Language Selection

சாதாரணமாக எகிப்து என்றதும் நம் நினைவுக்கு ´பிரமிடு´ ஏனோ தானோ என்று வந்துவிட்டு போகும். படங்களிலும், ஒவியங்களிலும் ´பிரமிடு´ பற்றிய உருவகம் நம்மை ஒரு எல்லைக்குள் சிந்திக்க வைத்துவிடுகின்றது. அதனால் கொஞ்சம் பிரமிட் பற்றிய வர்ணனைகளுடனே எகிப்திய புராதன கலைகளை பார்ப்போம்.
´கிஸா´ (Gizeh) என்ற யெருடைய பிரமிட் கட்டுவதற்கு இரண்டு இலட்சத்து முப்பதினாயிரம் பாறைச் சதுரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரங்கப் பாறைகளின் எடை இரண்டரை டன் எடையுள்ளவை என்றால் அதன் பிரமாண்டத்தை என்னவென்பது? ´கிஸா´ பிரமிடின் உயரமோ 481- அடி. அடிப்படைச் சதுரங்கத்தின் பக்கம் 755- அடி. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வைத்து ´கிஸா பிரமிட்´ கட்டி முடிப்பதற்கு 20- ஆண்டுகள் ஆனது. பிரமிட் கலை என்பது மக்கள் வாழ்வோடு இணைந்தது இல்லை. மன்னர்களுக்காக மன்னர்களால் உயர்வாக மதிக்கப்பட்டும் தங்கள் தரத்தை பிரமிடுகள் கட்டி நிர்ணயிப்பதிலும் இருந்த விசித்திரமான வேத்தியல் கலையைச் சேர்ந்தது பிரமிட். 
பன்டைக்கால தொடக்கத்தில் எகிப்தியர்களிடம் செப்பு உலோகம் மட்டுமே பழக்கத்தில் இருந்திருக்கின்றது. இரும்போ மற்றும் வேறு உலோகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காத நிலையில், பிரமாண்டமான பிரமிட்டுகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. பிரமிட்டுகளின் உச்சத்தில் இருக்கும் பாறைகளை செப்புக் கடப்பாரைகளாலும், கத்திகளாலும் உடைத்து செதுக்கி இருக்கின்றனர்.
பிரமிடுகளின் உட்புறங்களில் சுவர்களிலும் அன்றை எகிப்தியர்களின் வாழ்க்கைகளை காட்சிகளான ஒவியத்தில் வரைந்து வைத்திருக்கின்றனர். இந்த ஓவியங்களே பிற்காலத்தில் சமூக ஆய்வாளர்களின் எகிப்திய பண்பாடு குறித்த ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தன. ஐந்தாயிரம், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒவியங்கள் அவை. ஆனால், பிரமிட் உருவாக்கிய கலைஞர்களின் பெயர்களை பொறித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. அரிதாக தெய்வ சிற்பங்களில் சில கலைஞர்களின் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 
அதேப்போல், சிற்பங்களிலும் அரசர்களும், அரசிகளும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முறையை கவனித்தால் எல்லாப் பிரமிடுகளிலும் ஒரே தோற்றத்தில் சிற்பங்கள் இருப்பது போன்ற உணர்வை உருவாக்கி விடுவதால் பல பிரமிடுகளைப் பார்க்கும் போது பார்வையாளர்களிடம் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. 
பிரமிடுகளுக்கு அருகில் இருக்கும் ஸ்பிங்க்ஸ் (Sphinx) எகிப்திய சிற்பக்கலையின் அபார சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பிரமிடுகளுக்கு காவல் தெய்வமாக இவை கருதப்படுகின்றது. ஓர் பெண்ணின் தலை, உடல் சிங்கத்தின் கால்களை உள்ள உருவம் போன்று அமைக்கப்பட்டு கால்களை மடக்கி படுத்திருப்பது போல் உள்ள தோற்றங்களைக் கொண்டது ஸ்பிங்க்ஸ். தலையில் மன்னர்களுக்குரிய க்ரீடம் வைக்கப்பட்டிருக்கின்றது. பெரிய ஸ்பிங்ஸின் நீளம் 240- அடி. உலகப் புகழ்பெற்ற இப்பெரிய ஸ்பிங்ஸின் பாதங்களை பாலைவனத்தின் மணல்கள் மூடிவிடுவதும், அப்போதைக்கு அப்போது மலையாக குவியும் மணல்களை அகற்றும் வேலைகளில் இன்றும் எகிப்திய அரசு செய்துக் கொண்டிருக்கின்றது.
எகிப்திய கலைகளில் மக்களிடம் வழக்கத்தில் இருந்தவைகளை சொல்ல வேண்டுமானால் தொடக்க காலத்தில் அவர்களின் சித்திர எழுத்துமுறைகள் (Hieroglyph) சொல்லலாம். பிற்காலத்தில் 24- எழுத்துக்கள் கொண்ட நெடுங்கணக்கு வழக்கத்தில் இருந்திருக்கின்றது. எழுதுவதற்கு பேப்பர் சுருள்களை பயன்படுத்தினர். ´பெப்பைரஸ்´ செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேப்பரில் கணக்குகள், இலக்கியங்கள், அரசு நிர்வாக ஆணைகள், புராண வரலாறுகளையும் எழுதி பாதுகாப்பாக வைத்திருந்திருக்கின்றனர். 
எகிப்திய ஓவியக் கலையில் இயற்கையாக இருக்கின்றன. பிரமிடுகளில் காணப்படும் ´உர்´ரென்ற முகஜாடையும், முறைத்துக் கொண்டு பார்க்கும் கடின பார்வைகளும், விரைப்பான மிடுக்கும் ஓவியங்களில் இல்லை. பறவைகள், போர் காலச்சூழல்கள், மிருகங்கள் அதிகமாக ஒவியங்களில் இருக்கிறது. மனிதர்களை மிருக உருவங்களோடு உள்ள உறுப்புக்களுடனும் அதிகளவில் ஒவியங்களில் இருக்கின்றன. 
எகிப்தியர்களிடம் அக்காலத்தில் தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தட்டை தட்டையான மாடல்களில் சிற்பவேளைகள் செய்யப்பட்டும் அல்லது அபூர்வமான வேலைப்பாடுகளுடன் செதுக்கியும், வைத்திருந்தனர். நவரத்தினக் கற்களை தங்க நகைகளுடன் பொருத்தியும் வைத்திருந்தனர். ´துர்க்குவாஸ்´ என்ற நீலநிறக் கல்லும், பச்சை நிறக்கல்லும் அதிர்ஷ்ட கற்களையாக வழக்கத்தில் இருந்தது. சில நவரத்தின கற்றகளில் எழுத்துக்களையும் செதுக்கி வைத்தனர். பொற்கொல்லர் பணிக்கு தேவையான எல்லாத் தொழில் நுட்பங்களும் அக்காலத்திலேயே எகிப்தியர்களுக்கு தெரிந்திருந்தது. முத்து மாலைகளை எகிப்திய பெண்கள் விரும்பி அணிந்தனர். மோதிரம், வளையல்கள், காதில் மாட்டும் அணிகலன்கல், தலைக்கு, இடுப்புக்கு என அனைத்து இடங்களுக்கும் நகைகளை அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கின்றது. 
கட்டடக் கலையை பார்த்தோமனால், பெரிய பெரிய பாறைத்துண்டங்களாலும், சுட்ட செங்கல்களிலும் பயன்படுத்தி இருக்கின்றனர். எகிப்தியர்களில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை மிகுந்த ஆர்வத்துடனும், பல ஆண்டுகளாக எல்லையற்ற பொறுமையுடனும் இருந்து சாதிக்கும் திறனை பெற்றிருந்திருக்கின்றனர். ஒரு சமூகத்திற்கு தேவையான கட்டட கலை நிபுணர்கள் சிற்பிகள் பொற்கொல்லர் ஓவியர்கள் தச்சர்கள் என எகிப்திய சமூகத்தில் இருந்திருப்பது ஆச்சரியமான எகிப்திய நாகரீகம் தான்.
தமிழச்சி
23/12/2008 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது