Language Selection

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கி இருக்கிறது. நாட்டுடமை ஆக்கும் அளவுக்கு சுந்தர ராமசாமி என்ன செய்துவிட்டார் என்ற வாதத்தை ஒருபக்கமாக வைத்துவிட்டு, ´சோழியன் குமுடி சும்மா ஆடாதே´ என்ன நடந்திருக்கும் என்று புலன் விசாரனையை ஆரம்பித்தால் வழக்கம் போல் அரசியல் தலையீடும், ஆப்பும் வைக்கவே எடுக்கப்பட்ட முயற்சியாக தெரிகிறது. 
காலச்சுவடுக்கு வைத்த ஆப்பாகவும், சுந்தர ராமசாமி குடும்பத்தினரிடம் எந்த அனுமதியும் பெறாமல் செய்யப்பட்ட சதியாகவும் நாட்டுடமையின் தரம் இருக்கிறது. குறைந்தபட்சம் எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் கூட தகவல் சொல்லாமல் அறிவித்திருக்கும் தமிழக அரசின் யோக்கியதை எப்படி இருக்கிறது பாருங்கள்?

எழுத்தாளரின் வாரிசும் காலச்சுவடு உரிமையாளருமான கண்ணன், "காலச்சுவடு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது" என்று அறிக்கை விட, பத்திரிக்கைகளில் ´நாட்டுடமை´ குறித்து விவாதங்களும், சர்ச்சைகளும் எழ, தமிழக அரசு சுந்தர ராமசாமியின் எழுத்துக்கள் நாட்டுடமையாக்க சிபாரிசுதான் செய்யப்பட்டது. இன்னும் முடிவு செய்யவில்லையென ஒதுங்கிக் கொண்டது. 

என்னாயிற்று கலைஞர் ஆட்சிக்கு? உருப்படியாக தமிழ் சமூகத்திற்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் தீவிர கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறதா என்ன? 

"பெரியார் எழுத்துக்களை நாட்டுடமையாக்குங்கள்" என்று எத்தனை கோரிக்கைகள் இதுவரையில் வைக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச பதில் கூட அளிக்கவில்லை தமிழக அரசு. இன்னொரு பக்கம் ´மானமுள்ள´வரின் காமெடி எல்லை மீறிபோய்க் கொண்டிருக்கிறது. 

1925- இல் இருந்து 1938- வரையில் ´குடிஅரசு´ தொகுதிகளில் இருந்த பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பெ.தி.க வெளியிட ஆரம்பிக்க, ´மானமிக்கவரு´க்கு கோபம் வந்து வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றதும், பெ.தி.க. நூல்களை நாங்கள் முன்னேயே வெளியிட்டு விட்டோம் என்று ´பெப்பே´ காட்டியதும், "விடுவேனா மக்கா, லட்சங்கள் நஷ்ட ஈடாக கொடு!" என்று லட்சியத்திற்கு விலை வைத்ததும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. 

சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பலவகையான புத்தகங்கள். பலநாட்டு அறிஞர்களின் புத்தகங்கள்கூட கிடைக்கிறது. ஆனால், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் புத்தகங்கள் ஒன்று கூட அங்கு இல்லை. இதைக் குறித்து சில இலக்கியவாதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த போது கூட ´மானமுள்ளவர்´ சொல்கிறார் :

"எங்களுக்கு இருக்கின்ற ஓர் அச்சம், தயக்கம் எல்லாம் யார் வேண்டுமானாலும் பெரியார் புத்தகத்தை வெளியிடலாம் என்று சொல்லி அவருடைய சொற்களைப் புரட்டி மாற்றிப் போட்டு விட்டால் இப்பொழுது ராமாயணத்திலே ஒரு பதிப்பிலே வந்ததுகூட, அடுத்த பதிப்பிலே இல்லை- எடுத்து விடுகிறார்களே! அதுபோன்ற நிலை பெரியாருக்கு, பெரியாரின் எழுத்து, பேச்சு நூல்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலைதான். எங்களுக்கு இப்பொழுதுகூட பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கி, பணம் பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லாம்கூட ஒன்றும் கிடையாது."

என்னும் ´மானமுள்ளவர்´ பெரியார் எழுத்துக்களை தாராளமாக நாட்டுடமையாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், இரண்டு நிபந்தனைகள் என்கிறார். அந்த நிபந்தனைகளையும் கொஞ்சம் பாருங்கள். 

ஒன்று, பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கிய பிறகு அதிலே இருக்கிற ஒரு சிறு சொல், புள்ளி, கமாவைக்கூட மாற்றக்கூடாது- மாற்றினால் அங்கே பெரியார் இருக்க மாட்டார். திரிபுவாதம் நுழைந்துவிடும்.
 
இரண்டாவது, நாட்டுடைமையாக்கப்படுகின்ற பொழுது பெரியார் கொள்கையை ஏற்ற ஒரு அரசாங்கம் இருக்கும் பொழுது எல்லோரும் பெரியார் நூல்களை வெளியிடுவார்கள்.

இரண்டு காரணங்களும் எப்பேர்பட்ட சிந்தனை? பெரியார் மறைந்து 36- ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரியாருடைய எழுத்துக்கள் அச்சடப்படாதவை ஏராளமானவை இருக்கின்றன. இந்நிலையில் ´மானமுள்ளவர்´ புள்ளி, கமாவை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். புள்ளி, கமாவில் திரிபுவாதம் வந்து விடும் என்று சொல்பவருக்கு.... 

இதே நிபந்தனைகளை வைத்து தமிழக அரசிடம் பெரியாருடைய எழுத்துக்களை நாட்டுடமையாக்கச் சொல்லலாமே! எதற்கு போலித்தனமான வார்த்தைகள்? பெரியாரின் சிந்தனையை மறைத்து வைத்துக் கொண்டு அல்லது எதையும் அச்சுக்குள் அனுப்பாமல் தன்னுடைய ´வாழ்வியல் சிந்தனை´களை பரப்பிக் கொண்டிருக்கும் ´மானமுள்ளவரு´க்கு காமக்களையோ, புள்ளிகளையோ பாதுகாக்கும் யோக்கியதை எப்படி இருந்து விடக்கூடும்? அப்படி பாதுகாக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்? 

இந்த கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க ´நாங்களெல்லாம் மானமற்று, சுரணையற்று போய்விட்டோமே´ என்று குமுறுவதா? "இதே நிலை நீடிக்குமானால்..." என பொங்கி எழுந்து எச்சரிக்கை விடுவதா? 

பெரியாரின் வாரிசுக்கள் என்று சொல்லிக் கொள்ளும் கலைஞரின் தராதரம் இன்று எந்த அளவில் தரம் தாழ்ந்து போய்கிடக்கிறது என்பதையும், இடக்கு மடக்கான போலித்தனங்களையும், தன்னுடைய தனிப்பட்ட விரோத உணர்வுகளையும் இலக்கியத்தில் கூட திணிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுமல்லாமல், பெரியாரிய எழுத்துக்களை ´மானமுள்ள´ சிலரின் சொந்த நலன்களுக்கு பங்கம் ஏற்படாதிருக்க பெரியாரியத்தின் தரத்தை தாழ்த்தவும், இழிவுபடுத்த முயலும் முயற்சியாகவே நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 

எழுத்தாளர் சுந்தரராமசாமியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் முயற்சியால் ஈ.வெ.ரா. ராமசாமியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் தகுதியில் இல்லை என்பதை காட்டுவதாக எடுத்துக் கொள்வதா? இல்லை தகுதிகள் பெரியாரியத்திற்கு இருக்கிறது. நாட்டுடமையாக்கிவிட்டால் சிலரின் வயிற்றுப்பாட்டுக்கு திண்ணடாட்டமாகிவிடும் என்பதால் நாட்டுடமையாக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்னும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இருக்கிறதா?



தமிழச்சி
20/02/2009 

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது