Language Selection

வாழ்க்கை என்பது - 
´நான் உயிர் வாழ வேண்டும்´ 
என்ற உறுதி மிக்க ஆசைதான் 
வாழ்க்கையாகிறது. 
இந்த ´மனவேகம்´ எல்லா 
உயிர்களிடமும் இயங்குகிறது... 
அதனால் போட்டி, பூசல், அழிவு என்று 
போர்க்காட்சியளிக்கிறது வாழ்க்கை. 
ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் 
இயங்கும் இச்சாசக்திக்கு 
இலட்சியம் என்பது கிடையாது... 
வரம்பும் கிடையாது... 
வெவ்வேறு உயிர்களின் 
இச்சாசக்திகளும் மோதுகின்றன. 
வெற்றி கிடைக்கிறது... 
சில வெற்றிகளுக்குப் பின் 
தோல்வி கிடைக்கிறது... 
சில தோல்விகளுக்குப் பின் 
வெற்றி கிடைக்கிறது... 
இதுவே உலகம், இதுவே வாழ்க்கை. 
இதை கடந்து செல்வதே உயிரின் குணம்."

* ஆர்தர் ஷாப்பனோர்

சில தத்துவங்களை படிக்கும் போது நமக்குள் சலிப்பு தட்டிவிடும். அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கில்லையா? அல்லது அவை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு கடுமையானவையா? என்ற ஆராய்ச்சியையெல்லாம் ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் மாக்கியவெல்லி போல மனித உணர்வுகளின் செயல்பாடுகளை ஆழ்ந்து கவனித்த விமர்சனத்தை வைத்தவர்களின் தத்துவங்கள் அப்பட்டமான யதார்த்த சிந்தனைகளை நோக்கியதாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அது போல் தான் ´ஜெர்மனைச் சேர்ந்த தத்துவஞானி ஆர்தர் ஷாப்பனோரின்´ தத்துவங்களையும் ஒதுக்கிவிட முடியாது.

வாழ்க்கையைப் பற்றி பல விசித்திரமான கசப்பான கருத்துக்களை சொன்னவர் ஆர்தர் ஷாப்பனோர். மனிதனை பற்றிய மதிப்பீடுகள் மிகவும் இழிவானதாகவே அவரிடம் இருந்து வெளிபடுகிறது. 

மனிதன் வேதனையின் படைப்பு; அவனுடைய ஆசைகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவச் செய்கிறது. ஒரு விருப்பம் நிறைவேறியதும் அவன் சலிப்படைந்து வேறொன்றின் மீது மோகத்தைத் திருப்புகிறான். உயிர் வாழ்வு என்பது அவனுக்கு தாங்க முடியாத சுமைதான். இடையிடையே துளித்துளி திருப்திகள் மின்னி மறைகின்றன. மரணம் தனி மனிதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை. 

இப்படியெல்லாம் அதிரடியான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தவர் ஆர்தர் ஷாப்பனோர். 

உயிர்களின் பிறப்பு, வளர்ப்புகள் எல்லாம் அவற்றில் குடிகொண்டிருக்கும் இச்சாசக்தியினால் சாத்தியமாகிறது. உயிரின் விருப்பத்தின் ஆற்றல் காரணமாகவே கரு குழந்தையாக வளர்ச்சி பெறுகிறது. உயிர் விருப்பத்தினாலேயே செடி, சூரியனை நோக்குகிறது. மனிதன் உணவைத் தேடியும், துணையைத் தேடியும் குழந்தை வேண்டுமென்று பெரு விருப்பம் கொண்டு துடிக்கிறான். இது அறிவினால் அல்ல... இச்சாசக்தியால் நிகழ்வதாகும். வாழ்க்கை என்பது- நான் உயிர் வாழ வேண்டும் என்ற உறுதி மிக்க ஆசைதான் வாழ்க்கையாகிறது. இந்த மனவேகம் எல்லா உயிர்களிடமும் இயங்குகிறது. அதனால் போட்டி, பூசல், அழிவு என்று போர்க்காட்சியளிக்கிறது வாழ்க்கை. ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் இயங்கும் இச்சாசக்திக்கு இலட்சியம் என்பது கிடையாது. வரம்பும் கிடையாது. வெவ்வேறு உயிர்களின் இச்சாசக்திகளும் மோதுகின்றன; வெற்றி கிடைக்கிறது; சில வெற்றிகளுக்குப் பின் தோல்வி கிடைக்கிறது. சில தோல்விகளுக்குப் பின் வெற்றி கிடைக்கிறது. இதுவே உலகம் இதுவே வாழ்க்கை. இதை கடந்து செல்வதே உயிரின் குணம்.

உயிர்களின் மதிப்பீடு குறித்து ஆர்தர் ஷாப்பனோர் தத்துவக் கொள்கையின் அடிப்படை ´இச்சாசக்தி´யை கொண்டே வெளிவருகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், "என் ´இச்சாசக்தி´ பிறருடையதைவிட வலிமைமிக்கதாக இருக்க வேண்டும். வெற்றி அடைந்தே தீருவேன்" என்று நெஞ்சு உறுதியுடன் இருந்தால் நம் ´இச்சாசக்தி´யுடன் போட்டி போடும் மற்ற ´இச்சாசக்தி´கள் மங்கிபோய்விடும் என்கிறார். 

தன்னம்பிக்கை ´இச்சாசக்தி´யில் இருந்தே உருவாகிறது. விருப்பத்தில் உறுதியாக இருந்தால் அசைக்க முடியாத தன்னம்பிக்கை நம் ´இச்சாசக்தி´யில் உண்டாவது நிச்சயம். 

படிக்கும் போதே நமக்குள் இருக்கும் ´இச்சாசக்தி´ துள்ளியெழுகிறதல்லவா? மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகளில் நம் வாழ்வின் எந்த சூட்சமத்தையாவது கண்டுப்பிடித்தோமா? உங்களால் கண்டுபிடிக்க முடிந்திருந்தால் பக்குவப்பட்ட ´இச்சாசக்தி´ உங்களுக்குள் விழிப்புணர்வுடன் இருப்பதாக அர்த்தம். புரியாதவர்கள் மீண்டும் ஒருமுறை தத்துவத்தை வாசித்து பாருங்கள். 


தமிழச்சி
07/02/2009

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது