Language Selection

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

 

தமிழனை தெய்வமாக மதித்திருப்பார்கள். 1971, 1989-1990 தங்கள் குழந்தைகளை இந்த இராணுவத்திடம் பறிகொடுத்த மக்கள், அதை பழிவாங்க உன்னுடன் சேர்ந்து நின்றிருப்பார்கள். ஆனால் நீ இன்னமும் சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்டுவது நிற்கவில்லை. உனது ஆட்டம் முடிந்து விட்டது, நிற்பாட்டு. நீயே தமிழனுக்கே எதிரானவன். அதையே உன் வரலாறாக நிறுவியிருக்கின்றாய்.   
 
நீ வேறு, தமிழன் வேறு. அது போல் சிங்கள மக்கள் வேறு, சிங்கள அரசு வேறு. உன்னுடைய குறுந்தேசிய தமிழ் இனவெறியை, தமிழர்களின் உணர்வாக காட்ட முனைகின்றாய். தமிழ் தேசிய உணர்வுக்கும், உன்னுடைய இனவெறி உணர்வுக்கும் இடையில் உள்ள மெல்லிய இடைவெளியை கொண்டுதான், தமிழினத்தையே நீ அழித்தவன்.

 

இப்படிப்பட்ட நீ தான் சொல்லுகின்றாய், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழனின் எதிரி என்று. இப்படிக் கூறி தமிழினத்தையே அழித்துவிட்டு, அதைப் பற்றி எந்த சூடுசுரணையுமற்ற நீ, எந்த குற்றவுணர்வுமற்ற நீ, தமிழனின் எதிரி சிங்களவன் என்கின்றாய். தொடர்ந்து இப்படிச் சொல்லி, நாய்ப் பிழைப்பு பிழைக்க முனைகின்றாய்.

 

ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் போல், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களும் உனக்கு முன்னால் எதிரிதான். இதனால் தான், அவர்களை தமக்குள் எதிரியாக நீ சித்தரிக்கின்றாயே ஒழிய, அவர்களல்ல.

 

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக, நீ எப்போது தான் இருந்து இருக்கின்றாய். வர்க்க ரீதியாகவும், சமூகரீதியாகவும், தமிழ் மக்களை தமிழன் ஒடுக்கியதை நீ எப்போதாவது உணர்ந்திருக்கின்றாயா!? உனது குறுந்தேசியம், அதைக் களைய முனைந்திருக்கிறதா!? இல்லை. தமிழன் மேலான தமிழனின் வர்க்க ஒடுக்குமுறையையும், சமூக ஒடுக்குமுறையையும் பாதுகாத்து, தமிழ் மக்களை ஒடுக்கியதே உனது குறுந்தேசியம் தான்.

 

உனது இந்தக் குறுந்தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையே ஒடுக்கியதல்லவா. இப்படிப்பட்ட உன்னால் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிச் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது. அவர்களை எதிரியாக காட்டுவதைத் தவிர, வேறு அரசியல் எதுவும் உன்னிடம் கிடையாது. இதுதான் உலகறிந்த  உண்மை.

 

ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்ட, நீ சம்பவங்களை காட்டுகின்றாய். சாதாரண சிங்கள மக்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள், உன்னால் உன் செயலால் அவர்கள் மேல் திணிக்கப்பட்டது.

 

நீ அப்பாவி மக்கள் பயணம் செய்யும் பஸ்சில் குண்டு வைத்ததால், அவர்கள் பஸ்சைக் இயல்பாக கண்காணிக்கின்றனர். அப்பாவிக் கிராமங்கள் மேல் தாக்குதலை நடத்தியதால், கிராமங்களைக் கண்காணிக்கின்றது. அப்பாவி மக்கள் மேலான தாக்குதல்கள், இயல்பாக மக்களின் கண்காணிப்பாகவும், விழிப்புணர்வாகவும் மாறுகின்றது.

 

உன்னைப்போல் இனவெறி கொண்ட சிங்கள உதிரிகள், இதைப் பயன்படுத்தி தமிழ்மக்கள் மேல் அத்துமீறினர். உனக்கு தமிழ் மக்கள் எப்படி பயந்து ஒடுங்கினரோ, அதுபோல் சிங்கள இனவெறி காடையருக்கும், சிங்கள மக்கள் பயந்து ஒடுங்கினர்.

 

அப்பாவி மக்கள் மேல் நீ நடத்திய தாக்குதலின் விளைவுதான் இது. இதை நீ செய்து விட்டு, அவர்கள் தமிழனை இப்படி அணுகுவதாக குற்றம் சாட்டுவது, வேடிக்கையானது. நீ தான் இதில் முதல் குற்றவாளி.

 

நீ சிங்கள அப்பாவி மக்களை பாதுகாத்தபடி, இராணுவ இலக்குகள் மேல் தாக்குதலை நடத்தியிருந்தால், சிங்கள மக்கள் தமிழனை இப்படிக் கண்காணிக்க மாட்டார்கள்;. அப்பாவி சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல் தான், ஒடுக்கப்பட்ட மக்களை அரசின் பின் நிற்பதற்கு வலிந்து இட்டுச் சென்றது. தவறு உன்னுடையதே ஒழிய, அப்பாவிகளான அவர்களுடையதல்ல.

 

இதைப்போல் அரசு அப்பாவி தமிழ் மக்களைத் தாக்கியதன் மூலம், தமிழ் மக்களை உன் மக்கள் விரோத பாசிசத்தின் பின் வாழ வைத்தது. இதே செயலைத்தான் அங்கு நீ செய்தாய். கொஞ்சம் அசந்தால் நீ அப்பாவி சிங்கள மக்களை கொன்றுவிடுவாய் என்ற உண்மை, தமிழன் மேலான சிங்கள மக்களின் பொதுக் கண்காணிப்பாக மாறியது. அந்த மக்கள் சூதுவாது தெரியாத அப்பாவிகள்.

 

நீங்கள் மாபெரும் பாசிசக் கிரிமினல்கள். சிங்களப் பேரினவாத பாசிசப் பயங்கரவாதத்தைப் போன்று, தமிழ் குறுந்தேசிய பயங்கரவாதத்தை சிங்கள மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டவர்கள் நீங்கள். தமிழ் மக்களின் பெயரில், தமிழ் மக்களுக்கு எதிராக நீங்கள் செய்த மன்னிக்க முடியாத குற்றங்கள் இவை.

 

இப்படி உங்கள் குற்றங்களையும், தவறுகளையும், வக்கிரங்களையும், சிங்கள அப்பாவி மக்கள் மேல் ஏவிவிட்டு, அதன் விளைவைக் காட்டி தமிழனுக்கு எதிரானது என்று கூச்சல் போடுவதால் எந்த உண்மையும் பொய்யாகிவிடாது.

 

சிங்கள மக்கள் மேல் தாக்குவதை விடுத்து, சிங்கள பேரினவாத அரச பாசி;ச இயந்திரத்தை எதிர்கொண்டு போராடியிருக்க வேண்டும்;. யுத்தத்தை சிங்கள அப்பாவி மக்கள் மேல் நடத்துவதல்ல. முஸ்;லீம் மக்கள் மேல் நீங்கள் எதை செய்தீர்களோ, அதையே சிங்கள மக்கள் மேல் ஏவியவர்கள்.

 

பின் சிங்கள மக்களை எதிரியாக சித்தரித்து, அவர்களை தமிழ் மக்களின் எதிரியாக கொண்டு வந்து நிறுத்தியவர்கள் நீங்கள் தானேயொழிய மக்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ் சிங்கள மக்கள், தமக்குள் எதிரிகளல்ல. உங்களைப் போல் இனவாதத்தை உள்வாங்கியவர்கள் தான், அப்படிக் காட்டினர், நடத்தினர். உண்மையான தேசியம் மக்களை எதிரியாக பார்க்கவில்லை. ஏன் அது அப்படி பார்க்காது. தமிழ் குறுந் தேசியமும் - சிங்கள பெருந் தேசியமும், புலி - அரசு வடிவில் இருந்ததே ஒழிய, எந்த மக்கள் மத்தியிலும் அந்த உணர்வு இருக்கவில்லை.

 

இதனால் தான் சிங்கள மக்களுடன் பல இலட்சம் தமிழ் மக்கள் சேர்ந்து வாழமுடிகின்றது. அவர்கள் மத்தியில் இனவெறுப்புணர்வில்லை. உங்கள் செயலால் ஏற்பட்ட மக்கள் கண்காணிப்புதான், அவர்கள் மத்தியில் சில இடைவெளியை உருவாக்கியது. இது உங்கள் நடத்தையால் உருவானது.

 

சிங்கள பேரினவாதமும், தமிழ் குறுந்தேசியமும் ஒடுக்கப்பட்ட மக்களை பிளந்து, அதில் குளிர் காய்ந்தது, காய்கின்றது. உண்மையில் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, தமிழ் குறுந்தேசியம் இருந்தது. அதுபோல் சிங்கள பேரினவாதமும், சிங்கள ஒடுக்கப்;பட்ட மக்களுக்கு எதிரானதாக இருந்துள்ளது.

 

இது தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து வாழக் கூடாது என்பதில், அது கையாண்ட வழிமுறைகள் தான், இனவொடுக்குமுறையில் பல வடிவங்களாக வெளிப்பட்டது. இந்தப் பேரினவாத அரசு 1971, 1989-1990 பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்ததுபோல், தமிழரையும் கொன்று குவித்தது. இப்படி தமிழ் சிங்கள மக்களின் எதிரியை, பொதுமைப்படுத்தி பார்க்கமுடியாத எந்த அரசியலும் மக்களின் விடுதலைக்கானதல்ல. அந்த மக்களை ஒடுக்குவதற்கானது. இதுதான் எம் கடந்தகால வரலாறு.

 

பி.இரயாகரன்
20.06.2009
   
              

 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ