Language Selection

ஹெகல் (G.W.F.Hegal1770-1831) ஜெர்மனிய தத்துவவாதி கார்ல் மார்க்ஸின் முன்னோடி. தன் வாழ்நாளில் கடைசி காலத்தில் மரணப்படுக்கையில் இருக்கிறார். ஹெகல் இன்னும் சில நாட்கள்கூட இருக்கப்போவதில்லை என்பதை உணரத் தொடங்கிய அவருடைய சிஷ்யர்கள் அடிக்கடி ஹெகலை வந்து பார்த்தபடி இருந்தனர். ஹெகலால் சுத்தமாக பேசக்கூட முடியவில்லை.

 மூச்சு இழுபறி நிலையில் இருக்கிறது. இருப்பினும் ஹெகலிடம் ஏதோ ஒருவித தவிப்பு. எதையோ பேச நினைக்கிறார் போலும். சிஷ்யர்கள் கவலையுடன் ஹெகலிடம், "என்ன சொல்ல விரும்புகிறீர்கள்; முடிந்தால் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்..."  என்கிறார்கள்.

 

ஹெகல் பெருமூச்சு விட்டுக் கொண்டே மெல்ல சொல்கிறார்...

 

"என்னுடைய சிஷ்யர்கள் யாரும் என்னை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இல்லை. மிஷெலே (Michelet) என்பவன் மட்டுமே என்னை அறிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனும் என்னைத் தவறாகவே அறிந்து கொண்டிருக்கிறான்."

 

ஹெகல் சாதாரண ஆளில்லை. சிறந்த தத்துவவாதி. ஆனால் எது அவருக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவருக்கு மட்டும் மரணத்தின் போது சிந்தனை இப்படி இருக்கவில்லை. புத்தன் கூட கணித்திருந்தார். புத்தநெறிகள் எப்படி வீணடிக்கப்பட போகிறது என்ற கவலை மரணத்தின் போது அவரிடம் இருந்திருக்கிறது. இயேசுவும், முகமதுநபியும் அப்படியே. பெரியாரிடம் இறக்கும் தருவாயில், "உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டு போகிறேனே என்கிற கவலை தான் எனக்கு அதிகமாக இருக்கிறது" என்கிறார். இவர்களுக்கென்ன மரணத்தின் மீது பயமா? இல்லை.

 

தன் தத்துவங்கள் தனக்கு பின் மக்களுக்கு எப்படி கொண்டு செல்லப்படுமோ என்பதைக் குறித்து அவர்களுக்குள் ஏதோ அறிகுறி தெரிந்திருக்கிறது. தங்களுடைய கொள்கைவாதிகள் தங்களுக்கு பின் பிற்காலத்தில் கருத்துவேறுபாடுகளில் தத்துவங்களை, உண்மைகளை திரித்து விடப்போகிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் எதிரொளியாகவே சிந்தனை அலறுகிறது பதறுகிறது.

மகான்களுக்குள் அறிவும், இதயமும் ஒன்றாக இருப்பதனால் தான்  இறக்கும் போது வெளிப்படும் மனக்குமுறல்கள் ஒன்றுபோலவே எல்லோருக்கும் இருக்கிறது. மகான் தன்மை என்பது பெரும்பான்மையான மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் இருந்து மாறுபட்டது. தங்களின் சிந்தனைகள், தாங்கள் கண்ட உண்மைகளை பெரும்பான்மையான மக்கள் கருத்துக்கு எதிராக வெளியிடும் போது தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எதிர்க்கும் மனத்தைரியத்தையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். எதையும் அலட்சியப்படுத்தி மானுல நலன்களை நோக்கி சிந்திக்கும் போது எதிர்கொள்ளும் மக்களின் அதிருப்திகள் அதே மக்கள் மீது துவேஷமாக மாறுகிறது என்பார்கள். நிறைய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் போக்குகளும் இப்படியே இருந்திருக்கிறது.

 

´லீப்னெக்ட்´ (Wilhelm Liebknecht) என்பவர் கார்ல் மார்க்ஸ் இறந்தபோது அவருடைய சவக்குழியின் அருகே நின்று சொல்கிறார் :

 

"யாருடைய மரணத்திற்காக நாம் இப்போது துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அவன் அன்பு செலுத்துவதிலும், துவேஷம் பாராட்டுவதிலும் முதன்மையானவனாக இருந்தான். அவனின் துவேஷம் அவன் மானிடத்தில் செலுத்திய அன்பினில் இருந்து உருவானது. அவனுக்கு எப்படி கூர்மையான அறிவு இருந்ததோ, அப்படியே விசாலமான இருதயமும் இருந்தது."

 

அழகாகச் சொல்லி இருக்கிறார் லீப்னெக்ட்.

 

மகான் தன்மை என்பதற்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. ஒன்று அன்பு மற்றது துவேஷம். ஆம்! மகான்கள் மக்களை நேசிக்கிறார்கள் அதே போல் மக்களை துவேஷிக்கிறார்கள் மகான்கள். இதில் எந்த முரண்பாடுகளும் இல்லை. மகான்களுக்கு அறிவும், இதயமும் ஒன்றல்லவா?


தமிழச்சி
17.03.2009

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது