Language Selection

´வரலாற்று ஆய்வு´ (A Study of History) என்ற நூலை 65- வருடங்களுக்கு முன்பு வரலாற்றுப் பேராசிரியர் ´டாயின்பீ´ (Arnold Toynbee) எழுதியிருந்தார். 10-பாகங்களாகவும், ஒவ்வொரு பாகமும் குறைந்தது 1000-பக்கங்களுக்கும்  அதிகமாக உடையதாக இருந்தது.

6000-ஆண்டுகளாக உலகத்தில் நடந்த சம்பவங்களை வரலாற்றுச் செய்திகளாக சொல்லவில்லை டாயின்பீ. மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் போல், சில சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட வரலாற்று ஆய்வுகள் இல்லை அவை. ரஷ்யா முதல் டாஸ்மோனியா வரையில் மனித நாகரிகங்களைப் பற்றி சொல்ல முற்பட்டிருக்கிறார் டாயின்பீ.

சுருக்கமாகச் சொல்வதென்றால் மனித குல நாகரிகங்களின் வாழ்க்கைச்  சூழல்கள், சோதனை, சமாளிப்பு, முயற்சி, மீண்டும் சோதனை, மீண்டும் சமாளிப்பு, கடைசியில் அழிவு என்ற கட்டத்திற்கே இயற்கை கொண்டு செல்கிறது என்கிறார்.  

எதிரிகளின் படையெடுப்பால் சிலசமயம் வெற்றி சில சமயம் தோல்வி (Time of Troubles) என எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து Universal state ஆக நிறுவப்பட்டு சிறிது காலம் சமாளித்த பின் முற்றிலுமாக அழிந்து போய்விடுகிறது மனித நாகரிகம். ஒவ்வொரு நாகரிகமும் உருவாகி சில நூறு ஆண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் வரையில் இளமையாக, முதியவையாக, கடைசியில் நோய்வாய்ப்பட்டு புதிய இயற்கையின் மாறுபட்ட சூழல்களுக்கு புதிய நாகரிகத்திற்கு சரிக்கு சமமாக நிற்க முடியாமல் தோற்றுப் போய்விடுகிறது. அழிந்த நாகரிகம் ஒன்றிலிருந்து வேறொரு மனித நாகரிகம் உருவாக்கப்படுகிறது.

அடுத்து பண்பாடு குறைந்த மூர்க்கத்தனம் மிகுந்த வெளிநாட்டு சக்திகள் எல்லைப்புறங்களை மீறிவந்து தாக்குதல் நடத்துகின்றன. சிறுக சிறுக நடக்கும் தொல்லைகள் இராணுவப்படையெடுப்புகளாக வளர்ந்துவிடுகிறது. அதைச் செய்பவர்களே வெளிநாட்டுப் பாமர உழைப்பாளி வர்க்கம் (External Proletariat) என குறிப்பிட்டிருக்கிறார் டாயின்பீ.

ஒரு நாகரிகத்தின் நடுமத்திய காலங்காலங்களில் உள்நாட்டில் எதிர்ப்பு ´Internal Proletariat´ என்னும் சமூதாயத்தின் உழைப்பாளிப் பாமர வர்க்கத்தினடமிருந்தே உருவாகிறது. ஒரு நாகரிகம் அழியும் சூழல்களுக்கு முக்கிய காரணங்கள் நாட்டின் உட்பகையாகும். உள்நாட்டு மக்களில் பெரும்பான்மையினரான எளிய பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையை இழக்கும் போது நாகரிகம் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது என்பது டாயின்பீயின் வரலாற்று கண்டுப்பிடிப்பு.

மனிதன் பூமியில் தோன்றி 3- லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் 6000- ஆண்டுகளாகத்தான் மனித நாகரிகம் தோன்றியிருக்கிறது. இதுவரையில் 21- நாகரிகங்கள் உருவாகி இருக்கின்றன. இவற்றில் 8- நாகரிகங்கள் மட்டும் இன்றும் இருக்கிறதாக டாயின்பீ சொல்கிறார்.

1. மேற்கத்திய நாகரிகம்
2. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ நாகரிகம் (ரஷ்யா)
3. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ நாகரிகம் (மற்ற இடங்களில்)
4. ஈரானிய நாகரிகம் (மேற்கு ஆசியா)
5. அரபு நாகரிகம் (அரேபியா மேற்கு ஆசிரியா வடக்கு ஆப்பிரிக்கா)
6. ஹிந்து நாகரிகம் (இந்தியா தென்கிழக்கு ஆசியா)
7. கிழக்கு நாகரிகம் (ஜப்பான் கொரியா)
8. கிழக்கு நாகரிகம் (மற்ற இடங்கள் சீனா உள்பட)

மேற்குறிப்பிட்ட 8- நாகரிகங்களும் தோன்றுவதற்கு முன் 4- புராதன நாகரிகங்கள் உலகில் இருந்தன.

1. கிரேக்க நாகரிகம் (Hellenic)
2. சிரியாக் நாகரிகம் (Syriac)
3. இந்திக் நாகரிகம் (Indic) (ஹிந்து நாகரிகத்தின் தாய் இந்திக் நாகரிகம்)
4. சீன நாகரிகம் (Sinic)

இந்த 4- நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன் உலகில் 2- நாகரிகங்கள் மட்டும் இருந்தன.

1. கிரீட் தீவிலும், ஈஜியன் கடற் பகுதிகளிலும் வாழ்ந்த ´மினோவன்´ சமூதாயம். (Minoan) (ஹெலீனிக், சிரியாக் சமூதாயங்களின் மூதாயர்களாக மினோவன் சமூதாயம் இருக்கிறது)

2. சுமேனிக் சமூதாயம் (Sumeric) ´இந்திக்´ சமூதாயத்தின் முன்னோடி.

அதேபோல், மேற்கு பக்கத்தில் அதாவது வட, தென் அமெரிக்கா பக்கத்தில் தோன்றிய நாகரிகங்கள்...

1. ஆண்டீஸ் மலைப் பிராந்தியத்தில் "இங்க்கா" சமூதாயம் (Inca)
2,3,4- மத்திய அமெரிக்கப் பகுதியில் வாழ்ந்திருந்த மெக்ஸிக், யூக்கடெக் சமூதாயங்கள் (Mexic, Yucatec) இவற்றுக்கு முன்னோடி ´மாயா´ (Maya) சமூதாயம்.

இவை தவிர, நைல்நதிப் பள்ளத்தாக்கில் தோன்றி வளர்ந்து, மறைந்த ஈஜிப்டியாக் (Egyptiac) சமூதாயம். இதன் தாய், தந்தை யார் என்று கண்டுப்பிடிக்க முடியாமல் இருப்பதோடு, ´ஈஜிப்டியாக்´ சந்ததியும் இல்லாமல் போய்விட்டது. எகிப்திய பிரமிடுகள், ஸ்பிங்ஸையும் (Sphinx) தந்த அதிசய சமூதாயம் ஈஜிப்டியாக்.

இப்படி டாயீன்பீ பிரமாண்டமான மனித நாகரிகத்தின் ஆராய்ச்சிகளை மிகப் பெரிய நூலாக எழுதி முடித்தார். பிற்காலத்தில் டாக்டர் ´சாமர்வெல்´ என்பவர் வரலாற்றுக்களை சுருக்கி இரண்டு பாகங்களாக எழுதினார். இருப்பினும் இரண்டு பாகங்களும் கூட ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வருகிறது. அந்தளவுக்கு டாயீன்பீ கடும் ஆராய்ச்சிகளுடன் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மனித நாகரிகத்தின் ஆராய்ச்சிக்காகவே உலகம் முழுவதும் சுற்றி திரிந்து விரிவாக விளக்கி எழுதியவை ´வரலாற்று ஆய்வு´ (A Study of History)


தமிழச்சி
16/02/2009


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது