Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்

தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்

  • PDF

பல நாட்கள் கழித்து தில்லைக்கு சென்றிருந்தேன்.ஆரம்பத்திலிருதே தில்லையை பிடிக்காது அதற்கு நான் சொன்ன காரணம் “இங்க பாப்பானும் பன்னியும்தான் அதிகமா இருக்கு” , பின்னர் தேவையின் கருதியும், ம க இ க வின் போராட்டங்களுக்கு என பலமுறை வந்தாயிற்று.

ஆனால் பல நாட்கள் கழித்து சென்ற எனக்கோ பார்ப்பன சதிராட்டமும் அடிவருடிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம் ……. என பலவும் காத்திருந்தது.

 

காலையில் வேலையினை முடித்துவிட்டிருந்தேன். நண்பர் கேட்டார் “இன்னைக்கு தேர் தரிசனம் வரீங்களா போலாம்”.வேண்டாங்க அந்த பாப்பான் மூஞ்சில முழிச்சாலே” என இழுத்தேன். கூட இருந்த இன்னொருவரோ “அப்ப எப்பத்தான் இத தெரிஞ்சுக்கப்போறீங்க” என்ற படி கிளம்பினோம்.

 

சிதம்பரம் மேல வீதி முழுக்க போலீஸ் பந்தோபஸ்து மிகஅதிகமாகவே இருந்தது. ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் செட் செட்டாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.சிறியவர், பதின்வயது பெண்கள் , ஆண்கள், பெரியவர்கள்  என குரூப் குரூப்பாக சென்று கொண்டிருந்தனர்.  தனது சொந்தக்கதை சோகக்கதையை பெரியவர்களும் , பெண்கள் ஏதோ சிரித்தபடி செல்ல அவர்களை பார்ப்பதற்காக பொறுக்கிகளென எப்படியோ சாமியை பார்க்கும் சாக்கில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தது.


செல்லும் வழியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன”தீட்ஷிதர்களுக்கு சொந்தமான சபா நாயகர் திருக்கோயில் தேர் ஆனித்திருமஞ்சனம் “. பார்த்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது . என்னடா அரசு கோயிலை பொதுவாக்கப்போறோமுன்னு உண்டியலை வச்சிருக்கு .

 

“இவன் என் கோயில்னு எப்பவும்போல ஒட்டிருக்காணுங்க” இதே புரட்சிகர அமைப்புக்கள் போஸ்டர் ஒட்டினால் கழுதை வேலையை சிறப்பாய் செய்யும் அரசாங்கம்  ஒட்டிய பசையில் பார்ப்பன நாற்றத்தை கண்டு பயந்தே போனது.

 

மேலும் பல அடிகள் நோக்கி நடக்க தரிசன கடைகள் பலவும் முளைத்திருந்தன வந்த கூட்டமெல்லாம் கடைகளில்தான் முக்கால் வாசி மொய்த்திருந்தன. அம்பாசடர் காரில் வந்த நபரோ “தங்களுடைய பொருட்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை ” சொல்லிக்கொண்டிருந்தார். ஏற்ற படி பார்ப்பன தீட்ஷிதர்கள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தனர்.திருட்டுக்கோட்டைக்கு அருகில் அப்படி சொல்ல அவருக்கு அதிகம் தைரியம் வேண்டும்.

 

கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்”  என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.

 

தேவாரம் திருவாசகம் மிக மெல்லியதாக ஒலித்துக்கொண்டு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் சிவ சிவ என நடராசன் ஆடல் வல்லானின் புராணம் பாடிய கும்பல் தெருவில் பாராயிரம் பாடிக்கொண்டு செல்ல பாவம் பக்தர்கள்தான்  நின்று கூட பார்க்கவில்லை. அட சிவப்பழங்களே உங்க பக்திய நீங்கதானய்யா மெச்சனும். தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என தீர்ப்பு வழங்கிய போது எங்கயா போனீங்க? ஒரு வெங்காயத்தானும் வரவில்லையே. நாத்திகர்கள் தானே பாடினார்கள்.

 

எல்லாம் எங்கே போனீர்கள்? பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா? என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு  அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு? சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை?

 

ஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்?

எப்படி உலகின் ஏதாவது ஒரு மூலையிலுல்ள முதலாளிக்கு எதிராக பேசினால் லோக்கல் முதலாளி அவனுக்கு வக்காலத்து வாங்குவார்களோ.அப்படித்தான் பார்ப்பனீயத்துக்கு வாலாட்டி தமிழை வைத்து சம்பாதித்து, திருடி, தின்று செரித்து விடுகிறார்கள்.அடுத்தது தான் என்பதால்தான் பெரிய திருடனுக்கு சின்னதிருடன் சப்பைகட்டு கட்டுகிறான்

 

தானம் கொடுத்த திருடனின் விசயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். யார் சொத்தினை யார் தானம் கொடுப்பது? மக்களின் தங்கள் பணத்தினால் அவர் ரத்தத்தால் நிமிர்ந்த கோயிலும் அந்த சாமியும் பார்ப்பான் சிக்னல் காட்டினால் தான் தரிசனம் கிடைக்கும். எங்களின் சொத்தை திருடி சோறு செஞ்சு வச்சுருக்கேன் வந்து வழிச்சு நக்கிட்டு போங்க என்கிறான் தீட்சித பார்ப்பனன்.

 

மக்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது, எங்கே போனது இத்தனை கூட்டம் பெரியவர் ஆறூமுகசாமி தேவாரம் இசைக்கும்  போது. கண்டிப்பாய் இருக்கும் அவர் பார்ப்பானாய் இருந்திருந்தால். அவன் திருடன் , இந்தக்கோயிலில் தான் விபச்சாரம், மூர்த்தி தீட்சிதன் பணப்பங்கு பிரிக்கும் போது பார்ப்பனதீட்சித ரவுகளாலேயே கொல்லப்பட்டான், இவன் தான் தமிழை  நீச பாசை என்கிறான், தமிழர்களை தே..மவன் என்கிறான் எனத்தெரியாதா என்ன?

 

எல்லாம் தெரிகிறது. நாம் சொன்னால் அதற்கு மேலும் கதை சொல்கிறார்கள்”  வேற என்னங்க பண்றது” என்ற தீர்ப்போடு. இதுதான் மதத்தின், மத நம்பிக்கையின் அவலம். கடவுள் நம்பிக்கை சொல்லித்தருகிறது ” ஒன்ணும் செய்ய முடியாது, விபச்சாரமே செஞ்சாலும் அவன் பிராமணன், அவன் தான் சாமியோட எல்லாம் பண்ணனும்.
தேவாரமோ திருவாசகமோ  ஏன் இன்னும்  நடராசனின் காதில் ஒலிக்கவில்லையா? கண்டிப்பாய் ஒலித்தாலும் புரியாது! பார்ப்பன ஆதிக்கத்தில் புழுங்கி அழும் அந்த நடராசனின் சத்தம் இன்னும் கேட்காததற்கு காரணம் அவன் இன்னும் சமஸ்கிருதத்தில்  புலம்பிக்கொண்டிருப்பதாலயோ என்னவோ!

தன்னை நல்லபடியாய் காப்பாற்றும் அல்லது காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு  கடவுளோ அல்லது தன்னை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் கடவுளுக்கு பக்தர்களாளோ கண்டிப்பாய் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மத அவலத்திலிருந்து, மதத்திலிருந்து மீளாத வரை.

 

—————————————————————————————

 

கடந்த வியாழன் அன்று  மீண்டும் அரசு சார்பில் 3 உண்டியல்கள் தில்லையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை  உண்டியல் திறப்பின் போது உண்டியலில்  அதில் எண்ணையை ஊற்றினார்கள்.இந்த முறை புதிய உண்டியல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 31 பார்ப்பன அடிவருடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

————————————————————

 

சிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.

இதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.

 

அப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.

 

அப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில், நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.

 

ஆறுமுகசாமி புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(??????)

 

http://kalagam.wordpress.com/2009/07/15/தில்லையில்-பார்ப்பன-சதிர/

Last Updated on Wednesday, 15 July 2009 19:01