Language Selection

தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

இது தன்னகத்தே சமூக விரோதத்தை தன் உணர்வுகளாக்கி, அதை ஆதிக்கம் பெற்ற ஒன்றாக்கியதன் மூலம் மக்களின் உரிமைகளையே பறித்தது. மக்கள் தம் உரிமைக்காக ஆதரித்த போராட்டம், அவர்களுக்கு எதிராக மாறியது. இது மக்களின் உரிமைகளையே பறித்தது.   

 

தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்டவர்கள் உள் இயக்கப் படுகொலை, இயக்க அழிப்பு என்று தொடங்கி மொத்த இனத்தையும் தனக்கு எதிராக மாற்றினர். இதன் மூலம், தமிழீழக் கோரிக்கையை அர்த்தமற்றதாக்கினர்.

 

இந்த தமிழீழக் கோரிக்கை, வெறும் லேபலாக மாறியது. இதன் பின்னணியில் புலிப் பாசிசக் கும்பலாகவும், அதற்கு எதிரான அரச கூலிக் கும்பலாகவும், தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்ட குழுக்களை சிதைவடைய வைத்தது.

 

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர், உரிமைகள் எதுவுமற்ற வெறும் கோசமாகியது.  'தேசியம்" புலியின் துப்பாக்கி முனையில், அவர்களின் இருப்பு சார்ந்தாக எஞ்சியது. இது மக்களை அவர்களின் அரசியல் சுயவுரிமைக்காக அணிதிரட்டவில்லை. மாறாக துப்பாக்கி முனையில் தாம் பெற்ற பாசிச அதிகாரத்தைக் கொண்டு, படுகொலை அரசியல் மூலம் 'தேசியத்தை" தக்கவைக்க முனைந்தனர்.

 

மக்கள் வெறுப்புக்கும், அவர்களை துயரத்துக்கும் உள்ளாக்கிய 'தமிழீழக்" கோசம், அவர்களுக்கு சமாதிகட்டடியது. மக்கள் விட்ட கண்ணீர் வெள்ளத்தில், 'தமிழீழம்" புதைத்ததுடன், அது செத்துப் போனது. விளைவு புலிகள் தம் சொந்த இருப்புக்கு ஏற்ப, தமிழ் மக்களையே பணயமாய் வைத்தனர். இப்படி மக்கள் தம்மைவிட்டு தப்பி போக முடியாத வண்ணம், புலிகள் துப்பாக்கி முனையில் தம் இருப்புசார் 'தமிழீழக்" கோசத்தை மக்கள் மேல் திணித்தனர்.    

 

தமிழீழம் என்ற கோசம் அரசியல் ரீதியாக எழுந்த போது, இது சுயநிர்ணய உரிமைகளை அடிப்படையாக கொண்ட சமூகக் கூறுகளைக் கொண்டிருந்தது. இந்த சுயநிர்ணய உரிமையிலான சமூகக் கூறுகளை, இந்தியா முதல் அன்னிய சக்திகளுடன் சேர்ந்து அழித்தவர்கள், இறுதியில் அதை வெறும் வெற்றுடலாகவே தக்கவைத்தனர். அன்றைய அதே இந்தியாவும் அன்னிய சக்திகளும், இன்று இலங்கை அரசின் ஊடாக வெற்றுடலை அழித்து வருகின்றனர்.

 

இந்தியா இன்று மட்டும் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. அன்று இயக்கங்களை ஆதரித்து, சுயநிர்ணய உரிமையை அழிக்கத் தொடங்கியது முதலே தமிழ் இனத்துக்கு எதிராக யுத்தம் செய்யத் தொடங்கியிருந்தது. அன்று இயக்கத்தைக் கொண்டு தமிழ் இனத்தை அழித்தவர்கள், இன்று பேரினவாதத்தைக் கொண்டு அதை நிறைவு செய்கின்றனர்.   

 

இந்த நிலையில் புலிகளின் இருப்பு என்பது எதிர்காலத்தில் சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. இதன் நாட்கள் எண்ணப்படுகின்து. தமிழீழக் என்ற கோரிக்கையுடன் புலிகள் முதல் எந்தப் புதிய குழுவும் கூட அரசியல் ரீதியாக, தமிழ்மக்கள் முன்வைத்து அரசியல் செய்யமுடியாது.

 

இந்த தமிழீழம் தமிழினத்தின் அழித்தொழிப்பாக மாறி, அவர்களின் வாழ்வை நாசமாக்கிவிட்டது. இதை தவிர வேறு எதையும், தமிழீழம் மக்களுக்கு பரிசளிக்கவில்லை. போராட்டம் மாபியாத்தனத்துடன், ரவுடிசமாகி, மக்கள் மேல் ஏறி அமர்ந்து கொண்டது. இதைத் தவிர, மக்கள் அனுபவித்தது எல்லையற்ற துயரங்களைத்தான்.

 

எதிர்காலத்தில் தமிழீழம் என்ற கோசம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. புலம்பெயர் நாட்டில் பிழைக்க முனையும் புலிப் புல்லுருவிகள் இதை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், மக்களிடம் இதை எடுத்துச் செல்லமுடியாது. அத்துடன் இந்த கோசத்தின் பின் உள்ள சமூக அடிப்படைகளை, இந்த கோசம் விளக்காது. இதற்கு மறுவிளக்கம் அளிக்கமுடியாது.

 

இந்த நிலையில் தமிழ் மக்களுக்குரிய மாற்று என்ன? என்ன செய்ய முடியும்;? பேரினவாதத்தின் பின்னாலும், கைக்கூலிக் குழுக்களின் பின்னாலும் செல்வதல்ல. இதற்கு மாறாக எப்படி என்று சிந்திப்பதும், அதை நோக்கி செயல்படுவதும் தான் மாற்றுக்கான முதற்படி.

 

பி.இரயாகரன்
21.01.2009
    


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ