Language Selection

FIRST INTERNATIONAL

1848-இல் ஐரோப்பா கண்டத்தில் முதல் முதலாக மக்கள் போராட்டம் நடந்து கிளர்ச்சிகள் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட காலம். மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். புரட்சி வார்த்தைகள், சிந்தனைகளை தேசத்துரோகமாக கருதி கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதால் மக்களிடம் அரசாங்கத்திற்கு எதிராக பேசவும், சிந்தக்கவும் கூட பயந்தனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்த தொழிலாளர் வர்க்கங்கள் தொடர்ந்து செயலிழந்து இருக்க விரும்பவில்லை. தொழிலாளர் வர்க்கம் மட்டுமே தன் வாழ்வுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்தது. அதனால் தன்னை வலுப்படுத்திக் கொள்ள பல நாடுகளிலும் தங்களுக்கென்று தனித்தனியாக தொழிற்சங்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நாடுகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னோடியாக இருந்ததும் மற்ற நாட்டு தொழில் சங்கங்களுக்கு ஓர் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தது. தொழிற்சங்கம் வளர்ச்சியினால் தான் தொழிலாளர்களுக்குள் ´வர்க்க ஞானம்´ உண்டாக காரணமாக இருந்தது என்பதும் மிகைப்படுத்தலான வார்த்தைகள் கிடையாது. தொழிலாளர் பிரச்சனைகள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான பிரச்சனைகளையே சார்ந்திருந்தது. வாழ்க்கை நிலைமை சமூதாயத்தில் தொழிலாளர்களுக்கு  அந்தஸ்தும் தொழிலாளர்களை சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நிலைமையும் நலனும் சுரண்டுபவனும் சுரண்டப்படுகிறவனுக்குள்ளும் நடக்கும் உரிமை போராட்டங்களாகவே இருந்தன.

சுரண்டப்படுகிற வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரமற்ற நிலையும் அடக்கி வைக்கப்படும் நிலையும், தங்கள் வாழ்வாங்கு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையையும், தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளே எல்லா நாடுகளிலும் வர்க்கப்போராட்டங்களாகவும், தொழிலாளர் பாதுகாப்பு சங்கங்களாகவும் பெருகிக் கொண்டிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் தங்களுக்குள் தொடர்புகளையும், கலந்துரையாடல்களையும் ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தன. தங்கள் நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்ற தொழிலாளர் சங்கங்களுடன் பகிர்ந்து கொண்டன.

1848- இல் கிளர்ச்சி அடக்கப்பட்டதற்கு பின் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலாளர்களும் பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களும் கலந்து பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின. ருஷ்ய ஜார் மன்னன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போலந்து நாட்டில் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்ட போது மிகக் கொடுரமான முறையில் மக்கள் கிளர்ச்சியை அடக்கினான். ஏராளமான உயிர்சேதங்கள் ஏற்பட்டிருந்தன. அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் தங்கள் நலன்களை முன்வைத்தே போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தன. முதல் முதலாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ருஷ்ய ஜார் மன்னன் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தன. தங்கள் நாட்டு அரசாங்கம் ஜார் மன்னனைக் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடத் தொடங்கியது. தொழிலாளர் போராட்டங்கள் முதல் முறையாக அரசியல் போராட்டமாக மாறியது ஜார் மன்னனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடத் தொடங்கியதில் இருந்து தான்.

ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக தொழிற்சங்கங்கள் இருந்த போதும் எல்லா நாடுகளும் சேர்ந்து தலைமை ஸ்தாபனம் தொழிலாளர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை உணரத் தொடங்கி இருந்தது. இத்தீர்மானத்திற்கு இங்கிலாந்து தொழிற்சங்கங்களும் பிரான்ஸ் தொழிற்சங்கங்களும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.


1864-இல் செப்டம்பர் 24-ஆம் தேதி மாட்டின்ஸ் ஹால் என்ற இடத்தில் முதல் முதலாக ஒரு கூட்டம் நடைப்பெற்றது. இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி பெல்ஜியம் போலந்து நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மன் தொழிலாளர்களின் பிரதிநீதியாகக் கார்ல் மார்க்ஸ் கலந்து கொண்டார். ´சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தின் விதிமுறைகள்´ தயாரிப்பதற்காக 51- நபர்கள் கொண்ட கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டதும் அன்றுதான். அக்குழுவில் கார்ல் மார்க்ஸீம் இருந்தார். 51- நபர்கள் அடங்கிய குழுவில் 50- பேர்கள் தயாரித்த சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் விதிமுறைகளும், கார்ல் மார்க்ஸ் தனியாக தயாரித்த விதிமுறைகளும் பார்க்கப்பட்டு கார்ல் மார்க்ஸ் தயாரித்த விதிமுறைகளை கமிட்டி ஏற்றுக் கொண்டது.

கார்ல் மார்க்ஸ் அந்தளவு அக்கறையாக அனுபவத்தையும், சமூகச் சூழலையும் இணைத்து மிகத் தீவிரமாக தொழிலாளர் நலன்களுக்காக சிந்தித்தவர். முதலாவது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் உருவாகி ஸ்பானத்தின் விதிமுறைகளும் அக்ககூட்டத்தில் உருவாக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தானத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலவகைத் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவதும், எல்லா நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களும் மற்ற நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவும், தொழிற்சங்கம் பின்தங்கிக் கிடக்கும் நாடுகளில் புத்துயிர் கொடுத்து ஆர்வத்துடன் செயல்பட வைக்கவும் பாடுபட்டது.


தமிழச்சி
12/02/2009


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது