Language Selection

டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஞானி. டால்ஸ்டாய் சிந்தனைகள் அத்தனையும் ஏழை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. உழைப்பாளி ஏழையாகவும், சோம்பேறி பணக்காரனாகவும் திரிந்ததை டால்ஸ்டாய் கண்கள் உற்று நோக்கியபடி இருந்தது.

 "பாட்டாளி மக்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பற்றி நாம் ஆய்வு செய்து சித்தரிக்கின்றோமே தவீர, அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டிய கடமையுடையவர்கள் நாம் என்ற உணர்வே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது" என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை மானிட சமூகத்தின் முன் வைக்கிறார் டால்ஸ்டாய். 

 

உழைப்புப் பகிர்வு என்பது (Division of Labour) பாட்டாளி வர்க்கத்திடம் திணிக்கப்பட்டு தாங்கள் மட்டும் சுகபோக விருந்து, விழா, இரசனைகள் என கும்மாளமிடும் பணம் படைத்தவர்களின் விகார குணங்களை கேள்விக்குட்படுத்துகிறார் டால்ஸ்டாய். 1886- இல் "இனி நாம் செய்ய வேண்டியது என்ன?" என்ற நூலை எழுதி முடித்த போது அவை ரஷ்யாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்க முடியாது. 

 

எல்லாவற்றையும் விமர்சிக்கிறார் டால்ஸ்டாய். 

"ஏழைகளைப் பிடித்து இராணுவத்தின் சேவைக்காக என்று இழுத்துச் செல்லும் வன்முறை நிர்ப்பந்தம்." 

 

"நிராயுதபாணிகளை அச்சுறுத்தும் ஆயுதந்தரித்த அரசுப்படைகள்."

 

"வறியோரை அடிமையென இஷ்டம் போல் ஆட்டிப்படைக்கும் மேல் மட்டத்தின் ஆதிக்க திமீர்."

 

"சமயம் மக்களை முட்டாளாக்கும் வஞ்சகத்தன்மை." 

 

இப்படி கோபம் கொப்பளிக்க நூல் முழுவதும் வார்த்தைகளை சாட்டைகளாக்கி நம்மை நோக்கி வினாவாக விளாசுகிறார் டால்ஸ்டாய்.

 

சில அறிவு ஜீவுகள் சொல்கிறார்கள் "அறிவுத் திறமையால் சிலர் உழைக்கிறார்கள். இதில் சமய குருமார்களையும், மடத்தை சேர்ந்தவர்களும் ஆன்மீக உழைப்பில் இருப்பதாக கதை விடுகிறார்கள்." 

 

கவிதை, இசை, சிற்பம், ஓவியம் படைக்கும் கற்பனைவாதிகளையும் அவர்கள் திறமைக்கேற்ற உழைப்பு அவை என்கிறார்கள். சமூதாயத்தில் இன்னார் இன்னாருக்கு என்று உழைப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், உடல் உழைப்பு பாட்டாளிகளிடம் மட்டுமே இருக்கிறது. வசதி படைத்தவனெல்லாம் இதுவும் உழைப்பைப் போன்றது தான் சமாதானம் சொல்ல முயல்கிறார்கள். 

 

மதவாதிகளுக்கு எங்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு பதிலாக மறு உலகத்தில் இன்புற்றிருக்க இன்றைய வாழ்வில் தங்களை துன்பப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று சமாதானம் சொல்கிறார்களே தவீர, பாட்டாளிகளுடைய கவலைகளையும், வறுமைகளையும் தீர்ப்பதற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் என்ன பதிலை சொல்லிவிட முடியும்.

 

இதோ விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரைகளையும், சங்க இலக்கியங்களையும், சங்கீத கீர்த்திகளையும், புராதன இலக்கியங்களையும் ஒரு பாட்டாளிக்கு எந்த விதத்திலாவது உபயோகப்படுமா? 

 

பிரபல ஐரோப்பிய ஓவியர்கள் வரைந்த நிர்வாணப் பெண் சித்திரங்களையும், போர் காட்சிகளையும், இயற்கை சித்திரங்களையும் பஞ்சணையில் அமர்ந்துக் கொண்டு ´ஒயின்´ சாப்பிட்டபடி கலைவுணர்வோடு பாட்டாளியால் இரசிக்க முடியுமா? உங்களுடைய இரசனைகள், பொழுதுபோக்குகள், உங்களுடைய படைப்புகள், உங்களுடைய சிந்தனைகள், உங்களுடைய உழைப்புகள் பாட்டாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வித்ததில் உபயோகப்படுகிறது? 

 

இதற்கெல்லாம் பாட்டாளிகள் கேள்வி கேட்க வேண்டும். 

 

"பாட்டாளியான நாங்கள் உங்களுக்கு தரவேண்டிய உணவுகளை உழைக்கப்போவதற்கு முன்பு உங்கள் ஆன்மீக உழைப்பின் பலன் எங்களுக்குத் தேவை. எங்கள் பணியில் நாங்கள் வலுவுடன் இயங்க எங்களுக்கு சமயப் பயிற்சி கொடுங்கள். சமூதாய வாழ்க்கையில் சட்டம், ஒழுங்கு இருக்கச் செய்யுங்கள். எங்கள் வேலைக்கு தேவையான விஞ்ஞான வழிமுறைகளைச் சொல்லித் தாருங்கள். 

 

இசை, இலக்கியம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளினால் கிடைக்கக்கூடடிய ஆறுதலும், ஆனந்த அனுபவமும் எங்களுக்கும் கொடுங்கள். இகவாழ்க்கையில் அர்த்தங்களை நாங்களும் ஆய்வு செய்து கொள்ள எங்களிக்கு நேரம் இருப்பதில்லை. அதையும் எங்களுக்கு கொடுங்கள். பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, இயந்திரத் தொழில் நுட்பம், உபகரணங்கள் பணிமுறைகளை சீர்திருத்திக் கொள்வதற்கும், என் வாழ்க்கை நடைமுறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்திக் கொள்வதற்கும் தேவையான சங்கதிகளை சொல்லித் தாருங்கள். 

 

கவிதை, இசை, சிற்பம், ஓவியம் இவற்றை இரசிக்க கற்றுக் கொடுங்கள். எங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மன எழுச்சிகளையும், ஆறுதல்களையும் எங்களுக்கு கொடுங்கள். கலைப்பொருட்களை எங்களுக்கும் கொடுங்கள். இவையெல்லாம் இல்லாமல் எங்களால் எங்கள் பணிகளை செய்ய முடியாது. நீங்கள் தரும் அறிவும் மற்றும் ஆன்மீக போதனைகளும் அதன் மூலம் நீங்கள் அனுபவிக்கும் வசதிகளையும் எங்களுக்கும் கொடுக்கும் வரையில் நாங்கள் உழைத்து உற்பத்தி செய்த தானியங்களையும் மற்றைய உணவு வகைகளையும் உங்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் என்கிறார் டால்ஸ்டாய். 

 

பாட்டாளிகளும் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்தால் சமூகத்தில் எப்படி இருக்கும்? டாய்ஸ்டாய் சொல்வதில் எந்த அநீதியும் கிடையாது தான். 


ஆளும் வர்க்கம் ஏற்க முடியுமா இக்கோரிக்கைகளை. டால்ஸ்டாய் குடும்பத்திலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. வசதி படைத்த டால்ஸ்டாயின் புரட்சி மிக்க கருத்துக்களுக்கு அவரின் மனைவி, பிள்ளைகளிடம் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. மனைவிக்கும் டால்ஸ்டாய்க்கும் இவ்விஷயத்தில் ஏகப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தது. ´கூந்தல் இருப்பவள் அள்ளி முடிக்கிறாள்´ என்பது போல... "அவனவன் வாழ்க்கையை அவனவன் பார்த்துக் கொள்ளப் போகிறான். எதற்கு சீண்டிப்பார்த்துக் கொண்டு இருக்கிறாய்" என்று கோத்து வாங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் வாதங்களை அவர் ஏற்கவில்லை. வெளி இடங்களில் பிரபுக்கள், சர்ச்சில் இருந்த குருமார்கள், அரசாங்கம் அனைத்தும் டால்ஸ்டாய் கோட்பாடுகளை எதிர்த்தன. இருப்பினும் உண்மை உண்மைதான் என்று அஞ்சாமல் தன்னுடைய கருத்துக்களை எழுதிக் கொண்டே இருந்தார். 

 

"பாட்டாளி மக்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பற்றி நாம் ஆய்வு செய்து சித்தரிக்கின்றோமே தவீர, அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டிய கடமையுடையவர்கள் நாம் என்ற உணர்வே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது" டால்ஸ்டாய் கூற்றில் 100% உண்மை இருக்கிறது தானே!


தமிழச்சி
02/02/2009 

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது