Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்!!!

  • PDF

லையுலகில் திடீரென்று 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கோட்பாட்டின் மேன்மை குறித்து பரப்புரை நடந்தேறி வருகிறது. இன்னிலையில் இந்த கோட்பாட்டின் உண்மையான பொருள் என்னவென்று கீழே சொல்லப்பட்டுள்ளது.



'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்பது சாதிய தத்துவமாகும். நால் வர்ணங்களையும் அதற்குரிய கடமைகளையும் படைத்தவன் நானே என்று சொன்னான் கிருஷ்ணன். அந்த கடமைகளை பலன்களை எதிர்பாராமல் செய்ய வேண்டும் என்று சொன்னதைதான் இப்பொழுது ஏதோ பெரிய சூத்திரம் போல பிதற்றுகிறார்கள். இதே விசயத்தைத்தான் நரமாமிச நரேந்திர மோடி குஜராத்தில் தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அங்குள்ள மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது தவம் என்று குறிப்பிட்டு தனது புத்தகத்தில் எழுதியுள்ளான் மோடி.

கிருஷ்ணன் மேலும் ஒரு படி சென்று இந்த தர்மம் எப்பொழுதெல்லாம் மீறப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதரித்து மீண்டும் (சாதிய) தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று சொல்லியுள்ளான்.

கீதாவின் சாரம் எனப்படும் இந்த பிற்போக்கு தத்துவம், இந்திய சமுகத்தை ஆயிரம் வருட இருட்டில் தள்ளி இந்தியாவின் வளர்ச்சியையே முடக்கி போட்ட ஒரு நாசகர தத்துவமாகும். வரலாற்றுப் பூர்வமாக இந்த தத்துவத்தின் கதை இது என்றால், யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.

இந்த விவகாரத்தில் விவாதம் செய்ய வருபவர்கள் முதலில் 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' எனும் மக்கள் விரோத குப்பைத் தத்துவம் ஒரு சாதிய தத்துவம் என்பதை விவாதம் செய்ய வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக்குகிறேன். இதனை மறுத்து பேசிவிட்டு பிறகு அதன் பொது அர்த்தத்தின் மீது வாதம் செய்வதே நேர்மையானது ஆகும்.

சாதிய சமுகமாக இந்தியாவை நாசம் செய்த வர்ணாஸ்ரம் தர்மத்தையும், அதன் தத்துவ புத்தகமான கீதையையும், அதன் கோட்பாடான கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற முழக்கத்தையும், அதை எழுதிய அயோக்கியனான கிருஷ்ணன் என்ற பொம்பளை பொறுக்கியையும் பொசுக்கி எரிப்பதுதான் நமது முன்னேற்றத்திற்காக நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கும்.

சூரியன்

Last Updated on Monday, 16 March 2009 19:36

சமூகவியலாளர்கள்

< March 2009 >
Mo Tu We Th Fr Sa Su
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை