Language Selection

சரியான தலைமையால் அதை செய்திருக்க முடியும். தவறுகளை உடனுக்குடன் திருத்தக் கூடிய, தன் சுயவிமர்சனத்தைச் செய்யக் கூடிய எந்த தலைமையாலும் அதைச் செய்திருக்க முடியும். இது அரசியல் பண்பும், அரசியல் அடிப்படையும் இல்லாமையால் தான், புலிகள் தமது புதைகுழிக்குள் நின்று போரிட்டனர்.

தாம் தம் சாவு நோக்கி நகர்கின்றோம் என்று அவர்கள் தெரிந்து கொள்ளாது இருந்தனர். தமக்கு ஏன் இந்த நிலை என்று, தம் மரணம் வரை தெரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை. தலைவருக்கு வெளியில் யாரும் இதைப்பற்றி சிந்திக்க முடியாது என்பது இயக்க நடைமுறை.  

 

இன்றைக்கு இந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க, இதுவே தடையாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் தப்ப, அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்து போனது. இதை நாம் குறித்த அக்கால கட்டத்தில் தெளிவுபடுத்தி வந்தோம்.

 

ஒரு இனத்தின் மீதான அழிவு அரசியலை புலிகள் கையாண்டு வந்தனர். நாம் இதில் இருந்து மக்களை பாதுகாக்கவும், போராட்டத்தை சரியாக இட்டுச் செல்லவும்,  சில அடிப்படையான அரசியல் தெரிவுகளை முன்னிறுத்தினோம்.

 

இன்று அவற்றில் ஒரு சிலவற்றை திரும்பிப் பார்ப்பதன் மூலம் தவறுகளை இனம் காணவும், சுயவிமர்சனம் செய்யவும் உதவும்;. எதிர்காலத்திலாவது இது மக்களை சரியாக வழிநடத்த உதவும்.

 

புலிகள் மேலான நெருக்கடி தெளிவாகிய போது, புலம்பெயர் மற்றும் தமிழகத்தில் புலி சார்பு பிரிவினர் வீதிக்கு இறங்கினர். இப்படி இறங்கிய போது, அங்கு சிக்கியிருந்த மக்களைப்பற்றி  மக்கள் விரோத கோசத்துடன் தான் இறங்கினர். இதை கையில் எடுத்த ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை, புலியிடம் மக்களை விடுவிக்கும் படி கோரியது. புலி அதை மறுக்க, நொண்டிச்சாட்டுகளையே மீளமீளக் சொன்னார்கள். இதைப் பயன்படுத்தியே தான், இலங்கை முதல்  உலக நாடுகள் வரை புலியின் இறுதிப் போராட்டத்தை உலகம் முழுக்க அன்னியப்படுத்தினர்.

 

இந்த இடத்தில் நாங்கள் புலிகளிடம் அவர்களின் கோரிக்கையை மாற்றக்கோரினோம். மக்களை சர்வதேச சமூகம் பொறுப்பெடுக்க கோரும் வண்ணம், கோரிக்கையை முன்னிறுத்தக் கோரினோம். இதை எந்த நாடும் தட்டிக்கழிக்க முடியாது. ஒவ்வொரு மரணத்துக்கும் சர்வதேச சமூகத்தை பொறுப்பாக்க கோரினோம். இப்படி இதன் மூலம் ஆக்கபூர்வமான வழியில், உலகத்தை பதிலளிக்க வைத்திருக்கமுடியும்;. நாங்கள் மக்களை பொறுப்பெடுக்க முடியாது என்று, யாரும்  சொல்ல முடியாது. இதன் மூலம், பல ஆயிரம் மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்;. திறந்தவெளிச் சிறைச்சாலையை இல்லாததாக்கியிருக்க முடியும். புலிகளுக்கு இன்று ஏற்பட்ட கதியை தவிர்த்திருக்க முடியும். இப்படி பல விடையங்கள் நடந்திருக்கும்.    

 

நாங்கள் இதை முன்வைத்த போது, எம்மை எதிரியாக பார்ப்பதன் மூலம் சரியான அரசியல் வழிகளைக் கூட மறுதலித்து வந்தனர். இன்று இவைதான் அவர்களது சொந்த தற்கொலை அரசியலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

நாங்கள் இக்காலட்டத்தில் புலிகளின் இராணுவ யுத்த தந்திரத்தை மாற்றக் கோரினோம்.


1. முற்றுகையை உடைத்து,  இராணுவம் புலிகளிடம் கைப்பற்றிய பிரதேசத்துக்குள் மீள ஊடுருவக் கோரினோம்.


2. ஒன்றுக்கு மேற்பட்ட படைப் பிரிவுகளாக பிரித்து, இராணுவம் கைப்பற்றிய பின்னணி பிரதேசத்தில் இயங்கக் கோரினோம்.

 

இப்படி எதிரியின் முற்றுகைக்கு ஏற்ற பின்புலத்தை இல்லாததாக்கக் கோரினோம். எதிரிக்கு இப்பிரதேசம் புதிதானது கூட.

 

இவை எல்லாம் நிராகரிக்கப்பட்டது. மறுபக்கத்தில் நாம் இவற்றை வைத்ததன் நோக்கம் புலியின் வர்க்க அரசியலையும், அதன் நடத்தையையும் பாதுகாப்பதற்காக அல்ல.


மாறாக


1. மக்களை பாதுகாக்க


2. இதன் மூலம் தம் தவறுகளை திரும்பிப் பார்க்கும் அரசியல் சந்தர்ப்பத்தை இது வழங்கும் என்று கருதினோம்.

 

இப்படி நாங்கள் இவற்றை வைத்த போது, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்து, அதன் அடிப்படையில் நின்றே கோரினோம். இதை எப்போதும் எதிராகவே பார்க்கின்ற புலி அரசியல், எம்மை எதிரியாக முத்திரை குத்தி வந்தது. இந்த அடிப்படையிலேயே, எம் வரலாற்றில் பலர் கொல்லப்பட்டனர்.

 

நாங்கள் இலங்கை அரசை எம் மக்களின் வர்க்க எதிரியாக காட்டியதும், இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை எம் மக்களின் வர்க்க எதிரிதான் என்று கூறியது, புலியால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்தி செல்லக் கூடிய அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தனர்.

 

இதன் மூலம் தம்மை அழித்துக்கொண்டனர். தம் அழிவின் போது கூட, இதைத் திரும்பிப் பார்க்க மறுத்தனர்.   

 

இப்படி வழிகாட்ட சரியான தலைமையின்றி, தன் சவக்குழியையே தானே வெட்டி வைத்துக் கொண்டு மடிந்து போனது. இந்த துயரத்துக்கான காரணத்தை, உணர்ச்சிக்கு பதில் அறிவுபூர்வமாக பரிசீலிப்பதன் மூலம் தான் மக்களை சரியாக வழிகாட்டமுடியும். இதை செய்ய நீங்கள் தயாரா?  

 

பி.இரயாகரன்
19.05.2009


   

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ