Language Selection

முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.

 

ஆனால் அது வர்க்க முரண்பாடல்ல. சொந்த வர்க்கத்தின் அதிருப்திகள் தான், புலியை தோற்கடிக்கும் முரண்பாடாகியது. இதனால் தான், உள்ளிருந்து புலி தோற்கடிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகவில்லை. உள் (தனிமனித) முரண்பாடுகள் தான், புலிக்கு எதிரானதாக வெளிப்படுகின்றது. ஆனால் அது இன்று புலியின் அழிவாக மாறி நிற்கின்றது. தமிழ் மக்களின் எதிரி மூலம் அழிகின்றது.

 

இன்றைய இந்த நெருக்கடியில் பிரதான எதிரிக்கு எதிராக புலிகள் துரோகம் செய்யாது போராடினால், புலிகளின் இறுதி முடிவு என்பது அறுதியானதுதானதும், முடிவானதுமாகும்.

 

புலியைக் காப்பாற்றும் அரசியல்

 

புலியை பாதுகாக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை கேட்கும் புலி அரசியல் ஒருபுறம். இது தன் தியாகத்துக்கு பதில், துரோகத்தை செய்ய தலைகீழாக நிற்கின்றது. இதனால் இன்று தன் தலைமையில் சொந்த தியாகத்தையே மூடிமறைக்கின்றது. ஒரு துரோகத்தின் ஊடாக தன் தலைமையை காப்பாற்ற, தமிழ் மக்களின் பிணத்தையே தன் பின்னால் உற்பத்தி செய்கின்றனர். போராட விரும்பாதவர்களை தன் முன்னால் பலியிடுகின்றது. இதுதான் இன்று புலி அரசியல்.  
 
இதையே சிலர் மக்களைக் காப்பாற்றுவது என்ற பெயரால், புலியின் துரோகத்தையே தம் அரசியலாக முன்னிறுத்துகின்றனர். மக்களை காப்பாற்றுவதன் பெயரால், போராட விரும்பாதவர்களை மீட்பதன் பெயரால், அரசுடன் கூடி புலி செய்யும் துரோகம் தான், இன்று மக்களை மீட்கும் சரியான வழி என்று கூறுகின்றனர்.

 

இதற்காக புலியெதிர்ப்பு அரசியல், அரசுடன் தாம் கூடிச் செய்வதுதான் சரி என்கின்றனர். மற்றவர்கள் புதியஜனநாயக புரட்சி பற்றி பேசிக்கொண்டு, அரசுடன் புலி சேர்ந்து ஒரு துரோகத்தை செய்யக் கோருகின்றனர்.

 

இதை மூடிமறைக்கவே புதிதாக எந்தத் துரோகமும் புலிகள் செய்ய அதனிடம் எதுவும் கிடையாது என்கின்றனர். இப்படி கூறிக்கொண்டு, புலிகள் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை புதிய வடிவில் ஓடுக்குவதையே, மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் மறைமுகமாக முன் வைக்கின்றனர். புலிகளின் அரசியல் இருப்பு, இவர்களின் அரசியல் ஊடாகக் கோரப்படுகின்றது.

 

புலிகளின் துரோக இருப்புக்கு பதில், போராடி மடி என்று நாம் கோருவதை மறுக்க வைக்கும் வாதம் மோசடியானது. இதற்காக எம்மை திரித்து புரட்டிக் காட்டுகின்றனர். புலியின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் காப்பாற்றுவது பற்றி பேசுகின்றனர். போராடி மடி என்ற எமது கோசம், இவர்களின் திரிபுக்கு புறம்பாக இரண்டு விடையத்தைக் கோரியது.


1.மக்களை விடுவி


2. போராட விரும்பாதவர்களை விடுவி.

 

இந்த அடிப்படையில் தான், நாம் புலிகளின் அரசியல் இருப்பை இல்லாததாக்க, இந்த நெருக்கடிக்கு ஊடாக போராடி மடி என்ற கோசத்தை முன்வைத்தோம்.

 

இதை திரித்து புரட்டும் போது,


1. மக்களை விடுவி


2. போராட விரும்பாதவர்களை விடுவி

 

என்பதை, நாம் வைக்க தவறுவதாக காட்டியபடி, புலிகள் சரணடையக் கோரும் துரோகத்தை இதன் பெயரில் வைக்கின்றனர்.

 

இது வெறும் வலதுசாரி அரசியல் சார்ந்து, அது உருவாக்கிய இழப்பு மேல் கோரும் துரோக அரசியலல்ல. நாளை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் கூட இழப்புகளைக் காட்டி, இந்த அரசியல் தான் துரோகத்தை வழிகாட்டும்.         
 
இவர்கள் மக்களின் இழப்பு மீதும், போராட விரும்பாதவர்களின் மரணங்கள் மீதும், எமக்கு அக்கறை கிடையாது என்று முதலில் திரித்துப் புரட்டுகின்றனர். இப்படி காட்டியபடி தான், தம் கருத்துகள் அனைத்தையும் அள்ளித்தெளிக்க முடிகின்றது. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சிக்கு பதில், புலி அரசியல் பின்னால் நாம் நிற்பதாக திரித்துபுரட்டி கதை சொல்லமுடிகின்றது. விவாதத்தின் புள்ளியில், அதன் அரசியல் அடிப்படை மீது விவாதிக்காமல் நழுவுகின்றனர். இதை மூடிமறைக்க மக்களை காப்பாற்றுவது, புலிகளின் கீழ்மட்ட போராளிகளை மீட்பது என்று, புலியை துரோகம் செய்யக் கோரும் தத்துவத்துக்கு ஒப்பாரிப் பல்லவி பாடுகின்றனர்.

 

இலங்கை அரசின் இனவழிப்பை பாதுகாக்க முனையும் துரோக அரசியல்

 

இன்று மக்களை கொல்வது இனவழிப்பு அரசியல். அதை இந்த அரசியல் கோமாளிகள் திரிக்கின்றனர். இன்று மக்களின் மரணங்கள், அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில்தான் நடந்தது. புலிகள் புதுகுடியிருப்புக்கு வர முன், அங்கிருந்து சண்டை செய்யவில்லை. சண்டை நடைபெறாத இடத்தில் வைத்துத்தான், பெருமளவிலான மக்களை இந்தப் பேரினவாதம் கொன்றது.

 

இப்படி தமிழ்மக்களை கொன்றும், மிரட்டியும் தனக்கு அடிபணியக் கோருகின்றது. யுத்தமுனைக்கு வெளியில் மக்கள் கொல்லப்பட்டனர். புலிச் சந்தேக நபர்கள் இலங்கை முழுக்க  இனம் தெரியாத கடத்தல், படுகொலைகள் மூலம் ஆயிரக்கணக்கில் இல்லாதாக்கப்பட்டனர்.

 

இந்த இடத்தில் யுத்தத்தை நிறுத்து, தமிழ்மக்களின் உரிமையை வழங்கு என்ற கோசம் தான் முதன்மையானது. இதில் இருந்து தான், இந்த நெருக்கடி மீதான அனைத்து அரசியலும். தமிழ் மக்களின் பிரதான எதிரியை புறந்தள்ளி, புலியை முன்னிறுத்தி அரசியல் குறுகியது.    யுத்தத்தை நிறுத்து என்று கோருவதும் தமிழ் மக்களின் உரிமையை வழங்கு என்று கோருவதும், இதற்கு உட்பட்டது தான். மனித அவலங்கள், இளம் போராளிகளின் நலன்கள் என அனைத்தும். இங்குதான் புலிகள் மக்களை, கொலைகாரன் முன் நிறுத்தி வைத்திருப்பதும், பலியிடுவதும் என்ற அரசியல் நடக்கின்றது. இப்படியிருக்க எதிரியிடமே சரணடை என்று கோருவது, ஒரு துரோக அரசியல். 

 

 

பி.இரயாகரன்
14.04.2009

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ