Language Selection

பிச்சைக்காரர் இருப்பதும்,
அவர்கள் பிச்சையெடுப்பதும்,
ஜன சமூகத்துக்கு
ஒரு பெருந்தொல்லையும்
இழிவும் ஆகும் என்பதோடு...,


ஒரு கடவுள் இருந்தால்
அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும்,
அயோக்கியத்தனமான காரியமும் ஆகும்."

--- தந்தை பெரியார்.


திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே பிச்சையெடுத்து வாழவேண்டிய மனிதனைக் கடவுள் சிருஷ்டித்திருப்பானேயானால் அக்கடவுள் இல்லையென்றுதான் அர்த்தம். அவன் இருந்தாலும் ஒழியவேண்டியதே அவசியம் என குறளில் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவருக்கு பிறகு நம் சமூகத்தில் பிச்சைக்காரர்களை குறித்து அதிகம் சிந்தித்து இருப்பவர் தந்தை பெரியார் என்றுதான் சொல்ல வேண்டும். பிச்சை மனோபாவம் எங்கிருந்து எதிலிருந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதில் இருந்து அதற்கு என்ன தீர்வு என்பது வரையில் ஒரு சிறு நூலாக எழுதிவிட்டார் தந்தை பெரியார். நூலின் பெயர் "சுயநலம் பிறநலம்."

 

(சுயநலம் பிறநலம் என்னும் சிறுநூலை வாசிக்க விரும்புபவர்கள் இத்துடன் இருக்கும் இணைப்பில் பார்க்கவும்.  http://tamizachiyin-periyar.com/index.php?article=1044) தந்தை பெரியாருக்கு பின் பாலா பிச்சைக்காரர்களின் உணர்வுகளை தன் படைப்பின் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

 

அழுக்கு அழுக்காய் எங்கு பார்த்தாலும் ஒரே அழுக்குக் கூட்டத்தில் ஏதோ ஒரு குகைக்குள் ஜந்துக்கள் போல வாழும் விசித்திர மனிதர்கள். பல ஊனமுற்ற மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாக பலவகை ஊனமுற்ற உடல்களை ஒன்றாக பார்க்கும் போது ஏதோ ஓர் உணர்வு வயிற்றை பிசைந்து விடுகிறது. அந்த இயலாமையையும், ஊனத்தையும் வைத்தே பிழைப்பு நடத்தும் பண்ணாடைகள். இன்னொரு பக்கம் அகோரி கேரக்டர் இன்னும் வெளிப்படையாக அகோரிகளைப்பற்றிய உண்மைகளை மறைத்துவிட்டதோ அல்லது சென்சாரில் வெட்டப்பட்டுவிட்டதோ என்ற சிந்தனை. இப்படியாக பல விமர்சனங்களை வைக்கத் தோன்றினாலும் ஏதோ ஒரு குற்றவுணர்வுடன் பிச்சை மனிதர்களை மட்டும் மையப்படுத்தி யோசிக்க வைத்துவிட்டது நான் கடவுள். இவர்களை இவ்வளவு காலமும் சமூகத்தில் அலட்சியப்படுத்தியே வைத்திருந்துவிட்டோமா? இனியும் என்ன இப்படித்தானே இருக்கப் போகிறார்களா? வெறும் பரிதாபத்தை மட்டும் வெளிப்படுத்துகிறோமே நாம். இவர்களுக்காக என்ன தீர்வு காணப்போகிறது சமூகம்.

"சுயமரியாதையோடு மனிதன் வாழவேண்டுமானால், பிச்சை கொடுப்பதை சட்டவிரோதமான காரியமாய் கருதப்பட வேண்டும்" என்பார் தந்தை பெரியார். ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இவை அமுலில் இருக்கிறது.


நம் சமூகத்தில் இவை ஊக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவீர அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாமும் விமர்சனங்களுடன் நிறுத்திக் கொள்கிறோம். ´வேறு என்னத்தான் செய்ய முடியும்´ நமக்குள் இயலாமை முட்டுக் கட்டை போட்டு வைத்துவிடுகிறது. பெரியார் வேறு கோணத்தில் இப்பிரச்சனையை சிந்தித்திருக்கிறார்.

 

"பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே ஏற்றுக்கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால் பணக்காரரிடமிருந்து "பிச்சை வரி" யென்று ஒரு வரியை சர்க்கார் வசூலித்து, அதற்கு ஓர் இலாகா வைத்து வினியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிறசாலைகள் வைத்து அதன் மூலமாகப் பிச்சைக்காரர்களிடம் வேலை வாங்கிக் கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்திற்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்." (ஆதாரம்: "சுயநலம் பிறநலம்" என்னும் நூலில் இருந்து பக்கம் :9)

 

பிச்சைக்காரர்களை உருவாக்கி வைத்திருப்பதில் மதம் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பிச்சைக்கு தருமம் என்று போதிக்கிறது இந்து, கிறிஸ்து, முஸ்லீம் மதங்கள். தன் சுயநலத்தில் பிறநலனை பார்க்கும் நமக்கு வள்ளல் குணமாவது மிகுந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. துப்புக்கெட்ட கடவுளுக்கு இப்படியெல்லாம் ஊனங்களை படைத்து பிச்சையெடுத்து ஜந்து போல் வாழ்ந்து தொலை என்று சாபமிட்டுவிட்டதா? இப்படியெல்லாம் செய்யும் கடவுளே நீயும் கடவுளா? மானங்கெட்ட வெட்டி வேளைகளில் மனிதனை சிதைத்து பார்த்து இரசிக்கின்றாயே நீயெல்லாம் கடவுளா? சாத்தானா? என்றே நினைக்கத் தோன்றுகிறது.

 

"நான் கடவுள்" திரைப்படத்தில் வருவது போல ஊனமுற்றவர்களை பிச்சையெடுக்க வைத்து சம்பாதிக்கும் கூட்டத்தினரிடம் இருந்து அவர்களைக் காப்பாற்ற கடுமையான சட்டதிட்டங்களாலும் சரியான பராமரிப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கையில் இருந்து அவர்களும் சுயமரியாதையுடன் மனிதர்களாக வாழ முடியும் அல்லவா? ஆனால் நாம் ஏன் இவர்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறோம்? நம் சுயநலத்திற்காகத்தானே? நமக்கு தர்மம் போட, பிச்சை போட பிச்சைக்காரர்கள் தேவையாக இருக்கிறார்கள். அவர்களை மனித தன்மையில் இருந்து விலக்கி வைத்து ஒரு ஜந்துவைப் போல் அவர்களை நினைத்து நம் நிலையை உயர்த்தி வைக்கிறோம். 

 

படத்தின் இறுதியில் ஏற்கனவே கண்பார்வையை இழந்திருந்த அம்சவல்லியின் கை, கால்களையும் உடைத்து நடக்க முடியாத அளவுக்கு ஆளாக்கும் வில்லன். இனியும் வாழத் தகுதியில்லை என குமுறுபவளை கருணை கொலை செய்யும் அகோரி. இந்த கருணை கொலை சரியானவையா? என்ற சர்ச்சை இருக்கிறது. எனக்கென்னமோ அவளுடன் மற்றவர்களையும் கருணை கொலை செய்திருக்கலாமா என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் ஐரோப்பாவில் தொற்று நோய்க்கு ஆளானவர்களை கப்பலில் எடுத்துப்போய் நடுகடலில் போட்டு விடுவார்களாம். அது ஏனோ இவர்களை பார்க்கும் போது நினைவுக்கு வந்து தொலைகிறது.

 

தொடர்ந்து பிச்சை மனிதர்களை அலட்சியப்படுத்துவோமானால் நல்லுள்ளம் கொண்ட புரட்சி நாயகர்கள் கருணை கொலைக்கு செல்ல வேண்டியது தவறல்லவே!

 

தமிழச்சி
16.03.2009


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது