Language Selection

மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம்  மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.

மக்கள் கொல்லப்படுவதன் மூலம், அதைப் பிரச்சாரம் செய்து தம் பாசிச அரசியல் இராணுவ இருப்பை தக்கவைக்க முனைகின்றனர். இந்த எல்லைக்குள் தான், மனித அவலங்களை புலிகள் அரங்கேற்றுகின்றனர். 

 

இந்த வகையில் இரண்டு மக்கள் விரோத இராணுவங்களினால், பரஸ்பரம் தம் வக்கிர உணர்வுடன் மக்கள் பலியிடப்படுகின்றனர். மக்களையிட்ட எந்த அக்கறையும் கிடையாது. மக்கள் தம் மீதான இந்த யுத்தத்தை வெறுத்து வாழ்கின்றனர். மக்கள் இதன் மேல் எந்த கருத்தும் கூறமுடியாது. விரக்தியில் நடைப்பிணமாக வாழ்வதையே, இயல்பு வாழ்வாக கொள்கின்றனர். இருந்தென்ன செத்தென்ன என்ற நிலையில் மக்கள், மிக கொடூரமாகவே யுத்தம் செய்பவர்கள் அவர்களை நடத்துகின்றனர். இதை நடத்திக் கொண்டிருக்கும் பாசிட்டுகளின ஈனத்தனமான கொடூரமான முகத்தையே, மக்கள் மாற்றாக தரிசிக்கின்றனர். மக்களுக்காக மாற்றாக எதையும் யாரும் முன்வைப்பதில்லை.    

 

மனித மரபில் கடவுளுக்கு படையல் படைப்பதன் மூலம், கடவுள் தமது விருப்பத்தை பூர்த்திசெய்வார் என்று  எதிர்பார்க்கின்றனர். படையல் நெய்யாக இருந்தாலும் சரி, ஆட்டை வெட்டினாலும் சரி, இதில் நோக்கம் ஓன்றுதான். இங்கு ஜனநாயகம், தேசியம் என்ற பெயரில் மக்கள் பலியிடப்படுகின்றனர். யார் எப்படி ஏன் பலியிடுகின்றனர் என்பதை அவரவர் செய்யும் குறுகிய உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. மனிதம் மடிவதையிட்டு, யுத்தம் செய்யும் இருதரப்புக்கும் எந்த அக்கறையும் கிடையாது. மாறாக மனித அவலத்தை ஏற்படுத்தி, அதைப் புலிகள் புலிப் பிரச்சாரமாக்கினர். அதை வெறும் புலிப் பிரச்சாரமாக மறுப்பதன் மூலம், மனித அவலத்தை விதைப்பது பேரினவாதத்தின் ஈவிரக்கமற்ற நடத்தையாகின்றது.     

  

மனிதம் சிதைக்கப்படுகின்றது

இன்று ஒரு பக்கமாக, அதையும் உள் நோக்குடன் குறுகிய நோக்கில் மிகைப்படுத்தி, தம் பிரச்சார அடிப்படையில் புலிகளால் மட்டும் வெளியிடப்படும் சில காட்சிகள், அதன் அவலங்கள், மக்கள் அல்லோலகல்லோலபட்டு அதிர்ந்து நிற்கும் கையாலாகாத்தனம், என அனைத்தும் இன்று வன்னி மண்ணில் நிகழும் மனித அவலமாகிவிட்டது. இந்த அவலம் ஈவிரக்கமற்றது. பார்ப்போரை நடுங்க வைக்கின்றது. எதையும் செய்ய லாயக்கற்றுப் போன உணர்வாகி, அதுவே மனநோயாகிவிடுகின்றது. எம் மக்கள் இந்த மக்கள்விரோத யுத்த வெறித்தனத்துக்கும், அதன் நோக்கத்துக்கும் எதிராக புலம்புகின்றனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய உணர்வுகளுக்கு வெளியில் கூச்சல்கள். தலையீடுகள். பேரினவாத ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக தளத்திலும், எதிரான தளத்திலும் சரி, மக்களுக்கு எது தேவை என்பதை மறுத்து நிற்கும் வக்கிரம். எல்லாம் குறுகிய தளத்தில் நின்று, மக்கள் மேல் மேளம் அடிக்கின்றனர். இப்படி இந்தியா முதல் இலங்கை வரை, மக்கள் கருத்துகளை மேவியெழும் மனித விரோத வக்கிரங்கள். சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் கூட, இந்திய ஊடகவியலை நம்பி அதை அடிப்படையாக கொண்டு கருத்துரைக்கும் பொய்யுரைகள். எங்கிருந்து இந்திய ஊடகவியல் தகவலைப் பெறுகின்றது? உண்மைக்கு மேல் பொய்களை மூட்டை கட்டிவிடும் புலிப்பிரச்சாரம், மக்கள் விரோத அடிப்படையில் இந்தியாவில் பிழைப்புவாத செய்தியாகின்றது. இன்று யுத்தத்தை நடத்தும் பேரினவாதமாகட்டும் புலிக்கு ஆதரவான மக்கள் விரோத யுத்தத்தை ஆதரிப்பவர்கள் எவருமாகட்டும், தமிழ் மக்கள் எந்த நிலையில் எப்படி ஏன் பலியிடப்படுகின்றனர் என்பதை காணத் தவறுகின்றனர்.

 

இந்த அவலத்தின் பின்னணியோ, மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. மனித அவலத்தை தவிர்க்கும் மனிதத்தன்மை, இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாருக்கும் கிடையாது. இந்த அவலத்தைச் சொல்லி, இதில் ஒன்றை ஆதரிக்கும் யாருக்கும் மனிதம் மீதான அக்கறை கிடையாது. மக்களை இதில் இருந்து காப்பாற்றுவது, அப்படி சிந்திப்பது புலி மற்றும் இராணுவத்தின் அகராதியில் காணமுடியாத ஒன்று.

 

மாறாக இதை வைத்து பிரச்சாரம் செய்பவர்கள், மனித அவலத்தை விரும்புகின்றனர். அதை மூடிமறைக்க மறுதரப்பு முனைகின்றது. இப்படி மனித அவலம் இதற்குள் சிக்கிவிட்டது.

 

இதை வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் என்ன விரும்புகின்றனர். எவ்வளவு கோரமாக மனிதம் கொல்லப்படுகின்றதோ, எந்தளவுக்கு மோசமாக மனிதம் சிதைக்கப்படுகின்றதோ, அதுவே பிரச்சாரத்துக்கு உதவும் என்று கருதுகின்றனர். இதை யாரும் மறுக்கமுடியுமா!? இதை நோக்கியே புலிகளின் நகர்வுகள் அமைகின்றது. மக்களை இதில் இருந்து பாதுகாக்க விடுவிக்கவும் முனையாது, இதற்குள் மக்களை புலிகள் திணிக்கின்றனர். மனித அவலமும், அதன் காட்சிகளும் தான், இன்று புலிகள் தம்மை காப்பாற்றிக்கொள்ள உதவும் இறுதி நடவடிக்கையாகிவிட்டது. இதை காட்டி பிரச்சாரம், ஊர்வலம் என அனைத்தும், மக்களின் அவலத்தை பற்றியல்ல. புலியைப் பாதுகாக்கும் பிரச்சார எல்லைக்குள் சுருங்கிவிட்டது. புலிகள் அரசியல் அனாதைகளாகிவிட்ட நிலையில், மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கும் அரசியல் பிழைப்புத்தனம் இன்று அரங்கேறுகின்றது. புலிக்கு வெளியில் இந்த மனித அவலத்தை முன்னிறுத்தி போராட்டங்கள் எவையும் நடக்கவில்லை.

 

அரசுக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலம் தம் தற்காப்பு என்ற எல்லைக்குள், தமிழினம் மேலான பேரினவாத அழித்தொழிப்பு புலிகளின் அவசியமான அரசியலாகிவிட்டது. அதை நோக்கி புலிகளின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றது. மக்கள் கொல்லப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும். இதுதான் புலிகளின் அரசியல் இருப்பின் அடிப்படையான இன்றைய நிபந்தனையாகிவிட்டது.

 

இந்த உண்மைக்கும், மனித அவலத்துக்கும் இடையில் உள்ள மெல்லியகோடு, இன்று தமிழினத்தையே அழித்தொழிக்கின்றது.

 

பி.இரயாகரன்
30.01.2009

தொடரும்


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ