Language Selection

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம்.  

ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களையும், ஓடுக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் சார்ந்து நின்று போராட மறுக்கும் வலதுசாரிய புலிப் பாசிசம், நாடு கடந்த தமிழீழ புலுடாப் பிரகடனத்தைச் செய்கின்றது.

 

கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்த கும்பல், இன்று இதன் மூலம் தாம் வாழ நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

 

இதன் மூலம்

 

1. புலத்தில் பினாமிகளின் பெயரில் உள்ள பாரிய புலிச் சொத்துகளை, புலித் துரோகிகள் தமதாக்க புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

 

2. தொடர்ந்தும் புலத்து மக்களை ஏமாற்றி, அவர்களிடம் பண அறுவடை செய்ய இந்த புலுடா தமிழீழப் பிரகடனம் உதவும் என்று நம்புகின்றனர்.

 

3. புலத்தில் தம் பாசிச அதிகாரத்தைக் தக்க வைக்க, அதைக் கொண்டு சமூகத்தை அடக்கிவைக்க, நாடு கடந்த புலுடாத் தமிழீழம் உதவும் என்று நம்புகின்றனர். 

 

4. புலித் தலைவரோ தன் மண்டையை தானே கொத்தக் கொடுத்து இறந்து விட்டார் என்பதை, மெதுவாக பலரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இனியும், புலத்து புலிக்கு  தலைவர் கைகொடுக்கமாட்டார் என்ற அவலம். ஆகவே நாடு கடந்த தமிழீழம் மூலம், தமது வலதுசாரிய பாசிச அரசியல் இருப்பை தக்கவைக்க முனைகின்றனர்.

 

5. புலுடாத் தமிழீழப் பிரகடனம் மூலம், மக்களின் சுயமான சொந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்த இது உதவும் என்று கருதுகின்றனர். இதன் மூலம் மக்களை தமது சொந்த பாசித்துக்கும், இலங்கை அரச பாசிசத்துக்கும் அடிமையாக தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று நம்புகின்றனர்.

 

இப்படி தமிழனை தொடர்ந்து ஏமாற்றவும், அவர்களை அடிமையாக வைத்திருக்கவும், நாடு கடந்த புலுடாத் தமிழீழம் உதவும் என்ற நம்பிக்கையில் தான், புலத்து புலிகள் இதை பிரகடனம் செய்கின்றனர். 

 

கடந்த காலத்தில் தமிழ் மக்களை அடித்தும் உதைத்தும் சுட்டும் பந்தாடிய புலிகள், அதற்காக ஒரு துளி கூட மனம் வருந்தியது கிடையாது. ஆனால் அந்த மக்களின் பெயரில் நாடு கடந்த தமிழீழப் பிரகடனம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையே, ஒடுக்கியவர்கள் இந்தப் புலிகள்.  உலக மக்களை ஒடுக்கியவர்களுடன் சேர்ந்து தமிழீழம் என்றவர்கள், தம் சொந்த தலைவனுக்கே துரோகம் செய்தவர்கள், இன்று மீண்டும் இந்த புலுடாப் பிரகடனத்துடன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யப் புறப்படுகின்றனர். 

 

இவர்கள் காட்டிக் கொடுக்காமல் புலித் தலைவர் சரணடையவில்லை. இவர்களின் காட்டிக்கொடுப்பின்றி, தன் உயிரை பிரபாகரன் இவ்வளவு இழிவான முறையில் இழந்திருக்க முடியாது. இவை எல்லாவற்றையும் திரைமறைவில் கன கச்சிதமாக செய்து முடித்தவர்கள் தான் இவர்கள். தாம் என்ன செய்தனர் என்பதையோ, என்ன நடந்தது என்பதைக் கூட, இந்த துரோகிகள்  தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை. தம்மைச் சுற்றியுள்ள புலிச் சொத்தை, பினாமிகளிடமிருந்து பாதுகாக்க நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

 

தமிழ் மக்களின் பெயரில், மீண்டும் தமது வலதுசாரிய பாசிச வழியில் கொக்கரிக்க முனைகின்றனர். மண்ணில் மக்களை படாத பாடுபடுத்தி அழித்தவர்கள், அதன் மூலம் தங்கள் சுக போகங்களை அனுபவித்தவர்கள், தம் சொந்த அழிவின் மூலமே தாமாகவே அழிந்து போனார்கள். அந்தக் பாசிசக் கும்பலின் புலத்து எடுபிடிகளும், பினாமிகளும், உழையாது கிடைத்த சுகபோக வாழ்வை அனுபவிக்கவே இந்த நாடு கடந்த புலுடாத் தமிழீழத்தை பிரகடனம் செய்கின்றனர்.

 

தமிழ் மக்கள் நலனே உங்கள் அரசியல் என்றால், நீங்கள் அந்த மக்களுக்கு எதிராக செய்த  கொடுமைகளுக்கு பகிரங்கமான மன்னிப்பைக் கோருங்கள். அந்தப் பாசிச புலி அரசியலை வெளிப்படையாக அறிவித்து, அதைக் கைவிடுங்கள். அந்த மக்களை சுயமாக, தம் சொந்தக் காலில் சுயாதீனமாக போராட வழிவிடுங்கள். நீங்கள் உங்கள் வலதுசாரிய புலி அரசியலை விட்டுவிடுங்கள். ஆயுதத்தைக் கைவிட்டதாக கூறும் நீங்கள், உங்கள் பாசிச புலி அமைப்பையும் கலைத்து விடுங்கள். அதுமட்டும் தான், தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்மை. தமிழ் மக்கள் சுயமாக, தங்கள் விடிவிற்காக போராடும் புதிய அரசியல் வழிக்கு இது உதவும்.

 

உங்கள் வலதுசாரிய புலிப்பாசிசம், தமிழினத்தை அழித்தது என்பதே எமது கடந்தகால வரலாறு. இன்னும் எஞ்சிய தமிழனையும் அழிக்கவா, இந்த நாடு கடந்த புலுடா தமிழீழப் பிரகடனம். 'நாய்க்கு ஏன் போர் தேங்காய்". தமிழனை நீங்கள் அழித்தது போதும். உங்கள் அரசியலை கைவிடுங்கள். உங்கள் வலதுசாரிய பாசிச அமைப்பைக் கலையுங்கள். மக்கள் தங்கள் சொந்த அரசியல் வழியை, சுயமாக தேர்ந்தெடுக்கவும் போராடவும் வழிவிடுங்கள்.

 

பி.இரயாகரன்
17.06.2009  
 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ