Language Selection

வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.

 

அந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர். 

 

இன்று அதே பெண் இந்தக் காட்டுமிராண்டிகளின் இனவழிப்பு யுத்தத்தினால் சொந்த வடுவுடன் குமுறி எழுந்தாள். அரச நாசி முகாமில் உணவுக்காக நெரிபட்டு கீழே வீழ்ந்ததால், தனக்கு கிடைக்க இருந்த ஒரு குழந்தை வயிற்றில் வைத்தே அழிந்து போனது. அதற்கு சரியான மருத்துவமின்றி, மீண்டும் கடுமையான உடல் நிலைக்கு சென்றார். இன்று இப்படி அவரின் கதையுள்ளது. அவரின் சொந்த தமக்கை ஒரு கண் பறிபோன நிலையில், உடலில் பல காயங்கள் நோய்கள் உடன், தனது நான்கு சிறு குழந்தைகளையும் விட்டுவிட்டு அனாதையாக மற்றொரு மருத்துவமனையில்; வாழ்வுக்காக அலைகின்றார். இவர் தன் குழந்தைக்காக வன்னியில் அங்கர் பால் பைக்கற் கொடுக்கும் நீண்ட கியூவில் நின்ற போது, புலிகள் அங்கு வாக்கிடோக்கியுடன் நின்று பேச, அந்த இடத்தில் குண்டு வீழ்ந்த போது ஏற்பட்டதே இந்தக் காயம். அதில் தம் குழந்தைகளுக்காக அங்கர் பால் பைக்கற்றைப் பெற வந்து நின்ற, 70 பொதுமக்கள் இறந்து போனார்கள். மக்களைக் கொல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இதை திட்டமிட்டு செய்த புலிகளை, அந்த வன்னி மக்கள் பாடையில் போவான்கள் என்று தூற்றாமல் வேறு என்னதான் செய்யமுடியும். இப்படி மக்கள் புலியை காறி உமிழ்வதில், நியாயங்கள் உண்டு. இவர்கள் மக்களையே பாடையில் அனுப்பியவர்கள் ஆயிற்றே. 

 

இப்படி காறி உமிழ்ந்த அந்த பெண், தன் சக இரத்த உடன் பிறப்புகளை புலியின் அராஜகத்துக்கு பலிகொடுத்தவர். எந்த பயிற்சியுமற்ற தன் உடன் பிறப்புகளை கதறக் கதற தன் கண் முன் இழுத்துச் சென்றதையும், யுத்த முனையில் வீரமரணம் என்று கூறி மூன்றாம் நாளே புலிகள் உடலைக் கொண்டு வந்து கொடுத்த கதையைச் சொல்லி திட்டி அழுகின்றார். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்த 6 நாள்களில் இழுத்துச் சென்றவர்கள், அதன்பின் 3 நாளில் வீரமரணமடைய வைத்தனர். தமிழ் சமூகம் புலியிடம் சந்தித்த கொடுமைகள், வார்த்தைகளுக்கு உட்பட்டவையல்ல. இப்படி கண் முன்னால் கண்ட கேட்ட, எத்தனையோ கதைகள். அவைகளையோ அவர்களால் சொல்லி மாளாது.

 

அங்கே இந்த நாசமறுப்பாங்கள், மானம் வெட்கம் எல்லாவற்றையும் இல்லாதாக்கினார்கள்  என்றால், இங்கே இந்த மற்ற அறுவாங்கள் அதையே செய்கின்றார்கள் என்று, தம் மனக்குமுறலைக்  கொட்டித் தீர்த்தார்.

 

மக்கள் இப்படித்தான் குமுறி வெடிக்கின்றனர். இப்படித்தான் போராடுகின்றனர். தமது ஆயுதமாக சொற்கள். இதன் மூலம் இந்த மனித அவலத்துக்கு காரணமான அனைவரையும் திட்டித்தீர்க்கும், உச்சத்தில் வன்னி மக்கள் உள்ளனர். தமக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளை, கொடூரங்களைச் சொல்லி காறி உமிழ்கின்றனர். புலிகள் இனி அந்த மக்களை நெருங்கவே முடியாத அளவுக்கு, பாரிய கொடுமைகளை அவர்களுக்கு செய்திருக்கின்றனர். ஆண், பெண் பால் வேறுபாடு கடந்த எல்லைக்குள், புலிகள் அந்த மக்களை இழிவாகவும் மலிவாகவும் நடத்தினர்.

 

அந்த மக்களுக்கு எதிராக தூசணம் புலியின் மொழியாகியது. இப்படி தூசணம், மக்களுக்கு எதிரான, வன்முறை கொண்ட மொழியாக்கப்பட்டது இதுவல்ல முதன்முறை. பெண்களை அவர்களின் உறுப்பு சார்ந்து இழிவு செய்யும் தூசண மொழியால், ஆண் புலிகள் இதை தம் துப்பாக்கி முனையில் திட்டி தீர்த்து அடக்கினர். இனத்தினதும்;, பெண்ணினதும் மானம் வெட்கம் அனைத்தையும் இழக்க வைத்தனர். புலிகள் பலிகொடுக்க விரும்பிய இடத்தில், மக்களை கட்டாயப்படுத்தி அமரவைத்தனர். மறுத்தவர்களை பச்சை மட்டைகொண்டு விளாசினர். மக்கள் இராணுவத்தின் செல்லடியில் சாக வேண்டும் என்ற அடிப்படையில், துப்பாக்கி முனையில் படு தூசணங்கள் மூலம் வன்முறையை ஏவினர். இதன் மூலம் பலி மேடையில், பலியாடுகளாக மக்களைத் திணித்தனர். பச்சை மட்டை கொண்டு தாக்கப்பட்டனர்.

 

இந்தளவுக்கும் அந்த மக்கள் சுயமாக தப்பிப் போகாத வண்ணம், உயிர்வாழ முனையாத வண்ணம்,  அனைத்துவிதமான வன்முறைகளையும் ஏவினர். இதன் மூலம் புலிகள் தாம் விரும்பியவாறு, மக்களை மரணப்பொறியில் சிக்க வைத்து மரணிக்க வைத்தனர். இதற்கேற்ற பலி இடத்தில், மக்கள் இருக்கவேண்டும் என்பது தான் புலியின் தாகமாகியிருந்தது.

 

இந்த இடத்தில் ஒன்றை எடுத்துக்காட்டுவது அவசியம். பாராளுமன்ற பொறுக்கியும் கூட்டமைப்பு எம்.பி.யுமான ஒருவர், நோர்வேயில் புலிகளுடனான உரையாடல் ஒன்றின் போது 50000 மக்கள் இறந்தால் தமிழீழம் கிடைக்கும் என்றான். அதாவது இந்தப் பொறுக்கி மக்களை பலியிடுவதும், பலிகொடுப்பதும் அவசியமென்றான். அதைத்தான் புலி பலிமேடையில் நிறுத்தி நடத்தியது. அன்று இந்தப் பொறுக்கி யாழில் உள்ள 40000 இராணுவத்துக்கு சவப்பெட்டியை தயார் செய்ய பாராளுமன்றத்தில் வீராப்பு பேசியவன். இந்தப் பொறுக்கிகளை உள்ளடக்கிய கும்பல், 50000 தமிழ் மக்களை கொன்றால், சர்வதேச தலையீடு ஏற்படும்; என்று திட்டமிட்டவர்கள். இதன் மூலம் தமிழீழத்தைப் பெறமுடியும் என்று கூறி, அதைச் செய்ய தூண்டி அதை நியாயப்படுத்தி  வழிகாட்டியவர்கள்.   

 

இதற்கமையவே மக்கள் தாமாக உயிர் வாழ முனைவது குற்றமாகியது. இதை மீறினால் பச்சைமட்டை அடி கிடைத்தது.  தூசணத்தினால் படுகேவலமாக அவதூறு செய்யப்பட்டனர். அதையும் மீறினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் மக்களை தம் பலி கொடுக்கும் கொலைவெறிக்கு அடங்கிப் போக கோரப்பட்டனர். பேரினவாதக் குண்டுகள் எங்கே கொட்டப்படுகின்றதோ, அங்கு மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் நிறுத்தி வைத்தனர். இராணுவம் எதை வைத்து இலக்குத் தவறாத குண்டுவீச்சை நடத்துகின்றதோ, அதற்கேற்ப அதை மக்கள் மத்தியில் விழுந்து சிதற புலிகள் தூண்டினர். பலியெடுக்கவும், பலிகொடுக்கவும், ஒரு அரசியல் திருவிளையாடலை வன்னியில் புலிகள் நடத்தி முடித்தனர்.

 

இந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள முடியாதவர்கள், புலிகள் மேல் காறித் துப்புகின்றனர். அகதி முகாம்களில் தப்பிப் பிழைக்கும் புலிகளை பழிவாங்கும் உணர்வுடன் காட்டிக்கொடுக்கின்றனர் அல்லது தாக்குகின்றனர். புலிகள் மேலான மக்களின் வெறுப்பு,  சாபமாக மாறி நிற்கின்றது.

 

இந்த நாசமறுத்தவங்களே பாடையில் போவாங்களே என்ற திட்டிய அந்தப் பெண், புலிகள் அழிந்துவிட்டனர் என்பதையும், தலைமை அழிந்துவிட்டது என்பதையும் இன்னும் நம்பவில்லை. அந்த நாசமறுப்பாங்களைத் தான், பாடையில் போவாங்கள் என்று இன்றும் காறி உமிழ்கின்றனர். மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதை புலிகளின் புலனாய்வு அறிக்கைகள் கண்டுபிடிக்காது, உல்லாசமாக புலத்தில் அறிக்கை விடுவதைப் பார்க்கின்றோம்.

 

வன்னி நாசி முகாமை நடத்தும் அறுவாங்கள் பற்றி, அந்த இளம் பெண் தன் பாணியிலேயே அவர்கள் மேல் காறி உமிழ்ந்தார். ஒரு நேர உணவு கூட கிடையாது. அதுவும் கியூவில் முட்டி மோதி வாங்கித் தின்றால் தான், அன்றைக்கு உணவு. அந்த உணவு மனிதன் தின்ன முடியாத அளவுக்கு தரம் கெட்டது. குளிக்கும் ஆற்றிலோ, மலம் மிதந்து வருகின்றது. இரவில் நோய் என்றால், மரணத்தைத் தவிர வேறு வழி கிடையாது. பகலில் நோய் என்றால், ஒரு கிலோ மீற்றர் நடக்க வேண்டும். கடுமையான வருத்தம் என்றால் அதை யாரும் ஒடிப்போய்ச் சொன்னால் தான், அம்புலன்ஸ் வரும். இங்கு வாழ்வது என்பது, மரணத்துடனான போராட்டம் தான்.  

 

உள்ளே சாராய வியாபாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. 900 ரூபாவுக்கு வெளியில் வாங்கும் சாராயம், உள்ளே 1500 ரூபா. உள்ளே கூட்டுறவு சங்கங்கள் முதல் பலவிதமான கடைகள், விலையோ அதிகம். பொருளை வாங்க எவரிடமும் பணமில்லை. உழைப்பில்லை, வருமானமில்லை. உள்ளே பணப்புழக்கம் கொண்டோர் பாடு கொட்டாட்டம். அனைத்தையும் விலை பேசி வாங்குகின்றனர். புலிகளின் வங்கி ஒன்றை உடைத்து அதில் பணத்தையும் நகையையும் அள்ளிய கும்பல் ஒன்று, பணத்துடன் உள்ளே அலைகின்றது.

 

நோய் கடுமையாகி வவுனியா பொது மருத்துவமனைக்கு சென்றால், மனிதத்தன்மையற்ற  வகையில்தான், அங்கு மருத்தவ ஊழியர்கள் இந்த மக்களை நடத்துகின்றனர். நாய்களாக, பேய்களாக, அகதிகளை நடத்துகின்றனர். இந்த அகதிகளிடம் கூட, பணத்தைக் கறக்க முனையும் வைத்தியர் உலகம். பணப் பிசாசுகளே, எங்கும் அலைகின்றனர். 

 

வைத்திய கலாநிதிகளோ அகதிகளை, வெளியில் தம் தனியார் மருத்துவமனைக்கு பணத்துடன் வரும்படி நச்;சரிக்கின்றனர். பணம் இல்லாதவர்களை, அரையும் குறையுமாக மருத்துவம் பார்த்து, அவர்களை வருத்தியே கொல்லுகின்றனர். ஒரு சில மனிதாபிமான மருத்துவர்கள் செயலைக் கூட, இந்த பணப் பேய்கள் செல்லாக் காசாக்குகின்றனர். இப்படி எங்கும் எதிலும் மனித அடிப்படையை தகர்த்து விடுகின்ற, காட்டுமிராண்டித்தனங்கள்.

 

இப்படி பாதிக்கப்பட்ட மக்களின் மேலான ஈவிரக்கமற்ற தண்டனைகள். நாலு வேலிக்குள் வைத்து விலை பேசப்படும் மக்கள் கூட்டம். எத்தனை துயரங்கள், துன்பங்கள். இவை எல்லாம் எதற்கு? இனி இந்த மக்கள் வாழ்ந்த பிரதேசத்துக்கு என்ன நடக்கப் போகின்றது!?

 

இன்று உலகம் தழுவிய வகையில் பெரும் பண்ணைகளை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன்னிநிலம் கொடுக்கப்படப் போகின்றதா!? இங்கு சிங்களக் குடியேற்றமல்ல, பன்னாட்டு நிறுவனங்களின் குடியேற்றம்; நிகழப்போகின்றது என்ற அச்சம், இன்று எதார்த்தமாக உள்ளது. தேசத்தை அன்னியனுக்கு விற்பதுதான், பேரினவாத அரசின் அரசியல் குறிக்கோள். இதைத்தான் சிங்களப் பேரினவாதம், அபிவிருத்தியின் பெயரில் செய்ய முனைகின்றது.

 

பி.இரயாகரன்
24.06.2009


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ