங்களில் மதம் வகித்த பாத்திரம் குறித்தது பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இந்துத்தேசியத்தால் ஒடுக்கப்பட்டபோது இயல்பாக உருவாகத்தக்க இஸ்லாமியத் தேசிய உணர்வை வகுப்புவாதமாகக் காணும் தவறு, பல அம்சங்களில் மிகுந்த முக்கியத்துவ மிக்க விடயங்களை வலியுறுத்துகிற ஒருவரிடமும் ஏற்பட்டுவிடுகிறது என்பதையே “புதிய புத்தகம் பேசுது” நேர்காணலில் மெரே வாயிலாக வெளிப்படக் காண்கின்றோம். அவர் மதத்தையோ சாதியையோ சார்ந்து செயல்படும் ஒருவரை தேசியவாதியாகக் கூறமுடியாது எனக்கூறியிருந்ததையும் கண்டோரம். இங்கு பெரியார் வேண்டப்படுகிறார்@ 1925 இல் பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறியபோது தமிழகக்காங்கிரஸில் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகக் கூறி பிராமணரல்லாதார் சாதி நோக்கைத்தானே முன்வைத்தார்! ஜோதிராவ் புலேயும் இந்தியக்காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறித்தானே அதனை எதிர்த்தார்! பிராமணரல்லாதாருக்குள்ள ஏதாயினும் ஒரு சாதி மேலாண்மை சாத்தியப்பட்டால், ஒடுக்கப்பட்ட ஒரு சாதிப்பிரிவு தனது தேசியத்தை முன்வைக்கக்கூடாதா, இஸ்லாமியத் தேசியம் மேலெழுந்தது போல?

 

http://www.psminaiyam.com/?p=2509