Language Selection

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

 

தமிழ்மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். எம் மண்ணில் சுயாதீனமான எந்த செயல்தளமும் மக்களுக்காக கிடையாது. பெரும்பாலாவைகளை புலிகள் அழித்தனர். எஞ்சியதை அரசு அழித்துள்ளது. மக்களின் ஓப்பாரிக்கு வெளியில், அவர்களுக்கு வாழ்வில்லை. இது எதார்த்தம்.

 

இன்று அண்டை அயலவரின் சுகதுக்கத்தைக் கூட விசாரித்தால், அச்சமூட்டும் வண்ணம் கண்காணிப்பும்,  தண்டிக்கப்படும் அவலநிலையும். இன்று தமிழப்; பாசிசத்தின் இடத்தில், அரச பாசிசம் குடிகொண்டுள்ளது. இன்று கூலிக்குழுக்களுக்கு வெளியில், தமிழ் அரசியலுக்கு இடமில்லை. அங்கு எந்த சுதந்திரமுமில்லை.

 

புலம்பெயர்ந்த சமூகத்தில் பேராட்டத்தை சொல்லி வாழ்ந்த கூட்டம், தலைவரின் பெயரால் தன்னை தக்கவைக்க முனைகின்றது. பழைய அதிகாரம் மூலம், தமிழ் மக்களை சுருட்டி வாழ எண்ணுகின்றது. புலியெதிர்ப்புத் தளத்தில், அரச உளவாளிகள் புழுத்து வருகின்றனர். மறுதளத்தில் அரசியல் நீக்கம் செய்த நடுநிலை வேஷத்துடன், மறுபடியம் கும்மியடிக்க பலர் புதிய வழிகளைத் தேடுகின்றனர்.

 

யுத்த உளவியலும், புலித் தலைமையின் படுகொலை சார்ந்த உளவியலும், பலரை திகிலடையவைத்துள்ளது. செய்வதறியாது திணற வைத்துள்ளது. கண்மூடித்தனமான  உணர்ச்சியின் எல்லையில் பலர். அடுத்து என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றனர். வேகமான மாற்றங்கள் பற்றி, குட்டிபூர்சுவா மனநிலையில்; சிலர் மிதக்கின்றனர்.

 

வேறு சிலர் இனி என்ன 'உங்கடை' புலிப்பாசிசம் முடிந்துவிட்டதே, நீங்கள் இனி என்ன செய்யப் போகின்றீர்கள் என்று தம் பாசிச சிந்தனை செயல்முறையில் நின்று சீண்டுகின்றனர். தாங்கள் ஏன் தோற்றோம் என்று, குறைந்தபட்சம் நேர்மையாக இதைத் திரும்பிப் பார்க்கக்கூட அவர்கள் தயாராகவில்லை. தாம் அல்லாத புறநிலைக் காரணங்களை காட்ட முனைகின்றனர் (தனிக்கட்டுரையாக அதைப் பார்ப்போம்)

 

வேறு சிலர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்வது என்கின்றனர். அதற்கு உதவுவதே உடனடிக் கடமை என்கின்றனர். பேரினவாத வதைமுகாமில் சித்திரவதை செய்யப்;படும் உயிர்கள் பற்றி, திடீர் கரிசனை கொள்கின்றனர். இப்படி எம்மைச் சுற்றி பற்பல முகங்கள்.

 

என்ன செய்ய வேண்டும்?

 

மக்களுக்காக நாங்கள் கடந்தகாலத்தில் எதைச் செய்து வந்தோமோ, அதையே தொடர வேண்டும்;. நாங்கள் புலி மற்றும் அரச பாசிசத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், இன்று அரச பாசிசமாக மட்டும் மாறிவருகின்றது. சில சூழலிலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனத்தில் எடுத்து, இதற்குள் போராடவேண்டியுள்ளது. இதற்கு வெளியில் எந்த அதிசயமும் நடவாது. அதற்கு மக்கள் தயாராகவில்லை.

 

என்ன செய்யவேண்டும்? மக்களுக்கான அரசியலை முன்னிறுத்தி, நாம் தனித்து நடத்திய போராட்டம்தான், உங்கள் முன் முன்னுதாரணமாக உள்ளது.  இன்று குறைந்தபட்சம் இதைத் தவிர மாற்றாக வேறு ஒன்றுமில்லை என்பதை, பலரைக் கொள்கையளவில் ஏற்க வைத்துள்ளது. நாங்கள் சொன்னதே உண்மை, அதுவே சரியான பாதை என்பதை, அவர்களுக்கு அவர்களின் அனுபவம் கற்றுத் தந்துள்ளது.

 

நாங்கள் இந்தப் போராட்டத்தை தனித்து நடத்தியபோது, பைத்தியம், லூசு, மனநோயாளி என்று பலர் எம்மைத் தூற்றினர். இதையெல்லாம் மீறி நாம் சரியாக இருந்ததையும், சொன்னதையும், நடந்து முடிந்துவிட்ட இனத்தின் அழிவு அனுபவமாக சொல்லி நிற்கின்றது. இதற்கு ஒரு பெரும் விலையை, ஒரு இனம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. எம் உண்மையை பைத்தியங்களின் புலம்பலாக காட்டி, ஒரு இனத்தையே அழித்தனர். அவர்கள் அனுபவம், எங்கள் உண்மையாக இருப்பது பலருக்கு இன்று உறைக்கின்றது.

 

இந்தக் கணத்திலும் நாங்கள் எங்கள் மக்களுக்கான போராட்டத்தை நிறுத்தவில்லை. எம் மக்களுக்கான போராட்டத்தையும், நடத்தவேண்டிய அரசியல் பணியையும் தனித்தே தொடருகின்றோம். இந்த மாற்றம் எம்மை அதிரவைக்கவில்லை. புலிகளின் அழிவு, நாம் முன்பே கூறியதொன்று.

 

எம் அரசியல் போராட்டத்தில், இந்த நிகழ்வு ஒரு குறுக்கீடு மட்டும்தான். இன்று புலிகள் இல்லை என்பதானது, சமூகத்தின் முன் இருந்த மாயைத் திரை கழன்று வீழ்ந்துள்ளதற்கு ஒப்பாகும்.

 

புலிகள் என்ற மாயை இல்லாத புதிய சூழல்

 

புலிகள் மாயை தகர்ந்து வருகின்றது. எம்முன் இருந்த சுவர் இல்லை. ஆனால் எல்லையற்ற பரந்த பாலைவானமே உண்டு. பாலைவனத்தில் இருந்த புல்  பூண்டுகளைக் கூட, இவர்கள் யாரும் விட்டுவைக்கவில்லை. பாலைவனத்தைக் கடத்தல் என்பது, மிக இலகுவானதல்ல. வரண்டு போன வெளியில், நாம் பயணத்தை தொடக்க வேண்டியுள்ளது. இதை நாம் எதிர்கொண்டு சந்திப்பதைத்தவிர, வேறு எந்த வழியும் எம்முன் கிடையாது.

 

இந்த நிலையில் எம்மக்களின் உரிமைகளை வென்று எடுத்தல் என்பது, பல அரசியல் பணிகளை ஒருங்கிணைக்கும் வண்ணம் அமைந்தவை. அந்த வகையில்

 

1. வர்க்கக் கண்ணோட்டத்திலான சிந்தனைமுறையையும், போராட்டமுறையையும் எம் சொந்த மண்ணில் உருவாக்குவது அவசியம்.

 

2. புலம்பெயர் நாட்டில் வர்க்கக் கண்ணோட்டத்திலான சிந்தனைமுறையையும், போராட்ட முறையையும் உருவாக்குவது அவசியம். இங்குள்ள வர்க்க அமைப்புகளுடன் இணைந்த போராட்டம் அவசியமானது.

 

3. கருத்தியல் தளங்களில் வர்க்கச்சிந்தனைமுறை ஊடாக, சமூகத்தை பார்க்கும் கருத்து அடிப்படையை உருவாக்குதல். அதாவது அறிவுத்தளத்தை மக்கள் நேசிக்கும் வர்க்க அடிப்படையாக மாற்றுதல், வெல்லுதல்.

 

4. ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம் மலையக முன்னேறிய சமூகப் பிரிவுக்கு இடையில், சமூகஒடுக்குமுறையைப் பற்றிய பொது அரசியல் உடன்பாட்டை கொள்கையளவில் முதலில் ஏற்படுத்தல்;. பொதுக் கலந்துரையாடல்களை, விவாதங்களை  உருவாக்குதல். இணக்கமான சமூகசெயல்பாட்டை உருவாக்குதல்.

 

5. சர்வதேச ரீதியாக, ஒடுக்கப்பட்ட சமூக முன்னோடிகளுடன் உறவுகளை உருவாக்குதல்.

 

6. உலகம் முதல் இலங்கை வரை, மக்களைச் சார்ந்து நிற்கும் செயலை ஆதரித்து, ஊக்கப்படுத்தி அதை செயற்படுத்தல்.

 

இந்த அடிப்படையில் மட்டும் தான் முன்முயற்சி உள்ளதும், மக்களுக்குமான குறைந்தபட்சமான சமூகக் கடமையை செய்வதற்குரிய அரசியல் அடித்தளத்தையிட முடியும். நாம் பாலைவனத்தில் எந்த ஆதாரமுமின்றி பயணத்தைத் தொடங்குகின்றோம்;. இது தவிர,   வேறுவழிகளில் எதையும் உருவாக்க முடியாது. பொறுமையாக இதை செய்வதைத் தவிர, வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது. இன்று பலரும் உணரும் இந்த உண்மைக்காக, நாங்கள் 25, 30 வருடங்கள் தனித்து போராட வேண்டியிருந்தது. இதுதான் இன்றும், எம்முன்னுள்ள ஓரே பாதை.

 

இதற்கு மாற்றாக எதையும் புதிதாக பிரதியீடு செய்யவில்லை. ஆகவே போராட்டம் தொடருகின்றது. மனித இனம் இருக்கும் வரை, போராட்டம் தொடரும்.

 

பி.இரயாகரன்
31.05.2009


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ