Language Selection

"நடக்கும் அகராதி" என அழைக்கப்பட்ட மதிப்புக்குரிய மார்க்ஸ் முடங்கிப் போனது ஜென்னியின் மரணத்தில் தான். 1881- டிசம்பர் 2- இல் தன் மனைவி இறந்த போது மார்க்ஸீம் செத்துப் போய்விட்டார் என்கிறார் எங்கெல்ஸ். மார்க்ஸீன் நெருங்கிய தோழன் மார்க்ஸ் மரணத்தைப் பற்றி நம்முடன் பகிந்து கொள்கிறார் மேலும்...
ஜென்னியை மிகவும் நேசித்தவன் மார்க்ஸ். ஜென்னியின் மரணத்திற்கு பின் 15- மாதங்கள் வரையில் மார்க்ஸ் இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை இறந்த வாழ்க்கை தான். இருந்த வாழ்க்கையல்ல...
மனைவி இருந்த போதே மார்க்ஸ் பல வியாதிகளால் துன்பப்பட்டான். இருப்பினும் வியாதிக்காக மருந்துக்களை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளும் சிந்தனை இருந்தது. ஆனால் ஜென்னி இறந்த போது முற்றிலும் அந்நினைவு அவனை விட்டு போய்விட்டது. தன் வீட்டின் அறைக்குள் முடங்கிப் போய்விட்டான். இன்னொரு அதிர்ச்சி அவனுக்கு பெண்ணின் மரணத்தில் காத்திருந்தது. ஆம்! மார்க்ஸீன் முதல் மகள் ´ஜென்னி லொங்குவே´ 1883- ஜனவரி 11- ஆம் தேதியில் பாரீசில் இறந்து போனாள். 
தன் குழந்தைகளையும் குடும்பத்தையும் மிகவும் நேசித்தவன் மார்க்ஸ். தொடர்சியான மரணத்தில் துடித்துப்போய்விட்டான். மற்றவர்களிடம் பேசுவது மிகக் குறைந்து போய்விட்டது. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வாழும் ஆசையை உதறிவிட்டான் என் மார்க்ஸ். வியாதிக்கு மருந்துக்களை உட்கொள்வதை நிறுத்திவிட்டான். அதன் பின் உடல் மிகவும் பலவீனமடைய ஆரம்பித்திருந்தது. நண்பர்கள் சிலருடன் மார்க்ஸை கவனித்துக் கொண்டோம். 
1883- இல் மார்ச் 14- ஆம் தேதியின் பிற்பகல் மார்க்ஸீடன் கடைசி மூச்சு நிற்பதற்கு 2- நிமிடங்களுக்கு முன்பாக அவனை தனியாக இருக்க விட்டோம். அவன் எப்போதும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் சாய்வு நாற்காலியில் அவன் இருந்தான். மூச்சு விட மார்க்ஸ் மிகவும் சிரமப்பட்டான். என்னால் சகிக்க முடியாத காட்சியாக இருந்தது. மார்க்ஸ் சிறிது தனிமையாக இருக்க ஆசைப்பட்டான். அதனால் நாங்கள் வெளியில் இருந்தோம்.
திரும்பிச் சென்று பார்த்த போது மார்க்ஸ் தனது நாற்காலியில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்த மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திவிட்டான். என் மார்க்ஸ் நிரந்தரமாக தூங்கிப் போய்விட்டான். 
மார்ச் மாதம் 17- ஆம் தேதி லண்டனில் ஹைகேட் என்னும் மயானத்தில் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டான். 
000
அதன் பின் எங்கெல்ஸ் சிறு உரை நிகழ்த்தினார். அதன் சுருக்கம் :
மனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தான். மானிட ஜாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டு பிடித்தான். மனிதர்கள், அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் முதலியவைகளில் கவனஞ் செலுத்துவதற்கு முன் உண்ண வேண்டும்; குடிக்க வேண்டும்; நிழலில் இருக்க வேண்டும்; உடுக்க வேண்டும். எனவே அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை உற்பத்தி செய்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏற்றார் போல்தான் அக்காலத்தினுடைய பொருளாதார அமைப்பு இருக்கும். அப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே காலத்தினுடைய ராஜ்ய ஸ்தாபனங்கள், சட்டக் கொள்கைகள், கலைகள், மதக் கோட்பாடுகள் முதலியன அமைகின்றன. 
இந்த அடிப்படையைக் கொண்டே ராஜ்ய ஸ்தாபனங்கள் முதலியவற்றிற்கு வியாக்கியானம் செய்ய வேண்டும். இந்த சரித்திர உண்மையோ மார்க்ஸ் காலத்திற்கு முன் லட்சிய உலகத்தில் மறைந்து கொண்டிருந்தது. இந்த உண்மையை அறிஞர்கள் விபரீதமாக வியாக்கியானம் செய்து கொண்டு வந்தார்கள். 
இன்றைய முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி முறை எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது. இதிலிருந்து எப்படி பணக்காரக் கூட்டத்தினர் உற்பத்தியாயினர் என்பதையும் மார்க்ஸ் கண்டுபிடித்திருக்கிறான். பொருளுற்பத்தி முறையில் மிஞ்சிய மதிப்பு என்னும் புதிய அம்சத்தைக் கண்டுப் பிடித்த பிறகு பொருளாதார சாஸ்திரிகள் எந்த இருளில் சென்றுக் கொண்டிருந்தார்களோ அதில் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்படத் தொடங்கியது. 
இப்படியான ஆராச்சிகளைச் செய்தாலே வாழ்க்கை பூர்த்தியடைந்து விடும். ஆனால் மார்க்ஸ் பல துறைகளில் ஆராய்ச்சி செய்திருக்கிறான். இவையெல்லாம் மேலோட்டமான ஆராய்ச்சிகள் இல்லை. கணித சாஸ்திரம் உட்பட பல புதிய உண்மைகளைக் கண்டுப்பிடித்து வெளியிட்டிருக்கிறான் மார்க்ஸ். 
மார்க்ஸீக்கு விஞ்ஞான சாஸ்திரமென்பது சிருஷ்டித்தன்மை வாய்ந்த சரித்திர ரீதியான ஒரு புரட்சி சக்தி. தத்துவ அளவில் மார்க்ஸ் எந்த உண்மையை கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சி அடைந்தான். அதையும் விட தொழில் வளர்ச்சி, சரித்திர வளர்ச்சிகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்த போதோ மிகுந்த மகிழ்ச்சியடைந்தவன் மார்க்ஸ். 
முதலாளித்துவத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் சமூதாய அமைப்பு அதனால் உண்டாக்கப்பட்ட ராஜ்ய ஸ்தாபனங்கள் ஆகியவற்றை வீழ்ச்சியடைய வைக்க எந்த வகையிலாவது, யாருடனாவது ஒத்துழைக்கவும் இன்றைய தொழிலாளர் உலகத்திற்கு விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமென்பதில் எந்த வகையிலாவது ஒத்துழைக்க வேண்டும் என்பதும் மார்க்ஸீன் நோக்கமாக இருந்தது. 
சமூதாயத்தில் தொழிலாளர்களுக்கும் ஓர் அந்தஸ்து உண்டென்பதையும் அவர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்களுடைய நிலைமையை அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலும் முதன்மையாக உலகுக்கு எடுத்துக் காட்டியவன் மார்க்ஸ்.
போராடுவது மார்க்ஸீன் சுபாவத்திலேயே அமைந்திருந்தது. உற்சாகத்தோடும், உறுதியோடும் போராடுபவன் மார்க்ஸ். மார்க்ஸீக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. மார்க்ஸ் பத்திரிக்கைகளுக்குப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறான். தர்க்க ரீதியில் பல வியாசங்கள் எழுதியிருக்கிறான். பாரிஸ், ப்ரெஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் சங்கங்கள் உருவாக்கி இருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்தார் போல் "சர்வதேச தொழிலாளர் சங்கத்தை" உருவாக்கி இருக்கிறான். இதைக் கொண்டு மார்க்ஸ் பெருமையடைவதற்கு நியாயம் உண்டு.
ஆனால் மார்க்ஸ்...
அதிகமாகத் துவேஷிக்கப்பட்டான்; அதிகமாக அவமதிக்கப்பட்டான்; சுயேச்சாதிகார அரசாங்கங்களும், குடியரசு அரசாங்கங்களும் நாட்டை விட்டு வெளியேற்றின. முதலாளிகளில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் மார்க்ஸை கேவலமாக தூற்றினர். ஆனால் மார்க்ஸோ ஒட்டடைகளை ஒதுக்கித் தள்ளுவது போல் அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினான் மார்க்ஸ். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதிர்விணை ஆற்றுவான் மார்க்ஸ். 
இன்று ஐரோப்பாவின் கிழக்குக் கோடியில் இருக்கும் ஸைபீரியச் சுரங்கங்களிலும், அமெரிக்காவின் மேற்குக் கோடியில் இருக்கும் கலிபோர்னியாவின் கடற்கரையோரத்திலும் வேலை செய்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றுக் கொண்டு அவர்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டு இறந்து போய்விட்டான் மார்க்ஸ். 
"மார்க்ஸீக்கு அநேக எதிரிகள் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், மனிதனுக்கு மனிதன் என்ற முறையில் மார்க்ஸீக்கு ஒரு விரோதி கூடக் கிடையாது" என்று நான் திட்டவட்டமாக சொல்வேன். 
மார்க்ஸ் இறந்தாலும் மார்க்ஸீனுடைய சித்தாந்தங்கள் இன்னும் அநேக நூற்றாண்டுகள் உயிரோடு இருக்கும். 
(எங்கெல்ஸீன் இரங்கல் உரையின் சுருக்கம்)
தமிழச்சி
19/01/2009 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது