Language Selection

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

 

சிங்கள அரசு தான் உன் எதிரி. சிங்கள மக்கள் அல்ல. இந்த வேறுபாட்டை எப்போதாவது உன் வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? தமிழனை, முஸ்லீமைக் கூட, எதிரியாக்கியவன் அல்லவா நீ. ஏன் உன் சிந்தனை, நடைமுறை எல்லாம் அதுவாகவே இருந்தது. அதைத்தான் தேசியத்தின் பெயரில் புலித் தேசியம் உனக்கு, உன் சிந்தனையாக ஊட்டியது.    

 

துரோகிகள், கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் மக்களின் எதிரியான சிங்கள அரசுடன் கூடி நிற்கின்றானே ஒழிய, உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் அல்ல. நீ ஏன் உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் நிற்க முடியாது!?

 

இதைப் புரிந்து கொள்ளாத மூடனாய், குறுந் தமிழினவாதம் கொப்பளிக்க, சிங்களவனுடன் வாழமுடியாது என்று ஏன் தர்க்கம் செய்கின்றாய். இப்படி மற்றவனுடன் சேர்ந்து வாழமுடியாது என்று கூறும் உன் சிந்தனை, உள்ளடக்கத்தில் நீ அவனுக்கு எதிராக முதலில் இருக்கின்றாய் என்பதுதான் உண்மை. இப்படி சேர்ந்து வாழ நீ மறுக்கின்றாய் என்பதே, வெளிப்படையான உண்மை. இதை மறுக்க, நான் அல்லாத அவன் பற்றிய எதிர்மறை கற்பனைகளை, நாம் எமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம்.

 

இப்படி எதிரி யார் என்ற உன் குழப்பம், அனைவரையும் உனக்கு எதிரியாக்கின்றது. இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள், தமக்குள் தாம் எதிரியாகக் கருதியே வாழ்கின்றனர். உன்னுடைய வீட்டில், உன்னுடைய உழைப்பில் அவன் வாழ்வதில்லை. உன்னுடன் நிற்பதாக கூறி உன் உழைப்பைச் சார்ந்து தின்னும் சக மனிதன் போல், அவன் உன் உழைப்பை புடுங்கி தின்ன முனைவதில்லை.

 

அப்படியிருக்க அவன் எப்படி உன் எதிரியானான்!? இதைச் சொல்பவன் தான், இதை செய்ய முனைபவன் தானே, உன் எதிரி. நீ மற்றவனை ஒடுக்கவும், சுரண்டவும், நினைக்காத வரை உனக்கு எதிரி யாரும் கிடையாது. அப்படியிருக்க நீயாக எதிரியை, ஏன் உனக்குள் கற்பனையில் உருவாக்குகின்றாய்.

 

சிந்தித்துப் பார். ஒடுக்கப்பட்ட அப்பாவி சிங்கள மக்களா உன்னை ஒடுக்கினார்கள் அல்லது பேரினவாத அரசா ஒடுக்கியது? கண்ணை மறைக்கும் இனவாதம், உன் சிந்தனையை தலைகீழாக்கியுள்ளது. ஏன் இந்த மட்டமான உன் சிந்தனையே தான், தமிழ் இனத்தை அழித்துள்ளது.

 

யார் ஓடுக்குகின்றான்!? தாழ்ந்த சாதியை நீ ஒடுக்க நினைக்கின்றாயா? அவனை உனக்கு கீழ்ப்பட்ட ஒருவனாக எண்ணுகின்றாயா? இழிவாக பார்க்கின்றாயா? அவனின் உழைப்பை இழிவுபடுத்துகின்றாயா? சுரண்டுகின்றாயா? இதை கண்டு கொள்ளாமல் இருக்க முனைகின்றாயா? இங்கு நீ ஒடுக்கு முறையாளன். இப்படித்தான் இந்த விடையத்தை ஆராய வேண்டும்.

 

இப்படி ஒடுக்குமுறையை எனக்குள் நான் தக்க வைத்துக்கொண்டு, மற்றொரு ஒடுக்குமுறையைப் பற்றி பேசும் அருகதை கிடையாது. இதைத்தான் கடந்த காலத்தில் செய்தோம். இதன் மூலம் தவறாக எதிரிகளை உருவாக்கினோம்.

 

சிங்களவன் என்று அனைத்து சிங்கள மக்களையும் பொதுமைப்படுத்தி, தமிழ் (புலித்) தேசியம் தனக்கு எதிரியாக அவர்களை காட்டியது. அதேநேரம், அதே தேசியம் தமிழ் மக்களை ஒடுக்கியது. இப்படி தமிழ் மக்களை ஒடுக்க, சிங்கள மக்களை தனக்கு எதிரியாக காட்டியது. உனக்கு அதை மூளைச்சலவை செய்து திணித்தனர்.

 

ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் வேறு, பேரினவாத அரசு வேறு. இதை மறுத்த குறுந்தேசியம், அனைத்தையும் ஒன்றாக்கியது. அனைவரையும் எதிரியாக சித்தரித்தது. இப்படி உருத்திராட்ச மாலையை கையில் வைத்து உருப்போட்ட 30 வருட புலிச் சிந்தனை முறை, தாம் அல்லாத அனைத்து மக்களையும் எதிரியாக பார்த்தது, பார்க்க வைத்தது. இதுதான் அறிவிழந்த, பகுத்தறிவற்ற, உனது சிந்தனை முறை.

 

இப்படி சிங்கள மக்களை, முஸ்லீம் மக்களை, கிழக்கு மக்களை, தான் அல்லாத தாழ்ந்த சாதிகளை என்று, எல்லோரையும் எதிரியாக காட்டியது. இவர்களை தம்மில் இருந்து விலக்கி, அவர்களுக்கு எதிராக இருக்கவும் பார்க்கவும் சிந்திக்கவும் செயல்படவும் முனைவதே தமிழ் தேசியம் என்றனர். இல்லை என்கின்றீர்களா!?  இப்படி எம்மைச் சுற்றி இல்லாத எதிரிகளை கற்பித்து, பலரை எம் மக்களுக்கு எதிரியாக்கியவர்கள், நண்பர்களை உருவாக்கவில்லை. மாறாக எதிரியாக இருக்காதவனைக் கூட, வலிந்து எம்மக்களின் எதிரியாக்கினர்.

 

சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை, ஏன் இந்த பேரினவாத அரசு ஒடுக்குகின்றது!? அவர்கள் பற்றி எமது சொந்த அறிவுசார் நிலைப்பாடுதான் என்ன!? அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்!? எதிரியின் எதிரியை வென்றெடுக்க, நாம் ஏன் முனையவில்லை!? ஏன் அப்படி சிந்திக்கவும், செயல்படவுமில்லை!? எம்மை எது எப்படி தடுத்தது!?

 

இப்படி நண்பனை எதிரியாகவே பார்த்த தவறு எம்முடையது. அப்படியே இன்றும் பார்க்கின்ற குறைபாடு எம்முன்னுள்;ளது. இது எம் அறிவுசார், பகுத்தறிவுசார் குறைபாடாகும்.

 

அவன் என்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பது இரண்டாம் பட்சமானது. நாம் அவனைப்பற்றி என்ன நினைக்கின்றோம் என்பது, முதன்மையானது. நாம் சரியாக இருக்கும் போதுதான், அவனும் சரியாக இருப்பதை நாம் உணர முடியும்.

 

எந்த அப்பாவி சிங்கள மக்களும், தன்னையொத்த தமிழனை கொல்வதை ஆதரிப்பதில்லை, சுரண்ட நினைப்பதில்லை. ஆனால் நாங்கள் அப்படியா சிந்திக்கின்றோம். முஸ்லீம் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் புடுங்கிய பின், அவர்களை வடக்கில் இருந்து புலிகள் துரத்திய போது, பெரும்பான்மை தமிழ்மக்கள் என்ன நினைத்தார்கள்!? அதை நியாயப்படுத்த, முஸ்லீம் மக்கள் பற்றிய உனது இழிவான அறியாமை சார்ந்த தர்க்கங்களை எல்லாம், இன்று நீ சுயவிமர்சனம் விமர்சனம் செய்தாயா?

 

உனக்குள் இருக்கின்றது, நீயல்லாத மக்கள் பற்றிய வெறுப்புணர்வு. இதை நீ  களைவது தான், உனது வெற்றிக்கும், சமூகத்தின் வெற்றிக்குமான முதற்படியாகும்.

 

உன்னிடமுள்ள தப்புகளையும், தப்பபிராயங்களையும் களைவதன் மூலம், தவறுகளில் இருந்து நீயும் மக்களும் மீளமுடியும். இதன் மூலம் உரிமைகளை பெறுவதற்கான அரசியல் பலத்தை, உனக்குள்ளும் எம்மைச் சுற்றியும் ஒருங்கிணைக்க முடியும். இதைத்தான் நீ செய்கின்றாயா என்பதை, உன்னை நீயே கேட்டுப்பார். தமிழ் மக்களுக்காக முதலில் நீ செய்யவேண்டியது, உன்னிடமுள்ள தவறுகளை இனம் காண்பதும், அதை களைவதும் தான்.

 

பி.இரயாகரன்
17.06.2009

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ