Language Selection

புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர். 

 

இப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல இந்த பினாமி சொத்து எப்படி ஒரு காரணமாக இருந்ததுவோ அது போல், அதை தமக்குள் பங்கிட பிரபாகரனின் மரணத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கமைய மாபியா கேபி பிரபாகரனுக்கு பிரமாண்டமான அஞ்சலியை நடத்திவிட முனைகின்றார்.

 

மறுபக்கத்தில் இந்த மாவீரர் தினத்தை தங்களின் சொந்த வியாபாரத்துக்கான மையமாக கருதும் கூட்டம், அதை நோக்கி திட்டமிடுகின்றது. இம்முறை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி, தங்கள் வியாபாரத்தை களைகட்ட வைக்க முனைகின்றனர். இப்படி அஞ்சலிக் கூட்டம் வியாபாரமாக மாறி நிற்கின்றது.

 

பிரபாகரன் கொல்லப்பட்ட விதம், அதன் பின் உள்ள போர்க்குற்றங்கள் பற்றி இந்த கூட்டத்துக்கு எந்த அக்கறையும் கிடையாது. இது எப்படி, எந்த நிலையில் நிகழ்ந்தது என்பது தொடர்பான முழு விபரங்களையும் மூடிமறைத்து, தங்கள் துரோகங்களையும் குற்றங்களையும் இதனூடு மூடிமறைக்கவே முனைகின்றனர்.

 

மாறாக பிரபாகரனை வீரனாக, கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒருவனாக, தேசியத்தின் அடையாளமாக, தங்கள் போலியான அஞ்சலிகள் மூலம் கட்டமைத்து காட்ட முனைகின்றனர். ஒரு விம்பத்தை உருவாக்கி, தங்கள் பிழைப்பை நடத்த முனைகின்றனர். பினாமிச் சொத்துக்கு தமக்குள் மோதும் இந்தக் கும்பல், அந்த நிதியை தமிழருக்கான ஒரு பொது நிதியமாக்க முனைவதில்லை. பிரபாகரனை வழிபாட்டுக்குரிய ஒருவராக்கி, அதன் மூலம் சொத்துப் பிரச்சனையை தீர்க்கவே முனைகின்றனர்.   

 

பிரபாகரனோ உண்மையில் போராடி மடியாது சரணாகதி அடைந்து, ஒரு கோழையாகவே மரணித்தவன். கொள்கையை கைவிட்டு, தன் உயிரைக் காப்பாற்ற முனைந்து கேவலமாக மடிந்தவன். தேசியத்தின் அனைத்துவிதமான சமூக கூறுகளையும் நிராகரித்து, தன் சொந்த வாழ்வுக்கு ஏற்ப போராட்டத்தை பாசிசமாக்கியவன். தான் அல்லாத, தன்னுடன் நிற்காத அனைவரையும் 30 வருடத்தில் தொடர்ச்சியாக படுகொலை செய்து வந்தவன். இறுதி நேரத்தில் தன்னை பாதுகாக்க மக்களை பலிக்கடாவாக்கியதுடன், இந்தப் பலிக்கு உடன்பட மறுத்த மக்களை தன் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியிட்டவன்.

 

இப்படிப்பட்ட இவனுக்கு புலத்துப் புலி மாபியாக் கும்பல் தன் தொழிலுக்கேற்ற ஒரு புருசனாக கருதி அஞ்சலி செலுத்துவதன் மூலம், அதை வைத்துப் பிழைக்க முனைகின்றது. பிரபாகரன் மரணத்தை மறுத்து முரண்படும் கும்பல், இதற்குள் சொத்தை தக்க வைக்க முனைகின்றது. பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் செய்த தமிழ்நாட்டு அரசியல் பிழைப்புவாதிகள், பிரபாகரனின் இந்த செயலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதை மறுத்தும், அவர் இருப்பதாக கூறியும் அரசியல் பிழைப்பை தொடர்ந்து நடத்த முனைகின்றது. இவை அனைத்தும் மக்களுக்கு பிரபகாரன் செய்ததை, சொல்லாமல் இருக்க முனைகின்றது.

 

அவர் கோழையாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சரணடைந்ததையும், புலிக் கொள்கைகளைக்  கூட கைவிட்டதையும், மூடிமறைக்க முனைகின்றனர். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டதையும், இதற்கு உடன்படாதவர்களை பலியெடுத்ததையும் மறுக்க முனைகின்றனர்.

 

இதற்கு தலைமை தாங்கிய கொலைகாரன் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி, அவனால் கொல்லப்பட்ட மக்களுக்கு பட்டை நாமம் போட முனைகின்றனர். தேசியத்தின் பெயரில் உண்மையாக போராடிய மரணித்த போராளிகளுக்கு, இதன் மூலம் சேறடிக்க முனைகின்றனர்.    பிரபாகரனுக்கு அஞ்சலியா அல்லது அவன் தலைமையில் கொல்லப்பட்ட மக்களுக்கும் உண்மையான போராளிகளுக்கும் அஞ்சலியா என்பதே, மக்கள் பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள் முன் எழ வேண்டிய கேள்வியாக இன்று உள்ளது.

   

தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, சொந்த மக்களை பணயம் வைத்தவர்கள். இதன் மூலம் பல பத்தாயிரம் மக்களை பேரினவாதத்திடம் பலிகொடுத்தனர். இந்தப் பலியெடுப்புக்கு தாங்களாக உடன்படாதவர்களையும், இதில் இருந்து தப்பியோடியவர்களையும் சில நூற்றுக்கணக்கில்  புலிகள் படுகொலை செய்தார்கள். தாம் தப்பிப் பிழைக்க, இந்த பிணத்தைக் ஊர் உலகத்திற்கு காட்டி பிரச்சாரம் செய்தவர்கள். இறுதியில் தாமே தம் உயிருக்காக சரணடைந்து, கொள்கை கோட்பாட்டை எல்லாம் துறந்தவர்கள். இவர்களுக்கா அஞ்சலி.

 

இவர்களோ தண்டனைக்குரிய குற்றவாளிகள். வன்னி மக்கள் இவர்களுக்கு இந்த தண்டனையை வழங்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை அவர்கள் செய்தே இருப்பார்கள். துப்பாக்கி முனையில்தான், புலிகள் மக்களிடமிருந்து தப்பிப் பிழைத்தார்கள். இறுதியில் மற்றொரு குற்றவாளியான அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சரணடைந்ததன் மூலம், கோழையாகவே மரணித்தனர். இனவழிப்பை நடத்தும் பேரினவாத இந்த குற்றக் கும்பல், சரணடைந்தவர்களைக் கூட கொன்றது. இந்த போர்க்குற்றம் பிரபாகரன் தலைமையிலான கொலைகார பாசிசத்தையும், அதன் மக்கள் விரோத போக்கையும் என்றும் நியாயப்படுத்திவிடாது.

 

பேரினவாத கொலைகார பாசிச அரசுக்கு பதில், வன்னி மக்களே பிரபாகரனை அடித்துக் கொன்று இருந்தால், அது மிகச் சரியான செயலாக இருந்திருக்கும். அதை செய்யக் கூடிய சந்தர்ப்பம் வன்னி மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதால், பிரபாகரன் அஞ்சலிக்குரிய ஒரு மனிதனாகி விடமாட்டான். இங்கு அஞ்சலி செலுத்துபவன், மக்களை வதைத்து படுகொலை செய்த கொலைகாரன் பிரபாகரனின் வாரிசுகள் தான். மக்கள் சொத்தை பொது நிதியமாக்க மறுக்கும், பினாமிய மாபியாக் கும்பல் தான்.

 

பி.இரயாகரன்
05.08.2009

 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ