Language Selection

கடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட "புனித பிம்ப எழுத்துக்கள்" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு "சமூகநீதிக் காவலர்", "பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர்" என்ற கற்பிதம் இருக்கின்றது. இந்நிலையிலேயே, புதிய ஜனநாயகத்தில் "காக்கை குயிலாகாது" என்ற தலைப்பில் மாற்று விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரியார் முழக்கத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன், "வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்" என்ற தலைப்பில் கடுமையான எதிர்விணை செய்திருக்கிறார். "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" இது என களப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படும் தோழமை அமைப்பான ம.க.இ.க. வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "வி.பி.சிங் அவர்களை, குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறது ம.க.இ.க." என்கிறார் தோழர் விடுதலை இராசேந்திரன்.
இதன் மூலம் சகதோழர்களை "பச்சைப் பார்ப்பனியத்தின் அடிதாங்கி"களாக குற்றவாளிகளாக்க முற்பட்டது குற்றமில்லையா? சோ- சு.சாமி- ஜெ-க்களுக்கு இக்கட்டுரை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்கிறவர் தங்கள் சகதோழமை அமைப்பை "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" என்று விளித்துக் கூறும் போதும் இரட்டடிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் தோழர் விடுதலை இராசேந்திரன் ஏற்றுக் கொள்ள வேண்டும். 
தந்தை பெரியாரை மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்கு எவ்வளவு உரிமை பகுத்தறியும் மனிதர்களுக்கு இருக்கின்றதோ அதே உரிமை முன்னால் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் மறுஆய்வுக்குட்படுத்த உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது நமது மாற்றுக் கருத்துக்களை எதிர்விணையாக்க வேண்டுமே தவிர மறுஆய்வு செய்வதே தவறு என்கிற வாதத்தை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். இவை நம் கொள்கைக்கு எதிரானது என்பதை உணர்ந்து கொள்வோம்.  
மேலும் சக தோழமை அமைப்பை "பச்சைப்பார்ப்பனீய பார்வை" என்று தோழர் விடுதலை இராஜேந்திரன் கூறியது கண்டிக்கப்பட்டத்தவை என்பதற்காகவும், வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம் என்னும் கட்டுரையில் பல இடங்களில் நடுநிலை தவறி கருத்துச் சருக்கல் இருப்பது நம் பகுத்தறிவு கொள்கைக்கு முரணானது என்பதாலும், நாளை நம் கொள்கை, கோட்பாடுகள், செயல்பாடுகள் தடம்மாற ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஓர் அமைப்பின் நம்பகத் தன்மையை வீழ்த்திவிடுவதற்கு காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற பதற்றத்தாலும், நாம் நம்மை ´சுயவிமர்சனம்´ செய்துக் கொள்ள, சகதோழர்களின் எதிர்விணையை ஒரு வாய்ப்பாக உபயோகித்துக் கொள்ளுவோம் என்பதற்காகவே எழுத முற்படுகிறோம்.
"காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு" என்பதை மட்டும் மையப்படுத்தி தோழர் விடுதலை இராசேந்திரன் வி.பிசிங் நடத்தையை கணிக்க முற்பட்டால் அது தவறாக கணிப்பில் முடியும் என்பதையே நாம் இங்கே சுட்டிக் காட்ட முற்படுகிறோம். 
ஒருமுறை தந்தை பெரியாரிடம் ஏன் காங்கிரசில் இருந்து வெளியேறினீர்கள் என்று கேட்ட பொழுது, "நான் ஏன் காங்கிரசில் இருந்து விலகினேன் என்பதைப்பற்றி எழுதும் முன், நான் ஏன் காங்கிரசில் சேர்ந்தேன் என்பதைப்பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கும் முன் எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவது அவசியமாகும்" என்றார். (ஆதாரம் : "தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" என்னும் நூல். பக்கம் :1) 
அதேப்போல், வி.பி.சிங் காங்கிரசில் சேரும் முன் என்ன செய்துக் கொண்டிருந்தார், எப்படி இருந்தார் என்பதையும், நாம் ஆய்வுக்குட்படுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை மட்டும் வைத்து வி.பி.சிங் சிறப்புத் தன்மையை பேசுவதை நிறுத்துவோம்.
அடுத்தது பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை  பிறப்பித்தவர் என்னும் பெருமையை, புகழாரத்தை வேறு அமைப்புகளோ அரசியல்வாதிகளோ முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு அடைமொழிளாக்கி பாராட்டு பத்திரம் கொடுக்கலாம். பெரியாரியவாதிகளான நாம் அப்படி பேசலாமா? என்னும் வினா எம்முள் எழுகிறது. 
அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கிய சமூகவாதியான தந்தை பெரியார் ´ஓட்டுப்பொறுக்கிகள் அரசியல்வாதிகள்´ என்று விமர்சித்ததையும் மறந்துவிடக்கூடாது. வி.பி.சிங் அவர்களும் ஓர் அரசியல்வாதி என்பதையும், பிரதமர் பதவி என்பது இனாமாக கொடுப்பது இல்லையென்பதையும், அந்த உயர்ந்த பதவியை அடைய ´மகாத்மா´வாக இருந்தால் மட்டும் முடியாது என்பதையும் கவனத்திற்கொள்வோம். 
உலகம் முழுவதிலுமே அரசியல் என்றால் குளறுபடிதான் என்றாலும், நம் இந்திய அரசியல் அளவுக்கு அதிகமாகவே தங்களுக்கு தேவையான உரிமைகளை ஜனநாயகத்தின் பேரால் அனுபவிப்பவர்கள் என்பதையும் கவனத்திற்கொள்வோம் என்பதுடன் சகதோழமை அமைப்புக்களை விமர்சிக்கும் போது ஒன்றுக்கு பலமுறை நம் விமர்சனம் நடுநிலைமையானதா என்று சிந்தித்து எதிர்விணை செய்வோம். 
இக்கட்டுரைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :
விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது! 
வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் ´புதிய ஜனநாயகம்´ விடுதலை இராசேந்திரன்
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.phphttp://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.php
தமிழச்சி
05/03/2009 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது