Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் "பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

  • PDF

"என்ன கொடுமை இது சரவணன்!"

 

இதுவரை 3 வயது முதல் 12 - 14 வயதுப் பிள்ளைகளைப் பற்றிய, பாலியலைப் பற்றிய, பெற்றோரின் கருத்து, செயல், ஆக்கம் எவ்வண்ணம் இருக்க வேண்டும் எனப் பார்த்தோம்.

 

இனி அடுத்தது, ஒரு முக்கியமான பருவம்!

ஆம்! பருவம் அடையும் பருவம்!

 

இதுவரை நீங்கள் சந்தித்த, பழகிய, புரிந்த, பிள்ளைகள் வேறு!

இனி நீங்கள் பார்க்கப் போகும் பிள்ளைகள் வேறு!

 

அந்த நிலைக்குப் போகும் முன்.......

 

இது வரை நாம் சந்தித்த இந்த 12- 14 வரையிலான குழந்தைகள் சந்திக்கும், சந்திக்கக் கூடிய ஒரு நிகழ்வைச் சொல்லாமல், அடுத்த பருவத்திற்குச் செல்ல என் மனம் துணியவில்லை!

 

இந்த வயதில், பெற்றோர்கள் இருவரும் கொஞ்சம் தனித்தனியே விலகி, குழந்தைகளோடு கூட, ஒருவரை ஒருவரும், மற்றவரையும் எடை போட வேண்டிய ஒரு அவலத்தைப் பற்றி, கொடுமையைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப் போகிறேன்.

 

இதை இங்கு சொல்லாமல் நான் மேலே செல்ல முடியாது!

 

பீடிகை எல்லாம் பலமாய் இருக்கிறதே என அஞ்ச வேண்டாம்!

 

இது ஒரு விவாதத்திற்குரிய பதிவு.

சர்ச்சைக்கு அல்ல!

 

இதைக் கண்டு சிலர் துணுக்குறக் கூடும்;

 

முகம் சுளிக்கக் கூடும், இது தேவையா என!

 

மனம் நோகக் கூடும், இது போலும் நிகழ்கிறதா என!

 

..................... திருந்தக் கூடும் சிலர்!

 

அவர்களுக்காக இது!

 

நேரடியாக நிகழ்வுக்கு வருகிறேன்!

 

ஒரு நான்கு "உண்மை" நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கப் போகிறேன்!

 

அதற்கு முன், ஒரு வேண்டுகோள்!

 

தயவு செய்து, தயவு செய்து, இதைக் கொச்சைப் படுத்தி யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்!

 

அப்படி வருமாயின், நிச்சயம் அது உங்கள் பார்வைக்கு வராது எனினும், என்னை அது வருத்தும் என்பதால்!

 

1. கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர் வழிய, அந்தத் தாய் என்னிடம் வந்தார் ஒரு நாள்! 

 

"டாக்டர்! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அப்படியே செத்துப் போயிடலாமான்னு இருக்கு!"

 

அவரை ஆசுவாசப்படுத்தி, உட்கார வைத்த பின் என்னவெனக் கேட்டேன்.

 

"என்னன்னு சொல்றதுங்க! 

இந்தப் படுபாவி எம் பொண்ணை அதட்டி, உருட்டீ, மிரட்டி, அவளை பலாத்காரம் பண்ணிப்புட்டான்!"

 

"யார்? என்ன பண்ணினான்னு கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா தேவலை!" என்றேன் நான்.

 

"வேற யாரு! எம் புருசந்தான்! 

ராத்திரில குடிச்சுட்டு வரும் நெதம்! 

சரி, நம்ம தலைவிதி அம்புட்டுத்தான்னு, மனசைத் தேத்திக்கிட்டு, அவனுக்கு சோத்தைப் போட்டு, நான் தூங்கிட்டேன் சாமி! 

திடீர்னெ முளிச்சுப் பாத்தா, இவன் என் மூத்த பொண்ணு மேல மேஞ்சுக்கிட்டு இருக்கான்!

இதுவோ, வெலவெலத்துக் கிடக்கு!

என்ன பண்றதுன்னு தெரியாம, கைக்கு அகப்பட்ட ஒரு வெளக்குமாத்த எடுத்து அவனை நாலு சாத்து சாத்தி வெளிய தள்ளி கதவைச் சாத்திட்டு, ஏண்டி, மவளே, என் சக்காளத்தின்னு அவளையும் நாலு சாத்தினேன்!

 

அது கதறிக்கிட்டே, எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா!

என்னை இப்படித்தான் அப்பன் வாராவாரம் பல தடவை பண்ணுது! 

திமிறினா அடிக்குது! 

எனக்கு ஒண்ணும் புரியலம்மா. 

பேசாம படுத்திருவேன்"அப்படீன்னு அவ சொன்னதும், 

 

எனக்கு பத்திகிட்டு வந்திருச்சி! 

 

'ஏண்டி, எங்கிட்ட சொல்லலை?'ன் னா, 

அம்மாகிட்ட எதனாச்சும் சொன்னேயின்னா, ஒங்க ரெண்டு பேரயும் போட்டுத்தள்ளிட்டு நா செயிலுக்குப் போயிருவேன்னு மெரட்டிச்சும்மா! அதுக்காவத்தான் ஒங்கிட்ட சொல்லலை" அப்பிடீன்னு சொல்லுது!

இத்தக் கொஞ்சம் டெஸ்டு பண்ணுங்க டாக்டர்! எதுனாச்சும் ஆயிருச்சான்னு" என அந்த மாதரசி கலங்கியது, எனக்கு வலித்தது.

 

2. " இவளை நான் சின்னப் பொண்ணுன்னு நெனச்சேன், டாக்டர்! 

இவ என்ன காரியம் பண்ணிண்டு வந்து நிக்காறா தெரியுமா" என வந்தவுடனே ஆரம்பித்தார் அந்தத் தாய்!

 

கூடவே மலங்க மலங்கப் பார்த்தபடி ஒரு 13 வயதுப் பெண்!!

 

என்னம்மா, என்னன்னு சொல்லுங்க என்றேன்.

 

அதற்கு அவர், " படு பாவி! படுபாவி, ஊமை மாரி இருந்துண்டு, என்ன அழுத்தம் பாருங்கோ, டாக்டர்! 

லீவுக்கு என் நாத்தனார் அவா குடும்பத்தோட ஒரு 10 நாள் இங்க வந்திருந்தா! 

அங்க இங்க அவாளைக் கூட்டிண்டு போறதுக்கே நேரம் சரியா இருந்தது. நாத்தனாரைக் கூட்டிண்டு நான் ரங்கனாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனேன்.

ஆம்பளைங்க ரெண்டு பேரும் ஏதோ கச்சேரிக்கு போறோம்னு கிளம்பிப் போயிட்டா!

ஸ்ரீதர் [ நாத்தனார் பையன்] சைக்கிளை எடுத்துண்டு எங்கியோ சுத்தப் போயிருந்தான்.

எம்பொண்ணுகிட்ட, "ஆத்தை பத்திரம பாத்துக்கோடி, நாங்க சீக்கிரமா வந்துர்றோம்"னு சொல்லிட்டு கெளம்பிப் போயிட்டோம்!

ஷாப்பிங்லாம் முடிச்சுட்டு திரும்பி வந்தா, 

.....இந்தக் கடங்காரியும், அந்தக் கட்டைல போறவனும், "ஒண்ணுமில்லாம" ! அவ பெட்ல படுத்துண்டுருக்கா! 

நாங்க வந்ததக் கூடக் கவனிக்காம!

அவன் இவளை தடவிண்டு இருக்கான்.

இவளும் சும்மா இருந்துண்டு இருக்கா!

எனக்கு வந்த ஆத்திரத்துல, ரெண்டு பேரையும் நாலு சாத்து சாத்தினேன்.

மறுநாளே அவாள்ளாம் கிளம்பிப் போயிட்டா!

நா நேரா உங்க கிட்ட தான் ஓடி வர்றேன்!

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல!

இந்தக் காலத்துல எல்லாரும் சீக்கிறமே வளந்துர்றா!"என்றவரிடம், 

 

"அப்படியில்லை மாமி, எல்லாக் காலத்திலும், எல்லாப் பெத்தவங்களும் சொல்ற வார்த்தை தான் இது. மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம், சரியா! " என்றேன்.

 

3. " இவளுக்கு என்னமோ பேய் புடிச்சிடுத்தோ, இல்லை புத்தி கித்திதான் சுவாதீனம் இல்லாம போய்விட்டதான்னு தெரியலை டாக்டர்" என்றவாறு, ஒரு தாய்!

என்னவென விசாரித்தேன்.

" இத்தன நாளா கல கலன்னுதான் சிரிச்சிண்டுதான் இருக்கும் இது! 

இப்ப ஒரு ஆறு மாசமா, எத்தையோ பறி கொடுத்தவா கணக்கா இருக்கா!! கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க டாக்ட!" என்றார்".

நீங்க கொஞ்ச நேரம் வெளில இருங்க" என்று அவரை அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம்[ [12 வயது] விசாரித்தேன்.

 

முதலில் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை' யென மறுத்தாலும், கடைசியில் சொல்லியது அந்தக் குழந்தை. 

அவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர், 

பல வகையிலும் அக்குடும்பத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்யும் ஒருவர், 

சின்ன வயது முதலே குடும்பத்தில் ஒருவர் போல பழகிய ஒருவர், 

சில மாதங்களாய் இவளை இழுத்துத் அணைப்பது, கண்ட இடங்களிலும் தொடுவது என்று படிப்படியாக அவரது, இவளது பிறப்பு உறுப்புகளை, தொடுவது, சுவைப்பது வரை போயிருக்கிறான் அந்த காமுகன்.

 

ஒவ்வொரு தடவையும், வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்து, சரிக்கட்டி, இதுல ஒண்ணும் தப்பில்லை என அவளை நம்ப வைத்திருக்கிறான்.

 

சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அச்சிறுமி தத்தளித்து, வேண்டா வெறுப்பாய் அவையெல்லாம் செய்ததில், 

படிப்பில் நாட்டம் போனது, 

பெற்றவரிடம் சொல்ல அச்சப் பட்டுக்கொண்டு, தனக்குள் தானே மருகி, கடைசியில் மனோநிலை பாதிக்கும் அளவிற்குப் போய் விட்டது.

 

4. கிட்டத்தட்ட இதே கதை ஒரு ஆண்பையனிடம் நடந்து, அவனை புணர்ச்சி செய்து, அவன் படிப்பு, விளையாடும் திறன் உற்சாகம், எல்லாவற்றையும் தொலைத்த கதையும் உண்டு. 

விவரிக்க மனம் வரவில்லை.... பதிவின் நாகரீகம் நோக்கம் கருதி.

 

5. இன்னொரு பையனுக்கு மன நிலை குன்றிய காரணம், அவன் தன் தாயை, அப்பா அல்லாத வேறொருவருடன், தனியே படுக்கையறையில் அவர்களுக்குத் தெரியாமல் பார்த்ததனால் வந்தது!

 

இதெல்லாம் என்ன?

 

இதற்கு என்ன பெயர்?

 

ஆங்கிலத்தில் இது போன்ற நிகழ்வினை INCEST என்பார்கள். 

 

தமிழில், "உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்னலாம்.

 

பெரும்பாலும் பருவமடையா, பருவத்திற்கு சமீபமான குழந்தைகளே, அதிக விழுக்காடு இதற்கு ஆளாகின்றனராம்.

 

தெரிந்தவர், பழகியவர், உறவுக்காரர், பெற்றவர் என ஒரு நெருங்கிய வட்டத்துக்குள் இருக்கும் ஒரு சில பெரியவர்களால் இந்த வயதுக் குழந்தைகளுக்கு நிகழ்வதே இதுகாறும் நான் மேற்கோள் காட்டிச் சொன்னது எல்லாம்!

 

கொஞ்சம் விழிப்புணர்ச்சி வேண்டும் பெற்றோருக்கு!

 

குழந்தை வளர்ப்போடு நின்று விடாமல், அதன் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

 

அதற்காக, யாரையும் சந்தேகப் பட வேண்டாம்!

 

இதுவரை முந்தைய பதிவுகளில் சொன்ன வண்ணம் நீங்கள் நடந்திருந்தால், இந்நிலை வராது, அனேகமாய்!

 

தான் யார், தன் மதிப்பு என்ன; தன் தனித்துவம் என்ன, எப்போதும் என் பெற்றோரை அணுகலாம் என்பவைகள் இதுவரை விதைக்கப் பட்டிருந்தால், 90% இதைத் தவிர்க்க முடியும்.

 

மீதி அந்த 10% ஆட்கள் என்ன செய்யணும்?

 

தவறு செய்தவரை மன்னிக்க முற்படாதீர்கள்; 

அது கணவனே, மனைவியே, உறவினர், தெரிந்தவர், வேண்டியவரே ஆனாலும் சரி!

 

உரிய நடவடிக்கை எடுக்த் தயங்காதீர்கள்!

 

'கூறாமல் சந்நியாசம்" கொள்ள வேண்டாம்.

 

"கூரை மீதேறிக் கூவி, " இவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்த வேண்டும், உங்கள் பிள்ளைகள் நலன் கருதி.

 

குற்றமிழைத்த உங்கள் துணையை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள் என்பது இப்பதிவின் நோக்கமல்ல என்பதால், இங்கு அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

 

அது போலவே அவர்களுக்கு நான் என்ன மாதிரியான பதில் சொன்னேன் என்பதனையும் தவிர்க்கிறேன்.

 

இந்த மாதிரியான கயவர்களைக் கண்டு கொள்ள வேண்டும்!

 

பெற்றவர்கள்.குழந்தைகளுக்கு [இதுவரை சொலாதிருந்தால்],

அவசியமின்றி யாரும் எவரும் தன்னை ஏதும் செய்ய இணங்கக் கூடாது என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்;

 

தங்களிடம் எப்போதும், எதையும் சொல்லலாம், காலம் தாழ்த்தாமல், என்பதை அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

 

"கூடாது, எனக்கு சம்மதமில்லை. மீறிச் செய்தால், நான் புகார் செய்வேன்" {NO! I am not for it! I will complain!] என்று சொல்ல, கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம்.

 

செய்வீர்களா?